<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-145713100012504438</id><updated>2012-02-02T13:19:18.942-08:00</updated><category term='யூதாஸ் ஸ்காரியோத்'/><category term='உயிர்த்தெழுதல்'/><category term='விக்கிரக ஆராதனை'/><category term='யூதர்கள்'/><category term='தாலி'/><category term='யோவான்'/><category term='அந்நியபாஷை'/><category term='பாவம்'/><category term='வரலாறு'/><category term='நரகம்'/><category term='காதல்'/><category term='அன்பு'/><category term='நியாயத்தீர்ப்பு'/><category term='2012'/><category term='ஆடைகள்'/><category term='மரியாள்'/><category term='ஜோசியம்'/><category term='கனிகள்'/><category term='அஞ்ஞனம்'/><category term='கொல்லுதல்'/><category term='பொட்டு'/><category term='விவாகரத்து'/><category term='விசுவாசம்'/><category term='எதிர்காலம்'/><category term='வருகை'/><category term='சிலை'/><category term='பிசாசு'/><category term='உலகம் அழிவு'/><category term='நியாயப் பிரமாணம்'/><category term='தேவன்'/><category term='பரலோகம்'/><category term='திருமணம்'/><category term='வரங்கள்'/><category term='சவுல்'/><category term='படங்கள்'/><category term='சடங்குகள்'/><category term='ஞானஸ்நானம்'/><category term='மோசே'/><category term='வாழ்க்கை'/><category term='அர்த்தம்'/><category term='விஞ்ஞானம்'/><category term='இராப்போஜனம்'/><category term='ஓய்வுநாள்'/><category term='தற்கொலை'/><category term='தேவசித்தம்'/><category term='கால் கழுவுதல்'/><category term='இயேசு'/><category term='ஜெபம்'/><category term='தெய்வீக சுகம்'/><category term='நகைகள்'/><category term='புகைபிடிப்பது'/><title type='text'>Tamil Bible Q and A (பைபிள் கேள்வியும் பதிலும்) www.tamil-bible.com</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilbibleqanda.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>75</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-5634839730248161029</id><published>2011-11-14T03:00:00.000-08:00</published><updated>2011-11-17T17:21:28.748-08:00</updated><title type='text'>75. நிக்கொலாய் மதஸ்தர் பற்றி விளக்கம் தாருங்கள்.</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சற்றே கடினமான கேள்விதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி 2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம். யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்கு யார் இவர்கள் என்று நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில் இருந்தனர் என்று யோவான் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?&lt;br /&gt;அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப் 6:5) இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபது பேர்களில் ஒருவன். ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன்தான் இந்த நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் என்று குழப்பும்படி சொல்கின்றனர். இவர் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;அப் 2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. Nicolaitan என்பதில் Nikan + laos : இதற்கு conquer(வெற்றிபெறு) மற்றும் people(ஜனங்கள்) என்று பொருள் என்று  கிரேக்க  சொல்-வரலாற்றில் (etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு(clergy) சாதமாக மற்றவர்களை அமுக்கி/மட்டம்தட்டி வைத்ததாகவும் விவாதம் உள்ளது. இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு செய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன. பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு வசனங்களும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு "&lt;span style="font-weight: bold;"&gt;அப்படியே&lt;/span&gt; நிக்கொலாய் என்னும் கூட்டத்தாரை" (வெளி 2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம்.   யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வதுபோல் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நிகொலா என்ற வார்த்தையானது &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம்.  (எப்படி மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும்  அர்த்தம் ஒன்றுபோல) இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும்  இந்த வசனத்துக்கும் பொருந்துகிறது என்பது ஒருபார்வை. எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப்பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் வெளி 2ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.&lt;br /&gt;1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது.&lt;br /&gt;2 - வேசித்தனம்.&lt;br /&gt;ஆதி சபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நியதேவர்களின் வழிபாட்டுடன் சற்றே அநுசரித்து போன ஜனங்களாகும். அப் 15:20, 29 மற்றும் 1 கொரி 8--10 ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார்.  பவுல் மற்றும் யோவான் ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர். பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரககோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.&lt;br /&gt;பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான் ஒன்று. இதை வெளி 2:20,22-லும் யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது . பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் வெளி 2:20ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள் அல்ல, இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள். இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம். மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை 1 கொரி 5:1; 6:12-20 மற்றும் எபி 13:4ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பழைய ஏற்பாட்டில் தேவனைவிட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;பேயோரின்( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் எண் 25:1-18) காணப்பட்ட பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை புசிக்கும்ப்படியும் செய்தனர்.  இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளை பார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய ஜனங்களை அன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம்  கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise)  என்று புகுத்திய கூட்டத்தாரக காணமுடிகிறது. வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு, மற்ற சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு கொண்டால் தவறல்ல என்றும், தேசிய சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் இயேசு சொல்லும்போது அந்த சபையின் மேல் பிரியப்படாமல் அதின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; எனவேதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேதபுரட்டர்களாயிருந்து, இது செய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள்.  அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக்கொள்ளமாட்டார்.  அவைகள் நியாயத்தீர்ப்பினை அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-5634839730248161029?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/11/75.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5634839730248161029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5634839730248161029'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/11/75.html' title='75. நிக்கொலாய் மதஸ்தர் பற்றி விளக்கம் தாருங்கள்.'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-4008515462401434706</id><published>2011-10-30T08:37:00.000-07:00</published><updated>2011-11-07T20:16:35.242-08:00</updated><title type='text'>74. Wine மதுபானம் குடிக்கலாமா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி: பவுல் சொல்லும்போது: "நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும்(wine)  கூட்டிக்கொள்." எனவே கொஞ்சம் மதுபானம் கொள்வது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;கானாவூர் கலியாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது. தண்ணீரை மதுபானமாக மாற்றவில்லை. ஆங்கிலத்தில் King James Version-ல் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;wine என்று &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மொழிபெயர்த்துள்ளதால் வந்த குழப்பங்கள்தான் இவை. கிரேக்க மொழியில் இங்கே oinos [&lt;/span&gt;&lt;span class="lexTitleGk"&gt;οἶνος&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;span style="font-size:85%;"&gt; ] என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு முழுக்க திராட்சை பழச்சாறு அதாவது PURE GRAPE JUICE என்றே பொருள்படும்.  YLT (Young Literal Translation) எனப்படும் மொழிபெயர்ப்பினை பார்க்கவும். தீமோத்தேயு என்பவர் தேவ ஊழியர்  இவர் குடிக்க "தண்ணீர்மாத்திரம்" பயன்படுத்தி வைராக்கியமாக இருந்திருக்கிறார். மற்ற பானங்களை குடித்ததாக சொல்லப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தீமோத்தேயு சரீரத்தில் பலவீனமாக இருந்திருக்கிறார். எனவே பவுல் அக்கறைகொண்டவராக திராட்சைப்பழம் உடலுக்கு நல்லது என்ற யோசனையில் தீமோத்தேயுவுக்கு அப்படியாக சொல்கிறார். தீமோத்தேயுவுக்கு என்ன பலவீனம் என்று நமக்கு சொல்லப்படவில்லை.  கிராமங்களில் "ஒரு ஆட்டுக்கால் சூப் வைத்து குடி" என்று சொல்வது போன்ற ஒரு யோசனையாக எடுத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt; வேதாகமத்தில் இப்படியாக வாசிக்கிறோம்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏசாயா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!&lt;br /&gt;&lt;br /&gt;நீதி 23: 29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?&lt;br /&gt;30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், [கலப்புள்ள] சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீதி 23: 20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் &lt;span style="font-weight: bold;"&gt;சேராதே&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மதுபானம்(Wine) இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, &lt;span style="font-weight: bold;"&gt;&lt;u&gt;நீ அதைப் பாராதே&lt;/u&gt;&lt;/span&gt;; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்று உலக அளவில் "குடிப்பழக்கம் உடலுக்கு கேடு" என்று விளம்பரங்களே செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனை அழிப்பார்(destroy). நீங்களே அந்த ஆலயம்" என்று வாசிக்கிறோமே. எனவே அன்புக்குரிய தேவனுடைய பிள்ளைகளே, நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக.  உங்கள் சரீரம் தேவனுக்குச் சொந்தம். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே (you were bought with a price). கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், கிரக்கத்திற்கு விலைபோகலாமா?  நித்தியத்தை "சிறு துளி பேரிழப்பு" என்று தொலைக்காதிருப்போமாக. Wine மதுபானம் குடிக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-4008515462401434706?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/10/74-wine.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/4008515462401434706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/4008515462401434706'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/10/74-wine.html' title='74. Wine மதுபானம் குடிக்கலாமா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-820661762963048237</id><published>2011-09-24T09:18:00.000-07:00</published><updated>2011-12-03T08:40:22.798-08:00</updated><title type='text'>73. வட்டி வாங்கலாமா? வாங்க வேண்டாம் என்று வாசிக்கிறோமே..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி&lt;/span&gt;: வட்டி வாங்கலாமா? பழைய ஏற்பாட்டில் வட்டி வாங்கவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்&lt;/span&gt;: வட்டி வாங்கலாம்!&lt;br /&gt;ஆனால் யாரிடம் வாங்கலாம், யாரிடம் வாங்கக்கூடாது என்பதில்தான் விவரங்கள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;யாரிடம் வாங்கக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/u&gt;[1]  உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். (&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யாத் 22:25)&lt;br /&gt;==&amp;gt; இங்கே "என் ஜனங்களில் ஒருவனுக்கு" என்றார். இப்போது தேவனுடைய ஜனமாகிய உங்கள் சபையில் ஒருவருக்கு என்றும், தேவனுடைய பிள்ளை ஒருவருக்கு என்றும் பொருள்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;[2]  கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. (&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உபா 23:19 )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;==&amp;gt; உன் சகோதரன் அல்லது சொந்தக்காரர்களிடம் வட்டி வாங்காதே.&lt;br /&gt;நெகேமியா என்பவர் இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வசனத்தை மீறி தன் சதோதரரிடம் வட்டி வாங்கியதால்  பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து, நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;[நூற்றுக்கு 1 தான் வட்டியாக ( 1% )அப்போது இருந்தது என்பதை கவனியுங்கள்.]&lt;br /&gt;&lt;br /&gt;நீ அவன் (சகோதரன்) கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. (&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;லேவி 25:36,37)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;யாரிடம் வட்டி வாங்கலாம்?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உபாகமம் 23:20 &lt;span style="font-weight: bold;"&gt;அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்;&lt;/span&gt; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி &lt;span style="font-weight: bold;"&gt;உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இயேசு ஒரு உவமையில் சொல்லும்போது: " அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து &lt;span style="font-weight: bold;"&gt;என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே&lt;/span&gt;, ..." என்று வாசிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிலும் வட்டி வாங்கக்கூடாது என்று விவாதித்தால் வங்கியில் உங்கள் சேமிப்பில் அவர்கள் கொடுக்கும் வட்டியையும் நீங்கள் வாங்கக்கூடாது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;எனவே வங்கி(Bank)-ல் சேமிப்பில் போட்டு வட்டி வாங்கலாம். தவறல்ல.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். அநியாய வட்டி வாங்கக்கூடாது.&lt;br /&gt;மேலும் ஏழைகள், சிறுமைப்பட்டவர்களிடம் வட்டி வாங்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-820661762963048237?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/09/73.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/820661762963048237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/820661762963048237'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/09/73.html' title='73. வட்டி வாங்கலாமா? வாங்க வேண்டாம் என்று வாசிக்கிறோமே..'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-2199611841266800607</id><published>2011-04-04T10:00:00.000-07:00</published><updated>2011-05-26T08:33:39.214-07:00</updated><title type='text'>72. இயேசு கனிவும் இரக்கமும் உள்ள தேவன் என்றால், ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி: இயேசு கனிவும் இரக்கமும் உள்ள தேவன் என்றால், ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;சங்கீதம் 65:2ல் "&lt;span style="font-weight: bold;"&gt;ஜெபத்தைக் கேட்கிறவரே&lt;/span&gt;, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்". என்பதால் எல்லா ஜெபத்தையும் அவர் கேட்கிறார் (hears).  ஒரு விதத்தில் நம்முடைய கர்த்தர் நமது எல்லா ஜெபங்களுக்கும் பதில் அளிக்கிறார். ஒரு சில சமயங்களில் அவர் "ஆம்", "இல்லை" அல்லது "காத்திரு" என்று சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நம்முடைய பாவங்களை மறைத்து வைத்திருந்தால் அது நம்முடைய ஜெபத்தின் பதிலுக்கு ஒரு தடையாக அமையும். சங்கீதம் 66:18ல் &lt;span style="font-weight: bold;"&gt;"என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்&lt;/span&gt;" என்று வாசிக்கிறோம்.  இன்னும் சில சமயங்களில் நம்முடைய ஜெபமானது சுயநலமாகவும், தேவனை  மகிமைபடுத்தாமல் இருந்தாலும் அப்படியாகும்.  சில சமயங்களில் தேவன் நம்முடைய வேண்டுதலுக்கு பதில் தந்தால் நாம் மிகவும் துக்கமுடையவர்களாக காணப்படுவோம் என்று அவர் அறிந்திருப்பின் பதில் தராமல் இருப்பார்.&lt;br /&gt;வேதாகமத்தில் ஒன்று தெளிவாகக் காண்கிறோம். தேவன் எப்பொழுதெல்லாம் ஜெபத்திற்கு பதில் கொடுத்தாரோ அப்போதெல்லாம் "சந்தோஷத்தின் நிறைவைக்" காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று மட்டும் சொல்லாமல் "&lt;span style="font-weight: bold;"&gt;கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்&lt;/span&gt;" என்று தெளிவாக வாசிக்கிறோம்.  வேதாகமெங்கிலும் தானியேல், தாவீது, பவுல் என்று ஜெபித்தவர்கள் எல்லாரையும் இதற்கு உதாரணமாக வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் "எங்களுக்கு புசிக்கும்படி இறைச்சியை தாரும்" என்று மோசேயிடம் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;முறுமுறுப்புடன் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மன்னாவை விட்டு இறைச்சியை இச்சித்து கேட்டனர்.  தேவன் அதற்கு பதில் கொடுத்தாலும் அங்கே ஒரு பெரிய அழிவினை கொண்டுவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. ஒரு தந்தைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டார். கர்த்தரோ தெளிவாக அவரிடம், "இல்லை, உனக்கு மகனைக்கொடுப்பது என்னுடைய சித்தமல்ல, உன்னுடைய மகள்களே உனக்கு ஒரு மகனைக் காட்டிலும் பெரிதாக இருப்பார்கள்" என்றார். இருப்பினும் தந்தை  ரொம்பவே உபவாசித்து, வருத்தி மிகவும் ஜெபித்து கேட்டார்.  இறுதியாக தேவன் அவருக்கு ஒரு மகனைக் கொடுத்தார். ஆனால் அந்த மகன் குடிகாரனும் கெட்டகுமாரனுமாக மாறிபோனான். தந்தைக்கோ வயதாகியது, இருதயம் உடைந்து வேதனையுடன்  ஏன் தேவனை தொல்லை செய்து ஒரு மகனை கேட்டோம் என்று வருத்தத்துடன் இருந்தார். தன் மகன் நரகத்துக்கு போவான் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் தேவன் சொன்னபடியே  அவருடைய வயதான காலத்தில் அவருடைய மகள்கள் அவரை  ஒரு மகன் செய்வதைவிட மேலாகவே கவனித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளையே, நமது ஜெபங்கள் ஒருவேளை நம்முடைய பார்வைக்கு நன்றாக தோன்றலாம், அவைகளுக்கு பதில் இல்லாமல் இருக்கலாம். தேவன் ஒருவேளை உங்களை ஏழையாக வைத்திருக்கலாம் அதேசமயம் தேவபயமின்றி வாழும் ஒருவன் ஐசுவரியவானாக இருக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள் தடைபட்டு, மற்றவர்கள் மேலே செல்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். இவைகள் எல்லாவற்றிலும் நாம் தேவனை கேள்வி கேட்பதையும், முறுமுறுப்பதையும் விட்டுவிட்டு, பதில் கிடைக்காத ஜெபங்களுக்காக தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இறுதியில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-2199611841266800607?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/04/72.html#comment-form' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/2199611841266800607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/2199611841266800607'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/04/72.html' title='72. இயேசு கனிவும் இரக்கமும் உள்ள தேவன் என்றால், ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-3141700133805635163</id><published>2011-03-30T12:31:00.000-07:00</published><updated>2011-04-04T13:07:45.970-07:00</updated><title type='text'>71. நாம் ஒரு சபைக்கு போய்கொண்டு வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாமா? இப்படி நாம் போனால் ஆவிக்குரிய வாழ்கையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;எந்த சபைக்கு போகிறோம் என்பது முக்கியம். ஏனெனில் சில வேதபுரட்டர்கள்  இருக்கும் இடங்களுக்கு போகக்கூடாது. பைபிளுக்கு முரண்பாடாக இருப்பின் அந்த  சபைக்கு செல்லவேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் "செல்வச் செழிப்பு பற்றிய சுவிசேஷம் (Prosperity Gospel)"  போதிக்கின்றனர். இப்படிப்பட்ட போதர்களை நாம் தொலைக்காட்சிகளில் (குறிப்பாக அமெரிக்காவில்) காணலாம். இவர்கள் "கர்த்தர் உங்களை பணக்காரராக்குவார்" என்ற ஒரே கருத்தை மையமாக வைத்து போதிக்கிறார்கள். சரியாகச் சொன்னால்: இவர்கள் தங்களது பரமதரிசனத்தை தொலைத்தவர்கள். இவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிந்தையை இழந்து தங்களுக்கு ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள்.   பேதுரு சொல்லும்போது (II பேதுரு 2:1)  கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் என்று சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில போதகர்கள் தொலைக்காட்சிகளிலேயே புகைபிடித்து (Cigar), சிலர் எப்போதாவது குடித்தால் தவறல்ல என்றும் பிரசங்கம் செய்கின்றனர். சிலர் சபைக்கு கூட்டத்தை இழுக்க அங்கேயே பந்தயவிளையாட்டுகள், ஆடையலங்கார போட்டிகள்... போன்றவைகளுக்கு இடம் கொடுக்கின்றனர். அங்கே சென்றால் இது சபையா அல்லது கடைத்தெருவா (Shopping Mall) என்று தோன்றும் அளவுக்கு உலகம் உள்ளே நுழைந்துள்ளது. ஷாப்பிங் போவதற்காக சபைக்கு போகிற சிலர் ஒருபுறம் இருக்க ஜனங்களுக்கு எதற்கு சபைக்கு வருகிறோம், நாம் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம், நம்  வாழ்வின் நோக்கம் என்ன, என்பதெல்லாம் மறந்து உலகத்தார் போல இருக்கும் இடங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட இடங்களை விட்டு விலகவேண்டும் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; இயேசுவைக் குறித்து பார்க்கும்போது: இவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன். அப்படிப்பட்ட  தேவன் பூமியில் எப்படிப்பட்ட இடத்தில் பிறக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பல பதில்கள் கொடுத்து, அதில் ஒன்றை தேர்வுசெய்யச் சொன்னேன்: இவர் ஒரு பளிங்கினால் உண்டாக்கப்பட்ட மாளிகையில் வைரம், இரத்தினம் என விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்ட ஒரு அறையில் பிறந்திருக்கவேண்டும் என்று எல்லாரும் கருத்து தெரிவித்தனர்.  ஆனால் இவர் தான் பிறக்க தேர்வு செய்த இடம் மிகவும் என்னை இதயத்தை உருக்கியவைகளில் ஒன்று!  வானங்கள் மற்றும் பூதலத்தின் மன்னாதி மன்னவன் பாதங்கள் தொட்ட இடம், சத்திரத்தில் இடமில்லை, எனவே ஒரு தொழுவத்தில் [Manger - கால்நடைகளுக்கு தீவனம் போடும் இடம்]. தனது பிறப்பில் தாழ்மையின் உச்சத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். (இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் உள்ளம் உடைகிறது.) இவர் 99 ஆடுகளை வனாந்திரத்திலே விட்டுவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டை தேடிச் சென்ற நல்ல மேய்ப்பன் போன்றவர்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; சீஷர்களுக்கு எளிமையை சொல்லிக்கொடுத்தார்: "வழிக்குத் தடியையாவது  பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு  அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்... &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, &lt;/span&gt;ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார்.  காரியம் இப்படியிருக்க "இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களை பணக்காரராக மாற்றுவார்" என்று பிரசங்கம் செய்வது தவறு. கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை தருவார். ஆனால் அதைத்தான் பிரசங்கம் செய்தால். சுவிஷேசம் அதுவல்ல. சுவிஷேசம் என்பது யோவான் 3:16;   எனவே தவறாக பிரசங்கம் செய்யும் இடங்களுக்கும் சபைகளுக்கும் செல்லவேண்டாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;நாம் வேறு சபைக்கு போகவேண்டும் என்றால்  ஒன்று அந்த சபை இதைவிட ஆவிக்குரிய காரியங்களில் மேலாக இருக்கவேண்டும்.  அல்லது தற்போது  இருக்கும் சபையில்  ஏதோ உங்களுக்கு பிடிக்கவில்லை. அல்லது சில சபைகளில் சமுகசேவை, சுவிசேஷ ஊழியம் சிறப்பாக செய்கின்றனர். அப்படிப்பட்ட காரியங்கள் சிலரை ஈர்க்கலாம். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேவனுடைய வரம் பெற்ற போதகரை  சந்திக்க போவது  தவறல்ல.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால் உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில்  தடங்கள் வருமா வராதா என்பது செல்லும் சபையைப் பொறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தூரமாக பிரயாணம் செய்யும்போது (இடம்/மொழி தெரியாத இடங்கள்) வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாம். ஏனெனில்  நமக்கு ஆராதனைக்கு செல்வது முக்கியம்;  &lt;span class="yshortcuts" id="lw_1301511375_2"&gt;Billy Graham&lt;/span&gt;  என்பவரின் சுவிஷேச பிரசங்கம் San Diego-ல் ஒரு விளையாட்டு மைதானத்தில்(Stadium) வைத்திருந்தபோது ஒருநாள்  போய்வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இது சம்பந்தமாக வெறொரு கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டது; அதை கீழே உள்ள இணைப்பில்(link)  Part [B]&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ல் காணலாம்.&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;a rel="nofollow" target="_blank" href="http://tamilbibleqanda.blogspot.com/2009/10/water-baptism.html"&gt;&lt;span class="yshortcuts" id="lw_1301511375_3"&gt;http://tamilbibleqanda.blogspot.com/2009/10/water-baptism.html&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எபேசியர் 4:14 "நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்"&lt;br /&gt;==&amp;gt; ஜாக்கிரதையாயிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எபிரெயர் 5: 12-14 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.  பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.&lt;br /&gt;==&amp;gt; ஆழமான சத்தியங்களை போதிக்கும் சபைகளுக்கு செல்லுங்கள். சத்திய வசனத்தில் தேறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எப்படிப்பட்ட சபை என்பதைப் பொறுத்தது.  அடிக்கடி ஒரு சபை என்று செல்லாமல் இருங்கள். நன்றாக ஜெபித்து தேவனிடம் கேட்டு  நிலைத்து இருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியானிக்கவும்:&lt;br /&gt;மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-3141700133805635163?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/03/71.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/3141700133805635163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/3141700133805635163'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/03/71.html' title='71. நாம் ஒரு சபைக்கு போய்கொண்டு வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாமா? இப்படி நாம் போனால் ஆவிக்குரிய வாழ்கையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-7329911525711659862</id><published>2011-03-07T23:05:00.000-08:00</published><updated>2011-03-30T14:13:30.198-07:00</updated><title type='text'>70. வாஸ்து பார்த்து வீடு கட்டலாமா? இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-vWgKRdz9a1U/TXZRwKk9lQI/AAAAAAAAAxY/jjp_7VfUDGg/s1600/base_isolation.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி:&lt;br /&gt;வீடு எப்படி கட்டவேண்டும். வாஸ்து பார்த்து கட்டலாமா. இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை விளக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;நாள் நட்சத்திரம் பார்க்கலாமா என்ற கேள்விக்கு ஏற்கனவே கேள்வி பதில் 40ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;a href="http://tamilbibleqanda.blogspot.com/2010/05/40.html"&gt;&lt;span class="f"&gt;&lt;cite&gt;http://tamilbibleqanda.blogspot.com/2010/05/40.html&lt;/cite&gt;&lt;/span&gt;&lt;/a&gt;  &lt;span style="font-size:85%;"&gt;இதுவும் அதேபோன்றதுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;"வாஸ்து சாஸ்திரம்"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; என்பது என்ன?&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-XufKIvXNWdQ/TXUjiNUsflI/AAAAAAAAAxQ/ODoy18FVkE0/s1600/vasthu.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமஸ்கிருத வார்த்தையாகிய "Vasthu" (வஸ்து) என்றால் " இருக்கக்கூடிய எந்த ஒரு அமைப்போ, பொருளோ ஆகும்.  எனவே ஒரு பொருளைக்குறித்த  அல்லது அமைப்பைக்குறித்த சாஸ்திரம், கூற்றுகள் 'வஸ்து சாஸ்திரம்' அல்லது 'வாஸ்து சாஸ்திரம்' ஆகும். இருப்பினும் தற்போது இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது குறிப்பாக கட்டிடங்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற்து.  இப்போது தமிழ் நாட்டில்அநேகர் இதை வைத்து பிழைப்பே நடத்துகின்றனர்.  1960 வரைக்கும் இது கோயில் கட்டிடங்களுக்குத்தான் பெரிதாக பின்பற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XufKIvXNWdQ/TXUjiNUsflI/AAAAAAAAAxQ/ODoy18FVkE0/s1600/vasthu.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 250px; height: 249px;" src="http://4.bp.blogspot.com/-XufKIvXNWdQ/TXUjiNUsflI/AAAAAAAAAxQ/ODoy18FVkE0/s400/vasthu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581406383794585170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாஸ்து சாஸ்திரம் என்பதில்:  ஒரு சதுர வடிவத்தை 64 (8x8) அல்லது 81 (9x9) கட்டங்களாகப் பிரித்து இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக" இருப்பதாக கூறுகிறது. இங்கே மதங்களையும் கடவுள்களையும் வைத்து நாள் நட்சத்திரம் போல கணிப்பது பைபிளுக்கு ஒத்துப்போகாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;குடிசார் பொறியாளர் (&lt;em&gt;civil engineer) &lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மற்றும் கட்டிட நிபுணர்கள் (architect) இக்காலத்தில் பழங்காலத்தைவிட விஞ்ஞானத்தில் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மிகவும் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; முன்னேறி இருக்கின்றனர்.&lt;br /&gt;நீங்கள் என்னதான் வாஸ்து சாஸ்திரப்படி வீடுகட்டினாலும் அது ஒரு பூமிஅதிர்ச்சி வரும்போது  சுவர்கள் விரிசல்விட்டு இடிந்து விழுந்துவிடும். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; ஏனெனில் தமிழ்நாட்டில் வீடு செங்கல் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றால் கட்டப்படுகின்றது. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால் கலிஃபோரினியாவில் கட்டிய வீடு  பூமியதிர்ச்சி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;6.0 ரிக்டெர் அளவு வந்தாலும் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;விழாது.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பூமி அதிர்ச்சியில் விழாமல் இருக்கவேண்டுமென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் மரத்தால் வீடுகளைக் கட்டவேண்டும்; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மற்றபடி நமது இஷ்டப்படி கட்ட அரசாங்கம் இங்கே அனுமதிப்பதில்லை. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு நல்ல கட்டிட நிபுணரிடம் சென்றால்  இதற்கு சிறப்பாகவே ஆலோசனை கொடுக்கப்படும்.   உயர்ந்த கட்டிடங்கள்  பூமி நகர்வதால் உடையாமலிருக்க  சக்கரங்கள் போன்ற அமைப்பு அஸ்திபாரத்தில் அமைக்கப்பட்டு, முழுக்கட்டிடமும் நகரும் ஆனால் உடையாது என்ற அளவுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞானம் சென்றுகொண்டிருக்கின்றது (கீழே படம்). ஆனால் வாஸ்துகாரர்கள் வீட்டில் கஷ்டம் உள்ளது என்பதால் சுவற்றை இடித்து கட்டுங்கள் என்று சொல்லி அங்கே யமன், இங்கே இந்திரன் என்று கொண்டுவருகின்றனர்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;காற்றுபோக ஜன்னல் எங்கே இருக்கவேண்டும்,  வாசல் எங்கே இருக்கவேண்டும்  என்றுதானே சொல்கிறோம் என்கின்றனர்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;காற்றுவீசும் திசையைப் பார்த்து &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதை யார்வேண்டுமானாலும் சொல்லலாமே என்ற எதிர் கூற்றும் வைக்கப்படுகின்றது. 'இல்லை... இல்லை... அதுபோக வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கும்' என்று அவர்கள் சொல்வதை நம்பி போகும்போது அது ஜோதிடர் போன்றவர்களை நாடி செல்வது என்பதுபோல் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vWgKRdz9a1U/TXZRwKk9lQI/AAAAAAAAAxY/jjp_7VfUDGg/s1600/base_isolation.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 223px; height: 482px;" src="http://2.bp.blogspot.com/-vWgKRdz9a1U/TXZRwKk9lQI/AAAAAAAAAxY/jjp_7VfUDGg/s1600/base_isolation.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581738676087264514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பைபிளில் இரண்டு இடத்தில் வீட்டைக்குறித்து சொல்லப்பட்டுள்ளது:&lt;br /&gt;உபாகமம் 22:8 நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும். (பாதுகாப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;லூக்கா 6:48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற  மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த  வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது  கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. (இங்கே வெள்ளம், சுனாமி என்ற ஒரு பாதிப்புக்கு கற்பாறை.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்று இதையெல்லாம் விஞ்ஞானம்  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தாண்டி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாம் விண்வெளியில் பறந்து ஆய்வுசெய்கிறோமே. வாஸ்து சாஸ்திம் எல்லாம் பார்க்கவேண்டாம். அதற்கு பதிலாக வீடுகட்டுவதற்கு நிபுணர்கள் (architect) , குடிசார் பொறியாளர்களிடம் (civil engineer) செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-7329911525711659862?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/03/70.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7329911525711659862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7329911525711659862'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/03/70.html' title='70. வாஸ்து பார்த்து வீடு கட்டலாமா? இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-XufKIvXNWdQ/TXUjiNUsflI/AAAAAAAAAxQ/ODoy18FVkE0/s72-c/vasthu.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-1343225770363946552</id><published>2011-01-18T15:24:00.000-08:00</published><updated>2011-02-25T11:43:35.988-08:00</updated><title type='text'>69. உயிரினங்களின் தோற்றம் மகாவெடிப்பிலிருந்து  என்ற கோட்பாட்டை  (Big bang theory)  எப்படி மறுப்பது?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை (video) பாருங்கள். நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.   முதலாவதாக இன்றைய பரிணாமக்கொள்கையை  சொல்லிவிட்டு பின்பு சிருஷ்டிப்பை நிரூபிக்கின்றது. காணொளியிலிருந்து சில கருத்துக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;[1] வெடிச்சிதறலிலிருந்து ஒழுங்குமுறை (order) வருவதில்லை.  ஒழுங்கு குறைந்துதான் வரும் (order/discipline decrease). கோள்கள் சூரியனை இன்றும் ஒழுங்குமுறையில் சுற்றிவருதல் என்பது வெடிச்சிதறலை மறுக்க ஒரு  எடுத்துக்காட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;[2] சூரியன் நட்சத்திரம் கோள்கள் எல்லாம் ஒரே பொருளிலிருந்து உண்டாகின என்றால் எல்லா கோள்களிலும் அந்த பொருள் காணப்படவேண்டுமல்லவா? ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை! சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால்  புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய  அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் இவைகளுக்குள் பொதுவாக 1% குறைவாகவே ஹீலியம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;[3] சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வெடித்துச்சிதறும்போது அதிலிருந்து வீசப்படும் பகுதிகளும் அதே திசையில் சுற்றவேண்டும்(spin) என்கிற விஞ்ஞானத்தின் அடிப்படையே நாம் வசிக்கும் சூரியகுடும்ப கோள்களில் இல்லை.  சூரியனை பூமி, செவ்வாய், வியாழன் என்பவை கடிகாரமுள் சுற்றும்  திசையில் சுற்றுகின்றன. ஆனால் புளூட்டோ, வெள்ளி(Venus) ஆகியவை கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றுகின்றன. யுரேனஸ் செங்குத்தாக சக்கரம் சுற்றும் கோணத்தில் சுற்றுகின்றது. எல்லாக்கோள்களுக்கும்(planets) உள்ள துணைக்கோள்களும்(moons) அந்த கோள்கள் சுற்றும் திசையில் சுற்றவேண்டும். குறைந்தது 6 துணைக்கோள்கள் இதற்கு முரண்படுகின்றன. மேலும் நெப்டியூன், ஜூப்பிட்டர், சனி ஆகிய கோள்களின் துணைக்கோள்கள்  இரு திசையிலும் சுற்றும் கோள்களை கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;[4] நான்கு கோள்களுக்குமட்டும் ஏன் வளையங்கள் என்ற கேள்வியும், வாயுக்கோள்களாகிய ஜூப்பிட்டர், சனிக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்கமுடியும் என்ற கேள்வியும். சந்திரன் பூமியை வட்ட சுற்றுப்பாதையிலும், பூமி சூரியனை நீள்வட்டப்பாதையிலும் சுற்றுகிறதே போன்ற கேள்வியும் சிந்திக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;[5] வேதியியல் பரிணாமமுறையும் (chemical evolution) உயிர் உயிரிலிருந்து வருகிறது என்ற அடிப்படையை நிராகரிக்கமுடியவில்லை. (மில்லரின் ஆய்வுக்கூடசோதனை). புரோட்டீன் உண்டாக அமினோ அமிலம் என்பது தானாக முறைப்படி வந்து அதினதின் இடத்தில் உட்கார்ந்தாலே உண்டாகமுடியும். முரணாக அமினோ அமிலங்கள் புரோட்டினிலிருந்து விழத்தான் செய்கின்றன, தானாக வந்து உட்காருவதில்லை. இந்த சமன்பாடில் ஒரு அமினோ அமிலம் சரியான இடத்தில் இல்லையெனில் முழு புரோட்டீனும் வீணாகும். நமது உடலில் இத்தனை புரோட்டீன்கள் காணப்படுவது நிகழ்தகவுக்கு அப்பாற்பட்டது.  ஒரு புரோட்டீனில் 100 அமினோ அமிலம் காணப்பட நிகழ்தகவு என்பது  1/ (10&lt;sup&gt;65&lt;/sup&gt;) க்கும் குறைவாகும். இது ஒரு மாநில லாட்டரி சீட்டு ஒன்றை தற்செயலாக தெருவில் கண்டெடுத்து அது முதல் பரிசை தட்டிச்செல்லும் என்பதாக இருக்கவேண்டும், மேலும் அப்படிப்பட்ட லாட்டரி சீட்டை வாரந்தோறும் கண்டெடுக்கவேண்டும். அப்படியாக 1000 வருடங்கள் கண்டெடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சாத்தியம் தான் 1/(10&lt;sup&gt;65&lt;/sup&gt;) என்பதாகும். அப்படியே புரோட்டீன் அதிசயமாக தற்செயலாக உருவாகினாலும், உயிர்கள் உண்டாக போதுமானதல்ல. ஒரு எளிய "செல்" என்பதற்கே ஆயிரக்கணக்கான புரோட்டீன்கள் தேவைப்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட் ஹாய்ல் (Fred Hoyle) என்ற கணித விஞ்ஞானி அதிவேக கம்யூட்டரை தன்னுடைய பட்டதாரிகளுடன் பயன்படுத்தி தற்செயலாக ஒரு உயிர் உண்டாவதற்கான நிகழ்தகவு கண்டறிய முனைந்தார்.  அவர்  கணக்கின்படி: அமீபா என்ற உயிரினத்தின் புரோட்டீன் மாத்திரம் உண்டாவதற்கு  1/(10&lt;sup&gt;40000&lt;/sup&gt;). இது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதை விளக்கவேண்டுமென்றால்  சூரியகுடும்பத்தையும் தாண்டி அது இருக்கும் அண்டவெளியில் உள்ள ஒரு அணுவை எடுக்க நிகழ்தகவு என்பது 1/(10&lt;sup&gt;80&lt;/sup&gt;) ஆகும் !!!!!! உயிர் தற்செயலாக உண்டாக சாத்தியம் 1/10&lt;sup&gt;40000&lt;/sup&gt;  என்பது மிகவும் கற்னைக்கு அப்பாற்பட்டது என்றார். இதுவே மகாவெடிப்பு கோட்பாட்டையும், டார்விணின் கோட்பாட்டையும் புதைக்க போதுமானது. டார்வின் என்பவரே "Blind watch maker"-ல் ஒரு செல்லில் நியூக்லியஸ் பற்றிய தகவல் மட்டுமே 30 களஞ்சிய புத்தங்களைத் தாண்டும் என்றார். எனவே வெடிச்சிதறலில் இருந்து உயிரினம் உண்டானது என்பதெல்லாம் நகைச்சுவையாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;[6] தாவரம், மனிதன், விலங்குகள் எல்லாம் "செல்" உடையன. மனித உடலில் மட்டும் "50 million million" (50 trillion) cells, உள்ளன. ஒரு செல் என்பது மட்டும் உயிரோடிருக்க ஒரு சிறு நகரம்(city) செய்யும் வேலைகளைச் செய்கின்றது. செல் மெம்ப்ரேன் என்ற புரோட்டீன்கள் எந்த மூலக்கூறுகள் உள்ளே செல்லவேண்டும், செல்லக்கூடாது என்று முடிவு செய்கின்றன. இவைகள் அழுத்தமானி(pump) போல சத்துப்பொருட்களை இறக்குமதி செய்தும், தேவையற்றதை ஏற்றுமதிசெய்யவும் செய்கின்றன. செல்-க்கு உள்ளே மிகவும் சிக்கலான அமைப்புகள் உள்ளன. Endoplasmic reticulum என்பது ஒரு போக்குவரத்து நிறுவனமாக ribosomes உற்பத்திசெய்யும் பலவிதமான புரோட்டீன்களை கொண்டு செல்கிறது. Golgi body என்பவை புரோட்டீன்களை இந்த மெம்ப்ரேன்களின் வெளிப்பகுதிக்கு கொண்டுசெல்கிறது. இதற்கிடையே lysosome என்பவை இந்த மூலக்கூறுகளை சிறுமூலக்கூறுகளாக உடைக்கும் ஜீரண வேலையை செய்கிறது. Mitochondria என்பவை செல் உட்கொள்ளும் க்ளுகோஸ்-ன்  மின்உற்பத்தி நிறுவனம் ஆகும். நியூக்லியஸ் என்பது ஒரு அனைத்து ஆவணங்களின் வங்கிபோல் இது செல் இயங்க உதவுகிறது. இந்த நியூக்லியஸ்க்கு உள்ளே குரோமோசோம்கள் உள்ளன. இவை DNA (DeoxyriboNucleic Acid) நூலகத்தை உள்ளடக்கியுள்ளன. DNA என்பவை உயிர்வாழ பிழை கண்டறிதல், நீக்கம், சரிசெய்தல், தானே மறுபடியும் உருவாக்குதல் போன்ற 1 பில்லியனுக்கும் அதிகமான தகவல் அடங்கியதாகும். இத்தனை உறுப்படிகளும் ஒரே நேரத்தில் உருவாகினால்தான் "செல்" இயங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;[7] பாக்டீரியாக்கள் என்பவை நகர்ந்து செல்ல அவைகளில் ஒரு மோட்டார் போல் உள்ளன. இவை ஒரு நிமிடத்துக்கு 100,000 சுழற்சிகள் செய்யக்கூடியவையாகும். இந்த பாகங்களில் ஒரு பாகம் செயல் இழப்பின் பாக்டீரியா இறந்துவிடும். நமது தலைமுடியை குறுக்கே வெட்டினால் வரும் குறுக்கு வட்ட அளவு சுமாராக 8 மில்லியன் பாக்டீரியாக்கள் பிடிக்கும். இப்படி பாக்டீரியாக்கள் மிகவும் சிறியதாக இருப்பினும் அவைகளின் அமைப்பு எளிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மகா வெடிப்பிலிருந்து உயிர் வர வாய்ப்பு இல்லை. இவைகளை இப்படி உருவாக்க  மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஞானம், அறிவு தேவை. (Intelligence beyond our capacity is involved for this type of design). எனவே சிருஷ்டிப்பைத்தான் இந்த உலகத்தில் காணப்படுபவைகள் நிரூபிக்கின்றன. தானாக உருவாயின என்று ஏற்றுக்கொள்ளவது, ஆழமாக ஆராய்ந்துபார்க்காமல் செய்யும் பிழையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்த காணொளிகளைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/p3fNbRGWdEw?fs=1&amp;amp;hl=en_US" rel="0"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/p3fNbRGWdEw?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="385" width="480"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/whFg9FLYBIM?fs=1&amp;amp;hl=en_US" rel="0"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/whFg9FLYBIM?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="385" width="480"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-1343225770363946552?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/01/69-big-bang-theory.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1343225770363946552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1343225770363946552'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/01/69-big-bang-theory.html' title='69. உயிரினங்களின் தோற்றம் மகாவெடிப்பிலிருந்து  என்ற கோட்பாட்டை  (Big bang theory)  எப்படி மறுப்பது?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-7485798271926754677</id><published>2011-01-09T22:00:00.000-08:00</published><updated>2011-03-11T11:37:49.097-08:00</updated><title type='text'>68. பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாகவும், புதிய ஏற்பாட்டில் அன்பாகவும்  இருப்பதேன்?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்&lt;/span&gt;:&lt;br /&gt;அநேகர்களுக்கு பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது தேவன் கோபமானவர் என்றும், புதிய ஏற்பாட்டில் அன்பானவர் என்றும் எண்ணம் தோன்றுகிறது.  உண்மையில் அப்படி அல்ல. (Just a wrong perception).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியானது அநேக வருடங்களாக கிறிஸ்தவர்களின் மனதிலே தோன்றியது. சபையின் தந்தையர்களின் காலத்தில்  "மார்சியன்(Marcion)" என்பவர் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி பழைய ஏற்பாட்டிலுள்ள தேவன் என்பவர், இயேசு குறிப்பிட்ட பிதாவை விட குறைவாக இருந்தார் என்று சொல்லி, புதிய ஏற்பாட்டில் எங்கெல்லாம் சிருஷ்டிகர் என்பவர் தீமையானவர் என்ற தோற்றம் எழுகிறதோ அதையெல்லாம் நீக்கிப்போடவேண்டும் என்றார். கடைசியாக அவருக்கு லூக்கா எழுதின நிருபத்தின் சுருக்கம் ஒன்றே மிஞ்சியது. ஆனால் சபைகள் எல்லாம் மார்சியனின் மாறுபாடான உபதேசத்தை ஒதுக்கித்தள்ளியும், எல்லா ஆகமங்களும் ஒரே தேவனால் ஏவப்பட்டன (inspired). எனவே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் முடிவு தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை என்னவெனில் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் (images) புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. யோவான் 1:18ல் சொல்லும்போது மிகவும் சரியாக "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை;   பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்."  என்கிறார். குமாரனாகிய இயேசுவில் காணப்பட்ட சுபாவங்கள்/குணங்கள்தான் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனின் சுபாவம்.  பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் அன்புகூரும் அளவில் மாற்றமில்லை. பிதாவைவிட குமாரன் அதிக கண்டிப்பாயிருப்பதுமில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களை எழுதிவர்கள் அனைவரும் பழைய, புதிய ஏற்பாட்டுக்கும் ஒரேபோன்ற தொடர்ச்சியுள்ளது என்றும், பழைய ஏற்பாட்டின் தேவனுக்கும், கிறிஸ்து இயேசுவிடம் கொண்ட அனுபவத்திற்கும் ஒரே போன்றது என்று கண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்குறித்து மூன்று காரியங்களை விரிவாக பார்க்கலாம்:&lt;br /&gt;[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது.&lt;br /&gt;[2] புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது.&lt;br /&gt;[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம் என்பது காலத்துக்குள்ளும், காலத்தின் முடிவிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; [1] &lt;u&gt;பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேவன் தன்னைப்பற்றி தான் யார் என்று சொல்லும்போது முதலில் தான் ஒரு நியாயத்தீர்ப்பு செய்யும் தேவன் என்று சொல்லாமல், தான் அன்புள்ளவர் என்று சொல்லுகிறார். யாத்திராகமம் 34:6,7 "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: &lt;span style="font-weight: bold;"&gt;கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்&lt;/span&gt;; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்."&lt;br /&gt;இப்படித்தான் தன்னைப்பற்றி தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் அப்படிப்பட்டவரே! நன்றாக கவனியுங்கள் அந்த வசனத்தில், முதலில்:  இரக்கம், கிருபை, அன்பு, உண்மையுள்ளவர் மற்றும் மன்னிக்கிறவர் என்று சொல்லி, பின்புதான்: தேவன் அன்பாயிருக்கிறார் என்று சொல்லி அதை தங்களுக்கு சாதமாக்கிகொண்டு அக்கிரமம் செய்பவர்களை நான் குற்றவாளியாக தீர்ப்பேன் என்று சொல்கிறார்.அப்படிப்பட்டவர்களை நியாயம்தீர்ப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாம் பாவம் செய்தபின்பும் அன்பாகவே தேவன் தோட்டத்திலே வந்து உலாவுகின்றார். அங்கே அவர்கள்  மனந்திரும்பவில்லை என்றாலும், அவர்களுக்கு தோலினால் உடைசெய்து கொடுக்கிறார். பழைய ஏற்பாடு முழுவதிலும், அவர் இஸ்ரவேல் ஜனங்களை அன்பின் நிமித்தமே தெரிந்துகொண்டார் என்று சொல்கிறார்; அவர்கள் அதற்கு தகுதியுடையவர்கள் என்பதால் அல்ல.  அவர்கள் தகுதி அற்றவர்கள். எப்பொழுதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் முரட்டாட்டம் செய்தனரோ அப்பொதெல்லாம் தம்முடைய தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பி எச்சரித்தார். அவர்கள் அதற்கு கீழ்ப்படியாத பட்சத்தில் அவர்கள் ஒடுக்கப்படும்படி விடுகிறார். அவர்கள் தேவனை நோக்கி கூப்பிடும்போது இரக்கமுள்ளவராக அவர்களை விடுவிக்கிறார்! அப்படியாக அவர்கள் கஷ்டப்படும்போதுகூட ஓசியா 11:8ல் "எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள்ளே திரும்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது." என்று தேவன் சொல்கிறார். ஒருபுறம் அவருடைய நீதி நியாத்தீர்ப்பையும், மறுபுறம் அவருடைய அன்பின் இருதயம் தம்முடைய ஜனங்களுக்காக உடைந்தும், அவர்கள் கஷ்டத்தை விரும்பாமலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசியாவிலே சொன்னதுபோல் அவர் விபச்சாரிகளுக்கு கணவர். இங்கே தேவனை விட்டு வேறுதேவர்களை பின்பற்றுதல் விபச்சாரம் செய்வதுபோல் ஆகும்.   இருப்பினும் அவர் அவர்களை தம்முடைய கரத்திலே அணைக்கும்படிதான் விரும்புகிறார்; அதே சமயம் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விடுவதும் இல்லை! அவருடைய நோக்கமும் திட்டமும் வெறும் நியாயத்தீர்ப்பு அல்ல; ஆனால் அவர்களுக்கு கொடுக்கும் நியாத்தீர்ப்பினால் அவர்களைத் தம்மிடம் ஒரு குடும்பத்தைப்போல மீட்கும்படி அப்படிச் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டும் பாரபட்சமாக செய்யாமல், யோனா-வில் வாசிப்பதுபோல் நினிவே பட்டணத்தாருக்கும் இரக்கமாயிருந்தார் என்று வாசிக்கிறோமே. யோனா சொல்லும்போது: இதோ நான் தர்ஷீசில் இருக்கும்போதே நான் சொல்லவில்லையா? நீர் கிருபையும், இரக்கமும், அன்புமிகுந்தவர் என்றும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்றும் அறிவேன். யோனாவுக்கு தேவன் இரக்கமுள்ளவராக இருந்தது பிடிக்கவில்லை. நாற்பது நாளில் அழியும் என்று சொல்வதில் மகிழ்ச்சி. ஆனால் நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினபோது தேவன் மனதிரங்கி சீரியா தேசத்தார்களாகிய அவர்களை மன்னித்தது யோனாவுக்கு பிடிக்கவில்லை. நீர் ரொம்பத்தான் அன்பாயிருக்கிறீர், ரொம்பவே மன்னிக்கிறீர், என்று ஒரு குற்றச்சாட்டு. யோனாவும், ஓசியாவும் தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நோக்கில் இல்லை, மன்னிக்கும் செயலில் இருக்கிறார் என்று அறிவுறுத்துகின்றனர். மனம் திரும்பாதவர்களை மன்னிக்கமுடியாது. எனவே அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து எச்சரிக்கிறார்.  அந்த தீர்க்கதரிசிகளை கொலைசெய்தால், மேலும் சில தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். அவர்கள் மனந்திரும்பினால் அந்த நியாயத்தீர்ப்பானது அவர்கள்மேல் வராமற்போகும். மனந்திரும்பாவிடில் நியாத்தீர்ப்பை அவர்கள்மேல் அனுப்புவதை தேவன் விரும்பாவிட்டாலும், அவர் நியாயத்தீர்ப்பை அனுப்பியே ஆகவேண்டும். அநேகமுறை அப்படிப்பட்ட கஷ்டத்திலும் அவர்களை மீட்டுக்கொள்ள மீண்டும் ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு "நல்ல" பெற்றோர், தவறு செய்யும் தன் பிள்ளையை ஒரு தண்டனை கொடுத்து திருத்த முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;[2] &lt;u&gt;புதிய ஏற்பாட்டிலும் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது:&lt;/u&gt;&lt;br /&gt;புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு((judgment in NIV) என்னும் வார்த்தை 108 முறை வருகின்றது. அவைகள் எல்லாவற்றிலும் அதிகமாக இயேசுதான் நியாயத்தீர்ப்பைக் குறித்துச் சொல்கிறார். அவர் சொல்லும்போது: "உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்(மத் 5:29,30)".&lt;br /&gt;மத்தேயு 7:13-29; 24:45; 25:46 ஆகிய வசனங்களில் எச்சரிக்கை கொடுத்தவரும் இயேசுதான். புதிய ஏற்பாட்டில் மற்றெல்லாரைக்காட்டிலும் அதிகமாக நியாயத்தீர்ப்பைக்குறித்து பேசியது இயேசுதான். வெளிப்படுத்தின விசேஷம் யோவானுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டது. பலவிதமான  நியாயத்தீர்ப்புகள் குறித்து புதிய ஏற்பாட்டில் உள்ளன. தன்னைத்தானே நியாயம்தீர்ப்பது(யோவான் 9:39; 12:47-49), தேவனின் நியாயத்தீர்ப்பு( யோவான் 8:50), தனிப்பட்டவர்களின் நியாயத்தீர்ப்பு( அப் 12:23) மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு (யோவான் 5:22,27) என உள்ளன. மனிதர் செய்யும் சில காரியங்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது (1 கொரி 6:9-10; கலா 5:19-21) மேலும் விரிவான நியாயத்தீர்ப்பின் காட்சிகள் (வெளி 20:11-15).  இங்கே எல்லாம் நியாயத்தீர்ப்பைக்குறித்தும், அவைகளில் பல இயேசுவை உள்ளடக்கியும் உள்ளது. இயேசு இந்தவிஷயத்தில் பிதாவைப்போலதான்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஏற்பாடு கிருபை, அன்பு குறித்து போதிக்கின்றது; ஆனால் அன்பையும் கிருபையையும் அநேகர் புறக்கணிக்கக்கூடும். புதிய ஏற்பாடு கடைசி நியாயத்தீர்ப்புநாள் குறித்தும் சொல்லுகிறது. புதிய ஏற்பாட்டின்படி ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்புக்கு பாத்திரர்தான், ஆனால் தேவன் இப்போது எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என்று கிருபைமிகுந்தவராய் இருக்கிறார்.  அந்த கிருபையை ஜனங்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டால், மிகவும் பயங்கரமான முடிவு அவர்களுக்காக உண்டு. எனவே இங்கே பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதுபோலவே, புதிய ஏற்பாட்டிலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் எச்சரித்தனர். புதிய ஏற்பாட்டில் தேவன் அப்போஸ்தலர்கள், போதகர்கள், சுவிசேஷகர் என்று அனுப்பி ஜனங்கள் மனந்திரும்பவேண்டும் என்றும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்புகுறித்தும் சொல்கிறார். எனவே இந்த விஷயத்தில் இரு ஏற்பாடுகளிலும் ஒற்றுமைதான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;[3] &lt;u&gt;நியாயத்தீர்ப்பில் வித்தியாசம்&lt;/u&gt;:&lt;br /&gt;பழைய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு  [அவர்கள்] காலத்துக்குள் நடந்தது. இஸ்ரவேலர் பாவஞ்செய்தபோது அவர்கள் மரித்தெழுந்தபின் நரகத்துக்கு போவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்கள் மீதியானியராலும், அசீரியராலும் ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். எனவே பழைய ஏற்பாட்டில் பல நியாயத்தீர்ப்புகளைக் காணலாம். நியாயாதிபதிகளின் புஸ்தகத்திலும், கானானியர், மோவாபியர், அம்மோனியர் மற்றும் பெலிஸ்தியர்கள் எல்லாரும் இஸ்ரவேலை தண்டித்தனர். பிற்காலத்தில் எகிப்தியர், அரேமியர, அசீரியர் மற்றும் பாபிலோனியர்கள் என்று வந்து ஒடுக்கினர். இவை எல்லாம் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தேறின. நமக்கு தீர்க்கதரிசி சொல்லும் பஞ்சம், வாதைகள், ராணுவம் சூழ்ந்துகொள்ளும் என்னும் எச்சரிக்கைகளை படிக்கும்போது மகிழ்வற்ற செய்தியாயிருக்கலாம், ஆனால் அவை நிஜவாழ்வில் பின்வரும் சம்பவங்கள் (இன்று சில இடங்களில் இருப்பதுபோல). மேலும் மனிதர்கள் மனந்திரும்பவேண்டும் என்று இவைகளை அனுமதிக்கிறார்; அவைகளில் பிரியப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஏற்பாட்டில் இறந்தபின்பு வாழ்க்கையைக்குறித்து கொஞ்சம்தான் வெளிப்படுத்தப்பட்டது, அதுவும் பழைய ஏற்பாட்டின் கடைசி கட்டத்தில்.  ஜனங்கள் மரணம் எனபதை ஷீயோல் (Sheol) என்னும் மறைவான உலகிற்கு செல்வது என்றும் அங்கே தேவனைத் துதிப்பது என்று எல்லாம் இல்லை என்றும்,  கொஞ்சம் வாழ்வு இருக்கும் என்று எண்ணினர். அவர்களைப் பொறுத்தமட்டில் முதிர்வயதில் மரிப்பதும், பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதும்,  அந்த பிள்ளைகள் தங்கள் பேரையும் புகழையும் கட்டிகாக்கவேண்டும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது; சிறுவயதில் இறப்பது நியாயத்தீர்ப்பென்று எண்ணினர். ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எதிர்காலத்தைக்குறித்து அதிகமாக சொல்லியுள்ளார். எனவே நியாயத்தீர்ப்பு என்பது காலத்தின் கடைசியில் என்றும், மரித்தோர் உயிர்தெழுதல், நித்தியஜீவன், நரகம்  எல்லாம் காலத்தின் முடிவில். காலத்தின் முடிவு என்பது கிறிஸ்துவின் வருகையில் இந்த வரலாறு முடிந்துபோகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, பழைய ஏற்பாட்டில் தேவன் நியாயம்தீர்க்கும் தேவனாகவும், புதிய ஏற்பாட்டில் அன்புள்ள தேவனாகவும் இருக்கிறாரா?  இல்லை.  இரு ஏற்பாடுகளிலும் தேவன் அன்பாயிருக்கிறார் என்றும் அவரே நீதியுள்ள தேவனாக இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இனி வரவிருக்கும் பயங்காரமான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள, தேவன் மனிதர்களுக்கு தன்னுடைய அன்பையும், மன்னிப்பையும் தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-7485798271926754677?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/01/68.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7485798271926754677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7485798271926754677'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/01/68.html' title='68. பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாகவும், புதிய ஏற்பாட்டில் அன்பாகவும்  இருப்பதேன்?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-281771887707102369</id><published>2011-01-02T22:00:00.000-08:00</published><updated>2011-01-03T10:52:55.719-08:00</updated><title type='text'>67. ஆதியாகமம் 6:1-4ல் தேவகுமாரர் யார்?  இராட்சதர் யார்?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி:&lt;br /&gt;ஆதியாகமம் 6:2, 4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை" அதிக  சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத்  தெரிந்துகொண்டார்கள்...அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப்  பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய  பலவான்களானார்கள்.&lt;br /&gt;இங்கே "தேவகுமாரர்" யார், "இராட்சதர்" யார்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்&lt;/span&gt;:&lt;br /&gt;ஆதியாகமம் 6:1-4 வரையுள்ள வசனங்களைக்காட்டிலும் வரலாற்றில் சிலர் எழுதிய  புத்தகங்கள் ஜனங்களின் மத்தியில் ஒரு விநோத ஆர்வத்தையும்,  வேறுபட்ட கருத்துக்களையும் எழுப்பியுள்ளது. முதற்பார்வையில் இந்த வசனம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். கடினமானது என்னவெனில் "தேவ புத்திரர்", "மனுஷ குமாரத்திகள்"  மற்றும் "இராட்சதர் (அதாவது நெஃபிலிம் என்னும் எபிரெய வார்த்தை)" எனப்படும் வார்த்தைகளில் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்தான்.   இந்த கூட்டத்தினரினைப் பற்றி தனித்தனியே விளக்கம் கொடுக்க பல பண்டிதர்கள் பெரிய நிலைகளில் எழும்பி விவாதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று  வாதத்திற்குரிய கூட்டத்தினராக&lt;br /&gt;[1] அண்டவெளியின் கலப்பினங்கள் (cosmological mix - தூதர்கள்-மனிதர்கள் கலவை).&lt;br /&gt;[2]  சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர் கலவை.&lt;br /&gt;[3]  சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள் (sociological mix).&lt;br /&gt;என்று வார்ப்புரு (label) இடப்பட்டன. இப்படி கொடுக்கப்பட்டுள்ள கலப்பினங்களுக்குள் முதற்பார்வையில் தேவதூதர்கள் மனிதர்களுடன் கலந்தார்கள் என்ற &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சாத்தியம்,  எல்லா பார்வைகளை(view) விட ஒருவேளை மேலோங்கி நிற்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;[1] &lt;u&gt;"அண்டவெளியின் கலப்பினங்கள்&lt;/u&gt; (cosmological mix- &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தூதர்கள்-மனிதர்கள் கலவை&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;)"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt; "1 ஏனோக்கு" எனப்படும் புத்தகமானது சுமார் கி.மு 200-ல் எழுதப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 6:1, 7:6ல் "இருநூறு தூதர்கள் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செமாயா என்ற தூதனின் தலைமையில் இருந்தனர். அவர்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; பூமியிலுள்ள மிகவும் அழகிய குமாரத்திகளை கண்டனர்.  அந்த ஆசையில் இவர்கள் பூமிக்கு செல்வோம் என்று ஆணைவிடுத்துக்கொண்டு பூமிக்கு வந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு மனைவிகளைக் கொண்டனர். அவர்கள்  மனைவிகளுக்கு மாயாஜால மருந்துகள், வேர் மூலிகை மருந்துகள் என்பவைகளைப்பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். பெண்கள் கர்ப்பமடைந்து பிரசவித்தபோது 300 முழம் அளவுக்கு வளரும்  இராட்சதர்கள் பிறந்தார்கள். இந்த இராட்சதர் பூமியிலிருந்த ஆகாரத்தை பெரிதளவில் காலிசெய்தார்கள். எனவே மற்ற மனிதர்கள் இவர்களை வெறுக்க ஆரம்பித்தனர். இந்த இராட்சதர்கள் பின்பு பூமியிலிருந்தவர்களையே விழுங்க ஆரம்பித்தனர், விலங்குகளையும், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. பின்பு பூமியே இவர்களை குற்றப்படுத்தியது."  இப்படி ஒரு (கட்டுக்) கதை. இது பைபிளில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யூதர்களில் புகழ்பெற்ற வரலாற்றாலர் (historian கி.மு.37)  "ஜோஸஃபஸ்" என்பவரும் இந்த தேவதூதர்கள்-மனிதர்கள் கலப்பு கொள்கையை பின்பற்றினார். அவர் எழுதும்போது "பல தூதர்கள் பெண்களுடன் துணையாக இருந்து பிள்ளைபெற்றது அநீதியென்று காட்டியது என்றார். அப்படியே கிரேக்க மொழியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தில் "தேவனின் தூதர்கள்" என்ற பதத்தை  ஆதி 6:2ல் பயன்படுத்தினர். அதன்பின் அதினால் வந்த பல சிக்கல்கள், தொல்லைகள் நிமித்தம் அந்த பதமானது பயன்படுத்தக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யோபு 1:6 ல் தேவபுத்திரர் என்ற வார்த்தை வருகின்றது; அங்கே அது "தேவ தூதர்கள்" என்று தெளிவாக புரிந்துகொள்ளும்படி உள்ளது. மனிதர்கள் அல்ல;  அதை வைத்துக்கொண்டு ஆதி 6:2ல் சொல்லப்பட்ட தேவகுமாரர் என்பவர்கள்  தேவதூதர்கள் என்று உடனே முடிவுசெய்யக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பைபிளில் எங்குமே தேவதூதர்கள் மனிதர்களை திருமணம் செய்ததாக இல்லை. மிக மிக முக்கியமாக நம்முடைய &lt;span style="font-weight: bold;"&gt;ஆண்டவராகிய இயேசு சொல்லும்போது "அவர்கள் தேவதூதர்களைப்போல திருமணம் செய்யாமல் (கொள்வனையும் கொடுப்பனையும் இன்றி) இருப்பார்கள்" என்று மாற்கு 12:25ல் குறிப்பிட்டுள்ளார்&lt;/span&gt;. மிகவும் முக்கிய பதிப்பான ஆல்பிரட் ரால்ஃப்ஸ் என்பவரின் பதிப்பு, தூதர்கள் கலப்பைப்பற்றி சொல்லவில்லை. பூமியிலே தேவதூதர்கள்தான் பிரச்சனை உண்டாக்கினார்கள் என்றால் தேவன் ஏன் பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவேண்டும்; பரலோகத்தில் ஒருபகுதியில் பேரழிவை உண்டாக்கியிருக்கலாமே;  குற்றவாளிகள் மேலேயிருந்து தானே வந்தார்கள்; பெண்கள் அழகாக இருந்ததார்களே தவிர வேறென்ன என்கிறது ஒரு வாதம். சிலர் 1 பேதுரு 3:18-20, 2 பேதுரு 2:4 மற்றும் யூதா 6,7 ஆகிய வசனங்களை கொண்டுவந்து "மனிதர்கள்-தூதர்கள்" கொள்கையை ஆதரிக்கின்றனர்.  ஆனால் அந்த வசனங்களில் தூதர்கள் திருமணம் செய்ததைப் பற்றி சொல்லவில்லை.  மேலும், சோதோம் கொமோராவின் பாவம் என்பது ஆதி 6:1-4ல் சொல்லப்பட்டதுதான் என்று விவாதிப்பது தவறான ஒப்பிடுகையாகும்.  அங்கே தூதர்களின் பாவத்தை  சோதோம் கொமோராவின் பாவத்துடன் ஒப்பிடவில்லை;  பதிலாக,  சோதோம் கொமோராவின் பாவத்தை அதைச்சுற்றியுள்ள பட்டணங்களுடன் (அத்மரா, செபோயீம் உபாகமம் 29:23, ஓசியா 11:8) ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே யூதா குறிப்பிட்ட தூதர்களின் பாவங்களும் (யூதா 6),  அந்த பட்டணங்களின் பாவங்களும் (யூதா 7)  மற்றவர்களின்மேல் வரும் நியாயத்தீர்ப்பைக்குறித்து நமக்கு உணர்த்துகின்றன. யூதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்களின் விழுகை என்பது பிசாசாசின் (லூசிபர்) விழுகையைப் பற்றியதாகும். இந்த விழுகையையும் ஜலப்பிரளயத்து காலத்தையும் இணைப்பது தவறாகும். அப்படி இணைத்தால் அந்த பட்டணங்களின் பாவத்தையும் ஜலப்பிரளயத்துடன் இணைக்கும்படி வரும், அது பொருந்தாமல் போகிறது.  யூதா-வில் ஒரே நேரத்தில் நடந்தவைகள் குறிப்பிடப்படவில்லை; அடுத்தடுத்து நடந்தவை குறிப்பிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தூதர்கள் பைபிளில் பழைய ஏற்பாட்டிலும், புதியஏற்பாட்டிலும் செய்தி சொல்லும்படி தேவனால் மனிதர்களிடத்திற்கு அனுப்பப்பட்டனர். கிதியோன், சிம்சோனின் பெற்றோர் (மனோவாவின் மனைவியிடம் முதலில்), எலியா, தாவீது,  சகரியா, ஏசாயா, மரியாள்,  கொர்நேலியு என்று பல உதாரணங்களை வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"இராட்சதர்" என்பவர்கள் தூதர்-மனிதர்களின் கலவை என விவாதிப்பது பைபிளுடன் பொருந்தவில்லை. தூதர்கள் மனிதனுடைய அழிந்துபோகும் மண்ணின் சரீரத்துக்கு மாறிவந்து மணம் செயதது என்பது எல்லாம் யூகத்துக்கு அடுத்தவையாகும். மேலும் "1 ஏனோக்கு" என்ற புத்தகத்தை  சாட்சியாக கொண்டுவருவதும், வேதத்திலுள்ளதை மாற்றாக பிரதிபலிப்பதும் தவறாகும். எனவே இது சாத்தியமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;[2] &lt;u&gt;"சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர்"&lt;/u&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த பார்வை "தேவகுமாரர்" என்பவர்களை சேத்தின் வம்சவழி என்று அடையாளப்படுத்துகின்றது. ஏனெனில் இவர்கள் தேவனை தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி 4:26). "மனுஷ குமாரத்திகள்" என்பவர்கள் காயீனின் சந்ததி; இவர்கள் தேவபயமில்லாமல் வாழ்ந்தவர்கள். அப்படியென்றால் அங்கே காணப்பட்ட பாவம் "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்பட்டது (unequally yoked)" என்பது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த கலவையில் வந்தவர்கள் எப்படி பேர்பெற்ற மனிதர்களானார்கள்?&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; அல்லது எப்படி இவ்விரு கூட்டத்தாரும் கலவியபோது இவர்களுக்கு  நெஃபிலிம்-கிப்போரிம் (nephelim-gibborim எபிரெய வார்த்தை)  எனப்படும் இராட்சதர் (பெலசாலிகள்) என்பவர்கள் பிறந்தனர்?  இது இவர்களுடைய மரபணுக்களில் (DNA) எப்படி  இந்த திடீர் மாற்றம் என்ற கேள்வியினை எழுப்புகின்றது. இரு சமயத்தார் கலப்பில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு எப்படி?   இதற்கு எந்த சாட்சியும் இல்லாததால், இந்த சாத்தியமும் முதற்பார்வையில் சந்தேகத்துக்குரியது.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[3]&lt;u&gt; "சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள்"&lt;/u&gt;: (sociologically mixed) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"தேவ புத்திரர்" என்பது ஆரம்பநாட்களில் ராஜாக்கள், கனவான்கள், அதிபதிகள் மற்றும் ஞானிகள் போன்ற மதிப்புக்குரியவர்களுக்கு மத்தியகிழக்கு பகுதியில் காணப்பட்ட  வழக்கச்சொல். இப்படிப்பட்ட அதிகாரப்பெயர் பெறுவதற்கு அவர்கள் மிகவும் உந்தப்பட்டு பேர்பெற்றவர்களாக (ஆதி 6:4) இருக்க விரும்பினர்.  இப்படியாக அறியப்படுவதற்கு அவர்கள் எந்த பகுதிகுயில் இருந்தார்களோ அந்த பகுதிக்கு&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தானே பொறுப்பென்றும், அதிகாரி என்றும் காட்டுவதற்கு   &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அநியாயமுறையில் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தாகத்துடன் இருந்தனர். இப்படியாக அவர்கள் அநீதியாகவும் இச்சையுடனும் காணப்பட்டனர். (ஆதி 6:5-6; ஆதி 10:8-12) மேலும் பல மனைவிகளையும் தங்களுக்கு கொண்டனர் (ஆதி 6:2). இப்படியாக சொல்லப்படும் கருத்துக்கு என்ன ஆதாரம்?&lt;br /&gt;ஆறு ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன:&lt;br /&gt;[அ] முற்கால அராமிய மொழிபெயர்ப்புகள் "தேவ புத்திரர்" என்பதை "கனவான்களின் புத்திரர்" என்று சொல்கின்றது. (Onkelos மொழிபெயர்ப்பில்)&lt;br /&gt;[ஆ] கிரேக்க மொழிபெயர்ப்பில்  "ராஜாக்களின் புத்திரர் அல்லது கர்த்தாக்களின் புத்திரர்" என்று சிம்மாச்சஸ் (Symmachus) -ல் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;[இ] எபிரெய மொழியில் தேவர்கள் (elohim--gods) எனபது நியாதிபதிகள் மற்றும் அதிபதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  அப்போது அவர்கள் அவனை தேவர்களிடத்தில் (நியாயாதிபதிகளிடத்தில்-gods-elohim) கொண்டுபோகவேண்டும். (ஆதியாகமம் 21:6, யாத் 22:8 மற்றும் சங்கீதம் 82:1, 6)&lt;br /&gt;[ஈ] அமைப்பின்படி, "காயீன் வழிவந்த லாமேக்கு" (ஆதி 4:19-24) மற்றும் "தேவபுத்திரர்" (ஆதி 6:1-4) இரண்டும் ஒன்றுபோல் உள்ளது. இவ்விரண்டிலும் பெண்கொள்ளுதலும், பிள்ளைப்பெறுதலும், "பேர்"பெறுதலும் காணப்படுகின்றன. முதற்பகுதியானது லாமேக்குடைய அதிகார தீர்ப்புடனும், பின்புவரும் பகுதியானது தேவனால் வந்த தீர்ப்புமாயிருக்கிறது. லாமேக்கு இருமனைவிகளை கொண்டிருந்தான்; தன்னுடைய அதிகாரத்தைக்கொண்டு கட்டளைகளை இட்டான்.&lt;br /&gt;[உ] மத்தியக் கிழக்குபகுதியில் ஜனங்கள் தேவர்கள்(gods) மற்றும் தேவதைகளின்(goddess) பெயர்களை தங்களுக்கு பயன்படுத்தியதாக கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்படி தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டதால் எகிப்து மற்றும் மெசப்பதோமியா பகுதியில் தங்களுக்கு கிடைத்த மரியாதைக்காக அப்படிச் செய்தார்கள். எனவே அவர்கள் "தேவபுத்திரர்" என்ற பட்டத்தை கொண்டிருந்தனர்.&lt;br /&gt;[ஊ] கடைசியாக, நெஃபிலிம்/கிப்போரோம் என்று சொல்லப்பட்டுள்ள இராட்சதர் (ஆதி 6:4). இந்த "நெஃபிலிம்" ஆதியாகமம் 6:4-லும், எண்ணாகமம் 13:33ல் ஏனாக்கின் புத்திரர் என்பவர்கள் பார்வையில் தாங்கள் வெட்டுக்கிளிகள் போல என்ற வசனத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  மூலபாஷையான எபிரெய மொழியில் நெஃபிலிம் என்ற வார்த்தைக்கு "விழுகை(fall)" என்று பொருள். இருப்பினும் ஆதி 6:4ல்  "நெஃபிலிம்" என்னும் பதம் "கிப்போரோம்" என்ற பதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதற்கு "பராக்கிரமசாலிகள், பலசாலிகள், செல்வம் மற்றும் அதிகாரமுடையவர்கள்" என்று பொருள்படும்.  ஆதி 10:8ல் நிம்ரோத் கர்த்தருக்குமுன்பு பலத்தவேட்டைக்காரனாயிருந்தான் என்பதில் அவன் கிப்போரோம்- ஆக இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அவன்  சிநெயார் தேசத்தில் ராஜாவாயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே "நெஃபிலிம்/கிப்போரோ"ம் என்றால் இராட்சதர் என்று அர்த்தமல்ல, ஆனால் "இளவரசர்கள், வல்லுநர்கள்,  பெரியோர்" என்றே பொருள்படும். எனவே ஆதியாகமம் 6:1-4ல் பேராசைகொண்ட ஆளுபவர்கள் அதிகாரத்தையும், பெண்களையும், நாட்டையும் இஷ்டத்துக்கு பயன்படுத்தினர். இந்த துர்பிரயோகம் தேசத்தைக் கெடுத்ததுமட்டுமன்றி, தேவனையும் துக்கப்படுத்தினது. தேவனுடைய இருதயத்துக்கு அது விசனமாயிருந்தது என்று  உடனே அடுத்த வசனமான ஆதி 6:6-ல் வாசிக்கிறோம். எனவே ஜலப்பிரளயமானது தேவனின் தீர்ப்பாக இருந்தது; அது அவர்களின் இச்சைகளையும், அதிகார துர்பிரயோகத்தையும், அநீதியான காரியங்களையும், பாலியல் பாவங்களையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முற்றுப்புள்ளியாகும்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;எனவே அதிகமான சாத்தியங்கள் இதற்குத்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;குறிப்பிகள்:&lt;br /&gt;-- கெய்சர் என்னும் விரிவான கட்டுரை 1983.&lt;br /&gt;-- Gesenius's Lexicon&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TRwxZwFouTI/AAAAAAAAAwc/7KTmxVtKEyM/s1600/nephil.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 314px;" src="http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TRwxZwFouTI/AAAAAAAAAwc/7KTmxVtKEyM/s400/nephil.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5556370358743382322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-281771887707102369?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/01/67-61-4.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/281771887707102369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/281771887707102369'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2011/01/67-61-4.html' title='67. ஆதியாகமம் 6:1-4ல் தேவகுமாரர் யார்?  இராட்சதர் யார்?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TRwxZwFouTI/AAAAAAAAAwc/7KTmxVtKEyM/s72-c/nephil.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-1892887318113534585</id><published>2010-12-27T17:36:00.000-08:00</published><updated>2011-02-25T11:47:00.352-08:00</updated><title type='text'>66. எப்படி, எப்போது உபவாசிப்பது?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி&lt;/span&gt;: உபவாசம் எப்படி இருப்பதென்று விளக்கம் கொடுங்கள். எப்படி, எப்போது உபவாசிப்பது? காலை 6:00 மணிக்கு சூரியன் உதிக்கும் முன்பு சாப்பிடலாமா? புனித நாள்கள் எவை (செவ்வாய், வெள்ளி...)? 40 நாள் எப்படி உபவாசிப்பது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்&lt;/span&gt;:&lt;br /&gt;உபவாசம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆவிக்குரிய ஒழுங்குகளில் மிகவும் முக்கியமான ஒழுங்கு ஆகும். உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமது ஜீவியத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[1]&lt;/span&gt; ஏன் உபவாசம் இருக்கவேண்டும்?&lt;br /&gt;-- பழைய ஏற்பாட்டு காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும் உபவாசமானது தேவையான ஒரு ஒழுங்கு ஆகும். உதாரணமாக மோசே இரண்டுமுறை 40 நாட்கள் உபவாசத்துடன் இருந்தான். இயேசுவும் 40 நாட்கள் உபவாசம் இருந்தார். மேலும் இயேசு சொல்லும்போது: "நீங்கள் உபவாசிக்கும்போது" என்று சொல்கிறார். "நீங்கள் உபவாசித்தால்" என்று சொல்லவில்லை!&lt;br /&gt;-- இழந்துபோன "ஆதி அன்பை" மீண்டும் திரும்ப பெற  உபவாச ஜெபம் செய்தால், கிறிஸ்துவுடன் நெருங்கிச் சேர இயலும்.&lt;br /&gt;-- தேவனுடைய பார்வையில் நம்மை தாழ்த்தும்படி:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;எஸ்றா  8:21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத்  தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல  பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த  அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்...அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி,  எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக்  கேட்டருளினார்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; தாவீது சொல்லும்போது, "நான் உபவாசத்தினால் தாழ்த்தினேன்" என்கிறார்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தானியேல் 9:3ல் "நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும்   உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட   என்முகத்தை அவருக்கு நேராக்கி" என்பதில்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தும்படியும், தேவனைத் தேடவும் உபவாசிக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- தேவன் நம்மை எச்சரிக்கும்போது:&lt;br /&gt;I இராஜாக்கள் 21:27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது,  தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு,  உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; II நாளாகமம் 20:3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- உபவாசம் என்பது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய அல்லது நம்முடைய ஆவிக்குரிய நிலவரத்தை நமக்கு உணர்த்தி, நாம் மனமுடைந்து, மனந்திரும்பி ஒரு புதிய ஜீவியம் செய்ய உதவுகிறது. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யோவேல் 2:12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும்  அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில்  திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார் யோனா 3:5 அப்பொழுது  நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக்  கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் புதுப்பிப்பார். தேவனுடைய வார்த்தை மிகவும் அர்த்தமுள்ளதாக உங்களுக்கு காணப்படும்.&lt;br /&gt;-- உபவாசம் நமது ஜெபஜீவியத்தை மேலும் கட்டி எழுப்பவும் உயர்த்தவும் ஒரு அனுபவமாகும்.&lt;br /&gt;-- உங்களை எழுப்புதல் அடையச் செய்து, மற்றவர்களையும் உங்கள் மூலமாக எழுப்புதல் அடையச் செய்ய ஏதுவாக சில சமயங்களில் இருக்கும்.&lt;br /&gt;-- II நாளா 7:14ல் சொல்லப்பட்டுள்ளபடி செய்யவேண்டுமென்றால் உபவாசம் இருந்து ஜெபிப்பதின்மூலமே ஆகும்:&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,  ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத்  திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை  மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- தேவனுடைய சமுகத்தை அதிகமாக தேட உங்களுக்கு உதவும். உங்களுடைய குறைகளையும், மறைந்து காணப்படும் பாவங்களையும் கண்டறிய உதவியாக இருக்கும்.&lt;br /&gt;-- &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மகா பெரிய துக்கம், கஷ்டம் வரும்போது: &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;எஸ்தர் 4:3 "ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்  சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும்,  உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச்  சாம்பலில் கிடந்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;- பிசாசுகளை விரட்ட:&lt;br /&gt;மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;-- &lt;span style="font-size:85%;"&gt;கர்த்தருடைய ஊழியர்களை எடுக்கும் முன்பு, விசேஷமான நிகழ்வு: &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;அப்போஸ்தலர் 14:23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில்  அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்  விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; அப்போஸ்தலர் 13:3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;-- &lt;span style="font-size:85%;"&gt;பழக்க வழக்கமான உபவாசம்:&lt;br /&gt;"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;லூக்கா 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என்  சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே  ஜெபம்பண்ணினான்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உபவாச ஜெபத்திற்கு ஒரு பதில் உண்டு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்போஸ்தலர் 10:30 "அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு  முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில்(3pm) வீட்டிலே  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த ஒரு  மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என்றான்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[2]&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; கீழே சொல்லப்பட்டவர்கள் உபவாசம் இருப்பதை தவிர்க்கவேண்டும்:&lt;br /&gt;-- நரம்பு தளர்ச்சியால் உடல் நடுக்கம், பசியால் சரீரத்தில் குணங்கள் மாறுபடுபவர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- சரீரத்தில் மிகவும் மெலிந்து காணப்படுபவர்கள் .&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- இரத்த சோகை அல்லது உடலில் இரத்தம் குறைவாயிருப்பவர்கள் (anemic)&lt;br /&gt;-- வயிற்றுப்புண் (ulcer), இரத்தவியாதி, மாரடைப்பு,  கட்டிகள்(tumor) மற்ற இருதய வியாதியுள்ளவர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;--  நீரிழிவு (diabetic) நோயினால் இன்சுலின் எடுக்கும் அளவில் உள்ளவர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், நுரையீரல், இருதயம் மற்றும் முக்கியமான சரீரபாகங்களில் கோளாறு உள்ளவர்கள்.&lt;br /&gt;-- சர்க்கரை வியாதியுள்ளவர்கள், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள்&lt;br /&gt;-- பால்கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிப்பெண்கள்.&lt;br /&gt;-- காய்ச்சல் உடையவர்கள், படுக்கையில் இருக்குமளவுக்கு வியாதியுடையவர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[3]&lt;/span&gt;  எப்படி, எவ்வளவு நேரம், காலம் இருப்பது?&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- இயேசு எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறார்:  மத்தேயு 6:16 "நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல  முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக,  தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து  தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  நீயோ  உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,  அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு  எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- எரேமியா 36:6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ  எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச  நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள்  பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை  வாசிப்பாயாக.&lt;br /&gt;==&gt; கர்த்தருடைய வசனம் அன்று வாசிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- II சாமுவேல் 1:12 சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும்  கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே  விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-- நியாயாதிபதிகள் 20:26 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் &lt;span style="font-weight: bold;"&gt;அழுது&lt;/span&gt;, தரித்திருந்து, அன்று &lt;span style="font-weight: bold;"&gt;சாயங்காலமட்டும் உபவாசித்து&lt;/span&gt;, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,&lt;br /&gt;==&gt; இங்கே சாயங்காலம் மட்டும் உபவாசித்து என்று வாசிக்கிறோம்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I சாமுவேல் 31:13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;I  நாளாகமம் 10:12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும்  அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள்  எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள்  உபவாசம்பண்ணினார்கள்.&lt;br /&gt;==&gt; இங்கே ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தானியேல் 21 நாள் என்றும், மோசே 40 நாள், இயேசு 40 நாள் என்றும் வாசிக்கிறோம் இவைகள் விசேஷமான உபவாசங்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எனவே&lt;/span&gt;:&lt;br /&gt;[அ] வழக்கமாக (வாரந்தோறும்) உபவாசம் இருக்கும்போது:&lt;br /&gt;1- சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் குடிக்கலாம். (இட்லி மட்டும் சாப்பிவேன், கறி, மீன் விலக்கி வைப்பேன் என்பது உபவாசம் அல்ல). &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;2- அன்று சரீரத்தில் சுத்தமாக இருக்கவேண்டும், குளியுங்கள் அல்லது முகம் கழுவுங்கள்.&lt;br /&gt;3-   மனைவியினிடத்தில் சேராதிருங்கள். (யாத் 19:15)  சரீரத்திற்கு மகிழ்வூட்டும்  காரியங்களில் ஈடுபடாதிருங்கள் (விளையாட்டுகள், டி.வி., சுற்றுலா...).&lt;br /&gt;4-  சாயங்காலம் வரை உபவாசம் இருக்கலாம் (மலை 6-மணிக்கு மேல் சாப்பிடலாம்) . அதேபோல் காலை  6-மணிக்கு முன் சாப்பிடவேண்டாம்.  முந்தின நாள் இரவு உணவு கடைசியாக  இருக்கட்டும். சிறுவர் சிறுமியர் காலை ஒருவேளை உபவாசம் இருந்தால் போதும்.&lt;br /&gt;5-  ஜெபிக்கவேண்டும். ஜெபிக்காமல் போனால் பட்டினி இருப்பதற்கு சமம்.   ஜெபிக்கும்போது  நம்முடைய குறைகளை ஆராய்ந்துபார்த்து அறிக்கைசெய்யவேண்டும்.  இப்படிசெய்வதின்மூலம் தேவனிடம் கிட்டிச்சேருகிறோம். இதுவே உபவாசம்  இருப்பதின் முக்கிய நோக்கமாகும். "&lt;span style="font-weight: bold;"&gt;நான்&lt;/span&gt; உபவாசம் இருக்கிறேன். &lt;span style="font-weight: bold;"&gt;எனவே &lt;/span&gt;தேவன்  கண்டிப்பாக கேட்பார்" என்ற எண்ணம் தவறு. அது தற்பெருமை. நம்மைத்  தாழ்த்தும் காரியத்தில் அப்படிப்பட்ட எண்ணம் கூடாது. அப்படி எண்ணம்  இருப்பின் ஜெபத்திற்கு பதில் கிடைக்காது. பெருமையுள்ளவர்களுக்கு தேவன்  எதிர்த்து நிற்கிறார்.&lt;br /&gt;6- வேதம் வாசிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[ஆ] துக்கம் அல்லது கஷ்டமான சமயத்தில்:&lt;br /&gt;-- புசியாமலும், குடியாமலும் ஒருநாள் இருங்கள்.  அதிகபட்சம் மூன்று நாள் வரை குடிக்காமல் உபவாசம்  இருக்கலாம்  (எச்சில் கூட விழுங்காமல்).&lt;br /&gt;-- அழுது ஜெபம் பண்ணுங்கள்.&lt;br /&gt;-- மேலே உள்ள [அ] 2-6 பின்பற்றுங்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[இ] சில வகையான பிசாசை விரட்ட உபவாசம் இருந்து ஜெபிக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்.&lt;br /&gt;அப்படி ஜெபிக்கும்போது நம்முடைய விசுவாசம் கூடும் என்று ஒரு போதகர் சொன்னார். மூன்று நாள் உபவாசம் இருந்து ஜெபித்தபின்பு தேவன் அவரை சாப்பிடு என்றாராம். பின்பு அவர் சாப்பிட்டபின்பு, அன்று இரவு ஒரு வெளிப்பிரசங்கம் செய்துமுடித்தபின், பிசாசு பிடித்த ஒரு பெண் கொண்டுவரப்பட்டாள். அவளுக்குள் இருந்த பிசாசை விரட்டும்போது அந்த பிசாசு: "இந்த வகை பிசாசு உபவாசத்தினாலன்றி போகாது" என்று சொன்னதாம்.  அப்போது போதகருக்கு ஒரு வினாடி தூக்கிவாரிபோட்டதுபோல் இருந்ததாம். ஆனால், தேவன்தானே என்னை சாப்பிடு என்றார் என்று புரிந்துகொண்டு, பிசாசை நோக்கி: "நீ பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறாய்; இயேசுவின் நாமத்தினாலே புறப்பட்டுப்போ" என்று அதிகாரமுடன் விரட்டினேன், போய்விட்டது என்றார். எனவே பிசாசு விரட்ட உபவாசத்தைவிட விசுவாசம் முக்கியம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;[ஈ] தேவன் சில சமயம் உங்களை 21 நாள் அல்லது 40 நாள் என்று உபவாசம் இருக்கச் சொல்லுவார். (அப்போது இரவுகளில் கூழ் அல்லது கஞ்சி போன்று குடித்துக்கொள்ளலாம். பகலில் தண்ணீர், காபி, டீ குடிக்கலாம். இது என்னுடைய அறிவுரை. தேவன் உங்களுக்கு விசேஷமான கட்டளை கொடுத்திருப்பின் அது இவைகள் எல்லாவற்றையும் தாண்டும்.) ஏனெனில் தேவன் உங்களுக்கு ஒரு விசேஷமான வரம் தருவார். உதாரணமாக பிசாசுகளைதுரத்தும் வரம், வியாதியஸ்தர்களை சுகமாக்கும் வரம், தீர்க்கதரிசன வரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;மிக மிக முக்கியமாக நீங்கள் நீண்ட நாள் உபவாசம் இருந்து முடித்தபின்பு மிகப்பெரிய அளவில் சோதனை வரும். உடனே வராவிட்டாலும ஓரிரு மாதங்களுக்குள் வரும். அந்த சோதனை ஜெயித்துவிடுங்கள். பின்பு மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;[உ] பிரயாணம் செய்யும்போது உபவாசம் இருக்கத்தேவையில்லை. குறிப்பாக: ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு அல்லது நேரம் மாறும் இடங்களுக்கு பிரயாணம் செய்யும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;[ஊ] உடல்நிலை சரியில்லாதபோது உபவாசம் இருக்கத்தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;[எ] செவ்வாய், வெள்ளி என்பதெல்லாம்  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனிதன்  உண்டாக்கிய &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;விசேஷித்த நாட்கள். தேவன் உண்டாக்கிய ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான். மனிதன் தனக்கென்று ஒரு நாளை விசேஷித்துக்கொள்கிறான் என்று வாசிக்கிறோம்.  (ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிந்தனைக்கு&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;- ஏசாயா 58:3-7 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர்  நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர்  அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே  உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச்  செய்கிறீர்கள்.&lt;br /&gt;இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய  கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை  உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல்  உபவாசியாதிருங்கள்&lt;br /&gt;மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி  நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப்  பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப்  பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?&lt;br /&gt;பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப்  பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே  சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங்  கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ  எனக்கு உகந்த உபவாசம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-1892887318113534585?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/12/66.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1892887318113534585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1892887318113534585'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/12/66.html' title='66. எப்படி, எப்போது உபவாசிப்பது?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-7316838570888691497</id><published>2010-12-10T11:11:00.000-08:00</published><updated>2011-10-21T17:36:49.462-07:00</updated><title type='text'>65. "காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது" என்ற  செய்தி பற்றி?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TPf6PCSSPHI/AAAAAAAAAwA/ZjAxL6N71Rg/s1600/muslim_tomb.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TPf6PCSSPHI/AAAAAAAAAwA/ZjAxL6N71Rg/s400/muslim_tomb.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5546176602348600434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பதில்&lt;/span&gt;:  காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  சுற்றுலா வழிகாட்டி கிளப்பிய "காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை" என்ற செய்தியால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவியத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். அது தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் இருக்கும்  "யூஸா ஆசாஃப்" என்பவரின் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரோஸபல் (Rozabal) புனித ஸ்தலம் என்பது தற்போது யாரும்  வரக்கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் வருபவர்கள் அங்கு இருக்கும் சமாதியில்  எஞ்சியிருப்பதை எடுத்து DNA சோதனை செய்ய விரும்பினார்கள். அங்கிருக்கும் எலும்புகளை எடுத்து கார்பன் தேதி குறிப்பீடு செய்யவும் விரும்பி வேண்டினர்(request).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ரியூட்டர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனத்துக்கு முகமது அமின் ரிங்ஷால் என்பவர் சொல்லும்போது, "நாங்கள் அப்படிப்பட்ட வேண்டுதலை நிராகரித்துவிட்டோம்" என்றார்.  மேலும், "இப்படி ரோஸ்பல் சமாதியை "இயேசுவின் கல்லறை" என்றழைக்கும் வெளிநாட்டவரின் கூற்றுகள்,  இஸ்லாமியர்களின் புனித உணர்வுகளை (sentiments) புண்படுத்துகின்றன. எனவே  இந்த தொந்தரவுகளையெல்லாம் தவிர்க்கவே நாங்கள் இந்த புனித ஸ்தலத்தை பூட்டிவிட்டோம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;1973ம் வருடம் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளரான அஸிஸ் காஷ்மீரி என்பவர் கிறிஸ்து சிலுவையில் உயிர்பிழைத்து காஷ்மீருக்கு வந்து அங்கே புதைக்கப்பட்டார் என்று வாதம் செய்தாராம். அவருடைய புத்தகத்தில் "யூஸா ஆஸாஃப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்தார்; அவர் ஒரு தூதுவர். அவர் இஸ்ரவேலிலிருந்து வந்தார். அவர் தனது கொள்கைகளை பரப்பும்படி வந்தார். அங்கே வாழ்ந்து மரித்தார். யூஸ் ஆஸாஃப் என்பவர் ஈசா என்னும் இயேசு. யூஸ் ஆசாஃப் என்றால் குணமாக்குபவர்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;, போதகர்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; என்று பொருள்" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;==&amp;gt; இது பைபிளுக்கு முரண்பாடாக உள்ளது. இயேசு என்றால் ஜனங்களை பாவங்களிலிருந்து விடுதலையாக்கி இரட்சிப்பவர் என்று பொருள். மேலும் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தபின்பு, 40 நாட்கள் கழித்து அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்று  இரண்டு தேவதூதர்கள் சொன்னார்கள். மேலும் அங்கே இயேசு  எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அநேகர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சாட்சிகளாக இருந்தனர். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர் மீண்டும் வரும்போது, ஒலிவமலையில் வந்து இறங்குவார் என்று மிகவும் தெளிவாகவும் தீர்க்கதரிசனம் உள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;உள்ளூர்வாசிகளாகிய இஸ்லாமியர்களிடம் விசாரித்தபோது, ரோஸபல் என்னும் புனித ஸ்தலமானது, "உண்மையிலேயே சில நூற்றாண்டுகளுக்கு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;முன்பு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஸ்ரீநகருக்கு வந்த இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமியர்களாகிய யூஸா ஆஸாஃப் (Youza Asaf) மற்றும் சையத் நஸீர்-உத்-தின் (Syed Naseer-ud-Din)  என்பவர்களின் கல்லறையே என்றனர். சில நூற்றாண்டுகள் எங்கே? 2000 வருடங்கள் எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சுற்றூலாப் பயணிகளை இழுக்க "&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தாஜ்மகாலில் முகமது நபி புதைக்கப்பட்டார்" என்றோ, "இயேசுவின் கல்லறை எகிப்தின் பிரமிடு" என்று புரளி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு : [சிலுவையிலே] மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்துக்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோலை உடையவராயிருக்கிறேன் என்றார். சதா காலமும் இருப்பவர் தேவன் ஒருவரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இயேசுக்கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறையல்ல.&lt;br /&gt;இயேசுவின் கல்லறை எருசலேமிலே உள்ளது.&lt;br /&gt;அந்தக் கல்லறை இன்றும் காலியாகத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;Added 27 Dec 2010:&lt;br /&gt;&lt;a href="http://paralogapathi.blogspot.com/2010/12/blog-post.html"&gt;http://paralogapathi.blogspot.com/2010/12/blog-post.htm&lt;/a&gt;&lt;a href="http://paralogapathi.blogspot.com/2010/12/blog-post.html"&gt;l&lt;/a&gt;-ல் நான் மேலும் விவரங்கள் கொடுத்திருக்கிறேன் என்று ஒரு சகோதரர் குறிப்பிட்டார். நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-7316838570888691497?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/12/65.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7316838570888691497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7316838570888691497'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/12/65.html' title='65. &quot;காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது&quot; என்ற  செய்தி பற்றி?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TPf6PCSSPHI/AAAAAAAAAwA/ZjAxL6N71Rg/s72-c/muslim_tomb.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-5926864461416498868</id><published>2010-12-04T21:21:00.000-08:00</published><updated>2010-12-06T09:01:16.201-08:00</updated><title type='text'>64. அத்திமரத்தை இயேசு ஏன் பட்டுப்போகும்படி செய்தார்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TPfVxRtPjXI/AAAAAAAAAv4/WbOjfRxIczs/s1600/figtree.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 334px;" src="http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TPfVxRtPjXI/AAAAAAAAAv4/WbOjfRxIczs/s400/figtree.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5546136508673527154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;அந்த மரத்தில் கனிகள் அப்போது இல்லை. மேலும் அக்காலம் அத்திப்பழக்காலமுமல்ல. இருப்பினும் அதை பட்டுப்போகும்படி செய்தார். அத்திப்பழக்காலத்தில் அந்த மரம் அதற்குமுன் காய்த்ததா? என்ற கேள்விக்கு பதில் "தெரியாது".  இயேசு அந்த மரத்தை&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; ஏன் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"எருசலேமிலே" &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பட்டுபோகும்படி  செய்தார், &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏன்  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வேறே ஊரில் அதைச் செய்யவில்லை என்று சற்றே யோசித்துப்பார்ப்போம். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த நிகழ்விற்கு சில காரணங்களை நான் வைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[1]&lt;/span&gt;  லூக்கா 13:6-9, யோவான் 15:2, மத்தேயு 7:19&lt;br /&gt;அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தேயு 7:19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;==&gt; இங்கே கனி கொடாத மரமும், நல்ல கனிகொடாதமரமும் வெட்டப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதுதான் அங்கே நடந்திருக்கவேண்டும். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலும் இங்கே ஒரு மேலான ஆவிக்குரிய அர்த்தமும் உள்ளது; குறிப்பாக யோவான் 15ம் அதிகாரத்தில் நான் திராட்சைச்செடி நீங்கள் கொடிகள், என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர்(பிதா) அறுத்துப்போடுகிறார். எனவே நாம் கனிகொடுக்கும் ஜீவியம் செய்யாவிடில் அல்லது நாம் கெட்ட கனிகள் கொடுத்தால் நாமும் அப்படியே நிலைபெறமாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[2]&lt;/span&gt;  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாற்கு 13:28&lt;br /&gt;அத்திமரத்தினால் ஒரு உவமையைக்  கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம்  சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;==&gt; இந்த வசனம் ஒரு தீர்க்கதரிசனம். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் யூதர்கள் அத்திமரத்துக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளனர். அந்த அத்திமரம் பட்டுப்போன நிகழ்வு என்பது யூதர்கள் முழுதும் ("வேர் முழுதும் சீக்கிரமாய் பட்டுப்போயிற்று") சீக்கிரமாய் சிதறடிக்கப்படப்போகின்றனர் என்பதன் அடையாளமான செயல் என்று விளக்கம் கொடுக்கலாம். அப்படியே அவர்கள் சிதறடிக்கப்பட்டபின்பு  "இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது" என்பது அவர்கள் மீண்டும் ஒன்றாககூடுவர் என்பதன் முன்னுரைப்பு ஆகும். அநேக வேதபண்டிதர்களும் இதே விளக்கம் கொடுக்கின்றனர். அப்படியே இஸ்ரவேல் என்னும் தேசம் 1948ம் வருடம் உருவானது. இன்னும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர்.  இருப்பினும் அந்த "அத்திரம் துளிர் விட்ட நிகழ்வு"  நம்முடைய நூற்றாண்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே "எருசலேமிலே" இயேசு செய்தது  அந்த தீர்க்கதரிசனத்திற்கு ஒரு அடையாளச் செயல் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[3]&lt;/span&gt; "இத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்றே" என்ற ஆச்சரியத்துக்கு இயேசு மிகவும் முக்கியமான பதில் தருகிறார்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;tamil_bible@yahoo.com&gt;&lt;miltonthomas.1980@gmail.com&gt;&lt;/miltonthomas.1980@gmail.com&gt;&lt;/tamil_bible@yahoo.com&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;21, 22.  இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல்  விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள்  செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே  தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச்  சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;==&gt; இந்த சம்பவத்தின் மூலம் நாமும் ஒரு மரத்துடன் பேசமுடியும் என்று புரிகிறது. ஒரு மலையை பெயர்ந்து கடலில் தள்ளுண்டுபோ என்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்று சிலருக்கு தோன்றினாலும், அது  இயேசு சொன்னபடிதான்; ஏனெனில் இயேசு பொய் சொல்லவில்லை. இது விசுவாசத்தின் உயர்நிலையைக் குறிக்கிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெறுவீர்கள் என்ற வசனமும்  இந்த அத்திமர நிகழ்வுக்குபின்புதான் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இல்லாவிடில் ஏது அந்த வசனம்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனைக்கு:&lt;br /&gt;மத்தேயு 6.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள்  உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ  மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று,  உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும்  காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு  உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? அவைகளைப்பார்க்கிலும் நீங்கள்  விசேஷித்தவர்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நோவாவின் காலத்தில் எத்தனையோ விலங்குகள் ஜலப்பிரளயத்தில் இறந்துபோயின. ஆனால் அவைகளைக்குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு மரத்தைக்குறித்து உலகில் ரொம்பவேதான் கவலைப்படுகின்றனர். இந்த சம்பவமில்லாவிடில் மலையைப் பெயர்க்கும் விசுவாசத்தின்  உயர்வான படியை நான் அறிந்திருக்கமாட்டேன். தேவன் சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்று வாசிக்கிறோமே.  ஏனெனில் 2000ம் வருடங்கள் கழித்து இன்றும் அந்த மரம் விசுவாசத்தைக்குறித்து பேசப்படும் ஒரு சின்னமாக உள்ளதே என்பதில் அந்த மரத்துக்கு அது ஒரு சிறப்புதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;tamil_bible@yahoo.com&gt;&lt;miltonthomas.1980@gmail.com&gt;&lt;miltonthomas.1980@gmail.com&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/miltonthomas.1980@gmail.com&gt;&lt;/miltonthomas.1980@gmail.com&gt;&lt;/tamil_bible@yahoo.com&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-5926864461416498868?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/12/64.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5926864461416498868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5926864461416498868'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/12/64.html' title='64. அத்திமரத்தை இயேசு ஏன் பட்டுப்போகும்படி செய்தார்?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TPfVxRtPjXI/AAAAAAAAAv4/WbOjfRxIczs/s72-c/figtree.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-4893781932391595533</id><published>2010-11-23T07:30:00.000-08:00</published><updated>2010-11-30T12:22:35.886-08:00</updated><title type='text'>63. மனிதர்களை தேவர்கள் என யோவான் 10:34ன்படி அழைக்கலாமல்லவா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;கேள்வி:&lt;br /&gt;யோவான் 10:34, 35-ல் "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க" என்று வாசிக்கிறோம். எனவே நாம் மனிதர்களை தேவர்கள் என அழைக்கலாம். பிசாசும் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று அழைக்கப்படுகிறான். அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார்.  எனவே இயேசுவை தேவன் என்பது தவறல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்&lt;/span&gt;: இல்லை&lt;br /&gt;செய்தி: "இந்தியாவைச் சேர்ந்த ராமன் என்பவர் ஒரு கடையில் கைக்கடிகாரத்தை (wrist watch) திருடிவிட்டார்".&lt;br /&gt;இந்த செய்தியைப் படித்துவிட்டு: "இந்தியர்கள் திருடர்கள்" என்றும், "ராமன் என்ற பெயர் உடையவர்கள் கைக்கடிகாரத்தை திருடுபவர்கள்" என்றும் சொல்வது "அவசரத்தில் பொதுவாக்குதல்" (Hasty generalization) என்ற விவாதப்பிழையின்கீழ் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக, "தேவ வசனத்தைப்பெற்றவர்கள் தேவர்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது; எல்லாரையும் அல்ல. அந்த வசனமானது சங்கீதம் 82:6-லிருந்து இயேசுவால் எடுத்து குறிப்பிடப்பட்டது. இதை புரிந்துகொள்ளும் முன்பு சங்கீதம் 82 இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீதம் 82&lt;br /&gt;1. தேவசபையிலே &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;தேவன் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.&lt;br /&gt;2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)&lt;br /&gt;3. ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.&lt;br /&gt;4. பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.&lt;br /&gt;5. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.&lt;br /&gt;6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் &lt;span style="font-weight: bold;"&gt;நான் &lt;/span&gt;சொல்லியிருந்தேன்.&lt;br /&gt;7. ஆனாலும் நீங்கள் [மற்ற] மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.&lt;br /&gt;8. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;தேவனே&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் வசனத்தில் "தேவசபையிலே &lt;span style="font-weight: bold;"&gt;தேவன் &lt;/span&gt;எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். (God presides among the gods)"&lt;br /&gt;==&gt; இங்கே தேவர்கள் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யார் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;?  &lt;span style="font-weight: bold;"&gt;தேவன்&lt;/span&gt; யார்?&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய கண்களுக்கு முன்னே ஒரு நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் ஏழைக்கும் திக்கற்றவர்களுக்கும் சரியாக நியாயம் விசாரிக்காமல், துன்மார்க்கனுக்கு முகதாட்சணியம் பண்ணி அநியாயத்தீர்ப்பு செய்யும் நியாயாதிபதிகளாகிய இவர்களும் "தேவர்கள்" (Elohim) என்றழைக்கப்பட்டனர். &lt;span style="font-weight: bold;"&gt;தேவன் &lt;/span&gt;இங்கே மற்ற தேவர்கள்  தன்னைப்போலொத்தவர்கள் அல்ல, தன்னைப்போல் நீதியுள்ளவர்கள் அல்ல என்று அங்கே உள்ள நியாயாதிபதிகளைத்தான் சொல்கிறார். பழைய ஏற்பாட்டில் நியாயாதிபதிகள் (Judges) தேவனுடைய கட்டளைகளைப் படித்தவர்கள்; அதாவது தேவனுடைய வசனத்தைப் பெற்றவர்கள். &lt;span style="font-weight: bold;"&gt;தேவன்&lt;/span&gt; தான்செய்வதில் ஒரு சிறு பகுதியை இவர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததால் அவர்களுக்குத் தேவர்கள் என்ற அடைமொழியும் கொடுக்கப்பட்டது. இதை எபிரெய மொழியில் உள்ள வேதாகமத்தில் படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். நாம் இப்படியாக வாசிக்கிறோம்:&lt;br /&gt;&lt;br /&gt;யாத்திராகமம் 21:6 அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி,&lt;br /&gt;==&gt; தமிழில் மொழிபெயர்த்தவர்கள்  நியாயாதிபதிகள் என்று கொடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யாத்திராகமம் 22:28. நியாயாதிபதிகளை (தேவர்கள் - Elohim) தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.&lt;br /&gt;Thou shalt not revile the gods, nor curse the ruler of thy people. (KJV)&lt;br /&gt;==&gt; ஆங்கிலத்தில் "gods" என்பதைக் காணவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;யாத்திராகமம் 22:8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அவனைக் கொண்டுபோக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே எல்லாம் தேவர்கள் என்று நியாயாதிபதிகளை குறித்து சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீதம் 138:1-லும் "உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு (நியாயாதிபதிகள் / ஆளுபவர்களுக்கு) முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்று வாசிக்கிறோம். எனவே &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அக்காலத்தில் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்கீதம் 82:1-ன்படி  நியாயாதிபதிகள் என்பவர்களையே தேவர்கள் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் 10:34ல் தேவ தூஷணம் என இயேசுவை  யூதர்கள் (நியாயாதிபதிகள், பரிசேயர்கள்)  குற்றப்படுத்த முயற்சிக்கும்போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு: "உங்கள் வேதத்தில் &lt;span&gt;நான்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;உங்களை (நியாயாதிபதிகளை) தேவர்கள் என்று சொன்னதாக வாசிக்கவில்லையா" என்கிறார். நியாயாதிபதிகள் தேவ வசனத்தை, தேவனுடைய கட்டளைகளைப் பெற்றவர்கள். நானோ உங்களுக்கு தேவனுடைய வார்த்தையாகவே வந்திருக்கிறேன், எனவே நான் தேவனுடைய குமாரன்  என்பதில் என்ன பிழை? ஆதியாகம் 9:6-லேயே நான் மனிதனுக்கு நீதிசரிகட்டும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறேனே. தேவனுடைய வசனம்/கட்டளை/பொறுப்பை பெற்றவர்கள் தேவர்கள் என்றால், தேவனுடைய வார்த்தையாகிய நான் ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே இருக்கிறேன் என்றால் நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;------------------------&lt;br /&gt;இரண்டாவதாக, பிசாசானவன் "இப்பிரபஞ்சத்தின் தேவன்".&lt;br /&gt;இயேசு சொல்லும்போது: "இதோ இவ்வுலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" என்கிறார்.&lt;br /&gt;ஒரு [நல்ல] தலைவன் என்பதற்கும், "கொள்ளைக்கூட்டத் தலைவன்" என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இரண்டிலும் தலைவன் என்ற வார்த்தை இருப்பினும் நமக்கு புரிகிறதே. சீரகத்துக்கும் பெருஞ்சீரகத்துக்கும் (சோம்பு) வித்தியாசம் தெரிகிறதே!  வெங்காயத்துக்கும் வெள்ளைவெங்காயத்துக்கும்(பூண்டு) வித்தியாசம் தெரிகிறதே! ஆனால் தேவனுக்கும்,  "இப்பிரபஞ்சத்தின் தேவனுக்கும்"  உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மூன்றாவதாக, "அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார்" என்பதும் பிழையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி அல்ல" என்பதை அறிந்துகொள்ளவும்.&lt;br /&gt;- இயேசு பிலாத்துவிடம் விசாரிக்கப்படும்போதும்:  "நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவா?" என்ற கேள்விக்கு அவர் "நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்" என்றார். (மாற்கு 14:61)&lt;br /&gt;- மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "&lt;span style="font-weight: bold;"&gt;இருக்கிறேன்&lt;/span&gt;(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "&lt;span style="font-weight: bold;"&gt;இருக்கிறேன்&lt;/span&gt;(I AM)" என்று சொன்னார்; (&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.&lt;br /&gt;- தேவன் ஏசாயாவில் "நான் முந்தினவரும் பிந்தினவரும்தானே" என்று சொன்னதை இயேசு நான்தான் அவர் என்று  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெளிப்படுத்தலில் "நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்கிறார்.&lt;br /&gt;- மேலும், ஆ&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தியிலே வார்த்தையிருந்தது....அந்த வார்த்தை தேவனாயிருந்தது ... அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்பதிலிருந்து இயேசுதான் அந்த தேவன் என்றும் புரிகின்றதல்லவா? இன்னும் பல வசனங்களை எடுத்து விளக்கிக்கொண்டு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் ஏற்கனவே &lt;a href="http://tamilbibleqanda.blogspot.com/2009/11/21-son-of-god-god.html"&gt;கேள்விபதில் 21ல்&lt;/a&gt; விளக்கப்பட்டுள்ளது.  இயேசு தேவனல்ல என்று சொல்வது பல கூற்றுகளை அலசி ஆராய்ந்து பார்க்காமல் சொல்லும் பிழையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;சிந்தனைக்கு:&lt;/u&gt;&lt;br /&gt;சங்கீதம் 8:5ல் "நீர் அவனை(மனிதனை) தேவதூதர்களிலும் (தேவர்கள் - Elohim) சற்று சிறியவனாக்கினீர்" என்பதில் உங்கள் கணக்கின்படி மனிதன் குட்டி தேவர்கள், தேவதூதர்கள் பெரிய தேவர்கள் என்பதாகிவிடுகிறது. என்றால் &lt;span style="font-weight: bold;"&gt;தேவன் &lt;/span&gt;யார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். ஏசாயா 44:8 என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-4893781932391595533?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/63-1034.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/4893781932391595533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/4893781932391595533'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/63-1034.html' title='63. மனிதர்களை தேவர்கள் என யோவான் 10:34ன்படி அழைக்கலாமல்லவா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-6440180101497329650</id><published>2010-11-16T19:47:00.000-08:00</published><updated>2010-11-16T20:26:59.581-08:00</updated><title type='text'>62. இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள் வேறு யாரேனும் பைபிளில் உண்டா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;பதில்: ஆம், சிலர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;[1] ஆதியாகமம் 17:19 (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஈசாக்கு&lt;/span&gt;)&lt;br /&gt;அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு &lt;span style="font-weight: bold;"&gt;ஈசாக்கு &lt;/span&gt;என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;[2] ஆதியாகமம் 16:11,12 (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இஸ்மவேல்&lt;/span&gt;)&lt;br /&gt;பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு &lt;span style="font-weight: bold;"&gt;இஸ்மவேல் &lt;/span&gt;என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்;&lt;br /&gt;&lt;br /&gt;[3] I இராஜாக்கள் 13:2 (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;யோசியா&lt;/span&gt;)&lt;br /&gt;அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் &lt;span style="font-weight: bold;"&gt;யோசியா &lt;/span&gt;என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;&lt;br /&gt;&lt;br /&gt;[4] I நாளாகமம் 22:9 (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சாலொமோன்&lt;/span&gt;)&lt;br /&gt;இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் &lt;span style="font-weight: bold;"&gt;சாலொமோன் &lt;/span&gt;என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;[5] லூக்கா 1:13 (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;யோவான் &lt;/span&gt;- ஸ்நானகன்)&lt;br /&gt;தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு &lt;span style="font-weight: bold;"&gt;யோவான் &lt;/span&gt;என்று பேரிடுவாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;[6] ஏசாயா 44:28.  (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கோரேஸ்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோரேசைக் &lt;/span&gt;குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.&lt;br /&gt;(குறிப்பு: ஏசாயா-கி.மு. 8ம் நூற்றாண்டு; கோரேஸ்-கி.மு.559~530.  சுமார் 200 வருடங்களுக்கு முன்பு)&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுவையும் சேர்த்து மொத்தம் ஏழுபேர்.&lt;br /&gt;&lt;br /&gt;[7] மத்தேயு 1:21 (&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இயேசு&lt;/span&gt;)&lt;br /&gt;அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு &lt;span style="font-weight: bold;"&gt;இயேசு &lt;/span&gt;என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.&lt;br /&gt;லூக்கா 1:31&lt;br /&gt;இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு &lt;span style="font-weight: bold;"&gt;இயேசு &lt;/span&gt;என்று பேரிடுவாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-6440180101497329650?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/62.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/6440180101497329650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/6440180101497329650'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/62.html' title='62. இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள் வேறு யாரேனும் பைபிளில் உண்டா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-808140407206964824</id><published>2010-11-07T22:45:00.000-08:00</published><updated>2011-01-10T17:52:38.838-08:00</updated><title type='text'>61. உபாகமம் 18:15-ல் சொல்லப்பட்டவர் முகமதுதானே - இதை உங்களால் மறுக்கமுடியுமா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;Part I&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சகோதரர் ஒருவர் இக்கேள்வியை (இன்னும் சில கேள்விகளும்) கேட்டார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல, இயேசு.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்களின் வேதமானது தவறு. அப்படியானால் இவர்கள் பைபிள் பக்கமே வரக்கூடாது. (உண்மையிலேயே அவர்களுடைய புத்தகம்தான் பைபிளில் இருந்து எடுத்து புரட்டப்பட்டதும், தவறான உபதேசங்களையுடையதுமாக இருக்கிறது. முகமது என்பவர் 500 வருடம் கழித்து வந்த ஒரு கள்ளப்போதகர். இதைப்பற்றி விளக்கமாக ஒரு தனி கட்டுரை எழுதலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் முகமது தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று நிரூபிக்க அவரைப்பற்றிய முன்னறிவிப்பு எங்கேயாவது இருக்கவேண்டுமே என்பதால் இங்கே ஓடி வருகின்றனர். இதற்காக உபாகமம் 18:15 எடுத்து சொல்கின்றனர். இங்கே சொல்லப்பட்டவர் இயேசு, முகமது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;உபாகமம் 18:15-22&lt;br /&gt;. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.&lt;br /&gt;. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.&lt;br /&gt;. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.&lt;br /&gt;. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.&lt;br /&gt;. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.&lt;br /&gt;கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,&lt;br /&gt;. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[A] என்னைப்போல&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது மோசேயின்  சரீரப்பிரகாரமான  வாழ்வைப்பற்றிய ஒப்பிடுகை அல்ல. மோசே தேவனை முகமுகமாக தரிசித்தவர்.  மோசே இஸ்ரவேலன். மோசே பல அற்புதங்களைச் செய்தவர். முகமது அற்புதம் ஒன்றும் செய்யவில்லை.  தேவனுடன் பேசவில்லை, தேவனை தரிசிக்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[B] சகோதரர் யார்?&lt;/span&gt;&lt;br /&gt;[B1] இங்கே உங்களுடைய சகோதரருக்குள்ளே என்றால் இஸ்ரவேல் ஜனங்களுடைய சகோதரருக்குள்ளே என்று பொருள். அதாவது இஸ்ரவேல் ஜனங்களின் 12 கோத்திரங்களுக்குள் ஆகும். இஸ்லாமியர்களோ இஸ்ரவேல் ஜனங்களுக்கு சகோதரன் இஸ்மவேல் என்பவனின் சந்ததி என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆபிரகாமுக்கு ஈசாக்கு, இஸ்மவேல் பிறந்தனர். அவர்கள் இருவரும் சகோதரர். ஈசாக்கு என்பவனுக்கு பிறந்தவர்கள் யாக்கோபு, ஏசா; இவர்கள் இரட்டையர்கள். தேவன் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். இன்று இஸ்ரவேல் தேசம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது யாக்கோபுக்கு தேவன் இட்ட பெயர்! யாக்கோபுக்கு பிறந்தவர்கள் 12 பேர்; இவர்கள் வம்சம்தான் இஸ்ரவேலர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாக்கோபின் 12 குமாரரில் ஒருவனாகிய யோசேப்பு எகிப்திலே இருந்தபோது அவனுடைய பத்து சகோதரரும் வந்து அவனுடன் நாங்கள் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்&lt;span style="font-weight: bold;"&gt; நாங்கள் எல்லாரும் 12 பேர் சகோதரர் (இஸ்ரவேலர்கள்)&lt;/span&gt; என்று சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;[B2] ஏசாவின் சந்ததியாரும் இஸ்ரவேலருக்குச் சகோதரர் என்று சொல்லப்பட்டுள்ளது:&lt;br /&gt;எண் 20:17,18&lt;br /&gt;17. நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் (சேயீர் தேசம்) கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, &lt;span style="font-weight: bold;"&gt;உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான்&lt;/span&gt; என்று சொல்லச் சொன்னான்.&lt;br /&gt;18. &lt;span style="font-weight: bold;"&gt;அதற்கு ஏதோம்&lt;/span&gt;: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே ஏதோம் என்பது யாக்கோபு (இஸ்ரவேல்) என்பவரின் சகோதரன் ஆவார். ஆதியாகமம் 25:30 அப்பொழுது &lt;span style="font-weight: bold;"&gt;ஏசா யாக்கோபை&lt;/span&gt; நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு &lt;span style="font-weight: bold;"&gt;ஏதோம் &lt;/span&gt;என்கிற பேர் உண்டாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதியாகமம் 36:8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;[B3] யாத்திராகமம் 2:11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, &lt;span style="font-weight: bold;"&gt;தன் சகோதரராகிய எபிரெயரில்&lt;/span&gt; ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;மேலே மோசேயைப் பொருத்தமட்டில் சகோதரர் என்பவர்கள் எபிரெயர்கள் அதாவது இஸ்ரவேல் ஜனங்கள். இங்கேயே விவாதத்தை மூடிவிடலாம். (பல தலைமுறைகள் மேலே போகக்கூடாது; கொஞ்சம் நாள் கழித்து நோவாவின் பிள்ளைகளில் காமும், இஸ்மவேலும் சகோதரன் என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்.)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மோசே சொல்லும்போது: எபிரெயர்கள் (அதாவது இஸ்ரவேலர்கள்), ஏசாவின் சந்ததியார் ஆகியோரே சகோதரர் ஆவர். இஸ்மவேலின் சந்ததி அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[C] "என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இவர் இயேசுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[D] மோசே யாரைக்குறித்துச் சொன்னான்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு சொன்னார்:&lt;br /&gt;யோவான் 5:46 "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே."&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேயே இந்த விவாதம் என்கிற சவப்பெட்டிக்கு ஆணியத்து புதைத்துவிடலாம். இயேசுவே தெளிவாக மோசே என்னைக்குறித்து சொன்னான் என்று சொல்கிறார். எனவே கண்டிப்பாக முகமது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[E] சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை &lt;u&gt;என் நாமத்தினாலே&lt;/u&gt; சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும்"&lt;/span&gt;&lt;br /&gt;தேவனுடைய நாமத்தைக் (name which is YHWH ) கொண்டு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;முகமது  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பேசவில்லை. ஆனால் இயேசுவோ எப்போதும் பிதாவை குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;யோவான் 5:43 நான் &lt;span style="font-weight: bold;"&gt;என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும்&lt;/span&gt; நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.&lt;br /&gt;(சுயமாக வந்த முகமதுவை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!)&lt;br /&gt;யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; &lt;span style="font-weight: bold;"&gt;என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற&lt;/span&gt; கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இயேசுவைக்குறித்துதான் உபாகமம் 18:15ல் சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;Part II&lt;br /&gt;&lt;br /&gt;"பாரான் வனாந்தரம்" - விளக்கம்&lt;br /&gt;இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு 40 வருடம் வனாந்திர வழியாக கானான் தேசத்துக்கு போனார்கள். அப்படி போகும்போது அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, ஏத்தாமுக்கு வந்து பின்பு ஈரோத் பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். இங்கிருந்துதான் செங்கடலைக் கடந்தார்கள். இந்த இடத்தை இன்றும் Google-map ல் காணலாம். Nuweiba என்று தற்போது அதற்கு பெயர்.&lt;br /&gt;பின்பு சூர் என்ற இடத்துக்கு வந்து, பின்பு மாராவுக்கு வந்தாகள் (இங்கே தண்ணீர் கசப்பாக இருந்தது, அதை மதுரமாக மாற்றினார் தேவன்), இங்கிருந்து ஏலீமுக்கு வந்தார்கள் அங்கே 70 பேரீச்சமரங்களும், 12 நீரூற்றுகள் (கேணிகள்) இருந்தன. இதையும் தற்போது Google-map ல் காணலாம். ஆச்சரியமாக இன்றும் அந்த 12 நீரூற்றுகளும் உள்ளன, ஆனால் பேரீச்சமரங்களோ மிக அதிகம். அங்கிருந்து சீன், தொப்கா, ஆலூஸ், ரெவிதீம், சீனாய் மலையடிவாரம், கிப்ரோத் அத்தாவா, பாரான் வனந்திரம், காதேஸ்... என போகின்றது இடங்களின் வரிசை.&lt;br /&gt;பாரான் வனாந்திரத்தில் மோசே கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி 12 பேரை அனுப்பினான். அவர்களில் 10பேர் துர்செய்திசொன்னார்கள். இரவு முழுதும் ஜனங்கள் அழுதனர். ஆனால் காலேபும், யோசுவாவும் தைரியம்கொடுத்தனர்.&lt;br /&gt;10. அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; &lt;span style="font-weight: bold;"&gt;உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் பாரன் வனாந்தரத்திலிருந்து தேவன் பிரகாசமாக தோன்றினார் என்று அர்த்தம்.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;Part III&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பாரானில் தோன்றிய பிரகாசம் எது?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பைபிளை சரியாக படிக்காதவரின் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. இந்தக் கேள்வியும் தவறு, அதின் யூகமும்(assumption) தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;தேவன் ஒளியாயிருக்கிறார். அவர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் எழுந்தருளும்போது தோன்றும் மகிமைதான் அப்படியாக கூறப்பட்டுள்ளது. பாரானில் தோன்றிய பிரகாசம் எது என்று Part II-ல் சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"சீயேர்" என்று பைபிளில் எங்கும் இல்லை, அது "சேயீர்". சரியாக வேதத்தை படியுங்கள்.&lt;br /&gt;சேயீர்:&lt;br /&gt;உபாகமம் 1:2 சேயீர் மலைவழியாய் ஓரேபுக்கு...&lt;br /&gt;எண் 20:6. அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; &lt;span style="font-weight: bold;"&gt;கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;இது சேயீரில் தோன்றிய தேவனின் மகிமை.&lt;br /&gt;சீனாய் மலையில் தோன்றிய பிரகாசமும் தேவனின் மகிமை.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;Part IV&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.(யோவான் 1:19,22) -- இதில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசி யார்? அவர் தான் முகமது"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சிரிப்புதான் வருகின்றது, நீங்கள் இவ்வளவு அறிவில் குறைவாய் இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் ஆசிரியரா?" என்று ஒரு பையன் கேட்டான்.&lt;br /&gt;அதற்கு அவர் "அல்ல" என்றார்.&lt;br /&gt;உடனே அந்தப் பையன் அப்படியானால் ஆசிரியர் என்பவர் முகமது என்றான்.&lt;br /&gt;என்ன ஒரு முட்டாள்தனம்!&lt;br /&gt;&lt;br /&gt;மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். (என்று யோவான் ஸ்நானகன் இயேசுவைப்பற்றி சொன்னார்)&lt;br /&gt;&lt;br /&gt;யோவான் 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். (என்று இயேசுவைக் காட்டி யோவான் ஸ்நானகன் சொல்கிறான்.)&lt;br /&gt;&lt;br /&gt;மத்தேயு 21:11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மேலே [D] என்ற வாதம் ஒன்றே மோசேயால் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்று மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது. இதற்குமேலும் அவர் முகமது என்று &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;எப்படித்தான் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நம்புகிறார்களோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முகமது  பெற்ற கட்டளைகள் சத்தியத்துக்கு மாறாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கலாத்தியர் 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, &lt;u&gt;வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே 500 வருடம் கழித்து பிசானவன் (ஒளியுள்ள தூதன் வடிவில் வந்து) பாதி உண்மையும் பாதி பொய்யும் பேசி முகமதுவை வஞ்சித்துள்ளான். இயேசுவின் போதனைகளை மாற்றி சொல்லும் அவர் மேலே சொன்ன வசனத்தின்படி சபிக்கப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.&lt;br /&gt;II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;500 வருடம் கழித்து வந்த முகமது ஒரு கள்ளப்போதகர்.&lt;br /&gt;பைபிளில் சொல்லப்பட்டுள்ள தேவன் வேறு. முகமது சொல்லும் தேவன் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.&lt;br /&gt;இயேசு சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-808140407206964824?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/61.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/808140407206964824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/808140407206964824'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/61.html' title='61. உபாகமம் 18:15-ல் சொல்லப்பட்டவர் முகமதுதானே - இதை உங்களால் மறுக்கமுடியுமா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-1716015832595306911</id><published>2010-11-05T12:30:00.000-07:00</published><updated>2010-11-18T17:28:16.519-08:00</updated><title type='text'>60. தேவன் தன்னால் தூக்கமுடியாத பெரிய மலை ஒன்றை செய்ய முடியுமா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQDt9LaVdh7zEHgNppDdtO7ghpqX4c0uZ9PYVTvnGZ0lUlw8O8&amp;amp;t=1&amp;amp;usg=__ttnOW7iWzOYDtWSwRs8bMAArL8M" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட  முட்டாள்தனமான கேள்வியானது "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் முதலில் கேட்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்: "&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேவனால் எவ்வளவு பெரியமலையைச் செய்யவும் முடியும், அதை தூக்கவும் முடியும்"&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;ஒருவர் சொன்னார்:&lt;br /&gt;இந்த முட்டாள்தனமான கேள்விக்கு "ஒரே நேரத்தில் ஆம் மற்றும் இல்லை" என்பது  பதில்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; தேவனால் பெரியமலையை செய்ய முடியுமா? ஆம். அதை தூக்க முடியாதா? முடியாதது இல்லை.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; "ஆம் மற்றும் இல்லை" என்று எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவே முடியாது, அப்படி ஒரு கேள்வியும் இல்லை என்று சொல்ல வேண்டாம். இரண்டுமே, இரண்டும் அல்ல என்பதும் ஒரு கேள்விக்கு பதிலாகும். "மனிதனால் பறக்க முடியுமா?" என்ற கேள்விக்கு பதில் என்ன? "இல்லை மற்றும் ஆம்". மனிதனுக்கு சிறகு இல்லை பறக்க முடியாது, எனவே இல்லை. இந்த காணொளியினை பாருங்கள் மனிதன் பறக்கிறான்: &lt;a style="font-weight: bold;" href="http://www.youtube.com/watch?v=7YuKrjGoYaY"&gt;Crazy Air Gliders&lt;/a&gt;, எனவே ஆம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;u&gt;இன்னும் சில முட்டாள் கேள்விகள்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[1] தேவனால் சதுரமாக ஒரு கூம்பு அல்லது கோளம் செய்யமுடியுமா?&lt;br /&gt;இதன்மூலம் நீங்கள் இந்த கேள்வியே ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று காட்டுகின்றீர்கள். அடுத்ததாக இந்தக் கேள்வியில் கோளம் என்ற முப்பரிணாமமும்(3D), சதுரம் என்ற இருபரிணாமமும்(2D) ஒப்பிடப்பட்டுள்ளன என்றும் காட்டுகிறீர்கள். இது போன்ற கேள்வி அடிப்படையில் தவறல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;[2] "நீ மனிதர்களை கொலை செய்வதை நிறுத்திவிட்டாயா?" என்று ஒருவரிடம் நீதிமன்றத்தில் கேட்டால் அவர் "ஆம்" என்றாலும் பிரச்சனை (இதற்கு முன் கொலை செய்திருக்கிறார்), "இல்லை" என்றாலும் பிரச்சனை (இன்னும் கொலைசெய்கிறார்). எனவே அவர் நிரபராதியாக இருப்பின் இந்தக் கேள்விக்கு ஆம், இல்லை என்ற இரண்டுமே பதில் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;சிந்தனைக்கு:&lt;/u&gt;&lt;br /&gt;"A" என்பவர் A1, A2 என்று இரண்டு உருவங்களாகப் பிரிந்து, A1 என்பவர் தான் தூக்க இயலாமல் செய்த மலையை A2 என்பவரால் தூக்கிக்காட்டியும்; A2  என்பவர் தான் தூக்க இயலாமல் செய்த மலையை A1 என்பவரால் தூக்கிக்காட்டிய  பிறகு மீண்டும் ஒரே உருவமாக ("A" ஆக) மாறி ஒருவனிடம் இவ்விரண்டில் யார் பலசாலி, பலமற்றவர்? என்று கேட்கிறார்.  அவனுடைய குழப்பமான பதிலுக்குப்பின் அவர் கேட்கிறார், "இப்போது நீ என்னைக்குறித்து என்ன சொல்கிறாய்?".  அவர் ஆச்சரியமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்."  (I கொரிந்தியர் 1:27)&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்". (I கொரிந்தியர் 3:19)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேவன் பொய் சொல்வதில்லை, தேவன் பாவம் செய்வதில்லை, தனது பரிசுத்த அம்சங்களுக்குள் தனக்குத்தானே முரண்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;------- In English ----------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Question #60&lt;/span&gt;:&lt;br /&gt;Can God create a huge mountain that He can not lift?&lt;br /&gt;&lt;br /&gt;Such silly question was first asked by Atheists.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Answer is:  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;God can create a huge mountain of any size and God can lift it.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;One person said:&lt;br /&gt;The answer to such stupid question is "&lt;/span&gt;&lt;span&gt;both YES and NO at the same time&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;   Go figure it out." Can God make a huge mountain? Yes. He can not lift? No, can lift. Don't say that the answer for a question must be either YES or No. Both, Neither can be the answer to a question. What is the answer to "Can a human being fly?" both "NO and YES". Man has no wings so he can not fly (hence NO). Man can fly by para-gliding and air-gliding. Check this video for yourself and see that these men can fly: &lt;a href="http://www.youtube.com/watch?v=7YuKrjGoYaY"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Crazy Air Gliders&lt;/span&gt;&lt;/a&gt; (hence YES). People say, "I am flying to New York tomorrow", referring to their air travel.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;Here are more stupid or foolish questions:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[1] Can God make a Cone or Sphere like a Square?&lt;br /&gt;Aren't you showing yourself as stupid by asking such question? Moreover a plane (Square) which is of two dimension is being compared to an object (Sphere) of three dimension. Isn't such question wrong at the very basic level?&lt;br /&gt;&lt;br /&gt;[2] If a man was asked in the court, "Have you stopped killing the people?". If he says "YES" he is in trouble (means he was killing in the past), and if he says "NO" he is in trouble (means he is still killing).  If the person is not guilty, then the answer for such question is neither YES nor NO.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;Musing:&lt;/u&gt;&lt;br /&gt;Someone called "A" splits himself  into two personalities say A1, A2.  And A1 makes a mountain that he can not lift but  A2 is able to lift it and  A2 makes a mountain that he can not lift but A1 is able to lift it. Then He merges himself together back to "A" and asks the man a question, "Who you think is stronger and  who is weaker?". After the man's confused answer, He asks "Now, what about me?". He is wonderful.&lt;br /&gt;&lt;br /&gt;"But God hath chosen the foolish things of the world to confound the wise; and God hath chosen the weak things of the world to confound the things which are mighty;" (I Cor 1:27)&lt;br /&gt;&lt;br /&gt;"For the wisdom of this world is foolishness with God. For it is written, He taketh the wise in their own craftiness." (I Cor 3:19)&lt;br /&gt;&lt;br /&gt;God does not lie, God does not commit sin and does not contradict himself within His holy attributes.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-1716015832595306911?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/60.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1716015832595306911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1716015832595306911'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/11/60.html' title='60. தேவன் தன்னால் தூக்கமுடியாத பெரிய மலை ஒன்றை செய்ய முடியுமா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-614265987531633051</id><published>2010-10-27T11:49:00.000-07:00</published><updated>2010-11-10T14:22:45.898-08:00</updated><title type='text'>59. முகமது பற்றி பைபிளில் யோவான் 14:16-ல் உள்ளது என்று  இஸ்லாமியர்கள் சொல்வது பற்றி?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;யோவான் 14:16-ல்  சொல்லப்பட்ட தேற்றரவாளன் (Comforter) முகமதுவா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: &lt;span style="font-weight: bold;"&gt;இல்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது யோவான் 14, 16, 10 மற்றும் அப்போஸ்தலர் 2, 8, 10 அதிகாரம் முழுதும் வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களில் பலர் பைபிளில் இருந்து வசனங்களை எடுத்து தங்களுக்கு இஷ்டமானபடி திரிக்கிறார்கள். அவர்களை நம்பாதிருங்கள். இங்கும் அங்குமாக சில வசனங்களை எடுத்து தங்களுடைய முகமதுவை எப்படியாவது காப்பாற்றும்படி அப்படி செய்கிறார்கள். ஆனால் இங்கே அவர்களுடைய  முயற்சியானது முழுதும் தோல்வியில் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்திய ஆவியானவர்(Spirit of truth), தேற்றறரவாளன் (Comforter) என்று இயேசு "&lt;span style="font-weight: bold;"&gt;பரிசுத்த ஆவியானவரை&lt;/span&gt;த்தான்" சொன்னார். நிச்சயமாக முகமதுவை அல்ல. எப்படி நமக்கு தெரியும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[1] &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=14&amp;amp;Verse=16"&gt;யோவான் 14:16&lt;/a&gt; "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது &lt;span style="font-weight: bold;"&gt;என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு&lt;/span&gt;ச் சத்திய ஆவியாகிய (Spirit of truth) வேறொரு தேற்றரவாளனை (Comforter) அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."&lt;br /&gt;&lt;br /&gt;முகமது என்னென்றைக்கும் உங்களுடனே இல்லை. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Muhammad"&gt;அவர் கி.பி. 632ல் இறந்தார்&lt;/a&gt;. அவருடைய கல்லறை இன்றும் மெதினாவில் உள்ளது. எனவே இயேசு சொன்னவர் முகமது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;[2] &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=14&amp;amp;Verse=17"&gt;யோவான் 14:17&lt;/a&gt;. "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் &lt;span style="font-weight: bold;"&gt;உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்&lt;/span&gt;, (dwells with you, and&lt;span style="font-weight: bold;"&gt; shall be in you&lt;/span&gt;) நீங்கள் அவரை அறிவீர்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;முகமது உங்களுடன் இல்லை, நிச்சயமாக உங்களுக்கு உள்ளே இல்லை. அப்படி இருக்க அவர் மேலே சொன்னதுபோல் ஒரு ஆவியாக இருக்கவேண்டும். (நீங்கள் ஒருவேளை நமது மனதில் இருக்கிறார் என்று விவாதித்தால்,  எல்லா குடும்பங்களிலும் இறந்துபோன அம்மா அப்பா என்பவர்கள் தங்கள் மனதில் இருக்கிறார்களே என்ற விவாதத்திற்கு முன் இந்த விவாதம் சிறுபிள்ளைத்தனமாகிவிடும்).&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் "உங்களுடனே வாசம்பண்ணி" என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுடன்  சொல்கிறார். முகமது அந்த சீஷர்களுடன் வாசம்பண்ணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"சத்திய ஆவியானவர்" : முகமது சரீரத்துடன் இருந்தார், ஆவி அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;II தீமோத்தேயு 1:14 "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை &lt;span style="font-weight: bold;"&gt;நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே&lt;/span&gt; காத்துக்கொள்."&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பரிசுத்த ஆவியானவரே (Holy Spirit) நமக்குள் வாசம்பண்ணுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;[3] &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=14&amp;amp;Verse=26"&gt;யோவான் 14:26&lt;/a&gt; "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற &lt;span style="font-weight: bold;"&gt;பரிசுத்த ஆவியாகிய &lt;/span&gt;&lt;span&gt;(Holy Spirit)&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; தேற்றரவாளனே &lt;/span&gt;&lt;span&gt;(Comforter)&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, &lt;span style="font-weight: bold;"&gt;நான் உங்களுக்குச் சொன்ன 'எல்லாவற்றையும்' உங்களுக்கு நினைப்பூட்டுவார்&lt;/span&gt;."&lt;br /&gt;&lt;br /&gt;- பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதற்குமேல் ஒரு விளக்கமும் தேவையில்லை.   இங்கேயே அவர்கள் வாதம் ஒன்றுமில்லாமல் போகிறது.  முகமது பரிசுத்த ஆவி அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;- நான் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.  &lt;/span&gt;&lt;span&gt;பிரமாதம்&lt;/span&gt;!&lt;br /&gt;இயேசு சொன்ன "உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்" எப்படி இருக்கிறது !!&lt;br /&gt;முகமது சொன்ன "உங்கள் நம்பிக்கையில்லாதவரை கொல்லுங்கள்" எப்படி இருக்கிறது?&lt;br /&gt;இயேசு சொன்ன எல்லாவற்றையும் முகமது எங்கே நினைப்பூட்டினார்?&lt;br /&gt;முகமது ஏன் இயேசு சொன்னதை சொல்லவில்லை, அல்லது "சொன்ன எல்லாவற்றையும்"  ஏன் சொல்லவில்லை? முகமது இயேசு சொன்னதற்கு முரண்பாடாக சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;[4] &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=16&amp;amp;Verse=14,15"&gt;யோவான் 16:14,15&lt;/a&gt;. "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் &lt;span style="font-weight: bold;"&gt;என்னை மகிமைப்படுத்துவார்&lt;/span&gt;. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் &lt;span style="font-weight: bold;"&gt;என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் &lt;/span&gt;என்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு சொன்னதிலிருந்து முகமது அறிவிக்கவில்லை. இயேசு நான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பேன் என்றார், அப்படியே அவர் செய்தார். இதை முகமதுவால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது; அப்படி ஏற்றுக்கொண்டால் தனக்கு ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விடுமே என்பதால் அதை சொல்லவில்லையா? ஏன் இவர் இயேசு சொன்ன எல்லாவற்றையும் சொல்லவில்லை? அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது "கிறிஸ்து உயிரோடு எழும்பாவிட்டால் எங்களுடைய பிரசங்கம் வீணாயிருக்கும்" என்கிறார். முகமது இயேசுவை மகிமைப்படுத்தவில்லை. முகமது சுமார் 550 வருடம் கழித்து வந்து இதை மறுக்கிறார். ரொம்பவே காலம் கடந்துவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;யார் இந்த சத்திய ஆவியானவர், எப்போது வழிநடத்த வந்தார்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Acts&amp;amp;Chapter=2&amp;amp;Verse=1-4"&gt;அப்போஸ்தலர் 2:1-4 &lt;/a&gt;&lt;br /&gt;"பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் &lt;span style="font-weight: bold;"&gt;பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர்&lt;/span&gt; தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."&lt;br /&gt;இது இயேசு உயிர்த்தெழுந்து 50-வது நாள் ஆகும். இயேசுவானவர்  உயிர்த்தெழுந்தபின்பு 40 நாள் பூமியில் இருந்தார். வானத்துக்கு அவர் அப்படியே எடுத்துக்கொண்டபின்பு 10 நாள் கழித்து இந்த பரிசுத்த ஆவியானவர் (Holy Spirit)  காத்திருந்தவர்கள் மேல் வந்தார். இது முகமது வருவதற்கு  500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே ஆகும். முகமது பிறந்தது கி.பி. 570/571.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Acts&amp;amp;Chapter=8&amp;amp;Verse=29"&gt;அப்போஸ்தலர் 8:29&lt;/a&gt;. &lt;span style="font-weight: bold;"&gt;ஆவியானவர்&lt;/span&gt;: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Acts&amp;amp;Chapter=10&amp;amp;Verse=19,20"&gt;அப்போஸ்தலர் 10:19,20&lt;/a&gt;  பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், &lt;span style="font-weight: bold;"&gt;ஆவியானவர்&lt;/span&gt;: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Acts&amp;amp;Chapter=10&amp;amp;Verse=44,45"&gt;அப்போஸ்தலர் 10:44, 45&lt;/a&gt; இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் &lt;span style="font-weight: bold;"&gt;பரிசுத்த ஆவியானவர்&lt;/span&gt; இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும்...&lt;br /&gt;&lt;br /&gt;மேலே "ஆவியானவர்" என்பவர் இயேசு சொன்ன "சத்திய ஆவியானவர்." அப் 10:45ல்  அவர்கள் தேவனை புகழுவதையும் அதாவது தேவனை மகிமைப்படுத்துவதையும் இயேசு [4]ல் சொன்னதுபோல் காண்கிறோம்.&lt;br /&gt;அப்போஸ்தலர்களின் நிருபம் என்பது பேதுரு, பிலிப்பு, பவுல் என்பவர்கள் வாழ்ந்த காலம். இது முகமதுக்கு சம்பந்தமே இல்லாத காலம். ஏனெனில் 500 வருடங்கள் கழித்துதான் முகமது வருகிறார். (கி.பி. 570/571)&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு சொன்னார்:&lt;br /&gt;"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=14&amp;amp;Verse=6"&gt;யோவான் 14:6&lt;/a&gt;)&lt;br /&gt;"நானும் ஒரு வழி"  என்று சொல்லாமல்,  "நானே வழி" என்று சொல்வதைக் கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானே ஆடுகளுக்கு வாசல். வாசல்வழியாய் பிரவேசியாமல் (என் வழியில் இல்லாமல்), வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.  நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." (&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=10&amp;amp;Verse=1,9"&gt;யோவான் 10:1,9&lt;/a&gt;)&lt;br /&gt;இயேசு வாழ்ந்த காலத்திலிருந்து 600 வருடங்கள்  கழித்து ஒருவர் இதை புரட்டுகிறார் என்றால், மேலே இயேசு சொன்னது போல் அவர்  யார்? எந்த வழியில் அழைத்துச் செல்கிறார் என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்கள் முகமதுவை காப்பாற்ற இப்படி யோவானுக்கு தாவி  பரிசுத்த வேதாகமத்தை  புரட்டுவது தவறு. அவர்களுடைய முயற்சி முழுதும் தோல்வியாகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் என்பவர் "பரிசுத்த ஆவியானவர்" ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;--------- In English -----------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Question&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;#59&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;About John 14:16 which talks about the comforter;  Muslims debate that it is Muhammad?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Answer:&lt;/span&gt; NO, it is not Muhammad.&lt;br /&gt;&lt;br /&gt;To begin with, You MUST read the following chapters John  14, 16, 10 and Acts 2, 8, 10.&lt;br /&gt;&lt;br /&gt;Muslims will pick and interpret the scriptures according to their needs. Do not believe them. They pick one verse from here one verse from there just to save their Muhammad. But that attempt utterly fails as we uncover it in this article.&lt;br /&gt;&lt;br /&gt;When Jesus mentioned about the "Spirit of truth" , "Comforter" he was talking about the "Holy Spirit". Definitely not about Muhammad. How do we know?&lt;br /&gt;&lt;br /&gt;[1] &lt;u&gt;John 14:16 &lt;/u&gt; "And I will pray the Father, and he shall give you another Comforter, that he may &lt;span style="font-weight: bold;"&gt;abide with you for ever&lt;/span&gt;;"&lt;br /&gt;&lt;br /&gt;Muhammad is  "NOT with you for ever". He is dead.&lt;a href="http://en.wikipedia.org/wiki/Muhammad"&gt; He died in the year A.D.632&lt;/a&gt; . Muhammad's tomb is still there in Medina. There fore Jesus did not talk about Muhammad.&lt;br /&gt;&lt;br /&gt;[2] &lt;u&gt;John 14:17&lt;/u&gt; "Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he &lt;span style="font-weight: bold;"&gt;dwelleth with you&lt;/span&gt;, and &lt;span style="font-weight: bold;"&gt;shall be in you&lt;/span&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;Muhammad does not dwell with you, he is definitely NOT inside of  you. For that as mentioned above he needs to be a spirit. (If you argue that He dwells in your mind and memory, then every family will say that their mom and dad who passed away are in their memory as well, so that argument is very silly to consider.)&lt;br /&gt;&lt;br /&gt;When Jesus said, "Dwells with you" he was talking with the disciples. Muhammad did not dwell with the disciples of Jesus.  His arrival was 500 years later, which is too late.&lt;br /&gt;&lt;br /&gt;"Spirit of truth": Muhammad had a body, not a spirit. (Remember God is Spirit.)&lt;br /&gt;&lt;br /&gt;In II Timothy 1:14  we read: "That good thing which was committed unto thee keep by &lt;span style="font-weight: bold;"&gt;the Holy Ghost which dwelleth in us&lt;/span&gt;."&lt;br /&gt;&lt;br /&gt;Therefore Holy Spirit is the one that dwells in us.&lt;br /&gt;&lt;br /&gt;[3] &lt;u&gt;John 14:26&lt;/u&gt;  "&lt;span style="font-weight: bold;"&gt;But the Comforter, which is the Holy Ghos&lt;/span&gt;t, whom the Father will send in my name, he &lt;span style="font-weight: bold;"&gt;shall teach you all things&lt;/span&gt;, and bring all things to your remembrance, &lt;span style="font-weight: bold;"&gt;whatsoever I have said unto you&lt;/span&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;- It is explicitly and clearly mentioned that the Comforter is the "Holy Ghost". There is no need to explain any further. The Muslim's debate comes to a dead end here. Muhammad is NOT the "Holy Spirit"&lt;br /&gt;&lt;br /&gt;- "He will teach you all things, whatsoever I have said unto you". Amazing!&lt;br /&gt;Jesus said, "Love your enemies". How great this is !!&lt;br /&gt;Muhammad said, "Kill the unbelievers". How silly is this?&lt;br /&gt;Why Muhammad did not say what Jesus said above and "whatsoever" Jesus said? So the comforter is not Muhammad. Muhammad contradicts what Jesus said.&lt;br /&gt;&lt;br /&gt;[4] &lt;u&gt;John 16:14, 15&lt;/u&gt; "&lt;span style="font-weight: bold;"&gt;He shall glorify me&lt;/span&gt;: for he shall receive of mine, and shall shew it unto you. All things that the Father hath are mine: therefore said I, that&lt;span style="font-weight: bold;"&gt; he shall take of mine, and shall shew it unto you&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;Muhammad did not take from what Jesus said and proclaim.  Jesus said I will rise again bodily, and he did. Muhammad denies it because it is too hard for him to believe, and if he did, there is no value for him anymore.&lt;br /&gt;Jesus was greatly glorified in resurrection. With out the resurrection of Christ there is nothing to preach says apostle Paul. Muhammad did not glorify Jesus.  He came 500 years  later after all these events took place. Too late.&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;Who is this "Spirit of Truth",  when did He come to guide?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;u&gt;Acts 2:1-4&lt;/u&gt;&lt;br /&gt;"And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place. And suddenly there came a sound from heaven as of a rushing mighty wind, and it filled all the house where they were sitting. And there appeared unto them cloven tongues like as of fire, and it sat upon each of them. And t&lt;span style="font-weight: bold;"&gt;hey were all filled with the Holy Ghost&lt;/span&gt;, and began to speak with other tongues, &lt;span style="font-weight: bold;"&gt;as the Spirit gave them utterance&lt;/span&gt;."&lt;br /&gt;&lt;br /&gt;This is 50 days since resurrection of Jesus. Jesus lived on this earth for 40 days after resurrection, then he was taken up. 10 days later the Holy Spirit  came upon them that waited on the upper room. Muhammad was born only in A.D. 570/571. Too late.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;Acts 8:29&lt;/u&gt; Then the&lt;span style="font-weight: bold;"&gt; Spirit said unto Philip&lt;/span&gt;, Go near, and join thyself to this chariot&lt;br /&gt;&lt;u&gt;Acts 10:19,20&lt;/u&gt; While Peter thought on the vision, the &lt;span style="font-weight: bold;"&gt;Spirit said unto him&lt;/span&gt;, Behold, three men seek thee.&lt;br /&gt;Arise therefore, and get thee down, and go with them, doubting nothing: for I have sent them.&lt;br /&gt;&lt;u&gt;Acts 10:44-46&lt;/u&gt; While Peter yet spake these words, the &lt;span style="font-weight: bold;"&gt;Holy Ghost fell on all&lt;/span&gt; of them which heard the word...For they &lt;span style="font-weight: bold;"&gt;heard them speak with tongues, and magnify God&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;Here the Spirit is the one that Jesus said as Comforter and the Spirit of Truth. Notice in Acts 10:46  people magnify God i.e. glorify God as mentioned by Jesus in [4]&lt;br /&gt;&lt;br /&gt;Books of Acts is the time Peter, Philip, Paul lived. This is nothing to do with Muhammad period. Because Muhammad came 500 years later.&lt;br /&gt;&lt;br /&gt;Jesus said in &lt;u&gt;John 14:6&lt;/u&gt;&lt;br /&gt;"I am the way, truth and life. with out me no one can come to the father".&lt;br /&gt;-Notice that Jesus did NOT  say I am "a" way. Instead He said I am "the way".&lt;br /&gt;&lt;br /&gt;Jesus said in &lt;u&gt;John 10:1,9&lt;/u&gt;&lt;br /&gt;"Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber"&lt;br /&gt;" I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture."&lt;br /&gt;&lt;br /&gt;After 600 years of have gone from the time of Jesus,  a man called Muhammad comes and flips and twists the truth that is already established. So in which "way" does Muhammad takes the people according to Jesus? the "other way"  which only a thief and robber enter.&lt;br /&gt;&lt;br /&gt;Muslims are trying to save their Muhammad by quoting verse here  and there, but their attempt has now utterly failed. Muslims are  corrupting the truth, and it is wrong.&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;The Spirit of truth,  the Comforter  is the "Holy Spirit".&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-614265987531633051?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/59-14.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/614265987531633051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/614265987531633051'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/59-14.html' title='59. முகமது பற்றி பைபிளில் யோவான் 14:16-ல் உள்ளது என்று  இஸ்லாமியர்கள் சொல்வது பற்றி?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-5687956071164819363</id><published>2010-10-12T10:00:00.000-07:00</published><updated>2010-11-16T11:27:04.719-08:00</updated><title type='text'>58. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த... மத தெய்வங்கள் எல்லாம் ஒன்றா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பதில்: &lt;span style="font-weight: bold;"&gt;இல்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகர் எல்லா கடவுளும் ஒன்றுதான்,  ஒரே கடவுளைத்தான் எல்லாரும் வணங்குகிறார்கள், &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"All roads lead to Rome"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; என்று சொல்கின்றனர். இது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"All roads lead to Rome?" என்ற வழக்கச் சொல்லை நாம் இங்கே கொண்டுவருவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதுபோல் ஆகும். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆஸ்திரேலியாவில் எந்த சாலையில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. இலங்கையில் எந்த வழியில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. உலகில் எத்தனை சாலைகள் கடலில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகள் மலை உச்சியில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகளில் குழிகளும், பள்ளங்களும்? எத்தனை சாலைகள் மூடப்பட்டுள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கடவுளும் ஒரே கடவுள் அல்ல; ஒவ்வொரு கடவுளுக்கும் வேறுபட்ட குணங்கள், அந்த கடவுள்கள் சொல்லும் வேறுபட்ட கட்டளைகள்/&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அறிவுரைகள்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; என உள்ளன. ஒரு அலுவகத்தில் காணப்படும் ஒவ்வொரு மேலாளர்களின் குணங்கள் மாறுபடுகிறதே. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடவுள்கள் சொல்லும் கட்டளைகள் மாறுபடும்போது அவை எல்லாம் எப்படி ஒரே கடவுள் என்று சொல்லமுடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;எல்லா மதங்களும் நல்லதைத்தானே போதிக்கின்றன? என்று  சொல்பவர்கள் அனைவரும் மதங்களில் காணப்படும் பொதுவான நீதி கட்டளைகளைத்தான்  (Moral Law) ஒப்பிடுகின்றனர். ஆழமான போதனைகளை மறந்துவிடுகின்றனர்.   குறிப்பாக:&lt;br /&gt;&lt;br /&gt;[அ] உலகம் எப்படி உண்டாயிற்று? (origin of the world, universe)&lt;br /&gt;[ஆ] மனிதன் பூமியில் எப்படி தோன்றினான்? (origin of Human kind)&lt;br /&gt;[இ] பாவ சுபாவங்கள், பாவத்தினின்று விடுதலை பெறுவது எப்படி? (Salvation)&lt;br /&gt;[ஈ] மனிதன் மரித்தபின் எங்கே போகிறான்? (Life after death)&lt;br /&gt;இதுபோன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு மதமும் ஒரு பதில் தருகின்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இந்துமதத்தில் 33 கோடி தேவர்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சக்தியும், குணமும் உண்டு என்று அறிகிறோம்; அழிக்க, காக்க, உண்டாக்க (இம்மூன்றும் திரித்துவம்), செல்வத்துக்கு, அறிவுக்கு, நீதிக்கு....சூரியன், நாகம் என கணக்கில் அடங்கா கடவுள்கள். சிலை வணக்கம் கூடாது என்று  பைபிளில் தெளிவாக உள்ளது. சிலையின்றி இந்து மதத்தில் எப்படி? பலிகேட்கும் கடவுள்களும் அவைகளில் அடங்கும். இந்துக்களின் கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்ற நம்பிக்கையும், மறுபிறவி அல்லது மறுஜென்மம், கர்மா போன்ற கொள்கையும் மற்ற சமயங்களில் இல்லை.[1] &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சமயத்தில் கடவுள் ஒருவரே என்றும் நபி முகமதுவை பின்பற்றவேண்டும் என்று சொல்கின்றனர். இயேசுவை [குமாரனாகிய] தேவன் என்று சொல்வதில்லை; அவரை ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்கின்றனர். ஆனால் இயேசு ஒரு கன்னிகையிடத்தில் பிறந்தார், மரித்தோரை உயிர்ப்பித்தார் என்று அவர்கள் வேதத்தில் இருந்தாலும் அவர் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், அவர் தேவன் அல்ல என்றும் சொல்கின்றனர்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; மொசாப் ஹசான் யூசுஃப் (Mosab Hassan Yousef)  என்பவர்  சொல்லும்போது, "&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தங்களது இஸ்லாமிய நம்பிக்கையைச் சார்ந்தவர்கள் அல்லாதவர்களை  கொல்லுங்கள் என்று அவர்களின் வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;முகமது என்ற ஒழுங்கு நெறியற்ற ஒருவரை, பலரை கொலை செய்தவரை தங்களுக்கு முன்மாதிரியாக வைத்துக்கொண்டுள்ளனர்" என்று சொல்கிறார்" [2]. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/fB30zaNrMqg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="false"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/fB30zaNrMqg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="false" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலும், இவர்: "இஸ்லாமியர்கள் எனக்கு விரோதிகள் அல்ல, அவர்களுடைய நபியும், அவர்களின் இரட்டை வேடம் உடைய கடவுளும்தான்" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கிறிஸ்தவ சமயத்தில் தேவன் ஒருவரே, அவர் திரித்துவ தேவன் (Trinity) என்று கூறப்படுகின்றது; மேலும் குமாரனாகிய தேவன் பூமியில் மனிதனாக வந்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்கிறது. மேலும் கொலை செய்யாதிருப்பாயாக, உங்கள் சத்துருக்களை நேசியுங்கள், தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்று பைபிளில் இருக்கின்றது;  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இயேசு பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளையோ சிநேகிக்கிறார்; "நீ உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்று இயேசு சொல்லியிருக்கிறார். பிறர் எனப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சரி. விதிவிலக்கு ஏதும் இல்லை.[3]&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/12fvBRLG8OA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="false"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/12fvBRLG8OA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="false" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தமதத்தில் உயிர்களை கொல்லாதே என்று சொல்லப்பட்டாலும், கடவுள் இல்லை என்ற அடிப்படையை உடைய மதமாகும். புத்த மதத்தின் வேதத்தில்: சிருஷ்டிகர் (C&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;reator) என்று ஒருவர் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  உலகம் உண்டாக்கப்பட்டது, அதின் ஜீவராசிகள் எல்லாம் உண்டாக்கப்பட்டன என்பது எல்லாம் குப்பை என்கிறது[4]. புத்தர் இந்து மதத்தை ஏற்கமறுத்தவர்; இந்துக்களின் வேதங்களை தள்ளிவிட்டவர்;  மோசேயினால் பெறப்பட்டவகைளை ஒதுக்கி தள்ளியவர். என்றால் எப்படி எல்லா கடவுளும் ஒரே கடவுளாக முடியும்?&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/xhfwzA8kLh8&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="false"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/xhfwzA8kLh8&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="false" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியிருக்க எல்லாரும் ஒரே தேவனை வணங்குகிறோம் என்று எப்படி சொல்லமுடியும்? எல்லாரும் ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களுடைய  வேதங்களை கொண்டுவந்து ஆதாரம் காட்டசொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;கேள்வி பதில் 49ல் &lt;a rel="nofollow" target="_blank" href="http://tamilbibleqanda.blogspot.com/2010/07/49.html"&gt;&lt;span class="yshortcuts" id="lw_1285695346_1"&gt;http://tamilbibleqanda.blogspot.com/2010/07/49.html&lt;/span&gt;&lt;/a&gt; நம்முடைய தேவன் ஒருவரே தேவன்; வேறு ஒருவர் இல்லை என்று பல வசனங்கள் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்:&lt;br /&gt;- நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். மேலும்  என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார்.  இதில் வேறு வழியில்லை என்றாகிறது அல்லவா?&lt;br /&gt;- நம்முடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தியவர் இயேசு ஒருவரே. (இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை) சிலுவையில் மரித்து உயிருடன் எழும்பி பின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் ஒருவரே.&lt;br /&gt;- அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை."&lt;br /&gt;- யோவான் சொல்லும்போது: "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் [நித்திய] ஜீவன் இல்லாதவன்."&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களின் சில கொள்கைகள் அல்ல அனைத்து கொள்கைகளும் ஒன்றாகவே இருக்கவேண்டும். கொள்கைகள் மாறுபட்டால், பாதை மாறுபடும்; பாதைமாறினால் செல்லும் இடம் மாறும். எங்கே செல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-----------In English---------&lt;br /&gt;&lt;br /&gt;Question #58:  Is the God of Hindus, Christians, Muslims, Buddhists .... the same?&lt;br /&gt;&lt;br /&gt;Answer: NO&lt;br /&gt;&lt;br /&gt;Many say that All gods are the same, we all are worshiping the same god. All roads lead to Rome. This is wrong.&lt;br /&gt;&lt;br /&gt;It is illogical to bring the saying "All roads lead to Rome" in this context. For example we all know for sure that no one can go to Rome, no matter on which road a man takes from Australia and Sri-Lanka. How many roads end in the peak of a mountain? How many roads end up in the Ocean? How many roads are closed? So many roads are with potholes and ditches.&lt;br /&gt;&lt;br /&gt;Nay, not all gods are the same. Each god has its own characteristics. Instruct different moral teachings, commandments, which exclude each other.We see that the directors  and managers in a small office itself vary by character. If that is the case,  when god's characters and teaching are different, how could then one say they all are the same god?&lt;br /&gt;&lt;br /&gt;Many say, " Aren't all religions teach good things?". Well, such people compare only the common Moral Law found all the religions. But they completely forget about the deep doctrines, beliefs and teachings  such as:&lt;br /&gt;[a] The origin of the world, universe&lt;br /&gt;[b] The origin of mankind on earth&lt;br /&gt;[c] How to get delivered from the nature of sin and sin? [Salvation]&lt;br /&gt;[d] Life after death&lt;br /&gt;Each religion gives different views, for such questions.&lt;br /&gt;&lt;br /&gt;In Hinduism there are 330 million gods. Each god has a unique power and character. There are innumerable gods like To create, To protect, To destroy (these three are trinity), for wealth, for wisdom, for judgment..... Sun, Snake and so on. In the Holy Bible such Idol worship is prohibited. Could you imagine Hinduism without Idols and statues? Some of their gods ask animal sacrifice. The belief that Hindus have is "by dipping themselves in the holy river Ganges, their sin's will be washed away". Their beliefs such as Karma, incarnations in to next birth, is not present in other religions. [1]&lt;br /&gt;&lt;br /&gt;In Islam they say "there is one god, and all must follow Muhammad". They deny Jesus as God [the Son]. They call him as prophet. Though they say that Jesus was born of a virgin, he raised the dead, they say that he was not crucified, and he is not god. when Mosab Hassan Yousef   says "In the Koran many places it is mentioned to kill all the unbelievers or infidels that do not believe in their god. Moreover their highest example or model is a man who committed many murders and indecent fellow"[2]. (Watch first video). "Muslims are not my enemies, their messenger and their god that has dual personality"&lt;br /&gt;&lt;br /&gt;In Christianity we know that "God is one, in three persons (Trinity)". Also God [the Son] came to earth in the form a man and gave his life for us,  to save us from our sins and rose up on the third day. Bible teaches that "Thou shalt not kill. Love your enemies. God is Love". Jesus loves the sinners but not the sin. "Love your neighbor as you love yourself" said Jesus. It does not matter who those "neighbors" are, no exception. [3] (Watch second video)&lt;br /&gt;&lt;br /&gt;In Buddhism though it talks about do not kill, it is a religion that has no god as its basis. It is clearly mentioned in the Buddhist text that there is not such one as Creator. (Watch third video) It is a junk and rubbish to say that all living things were created, and all that we see are not created[4].  Buddha was a man who rejected the Vedas of Hindus, rejected the commandments obtained by Moses. If so how can all gods be the same god? How then we say that we all worship to the same God. If any one argues that we all worship the same God, first ask them to bring their religion' books to provide such evidence.&lt;br /&gt;&lt;br /&gt;In the Q&amp;amp;A #49 many verses have been given to show  that "Our God is the only God, there is no other God than Him".&lt;br /&gt;&lt;br /&gt;Moreover Jesus said that&lt;br /&gt;- "I am the way truth and life, No one can come to the father but by me". Doesn't is say that there is no other way other than Jesus himself?&lt;br /&gt;- It is only Jesus who shed his blood for us, for our sins. (There is no redemption of sin without shedding of blood).&lt;br /&gt;- It is only Jesus who rose from the dead on the third day and was taken up to the heaven.&lt;br /&gt;- Apostle Paul says that, " Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved."&lt;br /&gt;- John says, " He that hath Son has [eternal] life, he that does not have Son of God, does not have life"&lt;br /&gt;&lt;br /&gt;For those who say that they worship the same god, their doctrines and teachings should be the same.  Not few doctrines and teachings. All doctrines and teachings should be the same. If the teachings differ then the way in which we go (or follow) will be different. If the path is different, the destination is different. How important it is find out if we are in the correct path!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;References:&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;[1] &lt;a href="http://www.religionfacts.com/hinduism/beliefs.htm"&gt;http://www.religionfacts.com/hinduism/beliefs.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;[2] From the book "Son Of  Hamas" and&lt;a href="http://www.sonofhamas.com/"&gt;  &lt;/a&gt;&lt;a href="http://www.sonofhamas.com/"&gt;http://www.sonofhamas.com&lt;/a&gt;&lt;br /&gt;[3] sermon on the mount, Book of Matthew: chapter 5 and  Clip from passion of Christ.&lt;br /&gt;[4] &lt;a href="http://en.wikipedia.org/wiki/God_in_Buddhism"&gt;http://en.wikipedia.org/wiki/God_in_Buddhism&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-5687956071164819363?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/58.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5687956071164819363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5687956071164819363'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/58.html' title='58. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த... மத தெய்வங்கள் எல்லாம் ஒன்றா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-1443188928878056736</id><published>2010-10-04T20:00:00.000-07:00</published><updated>2011-03-30T15:43:54.410-07:00</updated><title type='text'>57. புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TKK3mlbotKI/AAAAAAAAAvQ/Q5ExMsc4IoQ/s1600/tiding.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 329px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TKK3mlbotKI/AAAAAAAAAvQ/Q5ExMsc4IoQ/s400/tiding.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5522177966620587170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong style="font-weight: normal;"&gt;&lt;u&gt;பதில்&lt;/u&gt;: &lt;span style="font-weight: bold;"&gt;ஆம் ! தசமபாகம் (tithe) செலுத்தவேண்டும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னோட்டமாக:&lt;br /&gt;தசமபாகம் என்றால் பத்தில் ஒரு பங்கு.  தசம் என்றால் பத்து. (ஹிந்தியில் தஸ் என்றாலும் பத்து). கணிதத்தில் வரும் எண்களிலும் புள்ளி வரும் இடத்தை "தசம ஸ்தானம்" என்பர்.  தேவன் நமக்கு கொடுப்பதில் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு திரும்ப செலுத்தவேண்டும்.  புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தைக் குறித்து பற்றி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[A] தசமபாகம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;[1]  &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&amp;amp;Chapter=11&amp;amp;Verse=42"&gt;லூக்கா 11:42&lt;/a&gt;ல்  இயேசு சொல்லும்போது: "பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம்  மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் &lt;span style="font-weight: bold;"&gt;தசம பாகம் கொடுத்து&lt;/span&gt;, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; &lt;span style="font-weight: bold;"&gt;இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே".&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளையும்  செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்பதில் தசமாகம் என்ற  கட்டளையை விடாதிருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காணலாம். கட்டளை என்றால்  கைக்கொள்ளவேண்டும் அல்லவா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[2] இயேசு சொன்னார்:   &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&amp;amp;Chapter=18&amp;amp;Verse=10-12"&gt;லூக்கா 18:10-12&lt;/a&gt; "இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.  பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; &lt;u&gt;என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்&lt;/u&gt; என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொல்லப்பட்டதில் இவர்கள் ஜெபித்தது புதிய ஏற்பாட்டு காலத்தில்தான். அங்கே தசமபாகம் செலுத்தும் பழக்கம் இருந்தது என்பது மறுக்கப்படமுடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;[3] அப்போஸ்தலனாகிய பவுல் மெல்கிசெதேக் பற்றி எபிரெயர் 7ல் சொல்லும்போது. ஆபிரகாம் இவனுக்கு &lt;u&gt;"எல்லாவற்றிலும்" தசமபாகம் செலுத்தினான்&lt;/u&gt; என்று சொல்லுகிறான். நாம் நன்கு அறிவோம் பவுல் புதிய ஏற்பாட்டுகாலத்தை (கிறிஸ்து பிறந்த பின்பு வரும் காலத்தைச்) சேர்ந்தவர்.  பவுலின் காலத்திலும் தசமாகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரிந்ததால் அதைக்குறித்து அவர் தைரியமாக் எழுதுகிறார்.  இது பவுலுடைய காலத்தில் தசமபாகம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை உறுதிசெய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Malachi&amp;amp;Chapter=3&amp;amp;Verse=8-10"&gt;மல்கியா 3:8-10&lt;/a&gt;ல் "மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".&lt;br /&gt;&lt;br /&gt;தேவனையே சோதித்துப் பாருங்கள் என்று இந்த ஒரே ஒரு விஷயத்தில்தான் பைபிளில் உள்ளது. எனவே தசமபாகம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் அப்படி நீங்கள் கொடுக்காவிட்டால், வீண்செலவுகள்   மருத்துவர் செலவு, வாகனச் செலவு ... என்று வரும். ஏனெனில் நீங்கள் தேவனுடைய பணத்தை திருடிய குற்றவாளிகள் ஆகிறீர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட விளக்கம்.  மேலும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாமல் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;[B] காணிக்கை&lt;/span&gt;&lt;br /&gt;இது போக, நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். ஏழைகளுக்கு உதவுவது என்பதும் இதை உள்ளடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது;  ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்).   "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=II_Corinthians&amp;amp;Chapter=9&amp;amp;Verse=7"&gt;II கொரி 9:7&lt;/a&gt;ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&amp;amp;Chapter=6&amp;amp;Verse=38"&gt;லூக்கா 6:38&lt;/a&gt;ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;சிந்தனைக்கு:&lt;/u&gt;&lt;br /&gt;1998 ம் வருடம்  ஒரு போதகர் திடீரென்று என் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலையில் வந்தார்.  சற்றுநேரம் பேசிவிட்டு நான் அவரை வழியனுப்பிவைக்கும் போது என்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினேன். அச்சமயம் அவ்வளவுதான் என்னுடைய பணப்பையில்(Wallet) இருந்தது. அதை கொடுத்துவிட்டேன். என்னிடம் இருந்ததை கொடுத்துவிட்டதால் என்னிடம் அப்போது வேறு பணம் ஏதும் இல்லை. அவர் சென்றபின் சாப்பிட என்னசெய்வது...என்று யோசித்தேன். என்னிடத்தில் வாகனம் இல்லாத காலம் அது. வங்கிக்குப் போகவேண்டுமென்றால் சற்றே தூரம். சரி அருகிலுள்ள கடைக்கு சற்றே நடந்து போய்வரலாம் என்று சொல்லி "Lucky's" (தற்போது அதன் பெயர் Albertsons) என்ற ஒரு கடைக்கு உள்ளே சென்றேன்.  அங்கே மிகவும் வயதான ஒரு மூதாட்டி என்னிடம் வந்து, "Here.., this is for you" என்று சொல்லி கையில் ஏதோ கொடுத்துவிட்டு  சென்றார்கள். கையை திறந்துபார்த்தேன் 20 டாலர். ஏறெடுத்து அவர்களைத் தேடியபோது  அந்த மூதாட்டி எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மனதில் ஒருவித  ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும்,  அதே சமயம் தேவன் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறாரே என்பது நெஞ்சைத் தொட்டதால்  உள்ளே அழுகை கலந்த உணர்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்பதற்கு இது ஒரு சிறிய சாட்சி. நிச்சயமாக உங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-1443188928878056736?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/57.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1443188928878056736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1443188928878056736'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/57.html' title='57. புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TKK3mlbotKI/AAAAAAAAAvQ/Q5ExMsc4IoQ/s72-c/tiding.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-7865425259693190105</id><published>2010-10-01T10:00:00.000-07:00</published><updated>2010-10-01T17:22:11.063-07:00</updated><title type='text'>56. ஆரியர்கள் யார்? பைபிளில் உண்டா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;யோபு 4:10-ல் சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம். &lt;/span&gt;&lt;/span&gt;(The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken) &lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;என்று வாசிக்கிறோம். சிங்கத்துக்கு எபிரேய மொழியில் பல வார்த்தைகள் உள்ளன. அதில் ஒரு வார்த்தை "ஆரிய" (ariy) என்பது ஆகும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;of the lion, ארי 'ariy&lt;br /&gt;of the fierce lion, שחל shachal&lt;br /&gt;of the young lions, כפיר kĕphiyr&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;ஆரிய என்பதற்கு: மான்புமிகு, உயர்ந்த என்ற பதத்தில் ரிக் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரிய மொழி என்பது இந்திய-பெர்சிய (Indo-Iranian) மொழியாகும். இம்மொழியானது சமஸ்கிருதம் என்று பெரிதும் சொல்லப்படுகின்றது (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Sanskrit"&gt;http://en.wikipedia.org/wiki/Sanskrit&lt;/a&gt;). இதைப்பற்றி பெர்சிய நாட்டின் வரலாறு மற்றும் இலக்கியங்களில் விரிவாக படிக்கலாம். விவரங்களுக்கு பெர்சியாவின் நூல்களஞ்சியங்களுக்கு செல்லவும். ஆரிய என்பதே ஈரான் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;என பின்பு திரிந்தது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;(ariya became iran) . &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;பாரசீக மன்னன் "தரியு" தான் ஒரு ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். அகாஸ்வேரு என்னும் அரசனும் ஆரியன் ஆவான். பைபிளில் இந்த பாரசீகர்களைப் பற்றி தானியேல் புத்தகத்தில் வாசிக்கலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;எனவே ஆரியர்கள் யார் என்பதில் சந்தேகம் வேண்டாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;சில பெர்சிய மன்னர்களைப் பற்றி வேதாகமத்தில்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;[1] &lt;span style="font-weight: bold;"&gt;நெபுக்காத் நேச்சார்&lt;/span&gt; (கி.மு 605– 562)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பைபிளில் II இராஜாக்கள் 24, 25  II நாளாகமம்  36  எஸ்றா 1-6, நெகேமியா 7, எரேமியா 21-52 மற்றும் தானியேல் முழுதும். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த பெர்சிய அரசனைப் பற்றி பைபிளில் அநேக இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் எப்படி இஸ்ரவேல் ஜனங்களை (யூதர்களை) அடிமையாக்கி பாபிலோனுக்கு கொண்டுசென்றான் என வாசிக்கிறோம். அவன் எப்படி ஒரு சிலை செய்து எல்லாரும் அதை வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான் என்றும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதை வணங்கமறுத்து நெருப்பில் போடப்பட்டும் சாகாமல் போனதால் அவன் இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் என்றும் வாசிக்கிறோம். மேலும் தானியேலை  நெபுக்காத்நேச்சார் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;எப்படி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உயர்வாக மதித்தான் என்றும் வாசிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;[2] &lt;span style="font-weight: bold;"&gt;கோரேஸ்&lt;/span&gt; [Cyrus]  ( கி.மு. 559-530)&lt;br /&gt;II நாளாகமம் 36 எஸ்றா 1-5, தானியேல் 10ல் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;[3] &lt;span style="font-weight: bold;"&gt;தரியு&lt;/span&gt; I, II, III [Darius] (கி.மு. &lt;/span&gt;336 to 330)&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எஸ்றா 4-6, தானியேல்&lt;/span&gt; 5-11&lt;span style="font-size:85%;"&gt;ல் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தரியுவை மாமன்னர் அலெக்ஸான்டர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வென்றான் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;(&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கி.மு. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;356–323 Alexander the great)&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தியாவைப்பற்றி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"இந்து" தேசம் என்று பைபிளில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே  இந்தியாவானது பெர்சிய (&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாரசீக)&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; மன்னர்களின்  ஆட்சியில் (Persia, Currently known as Iran) இருந்தது. இதை &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Esther&amp;amp;Chapter=1&amp;amp;Verse=1"&gt;எஸ்தர் 1:1&lt;/a&gt;ல் இப்படியாக வாசிக்கிறோம்: "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு  நாடுகளையும் அரசாண்ட &lt;span style="font-weight: bold;"&gt;அகாஸ்வேரு&lt;/span&gt;வின் நாட்களிலே சம்பவித்ததாவது".   The king of Persia &lt;/span&gt;Xerxes (&lt;span style="font-size:85%;"&gt;Ahasuerus)&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt; ruled 127 Nations from &lt;span style="font-weight: bold;"&gt;India to Ethiopia&lt;/span&gt;. " &lt;/span&gt;(&lt;span style="font-size:85%;"&gt;கி.மு. &lt;/span&gt;486-465). &lt;span style="font-size:85%;"&gt;அப்போதைய இந்தியா என்பது பல நாடுகளை உள்ளடக்கியதாகும். அதில் பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், பர்மா, அந்தமான் தீவுகள் என்பவைகளும் அடங்கும் என்பதை பின்பு வந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆளுகையின் வரலாற்றில் படித்தால் தெளிவாக காணலாம். எனவேதான் "All India" என்ற பதத்தையும் இந்திய அரசியல் சாசனத்தில் (Indian constitution) காணமுடிகிறது. "All India Radio" என்ற உபயோகமும் இதற்கு ஒரு சான்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;குறிப்பாக இந்த ஆரியர்கள் என்பவர்கள் சிலைகளை வணங்கும் பழக்கமும், சிலைகளை கோவில்களில் வைத்து (&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=II+Kings&amp;amp;Chapter=5&amp;amp;Verse=17,18"&gt;II இராஜாக்கள் 5:17,18&lt;/a&gt;) ஒரு திருவிழா என்று கொண்டாடிய பழக்கமும் உடையவர்கள் (&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&amp;amp;Chapter=12&amp;amp;Verse=32"&gt;I இராஜாக்கள் 12:32&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;). &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;அக்கினியில் வார்த்து பூஜைசொல்லுதல், வேள்விகள் என்ற பழக்கங்களை உடையவர்கள். ( &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Jeremiah&amp;amp;Chapter=7&amp;amp;Verse=18"&gt;எரேமியா 7:18&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரவேலர்களின் வரலாற்றிலும் சில அரசர்கள் உண்மையான தேவனை விட்டுவிட்டு மற்றவர்களுடைய பழக்கத்தைப் பார்த்து பின்பற்றியதையும் பார்க்கிறோம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;சில ஜனங்கள் (pagan worshipers) தங்களுடைய பிள்ளைகளையே பலி கொடுத்தார்கள் என்று எசேக்கியேலில் வாசிக்கிறோம். ஒரு ராஜா தன் மகனை தீமிதிக்கப்பண்ணினான் என்றும் வாசிக்கிறோம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;இதனால் இவர்கள் அடிமைகளாவும் சுற்றியுள்ள ராஜாக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்க தேவன் அவர்களை விட்டுவிட்டார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;இவை அனைத்தும் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நடந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் மற்ற மதங்களில் காணப்படும் சில பழக்கத்தை பார்த்து தங்கள் மதத்தில் பின்பற்றும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். உதாரணமாக பாதயாத்திரை என்று தலையில் சுமை சுமந்துசெல்லும் பழக்கம் கேரளாவில் உருவானது. பின்பு இது தமிழக இந்துக்களிடையே தொற்றிக்கொண்டது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;தற்போது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;இதை ரோமன் கத்தோலிக்க கூட்டத்தார் பின்பற்றி, வேளாங்கன்னிக்கு நடந்து போகிறார்கள். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;இந்த விநோத நிகழ்வு என்னுடைய காலகட்டத்தில் புதிதாக உருவாகியதை கண்கூடாக கண்டேன்.  இதை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;ரோமன் கத்தோலிக்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;ர்களிடமே &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;விசாரித்தபோது, "அவர்கள்தான் தங்கள் தெய்வங்களுக்கு இப்படி நடக்கமுடியுமா, நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று காட்டவே"  என தெரியவந்தது; இது ஜனங்களின் மதியீனத்தை அல்லவா காட்டுகிறது! உலகின் வேறுபகுதியில் வசிக்கும் ரோமன்கத்தோலிக்கர்கள் யாரும் இப்படியாக பாதயாத்திரை செல்வதில்லை. இதைப்போலவே இஸ்ரவேலரும் இந்த ஆரியர்களுடைய பழக்கங்களான நரகலான விக்கிரகங்களுக்கு பலி, வேள்வி போன்றவைகளை செலுத்தி தேவனுடைய கோபத்திற்கு ஆளாகினர்.  பைபிளில் வாசிப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Ezekiel&amp;amp;Chapter=23&amp;amp;Verse=39"&gt;எசேக்கியேல் 23:39&lt;/a&gt;  "அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்" என்று இங்கே நம்முடைய தேவன்  சொல்கிறார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=II_Kings&amp;amp;Chapter=21&amp;amp;Verse=6"&gt;II இராஜாக்கள் 21:6&lt;/a&gt; தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Hosea&amp;amp;Chapter=4&amp;amp;Verse=13"&gt;ஓசியா 4:13&lt;/a&gt; அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;ஆரியர்கள் வேறு,  இஸ்ரவேல் ஜனங்கள் வேறு. இந்த ஆரியர்கள், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த சில முறைகளைத் திரித்து அந்நிய தெய்வங்களுக்கு பலியிடுதல் போன்ற பழக்கங்களையும்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;விநோதமாக &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; பூஜை செய்தவர்களும் ஆவர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;ஆனால் சிலைகளை வணங்கக்கூடாது என்று நம்முடைய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Isaiah&amp;amp;Chapter=44&amp;amp;Verse=15-19"&gt;ஏசாயா 44:15-19&lt;/a&gt;. "மனுஷனுக்கு அவைகள்(மரங்கள்) அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;தாவீது சொல்லும்போது: சங்கீதம் 16:4 "அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;அப்போது இந்தியாவில் வசித்தவர்கள்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; ரிக் என்னும் வேதத்தில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;சொல்லியபடி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;"அக்கினி", "மழை", "காற்று", "குதிரை", "சூரியன்" என இயற்கை வழிபாடுகளை உடையவர்களாகவே இருந்தனர். பலிகொடுப்பது போன்ற பழக்கங்கள் வர "யூதர்கள்" மற்றும் "ஆரியர்களின்" கலாச்சார பாதிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் முதன்முதலில் பாவம் செய்தவன் பலி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது பைபிளில்தான், அதுவும் தேவன் மோசேயிடம் சீனாய்மலையில் கொடுத்தார் என்று யாத்திராகமத்தில் படிக்கும்போது நாம் நன்கு அறிவோம்.  யூதர்கள் அந்த கட்டளை  பெற்று 5770 வருடங்களாகின்றது. (யூதர்களின் வருடம் அவர்கள் எகிப்தைவிட்ட அன்று இரவுதான் ஆரம்பிக்கின்றது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;ரிக் வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டர் (Jupiter) (இது தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை ரிக் வேதக் கடவுள் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம் என ஆதாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;தமிழ்நாட்டில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;தற்போது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; காணப்படும் இந்து கடவுள்களின் பெயர்கள் வேதகாலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அந்த வேதங்களில் இல்லை.  எனவே இப்பெயர்களை முன்னோர்கள் தங்களுக்கு சொன்ன மாபெரும் கதைகளிலிருந்து எடுத்து இவர்கள் தங்கள் மொழிகளுக்கேற்ப பயன்படுத்தியிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான தேவனின் திரித்துவம் (தேவன் ஒருவரே, ஆனால் மூன்று ஆளத்துவங்கள் என்ற &lt;span style="font-weight: bold;"&gt;Trinity&lt;/span&gt;: God the father, God the Son, God the Holy Spirit) என்பது, இந்துக்களிடையேயும் காணப்படுகிறது. "ஒரு கடவுள் - மூன்று தலை" என்று பட விளக்கத்துடன் யாரோ ஒரு கதையில் இவர்களுக்கு சொன்னதுபோல் உள்ளது என்பது ஆச்சரியமளிக்கின்றது. பைபிளில் சொல்லப்பட்டவைகளில்  பல விஷயங்கள் சில மாற்றங்களுடன் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;இந்துசமயத்தில் பழக்கத்தில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;காணப்படுகின்றன. இதைப்பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;ஆரியர்கள் என்பவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பெர்சியாவில் இருந்தனர். இதில் குறிப்பாக "நெபுக்காத் நேச்சார்" என்பவன் தன்னுடைய தெய்வத்தைவிட்டுவிட்டு மெய்யான இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் (பைபிளில் தானியேல் புத்தகத்தில்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-7865425259693190105?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7865425259693190105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/7865425259693190105'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/10/56.html' title='56. ஆரியர்கள் யார்? பைபிளில் உண்டா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-5678956882961528199</id><published>2010-09-25T20:00:00.000-07:00</published><updated>2010-09-28T19:30:05.974-07:00</updated><title type='text'>55. சேலா, இகாயோன் என்றால் என்ன பொருள்?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;"சேலா" மற்றும் "இகாயோன்" என்பவை பைபிளில் வரும் பாடல்களில் காணப்படும் குறிப்புகளாகும். இதில் சேலா (Selah) என்பது சங்கீதம் (Psalms) மற்றும் ஆபகூக் (Habakkuk) புத்தகத்திலும், இகாயோன் (Higgaion) என்பது சங்கீதத்திலும் வருகின்றது. ஆனால் இவை வரும் எல்லா இடங்களும் பாடல்களில்தான்; ஆபகூக்கிலும் ஒரு பாட்டில்தான் வருகின்றது. அவைகளின் அர்த்தத்தை அறியும் முன்பு, முன்னோட்டமாக...&lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் இசைக்கருவிகள் வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு குறிப்பாக பியானோ (Piano, Keyboard) வாசிப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். இன்று "Sheet Music" என்ற ஒரு தாளில் பாடல்களின் குறிப்புகள்(Notes) மற்றும்  அந்த குறிப்புகள் தாள அளவீடுகளுக்குள் (Measures) வருகின்றன என்றும்  காணலாம். உதாரணமாக மிகவும் பிரபலமான அளவீடுகளில் ஒன்று 4/4 . அதாவது ஒரு அளவீட்டுக்குள் 4 காற்-குறியீடுகள் வரும், அல்லது இரண்டு அரை-குறியீடுகள் வரும், அல்லது ஒரு முழுக்குறியீடு வரும். மேலும் இசையின் அளவின் ஏற்றம் இறக்கங்களும் (Dynamics such as: crescendo, decrescendo [p,f, ppp, mp, mf ... etc] ) வருவதைக் காணலாம். (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Dynamics_%28music%29"&gt;http://en.wikipedia.org/wiki/Dynamics_%28music%29&lt;/a&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Music_hairpins.svg/296px-Music_hairpins.svg.png" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;எபிரெய மொழியில் சேலா என்பதற்கு (&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt; ס&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;לה celah&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;)&lt;br /&gt;- A technical musical term probably showing accentuation, pause, interruption (இசைக்குறியீட்டின்படி &lt;span style="font-weight: bold;"&gt;சற்றே நிறுத்தவும்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;- To lift up, exalt ( [தேவனை] உயர்த்தவும்)&lt;br /&gt;என்று பொருள்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இப்பாடலை வாசிக்கும்போது அல்லது அந்த குழுவினர் (Choir) பாடும்போது அங்கே சற்றே நிறுத்தி அடுத்தவரியை படிக்கவேண்டும். சுமார் 3000 வருடங்களுக்கு முன்பே தாவீது இசையில் வல்லவனாகவும் அதை வாசிக்கவும், பாடவும் பெரிய குழுவினரை வைத்திருந்தான் என்றும் அறிவோம். அதில் இப்படி அவன் இசைக்குறியீடுகளைப் பயன்படுத்தியது மிகவும் ஆச்சரியமான விஷயம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இகாயோன் என்பதற்கு &lt;/span&gt; (&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;הגיון higgayown&lt;/span&gt;&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;- meditation, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;musing , &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;resounding music (&lt;span style="font-weight: bold;"&gt;தியானிக்கவும்&lt;/span&gt;, சிந்தனைக்கு, நிரம்பிய இசை)&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;என்று பொருள்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக சங்கீதம் என்றால் பாடல்; அதை பாட்டாக பாடவேண்டும்; அந்த பாட்டில்:&lt;br /&gt;சேலா என்றால் (இசைக்குறியீட்டின் படி) சற்றே நிறுத்தவும்.&lt;br /&gt;இகாயோன் என்றால் தியானிக்கவும் என்று அர்த்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிலர் பழக்கப்பட்டதால், கடகடவென்று வேகமாக சங்கீதத்தை வாசிப்பார்கள். இனிமேல் அந்த இடத்திலாவது ஓடாமல் நிறுத்துங்கள். மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப்பார்த்து தியானியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-5678956882961528199?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/55.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5678956882961528199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5678956882961528199'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/55.html' title='55. சேலா, இகாயோன் என்றால் என்ன பொருள்?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-1593303041740086403</id><published>2010-09-14T22:45:00.000-07:00</published><updated>2010-10-01T18:01:14.355-07:00</updated><title type='text'>54. பைபிள் எப்படி தேவனிடத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று சொல்லமுடியும்?</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேவனைப்பற்றியும் பைபிளைப் பற்றியுமான  உங்களது நம்பிக்கையை தற்காப்பது (Apologetic - defending one's faith) என்பது முக்கியமாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;II தீமோத்தேயு 2:15. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.&lt;br /&gt;I பேதுரு 3:15. ...உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி:&lt;/span&gt; எப்படி பைபிள் தேவனுடைய வார்த்தை என்று சொல்லுகிறீர்கள்?&lt;br /&gt;இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களிடம்: "நீங்கள் எப்படி ..? பைபிள் தேவனிடத்திலிருந்து வந்ததென்று நம்புகிறீர்களா? பைபிளை ஒரு தடவையாவது படித்தது உண்டா? &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மோசேயுடன் தேவன் சீனாய்மலையில் பேசிய வார்த்தைகளைப் படித்துப்பார்த்தீர்களா? &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேவனைக்குறித்த உங்களுடைய புரிந்துகொள்ளுதல் என்ன? இயேசுவைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்." என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். ஏனெனில் பைபிளை திறந்துகூட பார்க்காமல் கேள்விகேட்பவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிள் ஒரு மிகவும் ஆச்சரியமான ஒரு புத்தகமாகும். இதை ஒரு புத்தகம் என்று சொன்னாலும்&lt;br /&gt;- உண்மையிலேயே பைபிள் 66 புத்தகங்கள் (ஆகமங்கள்) அடங்கியது ஆகும்.&lt;br /&gt;- சுமார் 1500 வருடங்களைத்தொடும் காலகட்டத்தில் (span) எழுதப்பட்டது.&lt;br /&gt;- இதை வெவ்வேறு கண்டங்களில் ஆடுமேய்ப்பவர், &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ராஜா, தீர்க்கதரிசிகள், &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மீன்பிடிப்பவர், வரி வசூலிப்பவர் மற்றும் வைத்தியர் என பல மாறுபட்ட சூழலிருந்த ஏறக்குறைய 40 பேரால் வெவ்வேறு இடங்களிலிருந்து எழுதப்பட்டது.&lt;br /&gt;- ஆனால் எல்லாரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்: தேவன் மனிதகுலத்தை மீட்பது பற்றி !! (Redemption of man kind by God)&lt;br /&gt;- II பேதுரு 1:20, 21ல் "வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." என்று தெளிவாக பேதுரு சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;[a] பைபிள் எனக்கு தரமுடியும் என்று உறுதியோடு சொன்ன அனுபவங்களை எனக்குக் கொடுத்தது.&lt;br /&gt;இது வாசிக்கும் சில சந்தேகக்காரர்களுக்கு பயனாக இருக்காமல் போகலாம். ஆனால் தனிப்பட்ட மனிதனாகிய எனக்கு நிச்சயம் உதவி செய்தது என்பதில் ஐயமில்லை.  உதாரணமாக தேவன் பாவங்களை மன்னிக்கிறார் என்பதைப் பற்றி சொல்லமுடியும். அதாவது பாவங்களை அறிக்கையிட்டால் நம்மை மன்னிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுள்ளவருமாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். மேலும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளும் என்று சொல்கின்றது. இதை உண்மையிலேயே பெற்றேன். பாவங்களை அறிக்கையிட்டபின் தேவன்கொடுக்கும் சமாதானம் என்பது எத்தனை கோடி செலவழித்தாலும் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"சத்துருக்களை நேசியுங்கள்" என்ற வார்த்தை எனக்கு மிகவும் சந்தேகமாயிருந்தது, இது எப்படி சாத்தியமாகும் என்பதால் இதை பார்த்துவிடுவோமே என்றேன். எனக்கு அதில் மீண்டும் மீண்டும் வெற்றி அதாவது ஒரு பெரிய சமாதானம் என்று வந்ததால் என்பதால் அது உண்மையென்று தெரிந்தது. மற்றவர்கள் எனக்கு செய்த தவறுகளை அவர்களுக்கு என்னால் மன்னிக்க முடிந்தது என்று சொந்த அனுபவத்தில் கூற முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;[b] இரண்டாவதாக விஞ்ஞானம் பைபிளை உறுதிப்படுத்துகின்றது:&lt;br /&gt;பைபிளும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று அறிவோம். இருப்பினும், முழுதுமாக அப்படியல்ல. பைபிளை கேலி செய்தவர்களாகிய விஞ்ஞானிகள்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; தற்போது உண்மைகள் இருப்பதாக &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நம்புவதால்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பைபிளை ஆராய்கின்றனர். பைபிளில் சொல்லப்பட்டவை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே ஆகும்.&lt;br /&gt;- பைபிளில் நட்சத்திரங்களை எண்ணிமுடியாது என்று சொல்லப்பட்டுள்ளது.  (எரே 33:22). நீங்கள் என்னதான் நவீன தொலைநோக்கியை கொண்டுவந்தாலும் அங்கிருக்கும் கணக்கற்ற நட்சத்திரங்களை மனிதனால் எண்ணமுடியாது. ஆரம்பகாலத்தில் இதை கேலிசெய்தவர்கள் இதோ நட்சத்திரங்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என்று ஒரு தொகையையும் குறிப்பிட்டனர். பின்பு ஒரு புதிய தொலைநோக்கி வந்தபின்பு அந்த தொகையை கூட்டினர். தற்போது ஹப்புள்(Hubble)  போன்ற நவீன தொலைநோக்கிகள் வந்தபின்பு, இல்லை இல்லை கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் உள்ளன என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் உருண்டை என்று பைபிளில் சொன்னதை ஒருகாலத்தில் கேலிசெய்தனர். விஞ்ஞானம் அதைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;- எபிரெயர் 11:3 ல் "3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்."&lt;br /&gt;"என்ன ஒரு முட்டாள்தனம்? காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?" என்று &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மிகவும் வன்மையான குறைகளைச் சொல்லிவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ என் கண் முன்னே இருக்கும் இந்த கணினி, மேஜை, பேனா எல்லாம் எப்படி காணப்படாதவைகளால் உண்டானதென்று சொல்லமுடியும்? நான் இவைகளைக் காண்கின்றேனே, தொடுகின்றேனே! ஆனால் விஞ்ஞானம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னது என்னவென்றால்: காணும் எல்லாவற்றையுமே கடைசியாக அணுஅளவில் பிரிக்கலாம், அணுவையும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்று பிரிக்கலாம். இவை கண்களுக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் சொன்னார் "&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பைபிளில் உள்ளவை உண்மை என்று விஞ்ஞானம் நிரூபிப்பதற்கு பதிலாக, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் உண்மையென்று இப்போது பைபிள் நிரூபிக்கின்றது"&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானத்தை நிரூபிப்பது என்பது பைபிளின் நோக்கமல்ல. மனித குலமானது [பாவத்திலிருந்து] மீட்கப்படவேண்டும் என்பதே அதின் முக்கிய அம்சமாகும். பரலோகத்துக்கு எப்படி போவது என்று பைபிள் சொல்கின்றது. எப்படி தேவனை அறிவது என்றும், பாடுகளும் கஷ்டங்களும் நிறைந்த உலகில் எப்படி வாழ்வது என்றும் அதிகாரத்துடன் சொல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;[c] பைபிளில் சொல்லப்பட்டவைகளை தொல்பொருள் ஆய்வியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்திவிட்டன.&lt;br /&gt;இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, காரணம் அப்படி ஒரு பழக்கமே &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அக்காலத்தில்  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இல்லை என்று அநேகர் வாதிட்டனர்  (ஆனால் பைபிளில் தெளிவாக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது) . இந்த சந்தேகக்காரர்களுக்கு 1968ம் வருடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு  மனிதனின் கால் எலும்புகளுடன் சேர்த்து  ஒன்பது அங்குல ஆணியுடன் ஒரு மரத்துண்டில்  சேர்ந்து இருந்ததை எருசலேமுக்கு வடக்கே எடுத்தது. எனவே பழங்காலத்தில் சிலுவையில் அறையும் பழக்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியது.  [இது இயேசுவின் எலும்புகள் அல்ல, ஏனெனில் அவரை கல்லறையில் வைத்த இடம் வேறு, மேலும் மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார் என்பது நாம் அறிந்த உண்மை. ]&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;பொந்தியு பிலாத்து (Pontius Pilate the Governor) என்று ஒரு ஆளுநர் இருக்கவே இல்லை என்று வாதமிட்டனர் பலர். ஆனால் 1961ம் வருடம் செசரீயாவில் ஒரு கல்வெட்டில் ரோமனாகிய பொந்தியு பிலாத்து யூதேயாவின்  ஆளுநர் என்று எழுதியிருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்பா (Caiaphas the high priest) என்று ஒரு பிரதான ஆசாரியன் அப்போது இருக்கவில்லை என்றும் சந்தேகவாதிகள் குறைகூறினர். ஆனால் 1990ல் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் கல்லறையானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த யூதர்கள் பைபிளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மத்திய கிழக்கு நாடுகளில் திருடினால் இன்றும் கட்டைவிரலை வெட்டிவிடும் பழக்கத்தைக் குறித்து &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;புத்தகங்களில் படிக்கும்போது &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அநேகர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதை நம்பாமல் கேலிசெய்யும் ஒரு கூட்டத்தாராக இருப்பார்கள். அப்போதும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகள் உண்மையை நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[d] பைபிள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தைரியமாகச் சொன்ன ஒரே புத்தகமாகும்.&lt;br /&gt;மற்ற மதங்களின் புத்தகங்கள் இவ்வாறு நிரூபிக்கமுடிவதில்லை, அப்படிச் செய்தால் அவைகள் பொய்யென்றும்,  அவைகளின் தெய்வங்கள் உண்மையான தேவன் அல்ல என்றும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.&lt;br /&gt;பைபிளில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் முன்னுரைக்கப்பட்டு அப்படியே நடந்தன. பைபிள் ஒன்றுதான் 100 சதவீதம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை காட்டியுள்ளது. யூதர்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் சிதறடிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் எப்படி மீண்டும் ஒன்றாகச் சேருவார்கள் என்றும் சொல்லியிருந்தது. அது அப்படியே நம்முடைய காலத்தில் (May 14, 1948) நிறைவேறியது என்பதை யாரும் மறுக்கமுடியாது (&lt;a href="http://en.wikipedia.org/wiki/History_of_Israel"&gt;http://en.wikipedia.org/wiki/History_of_Israel&lt;/a&gt;). மேலும் அவர்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது இன்றும் நம் கண்களுக்கு முன் நடைபெறுகின்றது. காசாவிலே நடைபெறும் தாக்குதல்களும், துருக்கி இஸ்ரவேலை தாக்குவதும் மறுக்கமுடியாத இன்றைய செய்திகளாகும். பைபிளானது உலகின் கடைசி யுத்தம் மத்தியகிழக்குப் பகுதியில் இருக்கும் என்றும்,  குறிப்பாக இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் இருக்கும் என்றும் சொல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அணுகுண்டு பேரழிவு பற்றியும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது:  &lt;/span&gt;&lt;br /&gt;"Zach 14:12 And this shall be the plague wherewith the LORD will smite all the  people that have fought against Jerusalem; Their flesh shall consume  away while they stand upon their feet, and their eyes shall consume away  in their holes, and their tongue shall consume away in their mouth".&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;[e] ஒரு விஞ்ஞானி சொன்ன உண்மையான புள்ளிவிவரம்:&lt;br /&gt;ஆப்பிரிக்காவிலுள்ள குரங்குகள் எல்லாம் ஒரு ஆங்கில தட்டச்சு (English Type Writer) மெஷின் மேல் வரிசையாக ஓடி அவைகள் எழுத்துப்பிழையின்றி ஒரு புத்தகத்தை மீண்டும் பிரதியாக்க நிகழ்தகவு என்பது  &lt;/span&gt;1 in (2 &lt;span style="font-size:78%;"&gt;x&lt;/span&gt; 10&lt;sup&gt;110&lt;/sup&gt;&lt;span style="font-size:85%;"&gt; ) ஆகும். இயேசுவைப்பற்றிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் பற்றி சொல்லும் போது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="smalltxt" bg="" style="color: rgb(0, 0, 0);" align="center" border="1" cellspacing="1" width="300"&gt;&lt;tbody&gt;&lt;tr bg=""&gt;&lt;th style="font-weight: normal;" colspan="3"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தீர்க்கதரிசனங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" colspan="2"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நபர்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;/tr&gt;  &lt;tr bg=""&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;#&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நிகழ்வு&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சாத்தியம்&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கி.பி.31 ல் நிறைவேற&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;எல்லா வருடங்களிலும் நிறைவேற&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெத்லகேமில் பிறக்க&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:2,00,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1500 &lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;5 x 10&lt;sup&gt;6&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;2&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வருவது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:100&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;30,00,000 &lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;9&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;30 வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்கப்படுவது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:1,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3,00,000 &lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;8&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="text-align: center; font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;4&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;வன்முறையற்ற தற்காப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:1,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3,00,000 &lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;8&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;5&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;யோவான் ஸ்நானகன் முன்னறிவிப்பாளராக&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:10,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;30,00,000&lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;9&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;6&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிலுவையில் அறையப்படுதல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:10,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;30,000&lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;7&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;7&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;கைகளில் ஆணி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:1,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3,00,000 &lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;8&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;  &lt;tr&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;8&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="text-align: center; font-weight: normal;" bg=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;குயவன் நிலத்தை 30 வெள்ளிக்கு அவர்கள் வாங்கியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/th&gt;&lt;th style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1:1,00,000&lt;/span&gt;&lt;/th&gt;&lt;td align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3000&lt;/span&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;span style="font-size:85%;"&gt;1 x 10&lt;sup&gt;6&lt;/sup&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt; இயேசு என்பவர்  "பெத்லெகேமில் பிறப்பார்" என்று மீகா 5:2ல் வாசிக்கிறோம்.&lt;br /&gt;பெத்லெகேம் என்பது ஒரு மிகவும் சிறிய ஊர் ஆகும். அங்கே இயேசுவின் காலத்தில் சுமார் 300-1000 பேர் இருந்தார்கள். அப்போது உலகின் ஜனத்தொகையானது சுமார் 20கோடி முதல் 30 கோடியாகும்.  அதாவது விகிதம்  என்பது சுமாராக1:2,00,000 முதல் 1:3,00,000 ஆகும்.  கி.பி. 2006ம் ஆண்டு பெத்லெகேமின் ஜனத்தொகை 29,930.  அப்போது உலகின் ஜனத்தொகை 6,564,356,742  அதாவது 1:219,324 ஒருவராக பிறக்க வாய்ப்புகள்.  (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Bethlehem"&gt;http://en.wikipedia.com/Bethlehem&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனங்களில் வெறும் 8 தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களடங்கிய நிலப்பரப்பில் ஒரு காசை இரண்டு அடி ஆழத்தில் மறைத்துவிட்டு ஒருவனின் கண்களைக் கட்டிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் விட அவன் ஒரே தடவையில் நடந்து சென்று தோன்றி எடுப்பதற்கான வாய்ப்புகள் என்று சொல்லப்படுகின்றது. இயேசுவோ முந்நூற்றுக்கும் அதிகமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியிருக்கிறார். இப்படியாக இயேசு என்ற ஒருவர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிக்கப்போன Ph.D. படித்த பல நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப்பின்பு கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர் என்பது உண்மையான செய்தியாகும்.  நீங்களும் நம்பாவிட்டால் ஒரு நூலகத்திற்கு சென்று இயேசுவைப் பற்றிய புத்தகங்களையும், பைபிளையும் வாசியுங்கள், அலசி ஆராயுங்கள்,  ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுங்கள் அதற்குள் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று நான் உங்களுக்கு தைரியமாக சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில் பாதிக்கும்  மேல் ஏற்கனவே நிறைவேறிவிட்டன.  எஞ்சியிருக்கும் தீர்க்கதரிசனங்களும் தேவன்  சொன்னதுபோலவே நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pHRP0I2SrVs&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="false"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pHRP0I2SrVs&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="false" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-1593303041740086403?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/54.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1593303041740086403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/1593303041740086403'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/54.html' title='54. பைபிள் எப்படி தேவனிடத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று சொல்லமுடியும்?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-4535100077504818732</id><published>2010-09-12T22:00:00.000-07:00</published><updated>2011-05-26T08:24:31.414-07:00</updated><title type='text'>53. ஏதேன் தோட்டம் இன்னும் அங்கே உள்ளதா இல்லை நோவாவின் நாட்களில் அழிந்ததா? விளக்கம் தரவும்.</title><content type='html'>&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;"தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று." என்று  வாசிப்பதில் நதிகளின் துவக்கம் ஏதேன் என்று தெளிவாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img src="http://www.kjvbible.org/images/Tigris-euph.png" border="0" height="450" width="450" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&amp;amp;Chapter=2&amp;amp;Verse=11-14"&gt;ஆதி 2:11-14&lt;/a&gt;. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பல ஓடைகள் ஒன்றுகூடி பின் நதியாக மாறும். இங்கே மாறாக ஏதேனிலிருந்து நான்கு நதிகள் ஆரம்பித்தன என்று பார்க்கிறோம். இதனால் சிலர் இந்த தோட்டம் என்பது ஐப்பிராத்து மற்றும் டிக்ரிஸ் நதிகள் சேரும் இடத்தில் இருக்கலாம் என்றும் சொன்னார்கள்.நதியின் இரண்டு முடிவுகளிலும் தேடி அலைந்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஐப்பிராத்து என்ற ஒரே ஒரு நதிமட்டும் அதே பெயரால் அறியப்பட்டுள்ளது. இது துருக்கியின் மலைகளில் ஆரம்பிக்கின்றது, பின்பு டிக்ரிஸ் என்ற நதியுடன் ஈராக்/குவைத் எல்லைக்கருகில் இணைந்துவிடுகின்றது. அநேகர் டிக்ரிஸ் நதிதான் இதெக்கெல் என்று சொல்கின்றனர். இது நம்மை ஏதேன் தோட்டமானது துருக்கியில் இருந்திருக்கவேண்டும் என்று யூகிக்க வைக்கின்றது. ஏனெனில் ஐப்பிராத்து நதியானது துருக்கியில் ஆரம்பிக்கின்றது. இந்த டிக்ரிஸ் நதியும் துருக்கியின் மலைகளில்தான் ஆரம்பிக்கின்றது. இவ்விரண்டு நதிகளும் இந்த மலையில்தான் ஆரம்பிக்கின்றது என்றால் மற்ற இரண்டு நதிகளும் இங்குதான் ஆரம்பிக்கவேண்டும் என்று நமக்கு தெரியும். ஆனால் வேதாகமத்தில் மற்ற இரண்டு நதிகளாகிய பைசோன், கீகோன் பற்றி அதன்பின்பு சொல்லப்படவில்லை. ஆனால் தானியேல் புத்தகத்தில் இதெக்கெல் என்னும் ஆற்றைப்பற்றி  சொல்லப்பட்டுள்ளது. (தானி 10:4). செயற்கைக் கோள்கள் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ஒரு நதி வற்றியிருப்பதைக் தொல்பொருள்துறையினர் கண்டுபிடித்தனர். இதுவே பொன்விளைந்த ஆவிலா தேசத்தில் ஓடிய பைசோன் நதி என்று கருதுகின்றனர். இந்த நதி சுமாராக கி.மு. 3500-2500 ல் வற்றியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. (&lt;a href="http://www.creationism.org/caesar/eden.htm"&gt;http://www.creationism.org/caesar/eden.htm&lt;/a&gt;). சவுதி அரேபியாவை ஆவிலா தேசம் என்றும் யூகமாக சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கீகோன் எத்தியோப்பியாவைச் சுற்றி ஓடும் என்றால் அது நைல் நதி இல்லை. எனவே வரைபடமானது இப்படியாக வரையப்பட்டு சாத்தியங்கள் அலசப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TI5wkWwp29I/AAAAAAAAAu0/CUqtVDplqAI/s1600/riverover.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 348px;" src="http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TI5wkWwp29I/AAAAAAAAAu0/CUqtVDplqAI/s400/riverover.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5516470363462687698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான்கு நதிகளும் பொதுவாக மகாச் நிலச்சரிவு என்ற அமைப்பிற்குள் உள்ளன. பூமியில் கண்டங்கள் இடம் பெயர்ந்தபோது இவைகளில் இரண்டு வற்றியும் மறைந்தும் போயிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக ஏதேன் தோட்டத்தின் அளவு பைபிளில் சொல்லப்படவில்லை. எனவே ஆறுகளின் தோற்றம் தெற்கு லெபனோன் என்றும்  குறிப்பாக எருசலேமுக்கு அருகே என்றும் சொல்லப்படுகின்றது. அதாவது தற்போதைய இஸ்ரவேல் தேசம். இஸ்ரவேல் தேசம் முழுவதும் ஏதேன் தோட்டமாக இருந்ததா என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் "தேவன் உருவாக்கிய ஏதேன் தோட்டம்" என்பது இப்போது இல்லை. நோவாவின் காலத்து ஜலப்பிரளயத்தில் இரு நதிகள் அழிந்து போனதுபோல் தோட்டமும் அழிந்து போயிருக்கவேண்டும். எசேக்கியேல் 31:18ல் சொல்லப்பட்டது போல ஏதேனின் விருட்சங்கள் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பூமியின் தாழ்விடங்களுக்கு இறக்கப்பட்டன. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;(வெள்ளம், நிலச் சரிவு)&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;. ஏதேனின் நிலைமையை தேவன் 1000 வருட ஆளுகையில் பூமியிலெங்கும் மீண்டும் கொண்டுவருவார்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-4535100077504818732?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/53.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/4535100077504818732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/4535100077504818732'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/53.html' title='53. ஏதேன் தோட்டம் இன்னும் அங்கே உள்ளதா இல்லை நோவாவின் நாட்களில் அழிந்ததா? விளக்கம் தரவும்.'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TI5wkWwp29I/AAAAAAAAAu0/CUqtVDplqAI/s72-c/riverover.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-8142800354691723685</id><published>2010-09-07T10:57:00.000-07:00</published><updated>2010-09-08T14:29:53.589-07:00</updated><title type='text'>52. "கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்"  முடிந்துவிட்டதா, இனிமேலா, எப்படி சாத்தியம்?</title><content type='html'>&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;கேள்வி:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;"கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" ஆமோஸ் 8:11&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;  இப்படியாக சொன்ன பஞ்சத்தின் காலம் இனி தான் வரும் என்கிறார்கள்  கிறிஸ்தவ மண்டல போதகர்கள். அதாவது ஒரு மொபைல் ஃபோனிலிருந்து இன்னோரு மொபைல்  ஃபோனிற்கு முழு வேதத்தை அனுப்ப ஏறக்குறைய 6 விநாடிகளே சமயம் எடுக்கிறது.  இணைய தளம் என்று எடுத்துக்கொண்டால், ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இணைய  தளத்தில் கிறிஸ்தவம் குறித்தும், வார்த்தைகளை குறித்தும் வாசிக்க  நேரிடுகிறது.  டெக்னாலஜி இவ்வுளவு முன்னேறிய பிறகு தான் வசனத்தின் பஞ்சம் ஏற்படுமா.  தீர்க்கதரிசி எந்த காலத்தை குறித்து சொல்லி யிருக்கிறார், அந்த காலம்  நிறைவேறி விட்டதா, இனிமேல் தானா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;ஆமோஸ் 8:11ல்  "&lt;span style="font-weight: bold;"&gt;கேட்க&lt;/span&gt;க் கிடையாத பஞ்சம்"- famine of &lt;span style="font-weight: bold;"&gt;hearing&lt;/span&gt;". என்று வாசிக்கிறோம்&lt;/span&gt;&lt;span class="lexTitleHb"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எபிரெய மொழியில் "Shama` - to hear"&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;என்று சொல்லப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;שמע shama` -  hearing&lt;br /&gt;דבר dabar    - the words&lt;br /&gt;יהוה Yĕhovah - of the Lord.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இங்கே கேட்க என்பதால், ஒருவர் சொல்லவேண்டும் அல்லது பேசவேண்டும் அதாவது போதிக்கவேண்டும் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக:&lt;br /&gt;சாமுவேல் சிறுவனாக இருந்த காலத்தில் (கி.மு. 1020 - 1000) "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை." என்று &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Samuel&amp;amp;Chapter=3&amp;amp;Verse=1"&gt;I சாமுவேல் 3:1&lt;/a&gt;ல் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாசிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக:&lt;br /&gt;ஆசா அரசாண்டகாலத்தில் (கி.மு. 913 - 873) &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; "இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை." &lt;/span&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=II_Chronicles&amp;amp;Chapter=15&amp;amp;Verse=3"&gt;&lt;span style="font-size:85%;"&gt;I&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;I  நாளாகமம் 15:&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=II_Chronicles&amp;amp;Chapter=15&amp;amp;Verse=3"&gt;3&lt;/a&gt;ல் வாசிக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;கடைசியாக:&lt;br /&gt;ஆமோஸ் வாழ்ந்த காலம் என்பது:  &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Amos&amp;amp;Chapter=1&amp;amp;Verse=1"&gt;ஆமோஸ் 1:1&lt;/a&gt;ல் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும்...  (கி.மு. 783 - 742). இது சாமுவேலுக்கும், ஆசாவுக்கும்  பின்பு  ஆகும். (&lt;a href="http://www.crivoice.org/israelitekings.html"&gt;http://www.crivoice.org/israelitekings.html&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே முதல் இரண்டு சம்பவத்தை வைத்து ஆமோஸ் 8:11ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று சொல்லக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;"வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது" என்றால் அவைகள் எங்கே எழுதப்பட்டுள்ளன? பரலோகத்திலே!!&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&amp;amp;Chapter=10&amp;amp;Verse=20"&gt; லூக்கா 10:20&lt;/a&gt;ல் "...உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைவுபடுத்துங்கள். எனவே அவருடைய வார்த்தையாகிய வசனம் அல்லது இந்த வேதாகமம் பூமியே ஒழிந்தாலும் எப்போதும் அழியாமல் பரலோகத்தில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமோஸ் சொல்லும் பஞ்சமானது கடைசிகாலத்தில் நடக்கவிருக்கும் சம்பவமாகும்.&lt;br /&gt;இன்றும் சீனாவில் அநேக இடங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள். எனவே இவர்கள் ஜெபிக்கவேண்டுமென்றால் மறைமுகமாக ஒரு வீட்டில் கூடி ஜெபிக்கின்றார்கள் (a.k.a. underground).  நாளுக்கு நாள் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஒருகாலத்தில் (கி.பி. 1960ல்) அமெரிக்காவானது கிறிஸ்தவர்களின் நாடாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்; காரணம் அன்று அனைவரும் சபைக்குச் செல்லவேண்டும் என்பதால்.  ஆனால் தற்போதோ சுதந்திரம் (freedom) என்ற வார்த்தையில் பறிபோகிவிட்டது. அநேக அலுவகங்களிலும் யாரும் சமயத்தைக்குறித்தும் பேசக்கூடாது என்ற கட்டளைகள் வந்துள்ளன. ஜனங்களும் பைபிளின்படி செய்யாமல், உலகம் போகிற போக்கிலே செல்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக "அந்தகாரத்தின் ஆவி"யானது  இந்த உலகை ஆக்கிரமிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=John&amp;amp;Chapter=9&amp;amp;Verse=3"&gt;யோவான் 9:3&lt;/a&gt;ல் இயேசு சொன்னார், "&lt;span style="font-weight: bold;"&gt;இதோ ஒருவனும் கிரியைச் செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது"&lt;/span&gt;.  இதன் அர்த்தம் யாரும் வெளிப்படையாக சுவிஷேசத்தை கொண்டுசெல்லமுடியாது, பிரசங்கிக்க முடியாது என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு சொன்னதைத்தான் ஆமோஸ் அப்போது தீர்க்கதரிசனமாக உரைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சபையானது இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையில் நிச்சயமாக கர்த்தருடைய வசனம் கேட்கக்கூடாத காலமாயிருக்கும். அதாவது பிரசங்கம் செய்து கேட்கக்கூடாத காலமாயிருக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-8142800354691723685?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/8142800354691723685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/8142800354691723685'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/09/blog-post.html' title='52. &quot;கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்&quot;  முடிந்துவிட்டதா, இனிமேலா, எப்படி சாத்தியம்?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-2144365250118385756</id><published>2010-08-22T21:00:00.000-07:00</published><updated>2010-11-18T17:31:42.983-08:00</updated><title type='text'>51. சங்கீதம் 93:1 பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;கேள்வி&lt;/span&gt;: சங்கீதம்  93:1, 96:10, 104:5 மற்றும் பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TG7hoA4WwWI/AAAAAAAAAuY/LlffWTqe8tc/s1600/sun_planets.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 262px;" src="http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TG7hoA4WwWI/AAAAAAAAAuY/LlffWTqe8tc/s400/sun_planets.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5507587471868084578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில்&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;[1] &lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Ecclesiastes&amp;amp;Chapter=1&amp;amp;Verse=5"&gt;பிரசங்கி 1:5&lt;/a&gt;   சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது. &lt;span&gt;The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he arose.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;இன்றும்  எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் (அனைத்து வெளிநாடுகள் உட்பட),  செய்தித்தாள்களும், வானிலை அறிக்கைகளும், இணைய தளங்களும் சூரியன் உதிக்கும்  நேரம் (Sun-rise), சூரியன் மறையும் நேரம் (Sun-set) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; என சொல்கின்றன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;.  இவர்கள் அனைவருக்கும் சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை பூமி  தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்று நன்றாகவே தெரியுமே. பின்னை ஏன்  இன்னும் அதை "Sun-set", "Sun-rise" என்று சொல்கின்றனர்?&lt;br /&gt;ஏனெனில் இது ஒரு சார்பியல் வார்த்தையாகும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;(relative term, perspective) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;.  நாம் செல்லும் இரயில் ஒரு நிலையத்தில் நிற்கும்போது, அருகிலுள்ள இரயில்  நகர ஆரம்பிக்கும்போது நமது இரயில் செல்வது போல தோன்றுகின்றதல்லவா? இரு  இரயில்கள் இருக்கும்வரைக்கும்  அவைகள் நகரும் வரைக்கும் அப்படித்தான்  தோன்றும். அதுபோலவே சூரியனும், பூமியும் உள்ளவரை சூரியன் உதிக்கிறது, மறைகிறது என்றும், விடியற் காலை  நேரம்,  சாயங்காலம், அஸ்தமிக்கும் நேரம் என்று சொல்லப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே பிரசங்கி 1:7ல் "எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும்  சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும்  திரும்பும்."  நதி எப்படி திரும்பும்? அதனால் பார்க்கமுடியுமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. கடலில் நீர் ஆவியாகி மேகமாகவும், மேகம் மழையாகவும்  பனிக்கட்டியாகவும், மழை/பனிக்கட்டி/ஊற்று  நதியாகவும்" என்ற அடிப்படையை அறிந்துகொள்ளவேண்டும்.  ஆனால் இந்த நிகழ்வுகளுக்கான முடுக்கத்தை (trigger) தேவனே  உண்டாக்குகிறார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; எரேமியா 51:16; 10:13ல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt; "அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நாளை காலை 5:54 மணிக்கு சூரியன் உதிக்கும் என்று சொன்னால் தவறல்ல. சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;[2]&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Psalms&amp;amp;Chapter=93&amp;amp;Verse=1"&gt; சங்கீதம் 93:1&lt;/a&gt;, 96:10ல் ... "ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; சங்கீதம் 104:5 ... பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்". &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;The world also is stablished, that it cannot be moved ....&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;  laid the foundations of the earth&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியைத் தேவன் சிருஷ்டித்தபோது மனிதன் இல்லை! அப்போது தேவதூதர்கள் இருந்தனர் என்றும் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர்கள் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பூமியானது சிருஷ்டிக்கப்படும்போது &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கெம்பீரித்தார்கள் என்று அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Job&amp;amp;Chapter=38&amp;amp;Verse=4-8"&gt;யோபு 38:4-8&lt;/a&gt;ல்: நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் (foundation-அஸ்திபாரம்) எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.&lt;br /&gt;"அளவு குறித்தவர் யார்?" என்னும் இந்த வசனத்திற்கு பின்னே தேவனின் ஞானம் எவ்வளவு உள்ளது!!&lt;br /&gt;NASA-இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை: பூமியானது சூரியனிலிருந்து சுமார் 14.7 கோடி கி.மீ (9.1 கோடி மைல்) தூரத்தில் உள்ளது. சூரியனின் விட்டம் (diameter) பூமியைவிட 100 மடங்கு பெரியது ஆகும்.  கோளத்தின் கன அளவு என்பது (Volume of a Sphere) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;dl&gt;&lt;dd&gt;&lt;img style="width: 65px; height: 33px;" class="tex" alt="\!V = \frac{4}{3}\pi r^3" src="http://upload.wikimedia.org/math/e/6/7/e678db0137d57dddf5d66f02a6fdf4ef.png" /&gt;&lt;/dd&gt;&lt;/dl&gt;&lt;span style="font-size:85%;"&gt;(சூரியனின்ஆரம் = 100 r) அதாவது கனஅளவு 100 x 100 x 100 =  சுமாராக 10 லட்சம் பூமிகளைக் கொள்ளும் அளவுடையது சூரியன் ஆகும்!!  சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை சுமாராக 6000 *C (செல்சியஸ்).  சூரியனிலிருந்து ஒளி புறப்பட்டு பூமிக்கு வர சுமார் 500 விநாடிகள் (அதாவது 8 நிமிடங்கள் 20 விநாடிகள்) ஆகும். பூமியானது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றது. இதில் கோடையில் வெயில் அதிகமாவும், குளிர்காலத்தில் நடுங்கும் குளிராகவும் பூமியில் வெப்பநிலை உள்ளது. (http://www.physicalgeography.net/fundamentals/6h.html)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பூமியின் எடையும் சரியான விகிதத்தில் உள்ளதால் ஈர்ப்புசக்தி என்பது துள்ளியமாக சமன் செய்யப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பூமியானது தான் சுற்றும் பாதையிலிருந்து (orbit) சற்றே விலகி வெளியே சுற்றினால் நாம் அனைவரும் குளிரில் உறைந்து இறந்துவிடுவோம். அதேபோல் சுற்றுபாதையிலிருந்து சற்றே உள்ளே போய் சுற்றினால் நாம் அனைவரும் சூரியனால் கருகி இறந்துவிடுவோம்.  நம் உடலானது வெப்பத்தை சில *C க்கு மேல்/கீழ் போனாலே தாங்கமுடிவதில்லை. குளிர்சாதனமோ, கம்பளமோ தேவைப்படுகிறது. அப்படியென்றால் பூமியானது அதன் சுற்றுப்பாதையில் எவ்வளவு நிலையாயிருக்கவேண்டும்!! இதைத்தான் சங்கீதத்தில் வாசிக்கிறோம். பூமியின் அஸ்திபாரத்தை தேவன் ஸ்தாபித்திருக்கிறார். அது அசையாது அதாவது பூமி அதிலிருந்து விலகிச் செல்லாது. வீட்டுக்கு அஸ்திபாரம் மண்ணுக்கு கீழேயாகும். ஆனால் விண்வெளியில் சுற்றும் பூமியின் அஸ்திபாரம் என்பது அதின் சுற்றுப்பாதையாகும் (orbit). அந்த அஸ்திபாரம் (ஆதாரம்) இன்றும் ஸ்திரமாயிருப்பதால்தான் நாம் இன்றும் உயிரோடு இருக்கிறோம். எனவே &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சங்கீதம்  93:1ல்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; சொல்லப்பட்டவை சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சூரியனிலிருந்து இவ்வளவு தூரம் என்று அளவு குறித்தவர் யார் என்று தேவன் அப்போது யோபைக் கேட்டபோது நிச்சயமாக யோபுக்கு இவ்வளவு ஆழமான விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-2144365250118385756?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/08/51-931-15.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/2144365250118385756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/2144365250118385756'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/08/51-931-15.html' title='51. சங்கீதம் 93:1 பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TG7hoA4WwWI/AAAAAAAAAuY/LlffWTqe8tc/s72-c/sun_planets.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-6382042459040711150</id><published>2010-08-15T23:00:00.000-07:00</published><updated>2010-11-16T11:55:28.910-08:00</updated><title type='text'>50. யெப்தா தன் மகளை பொருத்தனையின்படியே சர்வாங்க தகன பலியிட்டானா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பதில்:&lt;br /&gt;இல்லை.  சிலர் செலுத்தினான் என்று தவறாக சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னோட்டமாக: ஆபிரகாமைத் தேவன் பரீட்சித்தார் (trial). அவனிடம் ஈசாக்கை மோரியா மலையில் பலியிடு என்று சொல்லி அவன் கீழ்ப்படிகிறானா என ஒரு பரீட்சை வைக்கப்பட்டது. ஆனால்  ஒரு ஆட்டை தேவன் புதரில் தயாராக வைத்திருகிறார்.  தேவன் ஆபிரகாமை தடுத்தி நிறுத்தினார் என்று வாசிக்கிறோம். இது நமக்கு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேவன் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யெப்தாவை அப்படி செய்ய அனுமதித்திருக்கமாட்டார் என்பதற்கு மிகவும் சிறந்த ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;யெப்தாவின் மகள் சொன்னதை வாசிப்போம்:&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Judges&amp;amp;Chapter=11&amp;amp;Verse=37-40"&gt;நியாயாதிபதிகள் 11:37-40&lt;/a&gt;. "பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள். அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி, இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று."&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அவள் பலியிடப்பட்டாள் என்று எங்குமே சொல்லப்படவில்லை. யெப்தாவின் மகள் தன்னுடைய தோழிகளுடன் தன் கன்னிமைக்குறித்துதான் துக்கம்கொண்டாடினாள், தனக்கு வரப்போகும் மரணத்தை நினைத்து அல்ல என்பது அவள் அங்கே மரிக்கவில்லை என்று காட்டுகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;டேக்ஸ் என்னும் பைபிள் விளக்கவுரையில் (Dakes annotated bible) இப்படியாகச் சொல்கின்றது: "அவளுடைய வேண்டுதல் என்னவெனில் தனக்கு இரண்டுமாதம் கன்னிமை நிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகளுடன் துக்கம்கொண்டாடவேண்டும் என்பதாகும். ஏனெனில் அவள் யெப்தாவுக்கு ஒரே குமாரத்தி என்பதால் யெப்தாவின் வம்சம் அதன்பின்பு பூமியில் இருக்கப்போவதில்லை. இதினிமித்தம் தனக்கு வரப்போகும் கன்னிமைக்குறித்து  துக்கம்கொண்டாடபோனாள்;  தந்தைக்குப்பின்பு வம்சம் இல்லாமல் போவதால் அவளுடைய வாழ்வில் அது &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு பெரிய தியாகம் (sacrifice), &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இஸ்ரவேலில் ஒரு பெரிய துக்கமான செய்தி (34ம் வசனம்)." மேலும் டேக்ஸ் கூறும்போது, "அவள் தன் வாழ்நாள்முழுதும் ஒரு ராஜகுமாரத்திபோன்ற வாழ்வை விட்டு ஆசரிப்புக்கூடாரத்தில் ஒரு வேலைக்காரிபோல இருக்கவேண்டும். மீதியானியருடன் யுத்தத்துக்குப் பின்பு கன்னியர்கள் தேவனுக்கென்று இப்படியாக முழுக்க அர்ப்பணித்துகொண்டனர். (&lt;a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Numbers&amp;amp;Chapter=31&amp;amp;Verse=35-40"&gt;எண் 31:35-40&lt;/a&gt;). இப்படி அர்ப்பணித்துக்கொண்டபின்பு கூடாரத்தைவிட்டு தங்களுடைய தோழிகளுடன் வெளியே போகமுடியாது.  எனவே இதுவே  தோழிகளுடன் இரண்டுமாதம் மலைகளில் போய் வந்ததன் காரணமாக இருந்திருக்கக்கூடும்"&lt;br /&gt;&lt;br /&gt;NIV மொழிபெயர்ப்பில் "இரண்டுமாதம் தோழிகளுடன் .... எனக்கு தாருங்கள், ஏனெனில் நான் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லையே" என்று கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்நாள் முழுதும் கன்னியாக இருந்தாள் என்பதற்கு இன்னொரு சிறந்த ஆதாரம் 11:39ல் வாசிக்கிறோம். "&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாமல் இருந்தாள்." இந்த இரண்டு தனித்தனி வாக்கியங்களில் அவள் புருஷனை அறியாமல் வாழ்ந்தாள் என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Living Bible-&lt;span style="font-size:85%;"&gt;ல் "அவள் திரும்பி தன் தகப்பனிடம் வந்தாள், அவன் பொருத்தனியின் படியே அவளுக்குச் செய்தான். எனவே அவள் ஒருபோதும் திருமணம் செய்யாமல் இருந்தாள்." என கூறப்பட்டுள்ளது; அதாவது அவள் கர்த்தருடைய பங்கு என்று அர்ப்பணிக்கப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அடுத்ததாக: "இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று".&lt;br /&gt;எபிரெய பாஷையில் புலம்புவது (lament) என்னும் இடத்தில் "tanas" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது துதிப்பது அல்லது நன்றி செலுத்துவது என்று பொருள். எனவே  அவள் செய்த தியாகத்தினிமித்தம் வருடந்தோறும் துதித்தார்கள் என்று பொருள். அவள் உயிரோடு இல்லாவிட்டால் King James மொழிபெயர்ப்பில் வருடந்தோறும் சென்று அவளுடன் பேசினார்கள் (Talk with) என்று எப்படி சொல்லப்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரவேல் ஜனங்கள் பின்மாற்றம் அடைந்து சிலர் தங்களுடைய பிள்ளைகளை தீயில் எரித்தபோது தேவன் எரேமியா 7:31ல் சொல்லுகிறார்: "இப்படி நான் கட்டளையிடவும் இல்லை, என் மனதில் தோன்றியதுமில்லை". மேலும் "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொல்லிய தேவன், ஆபிரகாமை தடுத்து நிறுத்திய தேவன் அப்படிச் செய்ய  அனுமதிக்கமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;யெப்தா தேவனுக்கு விரோதமாக செய்திருந்தால் விசுவாச வீரர்களின் பட்டியலான எபிரெயர் 11ல் இடம் பெற்றிருக்கமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;யெப்தா தன் மகளை பலியாக செலுத்தவில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-6382042459040711150?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/6382042459040711150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/6382042459040711150'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/08/50.html' title='50. யெப்தா தன் மகளை பொருத்தனையின்படியே சர்வாங்க தகன பலியிட்டானா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-5871632913460876989</id><published>2010-08-10T10:00:00.000-07:00</published><updated>2010-10-28T12:11:41.753-07:00</updated><title type='text'>49. கிறிஸ்தவர்களை புதைக்காமல் எரிக்கலாமா?</title><content type='html'>&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;ஒரு பரிசுத்தவான் இறந்தபின்பு அவருடைய சரீரத்தை புதைப்பதாலோ எரிப்பதாலோ அவருடைய ஆத்துமாவிற்கு கிடைக்கும் நித்திய ஆசீர்வாதங்களில் எந்த மாற்றமும் வராது. அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் பத்திரமாகத்தான் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எப்படி ஒரு வீட்டிலிருந்து வெளியே செல்கிறோமோ அப்படித்தான் நாம் இறப்பதும். வீடு என்பது நாம் இருக்கும் இடம். வெளியேபோனாலும் நாம் நாம்தான், வீடு நாமல்ல, அது நாம் இருந்ததற்கு அடையாளம் என்பது என்னுடைய விளக்கத்தின் ஒரு பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;சடலத்தை எரிப்பது என்பது இஸ்ரவேலர் அல்லாதவர்களின் துவக்கம். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது எல்லாம் ஒரு நியாயத்தீர்ப்பு மற்றும் சாபம் என்ற விதத்தில் ஆகும். தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன சவுலின் சடலத்தை பெலிஸ்தியர்கள் (Philistines) எரித்தார்கள். (1 சாமு 31:12). மோவாபிலே மனுஷனுடைய எலும்புகள் எரிக்கப்பட்டது மிகவும் கொடூரமான குற்றம் ஆகும். (ஆமோஸ் 2:1,2).&lt;br /&gt;&lt;br /&gt;வேசிகள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று அறிவோம். (ஆதி 38:24, லேவி 21:9) ஆகான் என்பவன் சாபத்தீடானவைகளை எடுத்துக்கொண்டு போய் அவனும் இறுதியில் எரிக்கப்பட்டான். பொல்லாத ராணியாகிய யெசேபேல் கொல்லப்பட்டபோது, அவளைப் புதைக்க யாரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஏற்பாட்டில் "நீ சமாதானத்தோடே உன் பிதாக்களின் கல்லறையில் சேர்க்கப்படுவாய்" என்று தேவன் சொன்னது ஒரு விசேஷமான ஆசீர்வாதமாக எண்ணப்பட்டது. (II நாளா 34:27,28).&lt;br /&gt;&lt;br /&gt;I கொரி 15ம் அதிகாரத்தில் பவுல் ஏன் ஒரு கிறிஸ்தவன் அடக்கம்பண்ணப்படுகிறான் என்றும் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;புதிய ஏற்பாட்டிலும் இரத்தசாட்சியாய் மரித்த யோவான் ஸ்நானகன், ஸ்தேவான் என்பவர்கள் அடக்கம் பண்ணப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவானவர் வேதவாக்கியத்தின்படியே அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று வாசிக்கிறோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துவின் மரணத்தில் அவருக்கு செய்யப்பட்டதைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. பைபிளில் வாசிக்கும்போது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;சபிக்கப்பட்டவர்கள் எல்லாம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;எரிக்கப்பட்டார்கள். எனவே எரிக்காமல் புதைக்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------&lt;br /&gt;சிந்தனைக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலத்திலும் (கி.பி 1990-2010) மரித்து பின்பு உயிர்திரும்பி வந்தவர்கள் பொதுவாக சொல்லுவது என்னவெனில் எனக்கு திரும்பி இந்தபூமிக்கு வர இஷ்டமே இல்லை. இந்த சரீரத்தை விட்டு சென்றபின்பும் நான் நானாகத்தான் இருந்தேன் இந்த பூமியில் நடந்தவை ஞாபகங்கள் இருக்கின்றன. ஒளியை நோக்கி பிரயாணம் செய்தேன் அதில் தேவன் வாசம்பண்ணினார். பரலோகம் என்பது வருணிக்கமுடியாத அளவுக்கு அருமையாக உள்ளது. குருடனுக்கு சிவப்பு, நீலம்,பச்சை என்பதை எப்படி விளக்குவது கடினமோ அப்படித்தான் அங்கே பரலோகத்தில் பார்த்த உணர்ந்த அனுபவமும் விளக்குவது கடினம் என்று சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானியாயிருந்தவர் (George Rodaniah) 1976-ல் வேண்டுமென்றே கார் மோதி கொல்லப்பட்டார். அவர் சரீரம்  எரிக்கப்படவில்லை. மருத்துவமனையில் குளிர்-சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாள் கழித்து உயிர் வந்தது. பின்பு அமெரிக்கா சென்று &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;BayTown, Texas-ல் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;ஒரு போதகராக மாறிவிட்டார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;அவருடைய சாட்சியை இங்கே படிக்கலாம் (&lt;a href="http://www.near-death.com/experiences/evidence10.html"&gt;George Rodania's Testimony&lt;/a&gt;). கடந்த அக்டோபர் 12, 2004ல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய சாட்சியை நான் எப்பொழுது படித்தாலும்/பார்த்தாலும், என் மனதில் ஓடும் எண்ணங்கள் பல. உங்களையும் சிந்திக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;டிஸ்கவரி சேனலில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;(Discovery Channel) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;அந்த உண்மைச் சம்பவம் உங்களுக்கு இங்கே சான்றாக:  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ERTvj2zkJSk&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="false"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ERTvj2zkJSk&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="false" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் சில தேவனுடைய பிள்ளைகள் இறந்தபின்பு உயிரடைந்திருக்கின்றனர். YouTube-ல் தேடுங்கள் மரித்தபின்பு தேவனைச் சந்தித்த &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;மயிர்சிலுக்கும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;சம்பவங்கள்  காணலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;அநேக வீடியோக்கள் இருப்பினும் இது டிஸ்கவரி சேனலில் வந்ததால் இங்கே ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் மரித்தபின் உயிரடைந்தவர்கள் வந்து சொன்னாலும் இயேசு சொன்னதுபோல் சந்தேகப்படும் சந்தேகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;மனிதன் மரித்தபின்பு ஒன்றுமில்லாமல் போகிறான் என்று சொல்பவர்கள் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;சற்றே சிந்திக்கட்டும்.  இன்று மரித்தால் எங்கு போவாய்? பரலோகத்திற்கா, நரகத்திற்கா? தெரியவில்லையெனில் இயேசுவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். ஏனெனில் அவரே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுள்ள தேவன்.  இயேசு: என்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு இந்த உலகிற்கு வந்து மனுஷருடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கையையும் நிச்சயத்தையும் அவர் தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/145713100012504438-5871632913460876989?l=tamilbibleqanda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/08/49-burn.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5871632913460876989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/145713100012504438/posts/default/5871632913460876989'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbibleqanda.blogspot.com/2010/08/49-burn.html' title='49. கிறிஸ்தவர்களை புதைக்காமல் எரிக்கலாமா?'/><author><name>Light</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-145713100012504438.post-5717427081350960020</id><published>2010-08-02T10:00:00.001-07:00</published><updated>2010-10-18T12:55:51.521-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஞ்ஞானம்'/><title type='text'>48. டார்வினின் பரிணாமக் கொள்கை, பைபிள் பற்றி?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சார்ல்ஸ் டார்வின் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;1809-1882 வரை வாழ்ந்தவர்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; டார்வின் சொன்ன கோட்பாடுகள் சுமார் 200 வருடங்களுக்கு முன் வந்தவை. இவர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்கிலாந்தைச் சேர்ந்தவர். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நெருங்கிய சொந்தத்தில் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தன்னுடைய Cousin-யை திருமணம் செய்திருந்தார்.  இவருடைய 10 குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து நடப்பதற்கு முன்பே இறந்தன. இவர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தன்னுடைய &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; பத்து வயது மகள் இறந்தபின்பு அன்றுமுதல் இறைவன் மீது நம்பிக்கையில்லாமல் ஆலயங்களுக்கு போவதை அத்துடன்  நிறுத்திவிட்டார். ( யோபு எங்கே! இவர் எங்கே? ).  “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” - இவ்வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. எனவே மறைந்துவிட்ட உயிரினங்களின் எலும்புகளையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும்கொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். இவ்வாய்வின் விளைவாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை”முடிவுக்கு அவர் வர நேர்ந்தது. இவருடைய பரிணாம கோட்பாடுகள் (Theory of Evolution) இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இவர் ஒரு மரம்போல பல கிளைகளுடன் வரைபடம் வரைந்து இதிலிருந்து இது வந்தது என சொல்லியிருக்கிறார். இவ்விரண்டு உயிரினத்திற்கும் இடையிலே ஒரு உயிரினமும் காணப்படும் என்று சொல்லியிருக்கிறார். இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பவை "&lt;span style="font-weight: bold;"&gt;Missing Links-தொலைந்த/விடுபட்ட இணைப்புகள்&lt;/span&gt;" என பட்டியல் பெரிதாகிக்கொண்டேதான் போகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று வர கோடி வருடங்கள் ஆயின என்று சொல்கின்றன இவரது கோட்பாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" src="http://2.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TFDXs--AsaI/AAAAAAAAAuA/mQVDMmHhbos/s1600/darwin.png" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவரது கொள்கையைப் பின்பற்றியவர்கள் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதற்கு பின் இதில் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரண்டு பிரிவுகளைக் கொண்டுவந்தார்கள். ஒன்று Micro-evolution&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;,  மற்றொன்று Macro-evolution&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;.  ஒரு கூட்டத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கு கால அளவில் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு வளர்ச்சியில் குட்டை அல்லது நிறம் மாற்றம் வருவது மைக்ரோ பரிணாமம். உணவு பழக்கத்தை வைத்து மனித இனம் குட்டையாகவும், வளர்ச்சியாகவும் ஆகமுடியும் என்று பலரும் அறிந்த உண்மையை இதற்கு சான்றாக கொண்டுவருகின்றனர். மேலும் ரோஜா பூவில் மாற்றங்களைக் கொண்டுவந்து பல புதிய ரோஜாவாக கொண்டுவருவதும் இந்த மைக்ரோ பரிணாமத்தில் அடங்கும்.&lt;br /&gt;மூதாதையரைத் தேடும் படலம், உதாரணமாக குரங்கிலிருந்து மனிதனைக் கொண்டுவர முயற்சிப்பது மேக்ரோ பரிணாமம்.&lt;br /&gt;&lt;/span&gt;(Microevolution is used to refer to changes in the gene pool of a  population over time which result in relatively small changes to the  organisms in the population — changes which would not result in the  newer organisms being considered as different species. Examples of such  microevolutionary changes would include a change in a species’ coloring  or size.&lt;br /&gt;Macroevolution, in contrast, is used to refer to changes in  organisms which are significant enough that, over time, the newer  organisms would be considered an entirely new species. In other words,  the new organisms would be unable to mate with their ancestors, assuming  we were able to bring them together).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;Genome is the entirety of an organism's hereditary information. It is encoded either in DNA or, for many types of virus, in RNA.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தற்போது விஞ்ஞானம் மனிதன் குரங்குகளிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் மனிதனுக்கும் குரங்குக்கும் (Chimps) பொதுவாக 48.6% மரபு மூலக்கூறுகள் (genome) இருப்பினும் 4.8% குரோமோசோம்களே பொதுவாக உள்ளன;  ரேடியோலாரியனில் குரோமோசோம் எண்ணிக்கை 800, மனிதனுக்கு 46, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;குரங்குக்கு 48 என்பதால் கணக்கு இடிக்கிறது. (http://en.wikipedia.org/wiki/Radiolarian, http://www.apologeticspress.org/articles/2070) . எனவே விஞ்ஞானத்தின் வளர்ச்சி உலகில் பல கோட்பாடுகளை தவிடுபொடியாக்கிக் கொண்டுதான் வருகின்றன. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமீபத்தில் இவர்கள் தங்களது கோட்பாட்டில் ஒரு மாற்று கருத்தை தெரிவித்தனர். குரங்கும், மனிதனும் ஒரு மரத்தின் இருகிளைகள்  போல என்றும், இவ்விரண்டிற்கும் பொதுவான மூதாதையர் இருக்கவேண்டும் என்றனர். எனவே அந்த மூதாதையரைத் தேடினர். தற்போது லெமோர் (Lemur) என்ற ஒரு மிருகத்துக்கு  தாவி  "விடுபட்ட இணைப்பினை" கண்டுபிடித்தோம் என்று  சொல்கின்றனர், ஆனால் அதிலும் சிக்கல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;யாரேனும் விஞ்ஞானம் தவறு என்று கூறுவது கண்மூடித்தனமாகும். விஞ்ஞானமும் அதின் கண்டுபிடிப்புகளும் முக்கியம். ஏனெனில் இவைகள் உண்மையை  (truth) வெளியே கொண்டுவரும். மனிதன் இறந்தபின் அவன் ஆத்துமா செல்லும் அந்த பாதையை (Another Dimension) விஞ்ஞானம் கண்டுபிடிக்குமா? &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிணாமக் கொள்கையும்  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பைபிளில் சொல்லப்பட்டவையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஒரு காலத்தில் பைபிளில் உலகம் உருண்டை என்று சொல்லப்பட்டதை கேலி செய்து கொண்டிருந்தனர். விஞ்ஞானமானது உலகம் உருண்டை என கண்டுபிடித்தபின்பு ... அவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"தேவன் இல்லையென்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்கிறான்" என்றும்,  "துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே" என்றும் பைபிளில் வாசிக்கிறோம். ஒரு கார் செய்வதில் எத்தனை ஞானம் தேவைப்படுகின்றது, அதில் எத்தனை பாகங்கள் உள்ளன! இந்தக்காரை ஒருவரும் உண்டாக்கவில்லை,  சும்மா முளைத்து வந்தது  என்று சொன்னால் காரை உண்டாக்கிய நிறுவனம் அவனைப் பார்த்து என்ன சொல்லும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எறும்பு நாம் உறுவாக்கியுள்ள கம்யூட்டரை புரிந்துகொள்ளுமா? அதிலுள்ள mother board, number of layers in the PCB, components such as resistors, capacitors, LEDs, transformers, hard drive,  USB, the monitor screen, the colors, contrast, CD/DVD drives, mouse, keyboards, wireless modems, speakers, the CPU and its thousands of registers that compute at binary level inside, and how it was fabricated to operate, the clock crystals......and overall  the complicated software or the operating system, the BIOS, and the RAM and the drivers that runs on it...என நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படியானால் மனிதர்களாகிய நாம் எவ்வளவு விசேஷித்தவர்கள்!&lt;br /&gt;For I am fearfully and wonderfully made: marvellous are thy works;  என்று பைபிளில் வாசிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பரிணாம கொள்கைவாதிகளிடம் நாம் காணும் இவைகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு, இது அதிலிருந்து  வந்தது என்பர்....சரி அது எங்கிருந்து வந்தது? ..... அது எங்கிருந்து வந்தது என்ற தொடர் கேள்விக்கு இதுவரை  "பதில் தெரியவில்லை" என்று தான் சொல்கின்றனர். இவர்கள்: தேவனை உண்டாக்கியது யார் என்று சிறுபிள்ளைபோல் கேள்வி கேட்கின்றனர்.  (&lt;a href="http://tamilbibleqanda.blogspot.com/2009/11/17-what-is-name-of-god.html"&gt;http://tamilbibleqanda.blogspot.com/2009/11/17-what-is-name-of-god.html&lt;/a&gt;).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TFcWI_HjKVI/AAAAAAAAAuI/K_MMpXFcWdY/s1600/dwrong.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_MaRW6i7xm2A/TFcWI_HjKVI/AAAAAAAAAuI/K_MMpXFcWdY/s400/dwrong.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5500889813494212946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;ISBN-10:&lt;/b&gt; 0374288798&lt;br /&gt;&lt;b&gt;ISBN-13:&lt;/b&gt; 978-0374288792&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;span style="font-size:85%;"&gt;"டார்வின்  தவறாக பெற்றவைகள் (அறிந்தது) என்ன?" இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதிய ஜெர்ரி ஃபோடோர் என்பவர்  ஒரு "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையைச் சேர்ந்தவர். இவர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரட்ஜெர்ஸ் பற்கலைக்கழகத்திலிருந்து தத்துவம் மற்றும் எண்ணங்களின் நிகழ்வு   &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அறிவியல் (cognitive science) &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பேராசிரியரு&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ம்,   மாசிமோ பியாடெல்லி-பால்மாரினி என்பவர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அரிசோனா பற்கலைக்  கழகத்திலிருந்து வந்த ஒரு எண்ணங்களின் நிகழ்வு என்னும் பேராசிரியரு&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாவார்.  எனவே இப்படியாக இவர்களுக்குள்ளேயே கருத்து  வேறுபாடுகள் உள்ளன. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.salon.com/books/feature/2010/02/22/what_darwin_got_wrong_jerry_fodor"&gt;(http://www.salon.com/books/feature/2010/02/22/what_darwin_got_wrong_jerry_fodor)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெயர்பெற்ற பரிணாமக்கொள்கைவாதி(ரிச்சர்ட் டாக்கின்ஸ்)யிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் (வீடியோவில்):&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/MNLvXllvvsA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zaKryi3605g&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலகின் உற்பத்தி நிறுவனங்கள், விவசாயங்கள் இன்றும்:&lt;br /&gt;நெல்லை விதைத்து நெல்லை அறுக்கின்றனர். ஆடுகளிலிருந்து ஆடுகளும்,  மீன்களிலிருந்து மீன்களும், பறவைகளிலிருந்து பறவைகளும், மனிதர்களிலிருந்து  மனிதர்களுமே என தெளிவாய் உணர்த்துகின்றன. காலப்போக்கில் எல்லாம் மாறிமாறிவந்தால் உலகில் ஒரு இடத்திலிருந்தாவது நொடிப்பொழுதில் செய்தி வந்திருக்குமே இந்த நவீன உலகத்தில்!&lt;br /&gt;மாற்றத்துக்குஒரு கோடி வருடங்கள் ஆகும் என்றால்... கோடான கோடி உயிரினங்கள்  வாழும் இந்த பூமியில் நேற்றோடு ஒரு உயிரினத்துக்கு ஒருகோடி வருடம்  முடிந்திருக்க வாய்ப்பு உண்டு;  எனவே அங்கே அந்த மாற்றத்தைக்  கண்டுபிடித்திருக்க வேண்டுமே என்ற வாதமும் வலுக்கிறது. தற்போதைய பரிணாமக் கொள்கையின் தந்
