Thursday, January 4, 2018

79. எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டவைதானே, நமது சுய இஷ்டம், சுய முடிவுக்கு இடமில்லை அல்லவா?

கேள்வி: நான் ஒரு அறிவியல் விஞ்ஞானி. கடவுள் இல்லை என்று சொல்பவன். எப்படி நமக்கு சுயஇஷ்டம் உண்டு என்று சொல்லமுடியும்? தேவனுக்கு எல்லாம் தெரியுமென்றால், அவருக்கு காரியங்களின் எல்லா விளைவுகளும் முன்பே தெரியுமே. நாம் அவரை ஆச்சரியப்படவைக்க ஒரு முடிவும் செய்ய முடியாதே. அப்படியானால் நியாயத்தீர்ப்பு என்பது அநீதியானது அல்லவா? நான் எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டவை, நமது சுய இஷ்டம் இல்லை என்று சொல்பவன்.

பதில்:

 


பகுதி I [ரவி சகரியாஸ் என்பவரின் கேள்வி பதில் நிகழ்விலிருந்து பெரும்பகுதி]

 determinism  Vs. free-will (முன்தீர்மானிப்பு Vs. சுயசித்தம்)  என்பது கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. நீங்கள் பைபிளில் நம்பிக்கை அல்லாதவர். உங்களுக்கு கிறிஸ்தவம் சுயசித்தம் பற்றி சொல்கிறது என்று தெரியும், எனவே அதற்குள்ளாக நாம் செல்லவேண்டாம். உங்களுக்கு தெரிந்தவற்றிலிருந்தே சொல்கிறேன்.

ஜான் போல்கிங்ஹோம் (John Polkinghome) என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  இயற்பியல் விஞ்ஞானியாயிருக்கிறார் (physicist at Cambridge University). இவர் உலக அளவில்  மீச்சிறுஅளக்கை விஞ்ஞானிகளில் முன்னோடியான ஒருவர்.  நீங்கள் சொன்ன முடிவுக்கு எதிர்முடிவுக்கு இவர் வந்தார். இவரை நாம் தவறாக எடைபோட இயலாது. இவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட தகவல்கள் தவறு என்றோ அல்லது இவருக்கு அறிவு போதாது என்றோ நீங்கள்தான் முடிவுக்கு வரவேண்டும்.

டேவிட் பெர்லின்ஸ்கி (David Berlinski) என்பவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? கடவுள் (இருக்கிறாரோ இல்லையோ தெரியாது என) நடுத்தர நம்பிக்கை (Agnostic) கொண்டவர். முன்னோடி இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் டாக்கின்ஸ் என்பவர் "God's delusion" என்ற புத்தகத்தை எழுதியபின்பு, இவர் "Devil's delusion" என்ற புத்தகத்தை எழுதினார். அதில் "விஞ்ஞான பொருள்சார் உலகப்பார்வை" கொண்டவர்களைக்குறித்து இப்படியாகச் சொல்கிறார்:

o இவர்களில் யாராவது கடவுள் இல்லை என்பதற்கு நிரூபணங்கள் கொடுத்ததுண்டா? பதில் சற்றும் அருகில் வரவில்லை.

o மீச்சிறுஅளக்கை அண்டவியல்(Quantum Cosmology), இந்த அண்டம் எப்படி வந்தது என்றோ, அது ஏன் இருக்கிறது என்றோ விளக்கியது உண்டா?  சற்றும் அருகில் வரவில்லை.

o நமது அறிவியல் ஏன் நமது அண்டம் இப்படி மிகச்சீராக இசைவிணைக்கப்பட்டு உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது என்பதை விளக்கியதுண்டா? சற்றும் அருகில் வரவில்லை.

o இயற்பியல் விஞ்ஞானிகளும், உயிரியல் விஞ்ஞானிகளும், மதம் சார்ந்தது அல்ல என்கிற எந்த விஷயத்தையும் நம்ப தயாராக இருக்கிறார்களா? அருகில் வந்திருக்கின்றனர்.

o பகுத்தறிவுவாதமும் தார்மீக சிந்தனைகளும் (rationalism & moral thoughts) நமக்கு எது நல்லது, எது சரி மற்றும் நீதியானது என்று அறிந்துகொள்ளும் தன்மையைக் கொடுத்துள்ளனவா? சற்றும் அருகில் வரவில்லை.

o மதச்சார்பின்மை (secularism) இந்த 20ம் நூற்றாண்டில் நன்மைக்கு விசையாக அமைந்ததா? சற்று அருகிலுக்கும் அருகேகூட வரவில்லை.

o விஞ்ஞானத்தில் ஒரு குறுகிய மற்றும் ஒடுக்கும் வைதீகம் (orthodoxy) உள்ளதா? சற்றே அருகில் வந்திருக்கின்றனர்.

o விஞ்ஞானத்தில் ஏதாகிலும் அல்லது அவர்களது தத்துவங்களில் ஏதாகிலும் மத நம்பிக்கையாயிருப்பது பகுத்தறிவற்றது என்று விளம்பியது உண்டா? பூங்காவின் எல்லைகள் தூரம்வரை எங்கும் அருகில் வரவில்லை.

o விஞ்ஞான
நாத்திகம் (scientific atheism) என்பது அறிவுசம்பந்த பயிற்சியில் அற்பமாக மரியாதையின்றி நடந்துகொள்கிறதா? நெத்தியடியாக ஆம்.

விஞ்ஞானம் மற்றும் பொருள்வாத உலகப்பார்வையானது
(scientific and materialistic worldview) நீங்கள் சொன்ன அதே காரியத்தைத்தான் சொல்லும், அதே முடிவுக்குத்தான் வரும்.  நீங்கள் முன்தீர்மானிப்பு மற்றும் சுயசித்தம் ஆகிய இரண்டுக்கும் இடையில் தவறான இடத்தில் உள்ளதால்  சந்தேகம் எழும்பியுள்ளது. 1990-ம் வருடம் கேம்பிரிட்ஜ், லேடி மிட்சல் வளாகத்தில் (Lady Mitchell hall, Cambridge) ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (Stephen Hawkins) என்பவர் பேசிய பேச்சைக் கேட்டேன். இவர் யாரென்று உலகுக்கு சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு தெரிந்தபடி அவரால் பேசமுடியாது, ஆனால் ஒன்றிணைப்பிகளைக்கொண்டு (synthesizers) அவர் பேசினார். அந்த பேச்சின் தலைப்பு “முன் தீர்மானம் மற்றும் தனிச்சுதந்தரம்”. அவர் என்ன சொன்னார் தெரியுமா? விஞ்ஞான பொருள்வாதத்துவத்தின் துயரம் என்னவெனில் நாம் சுதந்தரமற்றவர்கள், நாம் முழுதுமாக முன்தீர்மானிக்கப்பட்டவர்கள் (அதாவது நாம் இப்படித்தான் நடப்போம் இருப்போம் பேசுவோம் என்று நமக்குள் குறியீடுகள் ஏற்கனவே உள்ளன). இதைத்தான் அவர் உங்களுக்கு சாதகமாக பதிலாக சொன்னார். நீங்கள் வேண்டுமென்றால் இணையதளத்தில் Lady Mitchell hall, Cambridge, Stephen Hawkins என்று தேடிப்பாருங்கள். அவர் பேச்சின் முடிவில் "எனக்குள்ள ஒரேஒரு தப்பித்தல் என்னவெனில், என்னைக்குறித்து என்ன முன்தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று எனக்கு தெரியாது. எனவே நான் அப்படி முன்தீர்மானிக்கப்பட்டவனாக இராமல் இருப்பவானாக இருக்கலாம்" என்று சொல்லி ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

இதுவே பெர்லின்ஸ்கியின் பிரச்சனை, இதுவே ஸ்டீவன் பிங்கரின் பிரச்சனை,  டாக்கின்ஸ் என்பவரும்  தாங்கள் முன்தீர்மானம்/திட்டம்/குறியீடு கொண்ட உயிரினங்கள் என்று நம்புகிறார்.

எனக்கு உங்களிடம் ஒருகேள்வி: நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க உங்களுக்
கு சுதந்திரம் இருந்ததா? அல்லது தாங்கள் ஒரு கணினிபோல் (முன்கூட்டியே-குறியிடப்பட்டதுபோல்) பேசுகிறீர்களா? நீங்கள் ஆம் நான் முன்தீர்மானிக்கப்பட்டவனாக கேள்வி கேட்கிறேன் என்று நீங்கள் சொல்லும்போது, நீங்கள் கூறுவது உண்மையான கூற்றா? என்ற கேள்விக்கு பதில் "ஆம்" என்று சொன்னாலும், "இல்லை" என்று சொன்னாலும் நீங்கள் உள்ளுணர்வு-அடிமைத்தனத்தின்று (bondage of subjectivity) மேலே வந்துவிட்டீர்கள். முன்தீர்மானம் என்ற கோட்பாடுக்கு மேலாக எழுந்துவிடுகிறீர்கள்! 

பகுதி II

பைபிளில், நமக்கு சுயசித்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட நாம் அநேக ஆதாரங்களை வைக்க முடியும். நோவாவின் நாட்களில் பூமியில் பாவம் பெருகியபோது தேவன் மனிதர்களை உண்டாக்கியதற்காக வருந்தினார் என்றால், இங்கே எல்லாம் முன்தீர்மானிக்கப்பட்டது என்று கூறுவது அர்த்தமற்றது. நமக்கு சுயசித்தம் இல்லாவிட்டால் இயேசு சிலுவையில் பாவிகளாகிய நமக்கு மரித்தார் என்பதும் அர்த்தமற்றது. நமக்கு சுயசித்தம் இல்லாவிட்டால் நியாயத்தீர்ப்புநாளும் அர்த்தமற்றது. பல இடங்களில் தேவன் இதைச் செய்யாதீர்கள் என்று சொல்லியும், அவர்களோ அவருடைய வழியில் நடக்கவில்லை என்று பல இடங்களில் பார்க்கிறோம். ஜனங்கள் கீழ்ப்படியாமல்போய் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு உதாரணமாக இஸ்ரவேல் ஜனங்களின் வரலாற்றையே சொல்லலாம். நாம் எடுக்கும் முடிவுகளில் தேவன் பொதுவாக குறுக்கிடுவதில்லை. முழுவாழ்க்கையும் அதின் ஒவ்வொரு அசைவுகளும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்றால் தேவன் அவர்கள் பாவம்செய்யும்போது கோபப்படுவதற்கு அர்த்தமேயில்லை. நம்மேல்  கொண்ட அன்பினிமித்தம் நம்மை நல்வழியில் நடத்த அப்படிச் செய்கிறார். உபாகமம் 30:19,20-ல் "நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு...அவரைப் பற்றிக்கொள்வாயாக" என்று வாசிக்கிறோம். இங்கே அவர் நம்மைத்தான் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். எனவே இங்கே முன்தீர்மானம் அல்ல என்று தெளிவாக காணலாம்.

நீங்கள் நாம் எல்லாம் முன்குறியீடு இடப்பட்டு, இயந்திரம்/கணினி போல் செயல்படுகிறோம் என்ற முடிவுக்கு வரும்போது, நீங்கள் கடவுள் இல்லை என்று ஆபத்தான முடிவுக்கு (மறைமுகமாக) வருகிறீர்கள். ஏனெனில் கடவுள் நமக்கு தனிச்சுதந்திரம்/சுயசித்தம் கொடுத்திருக்கிறார். நீங்கள் விஞ்ஞானத்தின்படி தற்செயலாக தோன்றியவர், முன்தீர்மானிக்கப்பட்டவர் என்றால், அதே விஞ்ஞானத்தின்படி உங்களுக்கு இந்த உலகில் எந்த மதிப்பும் (value) இல்லை . ஏனெனில் நீங்கள் வெறும் அணுக்களின் கோர்வை என்று அந்த கோட்பாடு சொல்கிறது. ஆனால், வேதத்தின்படி (பைபிளின்படி) நீங்கள் விலையேறப்பட்டவர். தேவன் உங்களை நேசிக்கிறார். உங்களைத் தம்மிடம் அழைக்கிறார். அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். அவரை ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் தம்முடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுக்கிறார்.  வேறு தெய்வங்கள் நீங்கள் அவைகளுக்கு அடிமை என்று போதிக்கலாம். ஆனால் இயேசு: தாம் ஒரு தகப்பனாகவும், நாம் அவரது பிள்ளைகளாகவும் இருக்கிறோம் என்கிறார்.  அவர் அன்பு மிகுந்தவராக இருக்கிறார். ஜனங்களுக்கு  சுயசித்தத்தையும் கொடுத்திருக்கிறார் என்று அறிகிறோம். 

நாம்தான் நமது செயல்களுக்கும், முடிவுக்கும் பொறுப்பு. எனவேதான் நாம் மரித்தபின்பு தேவனுக்கு நமது வாழ்க்கையைக்குறித்து நியாயத்தீர்ப்பு நாளன்று கணக்குகொடுக்கவேண்டும்.  இயேசுவைப் பின்பற்றினால் நீங்கள் நியாயத்தீர்ப்பைக்குறித்து பயப்படத்தேவையில்லை. நரகத்தைக்குறித்தும் பயப்படத்தேவையில்லை.

சம்பந்தபட்டவை கேள்வி பதில் 30