Monday, December 27, 2010

66. எப்படி, எப்போது உபவாசிப்பது?

கேள்வி: உபவாசம் எப்படி இருப்பதென்று விளக்கம் கொடுங்கள். எப்படி, எப்போது உபவாசிப்பது? காலை 6:00 மணிக்கு சூரியன் உதிக்கும் முன்பு சாப்பிடலாமா? புனித நாள்கள் எவை (செவ்வாய், வெள்ளி...)? 40 நாள் எப்படி உபவாசிப்பது?

பதில்:
உபவாசம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆவிக்குரிய ஒழுங்குகளில் மிகவும் முக்கியமான ஒழுங்கு ஆகும். உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமது ஜீவியத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

[1] ஏன் உபவாசம் இருக்கவேண்டும்?
-- பழைய ஏற்பாட்டு காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும் உபவாசமானது தேவையான ஒரு ஒழுங்கு ஆகும். உதாரணமாக மோசே இரண்டுமுறை 40 நாட்கள் உபவாசத்துடன் இருந்தான். இயேசுவும் 40 நாட்கள் உபவாசம் இருந்தார். மேலும் இயேசு சொல்லும்போது: "நீங்கள் உபவாசிக்கும்போது" என்று சொல்கிறார். "நீங்கள் உபவாசித்தால்" என்று சொல்லவில்லை!

-- இழந்துபோன "ஆதி அன்பை" மீண்டும் திரும்ப பெற உபவாச ஜெபம் செய்தால், கிறிஸ்துவுடன் நெருங்கிச் சேர இயலும்.

-- தேவனுடைய பார்வையில் நம்மை தாழ்த்தும்படி:

எஸ்றா 8:21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்...அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
தாவீது சொல்லும்போது, "நான் உபவாசத்தினால் தாழ்த்தினேன்" என்கிறார். தானியேல் 9:3ல் "நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி" என்பதில் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தும்படியும், தேவனைத் தேடவும் உபவாசிக்கிறோம்.

-- தேவன் நம்மை எச்சரிக்கும்போது:
I இராஜாக்கள் 21:27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
II நாளாகமம் 20:3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.

-- உபவாசம் என்பது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய அல்லது நம்முடைய ஆவிக்குரிய நிலவரத்தை நமக்கு உணர்த்தி, நாம் மனமுடைந்து, மனந்திரும்பி ஒரு புதிய ஜீவியம் செய்ய உதவுகிறது. யோவேல் 2:12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார் யோனா 3:5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

-- பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் புதுப்பிப்பார். தேவனுடைய வார்த்தை மிகவும் அர்த்தமுள்ளதாக உங்களுக்கு காணப்படும்.

-- உபவாசம் நமது ஜெபஜீவியத்தை மேலும் கட்டி எழுப்பவும் உயர்த்தவும் ஒரு அனுபவமாகும்.

-- உங்களை எழுப்புதல் அடையச் செய்து, மற்றவர்களையும் உங்கள் மூலமாக எழுப்புதல் அடையச் செய்ய ஏதுவாக சில சமயங்களில் இருக்கும்.

-- II நாளா 7:14ல் சொல்லப்பட்டுள்ளபடி செய்யவேண்டுமென்றால் உபவாசம் இருந்து ஜெபிப்பதின்மூலமே ஆகும்:
"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."

-- தேவனுடைய சமுகத்தை அதிகமாக தேட உங்களுக்கு உதவும். உங்களுடைய குறைகளையும், மறைந்து காணப்படும் பாவங்களையும் கண்டறிய உதவியாக இருக்கும்.

--
மகா பெரிய துக்கம், கஷ்டம் வரும்போது:
எஸ்தர் 4:3 "ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.


-- பிசாசுகளை விரட்ட:
மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.


-- கர்த்தருடைய ஊழியர்களை எடுக்கும் முன்பு, விசேஷமான நிகழ்வு:
அப்போஸ்தலர் 14:23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
அப்போஸ்தலர் 13:3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

-- பழக்க வழக்கமான உபவாசம்:
"
லூக்கா 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."

-- உபவாச ஜெபத்திற்கு ஒரு பதில் உண்டு:அப்போஸ்தலர் 10:30 "அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில்(3pm) வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த ஒரு மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என்றான்"

[2]
கீழே சொல்லப்பட்டவர்கள் உபவாசம் இருப்பதை தவிர்க்கவேண்டும்:
-- நரம்பு தளர்ச்சியால் உடல் நடுக்கம், பசியால் சரீரத்தில் குணங்கள் மாறுபடுபவர்கள்.

-- சரீரத்தில் மிகவும் மெலிந்து காணப்படுபவர்கள் .
-- இரத்த சோகை அல்லது உடலில் இரத்தம் குறைவாயிருப்பவர்கள் (anemic)
-- வயிற்றுப்புண் (ulcer), இரத்தவியாதி, மாரடைப்பு, கட்டிகள்(tumor) மற்ற இருதய வியாதியுள்ளவர்கள்.

-- நீரிழிவு (diabetic) நோயினால் இன்சுலின் எடுக்கும் அளவில் உள்ளவர்கள்.
-- சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், நுரையீரல், இருதயம் மற்றும் முக்கியமான சரீரபாகங்களில் கோளாறு உள்ளவர்கள்.
-- சர்க்கரை வியாதியுள்ளவர்கள், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள்
-- பால்கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிப்பெண்கள்.
-- காய்ச்சல் உடையவர்கள், படுக்கையில் இருக்குமளவுக்கு வியாதியுடையவர்கள்.


[3] எப்படி, எவ்வளவு நேரம், காலம் இருப்பது?

-- இயேசு எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறார்: மத்தேயு 6:16 "நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு". 
-- எரேமியா 36:6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
==> கர்த்தருடைய வசனம் அன்று வாசிக்கவேண்டும்.

-- II சாமுவேல் 1:12 சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
-- நியாயாதிபதிகள் 20:26 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
==> இங்கே சாயங்காலம் மட்டும் உபவாசித்து என்று வாசிக்கிறோம்.


I சாமுவேல் 31:13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
I நாளாகமம் 10:12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
==> இங்கே ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.

தானியேல் 21 நாள் என்றும், மோசே 40 நாள், இயேசு 40 நாள் என்றும் வாசிக்கிறோம் இவைகள் விசேஷமான உபவாசங்கள்.


எனவே:
[அ] வழக்கமாக (வாரந்தோறும்) உபவாசம் இருக்கும்போது:
1- சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் குடிக்கலாம். (இட்லி மட்டும் சாப்பிடுவேன், கறி, மீன் விலக்கி வைப்பேன் என்பது உபவாசம் அல்ல).

2- அன்று சரீரத்தில் சுத்தமாக இருக்கவேண்டும், குளியுங்கள் அல்லது முகம் கழுவுங்கள்.
3- மனைவியினிடத்தில் சேராதிருங்கள். (யாத் 19:15) சரீரத்திற்கு மகிழ்வூட்டும் காரியங்களில் ஈடுபடாதிருங்கள் (விளையாட்டுகள், டி.வி., சுற்றுலா...).
4- சாயங்காலம் வரை உபவாசம் இருக்கலாம் (மலை 6-மணிக்கு மேல் சாப்பிடலாம்) . அதேபோல் காலை 6-மணிக்கு முன் சாப்பிடவேண்டாம். முந்தின நாள் இரவு உணவு கடைசியாக இருக்கட்டும். சிறுவர் சிறுமியர் காலை ஒருவேளை உபவாசம் இருந்தால் போதும்.
5- வேலை ஏதும் செய்யக்கூடாது. ஜெபிக்கவேண்டும். ஜெபிக்காமல் போனால் பட்டினி இருப்பதற்கு சமம். ஜெபிக்கும்போது நம்முடைய குறைகளை ஆராய்ந்துபார்த்து அறிக்கைசெய்யவேண்டும். இப்படிசெய்வதின்மூலம் தேவனிடம் கிட்டிச்சேருகிறோம். இதுவே உபவாசம் இருப்பதின் முக்கிய நோக்கமாகும். "நான் உபவாசம் இருக்கிறேன். எனவே தேவன் கண்டிப்பாக கேட்பார்" என்ற எண்ணம் தவறு. அது தற்பெருமை. நம்மைத் தாழ்த்தும் காரியத்தில் அப்படிப்பட்ட எண்ணம் கூடாது. அப்படி எண்ணம் இருப்பின் ஜெபத்திற்கு பதில் கிடைக்காது. பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.
6- வேதம் வாசிக்கவேண்டும்.


[ஆ] துக்கம் அல்லது கஷ்டமான சமயத்தில்:
-- புசியாமலும், குடியாமலும் ஒருநாள் இருங்கள். அதிகபட்சம் மூன்று நாள் வரை குடிக்காமல் உபவாசம் இருக்கலாம் (எச்சில் கூட விழுங்காமல்).
-- அழுது ஜெபம் பண்ணுங்கள்.
-- மேலே உள்ள [அ] 2-6 பின்பற்றுங்கள்.


[இ] சில வகையான பிசாசை விரட்ட உபவாசம் இருந்து ஜெபிக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்.
அப்படி ஜெபிக்கும்போது நம்முடைய விசுவாசம் கூடும் என்று ஒரு போதகர் சொன்னார். மூன்று நாள் உபவாசம் இருந்து ஜெபித்தபின்பு தேவன் அவரை சாப்பிடு என்றாராம். பின்பு அவர் சாப்பிட்டபின்பு, அன்று இரவு ஒரு வெளிப்பிரசங்கம் செய்துமுடித்தபின், பிசாசு பிடித்த ஒரு பெண் கொண்டுவரப்பட்டாள். அவளுக்குள் இருந்த பிசாசை விரட்டும்போது அந்த பிசாசு: "இந்த வகை பிசாசு உபவாசத்தினாலன்றி போகாது" என்று சொன்னதாம். அப்போது போதகருக்கு ஒரு வினாடி தூக்கிவாரிபோட்டதுபோல் இருந்ததாம். ஆனால், தேவன்தானே என்னை சாப்பிடு என்றார் என்று புரிந்துகொண்டு, பிசாசை நோக்கி: "நீ பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறாய்; இயேசுவின் நாமத்தினாலே புறப்பட்டுப்போ" என்று அதிகாரமுடன் விரட்டினேன், போய்விட்டது என்றார். எனவே பிசாசு விரட்ட உபவாசத்தைவிட விசுவாசம் முக்கியம் என்றார்.

[ஈ] தேவன் சில சமயம் உங்களை 21 நாள் அல்லது 40 நாள் என்று உபவாசம் இருக்கச் சொல்லுவார். (அப்போது இரவுகளில் கூழ் அல்லது கஞ்சி போன்று குடித்துக்கொள்ளலாம். பகலில் தண்ணீர், காபி, டீ குடிக்கலாம். இது என்னுடைய அறிவுரை. தேவன் உங்களுக்கு விசேஷமான கட்டளை கொடுத்திருப்பின் அது இவைகள் எல்லாவற்றையும் தாண்டும்.) ஏனெனில் தேவன் உங்களுக்கு ஒரு விசேஷமான வரம் தருவார். உதாரணமாக பிசாசுகளைதுரத்தும் வரம், வியாதியஸ்தர்களை சுகமாக்கும் வரம், தீர்க்கதரிசன வரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மிக மிக முக்கியமாக நீங்கள் நீண்ட நாள் உபவாசம் இருந்து முடித்தபின்பு மிகப்பெரிய அளவில் சோதனை வரும். உடனே வராவிட்டாலும ஓரிரு மாதங்களுக்குள் வரும். அந்த சோதனை ஜெயித்துவிடுங்கள். பின்பு மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு.

[உ] பிரயாணம் செய்யும்போது உபவாசம் இருக்கத்தேவையில்லை. குறிப்பாக: ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு அல்லது நேரம் மாறும் இடங்களுக்கு பிரயாணம் செய்யும்போது.

[ஊ] உடல்நிலை சரியில்லாதபோது உபவாசம் இருக்கத்தேவையில்லை.

[எ] செவ்வாய், வெள்ளி என்பதெல்லாம்
மனிதன் உண்டாக்கிய விசேஷித்த நாட்கள். தேவன் உண்டாக்கிய ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான். மனிதன் தனக்கென்று ஒரு நாளை விசேஷித்துக்கொள்கிறான் என்று வாசிக்கிறோம். (ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.)

சிந்தனைக்கு:
- ஏசாயா 58:3-7 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.


Friday, December 10, 2010

65. "காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது" என்ற செய்தி பற்றி?



பதில்
: காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை அல்ல.

ஒரு சுற்றுலா வழிகாட்டி கிளப்பிய "காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை" என்ற செய்தியால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவியத் தொடங்கினர்.

அது ஒரு இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். அது தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இருக்கும் "யூஸா ஆசாஃப்" என்பவரின்
ரோஸபல் (Rozabal) புனித ஸ்தலம் என்பது தற்போது யாரும் வரக்கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் வருபவர்கள் அங்கு இருக்கும் சமாதியில் எஞ்சியிருப்பதை எடுத்து DNA சோதனை செய்ய விரும்பினார்கள். அங்கிருக்கும் எலும்புகளை எடுத்து கார்பன் தேதி குறிப்பீடு செய்யவும் விரும்பி வேண்டினர்(request).

ஆனால் ரியூட்டர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனத்துக்கு முகமது அமின் ரிங்ஷால் என்பவர் சொல்லும்போது, "நாங்கள் அப்படிப்பட்ட வேண்டுதலை நிராகரித்துவிட்டோம்" என்றார். மேலும், "இப்படி ரோஸ்பல் சமாதியை "இயேசுவின் கல்லறை" என்றழைக்கும் வெளிநாட்டவரின் கூற்றுகள், இஸ்லாமியர்களின் புனித உணர்வுகளை (sentiments) புண்படுத்துகின்றன. எனவே இந்த தொந்தரவுகளையெல்லாம் தவிர்க்கவே நாங்கள் இந்த புனித ஸ்தலத்தை பூட்டிவிட்டோம்" என்றார்.

1973ம் வருடம் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளரான அஸிஸ் காஷ்மீரி என்பவர் கிறிஸ்து சிலுவையில் உயிர்பிழைத்து காஷ்மீருக்கு வந்து அங்கே புதைக்கப்பட்டார் என்று வாதம் செய்தாராம். அவருடைய புத்தகத்தில் "யூஸா ஆஸாஃப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்தார்; அவர் ஒரு தூதுவர். அவர் இஸ்ரவேலிலிருந்து வந்தார். அவர் தனது கொள்கைகளை பரப்பும்படி வந்தார். அங்கே வாழ்ந்து மரித்தார். யூஸ் ஆஸாஃப் என்பவர் ஈசா என்னும் இயேசு. யூஸ் ஆசாஃப் என்றால் குணமாக்குபவர்
, போதகர் என்று பொருள்" என்கிறார்.

==> இது பைபிளுக்கு முரண்பாடாக உள்ளது. இயேசு என்றால் ஜனங்களை பாவங்களிலிருந்து விடுதலையாக்கி இரட்சிப்பவர் என்று பொருள். மேலும் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தபின்பு, 40 நாட்கள் கழித்து அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்று இரண்டு தேவதூதர்கள் சொன்னார்கள். மேலும் அங்கே இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு
அநேகர் சாட்சிகளாக இருந்தனர். அவர் மீண்டும் வரும்போது, ஒலிவமலையில் வந்து இறங்குவார் என்று மிகவும் தெளிவாகவும் தீர்க்கதரிசனம் உள்ளது.

உள்ளூர்வாசிகளாகிய இஸ்லாமியர்களிடம் விசாரித்தபோது, ரோஸபல் என்னும் புனித ஸ்தலமானது, "உண்மையிலேயே சில நூற்றாண்டுகளுக்கு
முன்பு ஸ்ரீநகருக்கு வந்த இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமியர்களாகிய யூஸா ஆஸாஃப் (Youza Asaf) மற்றும் சையத் நஸீர்-உத்-தின் (Syed Naseer-ud-Din) என்பவர்களின் கல்லறையே என்றனர். சில நூற்றாண்டுகள் எங்கே? 2000 வருடங்கள் எங்கே?

நாளைக்கு
சுற்றூலாப் பயணிகளை இழுக்க "தாஜ்மகாலில் முகமது நபி புதைக்கப்பட்டார்" என்றோ, "இயேசுவின் கல்லறை எகிப்தின் பிரமிடு" என்று புரளி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இயேசு : [சிலுவையிலே] மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்துக்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோலை உடையவராயிருக்கிறேன் என்றார். சதா காலமும் இருப்பவர் தேவன் ஒருவரே.
இயேசுக்கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

எனவே காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறையல்ல.
இயேசுவின் கல்லறை எருசலேமிலே உள்ளது.
அந்தக் கல்லறை இன்றும் காலியாகத்தான் உள்ளது.

Added 27 Dec 2010:
http://paralogapathi.blogspot.com/2010/12/blog-post.html-ல் நான் மேலும் விவரங்கள் கொடுத்திருக்கிறேன் என்று ஒரு சகோதரர் குறிப்பிட்டார். நன்றி!

Saturday, December 4, 2010

64. அத்திமரத்தை இயேசு ஏன் பட்டுப்போகும்படி செய்தார்?


பதில்:
அந்த மரத்தில் கனிகள் அப்போது இல்லை. மேலும் அக்காலம் அத்திப்பழக்காலமுமல்ல. இருப்பினும் அதை பட்டுப்போகும்படி செய்தார். அத்திப்பழக்காலத்தில் அந்த மரம் அதற்குமுன் காய்த்ததா? என்ற கேள்விக்கு பதில் "தெரியாது". இயேசு அந்த மரத்தை
ஏன் "எருசலேமிலே" பட்டுபோகும்படி செய்தார், ஏன் வேறே ஊரில் அதைச் செய்யவில்லை என்று சற்றே யோசித்துப்பார்ப்போம். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி இந்த நிகழ்விற்கு சில காரணங்களை நான் வைக்கிறேன்.

[1] லூக்கா 13:6-9, யோவான் 15:2, மத்தேயு 7:19
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

மத்தேயு 7:19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

==> இங்கே கனி கொடாத மரமும், நல்ல கனிகொடாதமரமும் வெட்டப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதுதான் அங்கே நடந்திருக்கவேண்டும். மேலும் இங்கே ஒரு மேலான ஆவிக்குரிய அர்த்தமும் உள்ளது; குறிப்பாக யோவான் 15ம் அதிகாரத்தில் நான் திராட்சைச்செடி நீங்கள் கொடிகள், என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர்(பிதா) அறுத்துப்போடுகிறார். எனவே நாம் கனிகொடுக்கும் ஜீவியம் செய்யாவிடில் அல்லது நாம் கெட்ட கனிகள் கொடுத்தால் நாமும் அப்படியே நிலைபெறமாட்டோம்.

நீ தூரத்தில் ஒரு கனிகொடுக்கும் பெயர் கிறிஸ்தவனாக வாழலாம். இயேசு உன்னிடம் வந்து பார்க்கும்போது உன்னில் ஆவியின் கனி இல்லாமல் (அன்பு,...தயவு, நீடியபொறுமை...இச்சையடக்கம் இல்லாமல் ) இருந்தால், நீ சபிக்கப்பட ஏதுவாக இருக்கிறாய். எனவே நீ மனந்திரும்பு.


[2]
மாற்கு 13:28
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

==> இந்த வசனம் ஒரு தீர்க்கதரிசனம். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் யூதர்கள் அத்திமரத்துக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளனர். அந்த அத்திமரம் பட்டுப்போன நிகழ்வு என்பது யூதர்கள் முழுதும் ("வேர் முழுதும் சீக்கிரமாய் பட்டுப்போயிற்று") சீக்கிரமாய் சிதறடிக்கப்படப்போகின்றனர் என்பதன் அடையாளமான செயல் என்று விளக்கம் கொடுக்கலாம். அப்படியே அவர்கள் சிதறடிக்கப்பட்டபின்பு "இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது" என்பது அவர்கள் மீண்டும் ஒன்றாககூடுவர் என்பதன் முன்னுரைப்பு ஆகும். அநேக வேதபண்டிதர்களும் இதே விளக்கம் கொடுக்கின்றனர். அப்படியே இஸ்ரவேல் என்னும் தேசம் 1948ம் வருடம் உருவானது. இன்னும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர். இருப்பினும் அந்த "அத்திரம் துளிர் விட்ட நிகழ்வு" நம்முடைய நூற்றாண்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே "எருசலேமிலே" இயேசு செய்தது அந்த தீர்க்கதரிசனத்திற்கு ஒரு அடையாளச் செயல் எனலாம்.

[3] "இத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்றே" என்ற ஆச்சரியத்துக்கு இயேசு மிகவும் முக்கியமான பதில் தருகிறார்:


இங்கே அத்திரமரம் இறந்துபோனபின் அதை தாண்டிதான் வருகிறார். பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும் மரித்த நம்மை தேவன் தேடிவந்தார்.

வசனம் 21, 22. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 

[4] இதன் மூலம் அநேக ஞானிகளும், அறிவியல் துறை வல்லுநர்களும் குழம்பி போய் இருக்கிறார்கள். எத்தனை மொழிகளில் வார்த்தைகளை ஒரு செடி அல்லது மரத்துக்கு முன்பாக பேசினாலும் அது சாவதில்லையே, இது எப்படி சாத்தியம் என்று பதில் இல்லாமல் அலைகின்றனர்.  நமது தேவன் மகத்துவமானவர், ஞானமானவர்,  அவருடைய  செய்கைகளையும் ஞானத்தையும் அறிந்துகொள்ள ஒருவராலும் இயலாது!

==> இந்த சம்பவத்தின் மூலம் நாமும் ஒரு மரத்துடன் பேசமுடியும் என்று புரிகிறது. ஒரு மலையை பெயர்ந்து கடலில் தள்ளுண்டுபோ என்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்று சிலருக்கு தோன்றினாலும், அது இயேசு சொன்னபடிதான்; ஏனெனில் இயேசு பொய் சொல்லவில்லை. இது விசுவாசத்தின் உயர்நிலையைக் குறிக்கிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெறுவீர்கள் என்ற வசனமும் இந்த அத்திமர நிகழ்வுக்குபின்புதான் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இல்லாவிடில் ஏது அந்த வசனம்?

சிந்தனைக்கு:
மத்தேயு 6.
காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
நோவாவின் காலத்தில் எத்தனையோ விலங்குகள் ஜலப்பிரளயத்தில் இறந்துபோயின. ஆனால் அவைகளைக்குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு மரத்தைக்குறித்து உலகில் ரொம்பவேதான் கவலைப்படுகின்றனர். இந்த சம்பவமில்லாவிடில் மலையைப் பெயர்க்கும் விசுவாசத்தின் உயர்வான படியை நான் அறிந்திருக்கமாட்டேன். தேவன் சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்று வாசிக்கிறோமே. ஏனெனில் 2000ம் வருடங்கள் கழித்து இன்றும் அந்த மரம் விசுவாசத்தைக்குறித்து பேசப்படும் ஒரு சின்னமாக உள்ளதே என்பதில் அந்த மரத்துக்கு அது ஒரு சிறப்புதான்!

Tuesday, November 23, 2010

63. மனிதர்களை தேவர்கள் என யோவான் 10:34ன்படி அழைக்கலாமல்லவா?


கேள்வி:
யோவான் 10:34, 35-ல் "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க" என்று வாசிக்கிறோம். எனவே நாம் மனிதர்களை தேவர்கள் என அழைக்கலாம். பிசாசும் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று அழைக்கப்படுகிறான். அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார். எனவே இயேசுவை தேவன் என்பது தவறல்லவா?"

பதில்: இல்லை
செய்தி: "இந்தியாவைச் சேர்ந்த ராமன் என்பவர் ஒரு கடையில் கைக்கடிகாரத்தை (wrist watch) திருடிவிட்டார்".
இந்த செய்தியைப் படித்துவிட்டு: "இந்தியர்கள் திருடர்கள்" என்றும், "ராமன் என்ற பெயர் உடையவர்கள் கைக்கடிகாரத்தை திருடுபவர்கள்" என்றும் சொல்வது "அவசரத்தில் பொதுவாக்குதல்" (Hasty generalization) என்ற விவாதப்பிழையின்கீழ் வரும்.

முதலாவதாக, "தேவ வசனத்தைப்பெற்றவர்கள் தேவர்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது; எல்லாரையும் அல்ல. அந்த வசனமானது சங்கீதம் 82:6-லிருந்து இயேசுவால் எடுத்து குறிப்பிடப்பட்டது. இதை புரிந்துகொள்ளும் முன்பு சங்கீதம் 82 இங்கே...

சங்கீதம் 82
1. தேவசபையிலே
தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
3. ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4. பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7. ஆனாலும் நீங்கள் [மற்ற] மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
8.
தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
 

அங்கே அவர்கள் குற்றவாளிகள் என்று தேவன் நியாயாம்தீர்க்கும்வகையில் சொல்கிறார்.


முதலாம் வசனத்தில் "தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். (God presides among the gods)"
==> இங்கே தேவர்கள்
யார் ? தேவன் யார்?

நம்முடைய கண்களுக்கு முன்னே ஒரு நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் ஏழைக்கும் திக்கற்றவர்களுக்கும் சரியாக நியாயம் விசாரிக்காமல், துன்மார்க்கனுக்கு முகதாட்சணியம் பண்ணி அநியாயத்தீர்ப்பு செய்யும் நியாயாதிபதிகளாகிய இவர்களும் "தேவர்கள்" (Elohim) என்றழைக்கப்பட்டனர். தேவன் இங்கே மற்ற தேவர்கள் தன்னைப்போலொத்தவர்கள் அல்ல, தன்னைப்போல் நீதியுள்ளவர்கள் அல்ல என்று அங்கே உள்ள நியாயாதிபதிகளைத்தான் சொல்கிறார். பழைய ஏற்பாட்டில் நியாயாதிபதிகள் (Judges) தேவனுடைய கட்டளைகளைப் படித்தவர்கள்; அதாவது தேவனுடைய வசனத்தைப் பெற்றவர்கள். தேவன் தான்செய்வதில் ஒரு சிறு பகுதியை இவர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததால் அவர்களுக்குத் தேவர்கள் என்ற அடைமொழியும் கொடுக்கப்பட்டது. இதை எபிரெய மொழியில் உள்ள வேதாகமத்தில் படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். நாம் இப்படியாக வாசிக்கிறோம்:

யாத்திராகமம் 21:6 அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி,
==> தமிழில் மொழிபெயர்த்தவர்கள் நியாயாதிபதிகள் என்று கொடுத்துள்ளனர்.
யாத்திராகமம் 22:28. நியாயாதிபதிகளை (தேவர்கள் - Elohim) தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
Thou shalt not revile the gods, nor curse the ruler of thy people. (KJV)
==> ஆங்கிலத்தில் "gods" என்பதைக் காணவும்.


யாத்திராகமம் 22:8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அவனைக் கொண்டுபோக வேண்டும்.

மேலே எல்லாம் தேவர்கள் என்று நியாயாதிபதிகளை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

சங்கீதம் 138:1-லும் "உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு (நியாயாதிபதிகள் / ஆளுபவர்களுக்கு) முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்று வாசிக்கிறோம். எனவே
அக்காலத்தில் சங்கீதம் 82:1-ன்படி நியாயாதிபதிகள் என்பவர்களையே தேவர்கள் என்றனர்.

யோவான் 10:34ல் தேவ தூஷணம் என இயேசுவை யூதர்கள் (நியாயாதிபதிகள், பரிசேயர்கள்) குற்றப்படுத்த முயற்சிக்கும்போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு: "உங்கள் வேதத்தில் நான் உங்களை (நியாயாதிபதிகளை) தேவர்கள் என்று சொன்னதாக வாசிக்கவில்லையா" என்கிறார். நியாயாதிபதிகள் தேவ வசனத்தை, தேவனுடைய கட்டளைகளைப் பெற்றவர்கள். நானோ உங்களுக்கு தேவனுடைய வார்த்தையாகவே வந்திருக்கிறேன், எனவே நான் தேவனுடைய குமாரன் என்பதில் என்ன பிழை? ஆதியாகம் 9:6-லேயே நான் மனிதனுக்கு நீதிசரிகட்டும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறேனே. தேவனுடைய வசனம்/கட்டளை/பொறுப்பை பெற்றவர்கள் தேவர்கள் என்றால், தேவனுடைய வார்த்தையாகிய நான் ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே இருக்கிறேன் என்றால் நான் யார்?

------------------------
இரண்டாவதாக, பிசாசானவன் "இப்பிரபஞ்சத்தின் தேவன்".
இயேசு சொல்லும்போது: "இதோ இவ்வுலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" என்கிறார்.
ஒரு [நல்ல] தலைவன் என்பதற்கும், "கொள்ளைக்கூட்டத் தலைவன்" என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இரண்டிலும் தலைவன் என்ற வார்த்தை இருப்பினும் நமக்கு புரிகிறதே. சீரகத்துக்கும் பெருஞ்சீரகத்துக்கும் (சோம்பு) வித்தியாசம் தெரிகிறதே! வெங்காயத்துக்கும் வெள்ளைவெங்காயத்துக்கும்(பூண்டு) வித்தியாசம் தெரிகிறதே! ஆனால் தேவனுக்கும், "இப்பிரபஞ்சத்தின் தேவனுக்கும்" உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை.


------------------------
மூன்றாவதாக, "அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார்" என்பதும் பிழையாகும்.

"அப்படி அல்ல" என்பதை அறிந்துகொள்ளவும்.
- இயேசு பிலாத்துவிடம் விசாரிக்கப்படும்போதும்: "நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவா?" என்ற கேள்விக்கு அவர் "நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்" என்றார். (மாற்கு 14:61)
- மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "இருக்கிறேன்(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார்.
இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "இருக்கிறேன்(I AM)" என்று சொன்னார்; (யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.
- தேவன் ஏசாயாவில் "நான் முந்தினவரும் பிந்தினவரும்தானே" என்று சொன்னதை இயேசு நான்தான் அவர் என்று
வெளிப்படுத்தலில் "நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்கிறார்.
- மேலும், ஆ
தியிலே வார்த்தையிருந்தது....அந்த வார்த்தை தேவனாயிருந்தது ... அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்பதிலிருந்து இயேசுதான் அந்த தேவன் என்றும் புரிகின்றதல்லவா? இன்னும் பல வசனங்களை எடுத்து விளக்கிக்கொண்டு போகலாம்.

இயேசு தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் ஏற்கனவே கேள்விபதில் 21ல் விளக்கப்பட்டுள்ளது. இயேசு தேவனல்ல என்று சொல்வது பல கூற்றுகளை அலசி ஆராய்ந்து பார்க்காமல் சொல்லும் பிழையாகும்.


தமிழில் எத்தனையோ கிராமங்களில் தங்கள் பேரபிள்ளைகளை “சாமி” என்று பாட்டிகள் அழைக்கின்றனர். அதினால் அவர்கள் சாமியா? மனிதன் குட்டி தேவன் அல்ல, தேவனுமல்ல. ஏதேன் தோட்டத்தில் நீங்கள் தேவர்களைப்போல ஆவீர்கள் என்ற ஆசையை தூண்டிவன் பிசாசு. கர்த்தராகிய இயேசுவாகிய தேவன் ஒருவரே மனிதனாக வந்தார். 

பரலோகத்திலும்: "அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை" என்று வாசிக்கிறோம். இங்கே பரலோகத்திலும் மனிதன் தேவனாக வாய்ப்பே இல்லை, ஜனங்களாகவே இருப்பார்கள் என தெளிவாக உள்ளது. எனவே பரலோகத்தில் தேவனாக இருப்போம்  என்கிற போதகம் எல்லாம் பிசாசினால் உண்டானது.


சிந்தனைக்கு:

சங்கீதம் 8:5ல் "நீர் அவனை(மனிதனை) தேவதூதர்களிலும் (தேவர்கள் - Elohim என்று சொன்னால்) சற்று சிறியவனாக்கினீர்" என்பதில் உங்கள் கணக்கின்படி மனிதன் குட்டி தேவர்கள், தேவதூதர்கள் பெரிய தேவர்கள் என்பதாகிவிடுகிறது. என்றால் தேவன் யார்?

ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். ஏசாயா 44:8 என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே;

Tuesday, November 16, 2010

62. இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள் வேறு யாரேனும் பைபிளில் உண்டா?

பதில்: ஆம், சிலர் உண்டு. 

 [1] ஆதியாகமம் 17:19 (ஈசாக்கு) அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். 

 [2] ஆதியாகமம் 16:11,12 (இஸ்மவேல்) பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; 

 [3] I இராஜாக்கள் 13:2 (யோசியா) அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; 

 [4] I நாளாகமம் 22:9 (சாலொமோன்) இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான். 

 [5] லூக்கா 1:13 (யோவான் - ஸ்நானகன்) தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 

 [6] ஏசாயா 44:28. (கோரேஸ்) கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். (குறிப்பு: ஏசாயா-கி.மு. 8ம் நூற்றாண்டு; கோரேஸ்-கி.மு.559~530. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு) இயேசுவையும் சேர்த்து மொத்தம் ஏழுபேர். 

 [7] மத்தேயு 1:21 (இயேசு) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். லூக்கா 1:31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. .

Sunday, November 7, 2010

61. உபாகமம் 18:15-ல் சொல்லப்பட்டவர் முகமதுதானே - இதை உங்களால் மறுக்கமுடியுமா?

Part I

இஸ்லாமிய சகோதரர் ஒருவர் இக்கேள்வியை (இன்னும் சில கேள்விகளும்) கேட்டார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல, இயேசு.

இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்களின் வேதமானது தவறு. அப்படியானால் இவர்கள் பைபிள் பக்கமே வரக்கூடாது. (உண்மையிலேயே அவர்களுடைய புத்தகம்தான் பைபிளில் இருந்து எடுத்து புரட்டப்பட்டதும், தவறான உபதேசங்களையுடையதுமாக இருக்கிறது. முகமது என்பவர் 500 வருடம் கழித்து வந்த ஒரு கள்ளப்போதகர். இதைப்பற்றி விளக்கமாக ஒரு தனி கட்டுரை எழுதலாம்.)

இவர்கள் முகமது தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று நிரூபிக்க அவரைப்பற்றிய முன்னறிவிப்பு எங்கேயாவது இருக்கவேண்டுமே என்பதால் இங்கே ஓடி வருகின்றனர். இதற்காக உபாகமம் 18:15 எடுத்து சொல்கின்றனர். இங்கே சொல்லப்பட்டவர் இயேசு, முகமது அல்ல.

உபாகமம் 18:15-22
. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.


 [A] என்னைப்போல: இது வெறும் மோசேயின் சரீரப்பிரகாரமான வாழ்வைப்பற்றிய ஒப்பிடுகை அல்ல. 
- மோசே தேவனை முகமுகமாக தரிசித்தவர். முகமது தேவனை தரிசிக்கவில்லை.
- மோசே இஸ்ரவேலன். முகமது இஸ்ரவேலன் அல்ல.
-  மோசே பல அற்புதங்களைச் செய்தவர். முகமது அற்புதம் ஒன்றும் செய்யவில்லை.
- மோசேயைப்போல சாந்தகுணமுள்ள மனுஷன் இல்லை என்று வாசிக்கிறோம்.
இயேசு மிகவும் சாந்தகுணமுள்ளவராயிருந்தார். அவர் “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” என்றார்.  ஆனால் முகமது பலரைக் கொன்றவர்.


[B] சகோதரர் யார்?
[B1] இங்கே உங்களுடைய சகோதரருக்குள்ளே என்றால் இஸ்ரவேல் ஜனங்களுடைய சகோதரருக்குள்ளே என்று பொருள். அதாவது இஸ்ரவேல் ஜனங்களின் 12 கோத்திரங்களுக்குள் ஆகும். இஸ்லாமியர்களோ இஸ்ரவேல் ஜனங்களுக்கு சகோதரன் இஸ்மவேல் என்பவனின் சந்ததி என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆபிரகாமுக்கு ஈசாக்கு, இஸ்மவேல் பிறந்தனர். அவர்கள் இருவரும் சகோதரர். ஈசாக்கு என்பவனுக்கு பிறந்தவர்கள் யாக்கோபு, ஏசா; இவர்கள் இரட்டையர்கள். தேவன் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். இன்று இஸ்ரவேல் தேசம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது யாக்கோபுக்கு தேவன் இட்ட பெயர்! யாக்கோபுக்கு பிறந்தவர்கள் 12 பேர்; இவர்கள் வம்சம்தான் இஸ்ரவேலர்.

யாக்கோபின் 12 குமாரரில் ஒருவனாகிய யோசேப்பு எகிப்திலே இருந்தபோது அவனுடைய பத்து சகோதரரும் வந்து அவனுடன் நாங்கள் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள் நாங்கள் எல்லாரும் 12 பேர் சகோதரர் (இஸ்ரவேலர்கள்) என்று சொல்கின்றனர்.

[B2] ஏசாவின் சந்ததியாரும் இஸ்ரவேலருக்குச் சகோதரர் என்று சொல்லப்பட்டுள்ளது:
எண் 20:17,18
17. நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் (சேயீர் தேசம்) கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.
18. அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

மேலே ஏதோம் என்பது யாக்கோபு (இஸ்ரவேல்) என்பவரின் சகோதரன் ஆவார். ஆதியாகமம் 25:30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

ஆதியாகமம் 36:8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.

[B3] யாத்திராகமம் 2:11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு...

மேலே மோசேயைப் பொருத்தமட்டில் சகோதரர் என்பவர்கள் எபிரெயர்கள் அதாவது இஸ்ரவேல் ஜனங்கள். இங்கேயே விவாதத்தை மூடிவிடலாம். (பல தலைமுறைகள் மேலே போகக்கூடாது; கொஞ்சம் நாள் கழித்து நோவாவின் பிள்ளைகளில் காமும், இஸ்மவேலும் சகோதரன் என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்.)

எனவே மோசே சொல்லும்போது: எபிரெயர்கள் (அதாவது இஸ்ரவேலர்கள்), ஏசாவின் சந்ததியார் ஆகியோரே சகோதரர் ஆவர். இஸ்மவேலின் சந்ததி அல்ல.

[C] "என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

எனவே இவர் இயேசுதான்.

[D] மோசே யாரைக்குறித்துச் சொன்னான்?

இயேசு சொன்னார்:
யோவான் 5:46 "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே."

இங்கேயே இந்த விவாதம் என்கிற சவப்பெட்டிக்கு ஆணியத்து புதைத்துவிடலாம். இயேசுவே தெளிவாக மோசே என்னைக்குறித்து சொன்னான் என்று சொல்கிறார். எனவே கண்டிப்பாக முகமது இல்லை.



மேலும் பேதுரு பேசும்போது:
அப் 3:22. மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

இங்கே பேதுரு இயேசுதான் மோசே முன்னறிவித்தவர் என்று தெளிவாக சொல்லுகிறான். எனவே விவாதம் என்று புதைக்பட்ட சவப்பெட்டியை கான்க்ரீட் போட்டு பூசிவிடலாம். இதற்குமேல் அவர்கள்  மனந்திரும்பி இயேசுவை வணங்காவிட்டால் நரகம்தான். ஏனெனில் மோட்சம்/பரலோகம் செல்ல இயேசு மட்டுமே வழி.


[E] சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும்"
தேவனுடைய நாமத்தைக் (name which is YHWH ) கொண்டு
முகமது பேசவில்லை. ஆனால் இயேசுவோ எப்போதும் பிதாவை குறிப்பிடுகிறார்.
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
(சுயமாக வந்த முகமதுவை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!)
யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.

எனவே இயேசுவைக்குறித்துதான் உபாகமம் 18:15ல் சொல்லப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------
Part II

"பாரான் வனாந்தரம்" - விளக்கம்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு 40 வருடம் வனாந்திர வழியாக கானான் தேசத்துக்கு போனார்கள். அப்படி போகும்போது அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, ஏத்தாமுக்கு வந்து பின்பு ஈரோத் பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். இங்கிருந்துதான் செங்கடலைக் கடந்தார்கள். இந்த இடத்தை இன்றும் Google-map ல் காணலாம். Nuweiba என்று தற்போது அதற்கு பெயர்.
பின்பு சூர் என்ற இடத்துக்கு வந்து, பின்பு மாராவுக்கு வந்தாகள் (இங்கே தண்ணீர் கசப்பாக இருந்தது, அதை மதுரமாக மாற்றினார் தேவன்), இங்கிருந்து ஏலீமுக்கு வந்தார்கள் அங்கே 70 பேரீச்சமரங்களும், 12 நீரூற்றுகள் (கேணிகள்) இருந்தன. இதையும் தற்போது Google-map ல் காணலாம். ஆச்சரியமாக இன்றும் அந்த 12 நீரூற்றுகளும் உள்ளன, ஆனால் பேரீச்சமரங்களோ மிக அதிகம். அங்கிருந்து சீன், தொப்கா, ஆலூஸ், ரெவிதீம், சீனாய் மலையடிவாரம், கிப்ரோத் அத்தாவா, பாரான் வனந்திரம், காதேஸ்... என போகின்றது இடங்களின் வரிசை.
பாரான் வனாந்திரத்தில் மோசே கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி 12 பேரை அனுப்பினான். அவர்களில் 10பேர் துர்செய்திசொன்னார்கள். இரவு முழுதும் ஜனங்கள் அழுதனர். ஆனால் காலேபும், யோசுவாவும் தைரியம்கொடுத்தனர்.
10. அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

இதுதான் பாரன் வனாந்தரத்திலிருந்து தேவன் பிரகாசமாக தோன்றினார் என்று அர்த்தம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
Part III

"சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால்,
சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால்,
பாரானில் தோன்றிய பிரகாசம் எது?"

இப்படி பைபிளை சரியாக படிக்காதவரின் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. இந்தக் கேள்வியும் தவறு, அதின் யூகமும்(assumption) தவறு.

தேவன் ஒளியாயிருக்கிறார். அவர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் எழுந்தருளும்போது தோன்றும் மகிமைதான் அப்படியாக கூறப்பட்டுள்ளது. பாரானில் தோன்றிய பிரகாசம் எது என்று Part II-ல் சொல்லப்பட்டுள்ளது.

"சீயேர்" என்று பைபிளில் எங்கும் இல்லை, அது "சேயீர்". சரியாக வேதத்தை படியுங்கள்.
சேயீர்:
உபாகமம் 1:2 சேயீர் மலைவழியாய் ஓரேபுக்கு...
எண் 20:6. அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
இது சேயீரில் தோன்றிய தேவனின் மகிமை.
சீனாய் மலையில் தோன்றிய பிரகாசமும் தேவனின் மகிமை.
---------------------------------------------------------------------------------------------
Part IV

"எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.(யோவான் 1:19,22) -- இதில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசி யார்? அவர் தான் முகமது"

எனக்கு சிரிப்புதான் வருகின்றது, நீங்கள் இப்படி புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்கக்கூடாது.

"நீங்கள் ஆசிரியரா?" என்று ஒரு பையன் கேட்டான்.
அதற்கு அவர் "அல்ல" என்றார்.
உடனே அந்தப் பையன் அப்படியானால் ஆசிரியர் என்பவர் முகமது என்றான்.
என்ன ஒரு முட்டாள்தனம்!

மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். (என்று யோவான் ஸ்நானகன் இயேசுவைப்பற்றி சொன்னார்)

யோவான் 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். (என்று இயேசுவைக் காட்டி யோவான் ஸ்நானகன் சொல்கிறான்.)

மத்தேயு 21:11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.


-------------------------------------------------------------------------------------------------

மேலே [D] என்ற வாதம் ஒன்றே மோசேயால் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்று மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது. இதற்குமேலும் அவர் முகமது என்று
எப்படித்தான் நம்புகிறார்களோ தெரியவில்லை.

முகமது பெற்ற கட்டளைகள் சத்தியத்துக்கு மாறாக இருக்கின்றன.

கலாத்தியர் 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

எனவே 500 வருடம் கழித்து பிசானவன் (ஒளியுள்ள தூதன் வடிவில் வந்து) பாதி உண்மையும் பாதி பொய்யும் பேசி முகமதுவை வஞ்சித்துள்ளான். இயேசுவின் போதனைகளை மாற்றி சொல்லும் அவர் மேலே சொன்ன வசனத்தின்படி சபிக்கப்பட்டவர்.

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

500 வருடம் கழித்து வந்த முகமது ஒரு கள்ளப்போதகர். பைபிளில் சொல்லப்பட்டுள்ள தேவன் வேறு. முகமது சொல்லும் தேவன் வேறு:

குறிப்பாக பைபிளில், தேவன் பிதா, மனிதர்கள் அவரின் பிள்ளைகள். தேவன் மனிதர்களை நேசிக்கிறார். 
ஆனால் குரானில், அல்லாஹ் எஜமான், மனிதர்கள் அவனின் அடிமைகள். அன்புக்கு அவனிடம் இடமில்லை.
முகமதுவை பின்பற்றினால் நரகத்துக்கு போவீர்கள். இயேசுவைப்பின்பற்றினால் பரலோகம்/மோட்சம் கிடைக்கும்.


சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
இயேசு சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"

காணொளிகள்: https://islam-qanda.blogspot.com/

Friday, November 5, 2010

60. தேவன் தன்னால் தூக்கமுடியாத பெரிய மலை ஒன்றை செய்ய முடியுமா?



இப்படிப்பட்ட முட்டாள்தனமான கேள்வியானது "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் முதலில் கேட்கப்பட்டது.

பதில்: "
தேவனால் எவ்வளவு பெரியமலையைச் செய்யவும் முடியும், அதை தூக்கவும் முடியும்".ஒருவர் சொன்னார்:
இந்த முட்டாள்தனமான கேள்விக்கு "ஒரே நேரத்தில் ஆம் மற்றும் இல்லை" என்பது பதில்.
தேவனால் பெரியமலையை செய்ய முடியுமா? ஆம். அதை தூக்க முடியாதா? முடியாதது இல்லை. "ஆம் மற்றும் இல்லை" என்று எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவே முடியாது, அப்படி ஒரு கேள்வியும் இல்லை என்று சொல்ல வேண்டாம். இரண்டுமே, இரண்டும் அல்ல என்பதும் ஒரு கேள்விக்கு பதிலாகும்.

"மனிதனால் பறக்க முடியுமா?" என்ற கேள்விக்கு பதில் என்ன? "இல்லை மற்றும் ஆம்". மனிதனுக்கு சிறகு இல்லை பறக்க முடியாது, எனவே இல்லை. இந்த காணொளியினை பாருங்கள் மனிதன் பறக்கிறான்: Crazy Air Gliders, எனவே  பதில் ஆம்.


இன்னும் சில முட்டாள் கேள்விகள்:

[1] தேவனால் சதுரமாக ஒரு கூம்பு அல்லது கோளம் செய்யமுடியுமா?
இதன்மூலம் நீங்கள் இந்த கேள்வியே ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று காட்டுகின்றீர்கள். அடுத்ததாக இந்தக் கேள்வியில் கோளம் என்ற முப்பரிணாமமும்(3D), சதுரம் என்ற இருபரிணாமமும்(2D) ஒப்பிடப்பட்டுள்ளன என்றும் காட்டுகிறீர்கள். இது போன்ற கேள்வி அடிப்படையில் தவறல்லவா?

[2] "நீ மனிதர்களை கொலை செய்வதை நிறுத்திவிட்டாயா?" என்று ஒருவரிடம் நீதிமன்றத்தில் கேட்டால் அவர் "ஆம்" என்றாலும் பிரச்சனை (இதற்கு முன் கொலை செய்திருக்கிறார்), "இல்லை" என்றாலும் பிரச்சனை (இன்னும் கொலைசெய்கிறார்). எனவே அவர் நிரபராதியாக இருப்பின் இந்தக் கேள்விக்கு ஆம், இல்லை என்ற இரண்டுமே பதில் அல்ல.

சிந்தனைக்கு:
"A" என்பவர் X, Y என்று இரண்டு உருவங்களாகப் பிரிந்து, X என்பவர் தான் தூக்க இயலாமல் செய்த மலையை Y என்பவர் தூக்கிக்காட்டுகிறார். Y என்பவர் தான் தூக்க இயலாமல் செய்த மலையை X என்பவர் தூக்கிக்காட்டுகிறார். பிறகு X, Y ஆகிய இருவரும் மீண்டும் ஒரே உருவமாக ("A" ஆக) மாறி ஒருவனிடம் இவ்விரண்டு பேரில் யார் பலசாலி, பலமற்றவர்? என்று கேட்கிறார். அவனுடைய குழப்பமான பதிலுக்குப்பின் அவர் கேட்கிறார், "இப்போது நீ என்னைக்குறித்து என்ன சொல்கிறாய்?". அவர் ஆச்சரியமானவர்.

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." (I கொரிந்தியர் 1:27)

"இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்". (I கொரிந்தியர் 3:19)
தேவன் பொய் சொல்வதில்லை, தேவன் பாவம் செய்வதில்லை, தனது பரிசுத்த அம்சங்களுக்குள் தனக்குத்தானே முரண்படுவதில்லை.

------- In English ----------------

Question #60:
Can God create a huge mountain that He can not lift?

Such silly question was first asked by Atheists.

Answer is:
God can create a huge mountain of any size and God can lift it.
One person said:
The answer to such stupid question is "both YES and NO at the same time, Go figure it out." Can God make a huge mountain? Yes. He can not lift? No, can lift. Don't say that the answer for a question must be either YES or No. Both, Neither can be the answer to a question. What is the answer to "Can a human being fly?" both "NO and YES". Man has no wings so he can not fly (hence NO). Man can fly by para-gliding and air-gliding. Check this video for yourself and see that these men can fly: Crazy Air Gliders (hence YES). People say, "I am flying to New York tomorrow", referring to their air travel.


Here are more stupid or foolish questions:

[1] Can God make a Cone or Sphere like a Square?
Aren't you showing yourself as stupid by asking such question? Moreover a plane (Square) which is of two dimension is being compared to an object (Sphere) of three dimension. Isn't such question wrong at the very basic level?

[2] If a man was asked in the court, "Have you stopped killing the people?". If he says "YES" he is in trouble (means he was killing in the past), and if he says "NO" he is in trouble (means he is still killing). If the person is not guilty, then the answer for such question is neither YES nor NO.

Musing:
Someone called "A" splits himself into two personalities say X, Y. And X makes a mountain that he can not lift but Y is able to lift it and Y makes a mountain that he can not lift but X is able to lift it. Then X,Y merges together back to "A" and asks the man a question, "Who you think is stronger and who is weaker?". After the man's confused answer, He asks "Now, what do you think about me?". He is wonderful.

"But God hath chosen the foolish things of the world to confound the wise; and God hath chosen the weak things of the world to confound the things which are mighty;" (I Cor 1:27)

"For the wisdom of this world is foolishness with God. For it is written, He taketh the wise in their own craftiness." (I Cor 3:19)

God does not lie, God does not commit sin and does not contradict himself within His holy attributes.

Wednesday, October 27, 2010

59. முகமது பற்றி பைபிளில் யோவான் 14:16-ல் உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வது பற்றி?

யோவான் 14:16-ல் சொல்லப்பட்ட தேற்றரவாளன் (Comforter) முகமதுவா?

பதில்: இல்லை.

முதலாவது யோவான் 14, 15, 16, 10 மற்றும் அப்போஸ்தலர் 2, 8, 10 அதிகாரம் முழுதும் வாசியுங்கள்.

இஸ்லாமியர்களில் பலர் பைபிளில் இருந்து வசனங்களை எடுத்து தங்களுக்கு இஷ்டமானபடி திரிக்கிறார்கள். அவர்களை நம்பாதிருங்கள். இங்கும் அங்குமாக சில வசனங்களை எடுத்து தங்களுடைய முகமதுவை எப்படியாவது காப்பாற்றும்படி அப்படி செய்கிறார்கள். ஆனால் இங்கே அவர்களுடைய முயற்சியானது முழுதும் தோல்வியில் முடிகிறது.

சத்திய ஆவியானவர்(Spirit of truth), தேற்றறரவாளன் (Comforter) என்று இயேசு "பரிசுத்த ஆவியானவரைத்தான்" சொன்னார். நிச்சயமாக முகமதுவை அல்ல. எப்படி நமக்கு தெரியும்?

[1] யோவான் 14:16 "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய (Spirit of truth) வேறொரு தேற்றரவாளனை (Comforter) அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."

முகமது என்னென்றைக்கும் உங்களுடனே இல்லை. அவர் கி.பி. 632ல் இறந்தார். அவருடைய கல்லறை இன்றும் மெதினாவில் உள்ளது. எனவே இயேசு சொன்னவர் முகமது இல்லை.

[2] யோவான் 14:17. "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், (dwells with you, and shall be in you) நீங்கள் அவரை அறிவீர்கள்."

முகமது உங்களுடன் இல்லை, நிச்சயமாக உங்களுக்கு உள்ளே இல்லை. அப்படி இருக்க அவர் மேலே சொன்னதுபோல் ஒரு ஆவியாக இருக்கவேண்டும். (நீங்கள் ஒருவேளை நமது மனதில் இருக்கிறார் என்று விவாதித்தால், எல்லா குடும்பங்களிலும் இறந்துபோன அம்மா அப்பா என்பவர்கள் தங்கள் மனதில் இருக்கிறார்களே என்ற விவாதத்திற்கு முன் இந்த விவாதம் சிறுபிள்ளைத்தனமாகிவிடும்).

மேலும் "உங்களுடனே வாசம்பண்ணி" என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுடன் சொல்கிறார். முகமது அந்த சீஷர்களுடன் வாசம்பண்ணவில்லை.

"சத்திய ஆவியானவர்" : முகமது சரீரத்துடன் இருந்தார், ஆவி அல்ல.

II தீமோத்தேயு 1:14 "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்."

எனவே பரிசுத்த ஆவியானவரே (Holy Spirit) நமக்குள் வாசம்பண்ணுகிறார்.

[3] யோவான் 14:26 "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய (Holy Spirit) தேற்றரவாளனே (Comforter) எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன 'எல்லாவற்றையும்' உங்களுக்கு நினைப்பூட்டுவார்."

- பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதற்குமேல் ஒரு விளக்கமும் தேவையில்லை. இங்கேயே அவர்கள் வாதம் ஒன்றுமில்லாமல் போகிறது. முகமது பரிசுத்த ஆவி அல்ல.

- நான் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். பிரமாதம்!
இயேசு சொன்ன "உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்" எப்படி இருக்கிறது !!
முகமது சொன்ன "உங்கள் நம்பிக்கையில்லாதவரை கொல்லுங்கள்" எப்படி இருக்கிறது?
இயேசு சொன்ன எல்லாவற்றையும் முகமது எங்கே நினைப்பூட்டினார்?
முகமது ஏன் இயேசு சொன்னதை சொல்லவில்லை, அல்லது "சொன்ன எல்லாவற்றையும்" ஏன் சொல்லவில்லை? முகமது இயேசு சொன்னதற்கு முரண்பாடாக சொல்கிறார்.

[4] யோவான் 16:14,15. "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்."

இயேசு சொன்னதிலிருந்து முகமது அறிவிக்கவில்லை. இயேசு நான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பேன் என்றார், அப்படியே அவர் செய்தார். இதை முகமதுவால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது; அப்படி ஏற்றுக்கொண்டால் தனக்கு ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விடுமே என்பதால் அதை சொல்லவில்லையா? ஏன் இவர் இயேசு சொன்ன எல்லாவற்றையும் சொல்லவில்லை? அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது "கிறிஸ்து உயிரோடு எழும்பாவிட்டால் எங்களுடைய பிரசங்கம் வீணாயிருக்கும்" என்கிறார். முகமது இயேசுவை மகிமைப்படுத்தவில்லை. முகமது சுமார் 550 வருடம் கழித்து வந்து இதை மறுக்கிறார். ரொம்பவே காலம் கடந்துவிட்டது.


[5] யோவான் 15:26 "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்."

இங்கே அந்த தேற்றரவாளனை அனுப்புவதே இயேசு என்று வாசிக்கிறோம்.  இஸ்லாமியர்கள்  இதற்குமேலும் ஒற்றைக்காலில் நின்றால், நாம் இப்படியாக வாதிடமுடியும்: குரானில் முகமதுவை அனுப்பியது அல்லாஹ், பைபிளில் தேற்றரவாளனை அனுப்பியது இயேசு. எனவே தேற்றரவாளன் என்பவர் முகமது என்றால், இயேசுதான் அல்லாஹ் என்றாகிவிடும், அப்படியானல் இஸ்லாமியர்களின் அனைவரும் இயேசுவை வணங்கவேண்டும். எப்படித்தான் இவ்வாறு இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்கிறார்களோ, தெரியவில்லை.

 இயேசு கிறிஸ்தவர்களுக்குமட்டும் தேவன் அல்ல, அவர் சொல்கிறார்: நான் மாம்சமாகிய அனைவருக்கும் தேவனாகிய கர்த்தர். எனவே எல்லா இஸ்லாமியர்களும் இயேசுவை வணங்கவேண்டும்.


யார் இந்த சத்திய ஆவியானவர், எப்போது வழிநடத்த வந்தார்?

அப்போஸ்தலர் 2:1-4
"பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."
இது இயேசு உயிர்த்தெழுந்து 50-வது நாள் ஆகும். இயேசுவானவர் உயிர்த்தெழுந்தபின்பு 40 நாள் பூமியில் இருந்தார். வானத்துக்கு அவர் அப்படியே எடுத்துக்கொண்டபின்பு 10 நாள் கழித்து இந்த பரிசுத்த ஆவியானவர் (Holy Spirit) காத்திருந்தவர்கள் மேல் வந்தார். இது முகமது வருவதற்கு 500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே ஆகும். முகமது பிறந்தது கி.பி. 570/571.


அப்போஸ்தலர் 8:29. ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

அப்போஸ்தலர் 10:19,20 பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
அப்போஸ்தலர் 10:44, 45 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும்...

மேலே "ஆவியானவர்" என்பவர் இயேசு சொன்ன "சத்திய ஆவியானவர்." அப் 10:45ல் அவர்கள் தேவனை புகழுவதையும் அதாவது தேவனை மகிமைப்படுத்துவதையும் இயேசு [4]ல் சொன்னதுபோல் காண்கிறோம்.
அப்போஸ்தலர்களின் நிருபம் என்பது பேதுரு, பிலிப்பு, பவுல் என்பவர்கள் வாழ்ந்த காலம். இது முகமதுக்கு சம்பந்தமே இல்லாத காலம். ஏனெனில் 500 வருடங்கள் கழித்துதான் முகமது வருகிறார். (கி.பி. 570/571)

இயேசு சொன்னார்:
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6)
"நானும் ஒரு வழி" என்று சொல்லாமல், "நானே வழி" என்று சொல்வதைக் கவனியுங்கள்.

"நானே ஆடுகளுக்கு வாசல். வாசல்வழியாய் பிரவேசியாமல் (என் வழியில் இல்லாமல்), வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." (யோவான் 10:1,9)
இயேசு வாழ்ந்த காலத்திலிருந்து 600 வருடங்கள் கழித்து ஒருவர் இதை புரட்டுகிறார் என்றால், மேலே இயேசு சொன்னது போல் அவர் யார்? அவர் கள்ளனும், கொள்ளைக்காரனுமாயிருக்கிறார்.
முகமது தீர்க்கதரிசி அல்ல. எனவே அவர்களின் குரான் என்பது தவறானது.

இஸ்லாமியர்கள் முகமதுவை காப்பாற்ற இப்படி யோவானுக்கு தாவி பரிசுத்த வேதாகமத்தை புரட்டுவது தவறு. அவர்களுடைய முயற்சி முழுதும் தோல்வியாகிறது.


சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் என்பவர் "பரிசுத்த ஆவியானவர்" ஆவார். 


காணொளிகள்: https://islam-qanda.blogspot.com/



--------- In English -----------

Question #59:
About John 14:16 which talks about the comforter; Muslims debate that it is Muhammad?

Answer: NO, it is not Muhammad.

To begin with, You MUST read the following chapters John 14, 16, 10 and Acts 2, 8, 10.

Muslims will pick and interpret the scriptures according to their needs. Do not believe them. They pick one verse from here one verse from there just to save their Muhammad. But that attempt utterly fails as we uncover it in this article.

When Jesus mentioned about the "Spirit of truth" , "Comforter" he was talking about the "Holy Spirit". Definitely not about Muhammad. How do we know?

[1] John 14:16 "And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;"

Muhammad is "NOT with you for ever". He is dead. He died in the year A.D.632 . Muhammad's tomb is still there in Medina. There fore Jesus did not talk about Muhammad.

[2] John 14:17 "Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you".

Muhammad does not dwell with you, he is definitely NOT inside of you. For that as mentioned above he needs to be a spirit. (If you argue that He dwells in your mind and memory, then every family will say that their mom and dad who passed away are in their memory as well, so that argument is very silly to consider.)

When Jesus said, "Dwells with you" he was talking with the disciples. Muhammad did not dwell with the disciples of Jesus. His arrival was 500 years later, which is too late.

"Spirit of truth": Muhammad had a body, not a spirit. (Remember God is Spirit.)

In II Timothy 1:14 we read: "That good thing which was committed unto thee keep by the Holy Ghost which dwelleth in us."

Therefore Holy Spirit is the one that dwells in us.

[3] John 14:26 "But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you"


- It is explicitly and clearly mentioned that the Comforter is the "Holy Ghost". There is no need to explain any further. The Muslim's debate comes to a dead end here. Muhammad is NOT the "Holy Spirit"

- "He will teach you all things, whatsoever I have said unto you". Amazing!
Jesus said, "Love your enemies". How great this is !!
Muhammad said, "Kill the unbelievers". How silly is this?
Why Muhammad did not say what Jesus said above and "whatsoever" Jesus said? So the comforter is not Muhammad. Muhammad contradicts what Jesus said.

[4] John 16:14, 15 "He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you. All things that the Father hath are mine: therefore said I, that he shall take of mine, and shall shew it unto you"

Muhammad did not take from what Jesus said and proclaim. Jesus said I will rise again bodily, and he did. Muhammad denies it because it is too hard for him to believe, and if he did, there is no value for him anymore.
Jesus was greatly glorified in resurrection. With out the resurrection of Christ there is nothing to preach says apostle Paul. Muhammad did not glorify Jesus. He came 500 years later after all these events took place. Too late.

[5] John 15:26 

But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me:

Here we read that it is Jesus who sends the comforter. Even after this argument if they get stubborn, we can argue in the following way: In Quran, Mohammad was sent by Allah, In the Bible, Comforter was sent by Jesus. If they claim Comforter is Mohammad, then we by logic we see that Jesus is Allah. So all Muslims must worship Jesus. I don't understand how gullible are Muslims.

Jesus is not the God just for Christians. He says "I am the God of all flesh". Therefore all Muslims must worship Jesus.



Who is this "Spirit of Truth", when did He come to guide?

Acts 2:1-4
"And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place. And suddenly there came a sound from heaven as of a rushing mighty wind, and it filled all the house where they were sitting. And there appeared unto them cloven tongues like as of fire, and it sat upon each of them. And they were all filled with the Holy Ghost, and began to speak with other tongues, as the Spirit gave them utterance."

This is 50 days since resurrection of Jesus. Jesus lived on this earth for 40 days after resurrection, then he was taken up. 10 days later the Holy Spirit came upon them that waited on the upper room. Muhammad was born only in A.D. 570/571. Too late.

Acts 8:29 Then the Spirit said unto Philip, Go near, and join thyself to this chariot
Acts 10:19,20 While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.
Arise therefore, and get thee down, and go with them, doubting nothing: for I have sent them.
Acts 10:44-46 While Peter yet spake these words, the Holy Ghost fell on all of them which heard the word...For they heard them speak with tongues, and magnify God.

Here the Spirit is the one that Jesus said as Comforter and the Spirit of Truth. Notice in Acts 10:46 people magnify God i.e. glorify God as mentioned by Jesus in [4]

Books of Acts is the time Peter, Philip, Paul lived. This is nothing to do with Muhammad period. Because Muhammad came 500 years later.

Jesus said in John 14:6
"I am the way, truth and life. with out me no one can come to the father".
-Notice that Jesus did NOT say I am "a" way. Instead He said I am "the way".

Jesus said in John 10:1,9
"Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber"
" I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture."

After 600 years of have gone from the time of Jesus, a man called Muhammad comes and flips and twists the truth that is already established. So in which "way" does Muhammad takes the people according to Jesus? the "other way" which only a thief and robber enter.

Muslims are trying to save their Muhammad by quoting verse here and there, but their attempt has now utterly failed. Muslims are corrupting the truth, and it is wrong.
The Spirit of truth, the Comforter is the "Holy Spirit".

Tuesday, October 12, 2010

58. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த... மத தெய்வங்கள் எல்லாம் ஒன்றா?

பதில்: இல்லை.

அநேகர் எல்லா கடவுளும் ஒன்றுதான், ஒரே கடவுளைத்தான் எல்லாரும் வணங்குகிறார்கள்,
"All roads lead to Rome" என்று சொல்கின்றனர். இது தவறு.
"All roads lead to Rome?" என்ற வழக்கச் சொல்லை நாம் இங்கே கொண்டுவருவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதுபோல் ஆகும். ஆஸ்திரேலியாவில் எந்த சாலையில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. இலங்கையில் எந்த வழியில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. உலகில் எத்தனை சாலைகள் கடலில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகள் மலை உச்சியில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகளில் குழிகளும், பள்ளங்களும்? எத்தனை சாலைகள் மூடப்பட்டுள்ளன?

எல்லா கடவுளும் ஒரே கடவுள் அல்ல; ஒவ்வொரு கடவுளுக்கும் வேறுபட்ட குணங்கள், அந்த கடவுள்கள் சொல்லும் வேறுபட்ட கட்டளைகள்/
அறிவுரைகள் என உள்ளன. ஒரு அலுவகத்தில் காணப்படும் ஒவ்வொரு மேலாளர்களின் குணங்கள் மாறுபடுகிறதே. கடவுள்கள் சொல்லும் கட்டளைகள் மாறுபடும்போது அவை எல்லாம் எப்படி ஒரே கடவுள் என்று சொல்லமுடியும்?

எல்லா மதங்களும் நல்லதைத்தானே போதிக்கின்றன? என்று சொல்பவர்கள் அனைவரும் மதங்களில் காணப்படும் பொதுவான நீதி கட்டளைகளைத்தான் (Moral Law) ஒப்பிடுகின்றனர். ஆழமான போதனைகளை மறந்துவிடுகின்றனர். குறிப்பாக:

[அ] உலகம் எப்படி உண்டாயிற்று? (origin of the world, universe)
[ஆ] மனிதன் பூமியில் எப்படி தோன்றினான்? (origin of Human kind)
[இ] பாவ சுபாவங்கள், பாவத்தினின்று விடுதலை பெறுவது எப்படி? (Salvation)
[ஈ] மனிதன் மரித்தபின் எங்கே போகிறான்? (Life after death)
இதுபோன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு மதமும் ஒரு பதில் தருகின்றது.

இந்துமதத்தில் 33 கோடி தேவர்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சக்தியும், குணமும் உண்டு என்று அறிகிறோம்; அழிக்க, காக்க, உண்டாக்க (இம்மூன்றும் திரித்துவம்), செல்வத்துக்கு, அறிவுக்கு, நீதிக்கு....சூரியன், நாகம் என கணக்கில் அடங்கா கடவுள்கள். சிலை வணக்கம் கூடாது என்று பைபிளில் தெளிவாக உள்ளது. சிலையின்றி இந்து மதத்தில் எப்படி? பலிகேட்கும் கடவுள்களும் அவைகளில் அடங்கும். இந்துக்களின் கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்ற நம்பிக்கையும், மறுபிறவி அல்லது மறுஜென்மம், கர்மா போன்ற கொள்கையும் மற்ற சமயங்களில் இல்லை.[1]


இஸ்லாமிய சமயத்தில் கடவுள் ஒருவரே என்றும் நபி முகமதுவை பின்பற்றவேண்டும் என்று சொல்கின்றனர். இயேசுவை [குமாரனாகிய] தேவன் என்று சொல்வதில்லை; அவரை ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்கின்றனர். ஆனால் இயேசு ஒரு கன்னிகையிடத்தில் பிறந்தார், மரித்தோரை உயிர்ப்பித்தார் என்று அவர்கள் வேதத்தில் இருந்தாலும் அவர் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், அவர் தேவன் அல்ல என்றும் சொல்கின்றனர்.
மொசாப் ஹசான் யூசுஃப் (Mosab Hassan Yousef) என்பவர் சொல்லும்போது, "தங்களது இஸ்லாமிய நம்பிக்கையைச் சார்ந்தவர்கள் அல்லாதவர்களை கொல்லுங்கள் என்று அவர்களின் வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. முகமது என்ற ஒழுங்கு நெறியற்ற ஒருவரை, பலரை கொலை செய்தவரை தங்களுக்கு முன்மாதிரியாக வைத்துக்கொண்டுள்ளனர்" என்று சொல்கிறார்" [2].



மேலும், இவர்: "இஸ்லாமியர்கள் எனக்கு விரோதிகள் அல்ல, அவர்களுடைய நபியும், அவர்களின் இரட்டை வேடம் உடைய கடவுளும்தான்" என்கிறார்.
கிறிஸ்தவ சமயத்தில் தேவன் ஒருவரே, அவர் திரித்துவ தேவன் (Trinity) என்று கூறப்படுகின்றது; மேலும் குமாரனாகிய தேவன் பூமியில் மனிதனாக வந்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்கிறது. மேலும் கொலை செய்யாதிருப்பாயாக, உங்கள் சத்துருக்களை நேசியுங்கள், தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்று பைபிளில் இருக்கின்றது; இயேசு பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளையோ சிநேகிக்கிறார்; "நீ உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்று இயேசு சொல்லியிருக்கிறார். பிறர் எனப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சரி. விதிவிலக்கு ஏதும் இல்லை.[3]



புத்தமதத்தில் உயிர்களை கொல்லாதே என்று சொல்லப்பட்டாலும், கடவுள் இல்லை என்ற அடிப்படையை உடைய மதமாகும். புத்த மதத்தின் வேதத்தில்: சிருஷ்டிகர் (C
reator) என்று ஒருவர் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலகம் உண்டாக்கப்பட்டது, அதின் ஜீவராசிகள் எல்லாம் உண்டாக்கப்பட்டன என்பது எல்லாம் குப்பை என்கிறது[4]. புத்தர் இந்து மதத்தை ஏற்கமறுத்தவர்; இந்துக்களின் வேதங்களை தள்ளிவிட்டவர்; மோசேயினால் பெறப்பட்டவகைளை ஒதுக்கி தள்ளியவர். என்றால் எப்படி எல்லா கடவுளும் ஒரே கடவுளாக முடியும்?



இப்படியிருக்க எல்லாரும் ஒரே தேவனை வணங்குகிறோம் என்று எப்படி சொல்லமுடியும்? எல்லாரும் ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களுடைய வேதங்களை கொண்டுவந்து ஆதாரம் காட்டசொல்லுங்கள்.

கேள்வி பதில் 49ல் http://tamilbibleqanda.blogspot.com/2010/07/49.html நம்முடைய தேவன் ஒருவரே தேவன்; வேறு ஒருவர் இல்லை என்று பல வசனங்கள் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும்:
- நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். மேலும் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். இதில் வேறு வழியில்லை என்றாகிறது அல்லவா?
- நம்முடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தியவர் இயேசு ஒருவரே. (இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை) சிலுவையில் மரித்து உயிருடன் எழும்பி பின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் ஒருவரே.
- அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை."
- யோவான் சொல்லும்போது: "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் [நித்திய] ஜீவன் இல்லாதவன்."

ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களின் சில கொள்கைகள் அல்ல அனைத்து கொள்கைகளும் ஒன்றாகவே இருக்கவேண்டும். கொள்கைகள் மாறுபட்டால், பாதை மாறுபடும்; பாதைமாறினால் செல்லும் இடம் மாறும். எங்கே செல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம்!



-----------In English---------

Question #58: Is the God of Hindus, Christians, Muslims, Buddhists .... the same?

Answer: NO

Many say that All gods are the same, we all are worshiping the same god. All roads lead to Rome. This is wrong.

It is illogical to bring the saying "All roads lead to Rome" in this context. For example we all know for sure that no one can go to Rome, no matter on which road a man takes from Australia and Sri-Lanka. How many roads end in the peak of a mountain? How many roads end up in the Ocean? How many roads are closed? So many roads are with potholes and ditches.

Nay, not all gods are the same. Each god has its own characteristics. Instruct different moral teachings, commandments, which exclude each other.We see that the directors and managers in a small office itself vary by character. If that is the case, when god's characters and teaching are different, how could then one say they all are the same god?

Many say, " Aren't all religions teach good things?". Well, such people compare only the common Moral Law found all the religions. But they completely forget about the deep doctrines, beliefs and teachings such as:
[a] The origin of the world, universe
[b] The origin of mankind on earth
[c] How to get delivered from the nature of sin and sin? [Salvation]
[d] Life after death
Each religion gives different views, for such questions.

In Hinduism there are 330 million gods. Each god has a unique power and character. There are innumerable gods like To create, To protect, To destroy (these three are trinity), for wealth, for wisdom, for judgment..... Sun, Snake and so on. In the Holy Bible such Idol worship is prohibited. Could you imagine Hinduism without Idols and statues? Some of their gods ask animal sacrifice. The belief that Hindus have is "by dipping themselves in the holy river Ganges, their sin's will be washed away". Their beliefs such as Karma, incarnations in to next birth, is not present in other religions. [1]

In Islam they say "there is one god, and all must follow Muhammad". They deny Jesus as God [the Son]. They call him as prophet. Though they say that Jesus was born of a virgin, he raised the dead, they say that he was not crucified, and he is not god. when Mosab Hassan Yousef says "In the Koran many places it is mentioned to kill all the unbelievers or infidels that do not believe in their god. Moreover their highest example or model is a man who committed many murders and indecent fellow"[2]. (Watch first video). "Muslims are not my enemies, their messenger and their god that has dual personality"

In Christianity we know that "God is one, in three persons (Trinity)". Also God [the Son] came to earth in the form a man and gave his life for us, to save us from our sins and rose up on the third day. Bible teaches that "Thou shalt not kill. Love your enemies. God is Love". Jesus loves the sinners but not the sin. "Love your neighbor as you love yourself" said Jesus. It does not matter who those "neighbors" are, no exception. [3] (Watch second video)

In Buddhism though it talks about do not kill, it is a religion that has no god as its basis. It is clearly mentioned in the Buddhist text that there is not such one as Creator. (Watch third video) It is a junk and rubbish to say that all living things were created, and all that we see are not created[4]. Buddha was a man who rejected the Vedas of Hindus, rejected the commandments obtained by Moses. If so how can all gods be the same god? How then we say that we all worship to the same God. If any one argues that we all worship the same God, first ask them to bring their religion' books to provide such evidence.

In the Q&A #49 many verses have been given to show that "Our God is the only God, there is no other God than Him".

Moreover Jesus said that
- "I am the way truth and life, No one can come to the father but by me". Doesn't is say that there is no other way other than Jesus himself?
- It is only Jesus who shed his blood for us, for our sins. (There is no redemption of sin without shedding of blood).
- It is only Jesus who rose from the dead on the third day and was taken up to the heaven.
- Apostle Paul says that, " Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved."
- John says, " He that hath Son has [eternal] life, he that does not have Son of God, does not have life"

For those who say that they worship the same god, their doctrines and teachings should be the same. Not few doctrines and teachings. All doctrines and teachings should be the same. If the teachings differ then the way in which we go (or follow) will be different. If the path is different, the destination is different. How important it is find out if we are in the correct path!



References:
[1] http://www.religionfacts.com/hinduism/beliefs.htm[2] From the book "Son Of Hamas" and http://www.sonofhamas.com
[3] sermon on the mount, Book of Matthew: chapter 5 and Clip from passion of Christ.
[4] http://en.wikipedia.org/wiki/God_in_Buddhism

Monday, October 4, 2010

57. புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?

பதில்: ஆம் ! தசமபாகம் (tithe) செலுத்தவேண்டும்.

முன்னோட்டமாக:
தசமபாகம் என்றால் பத்தில் ஒரு பங்கு. தசம் என்றால் பத்து. (ஹிந்தியில் தஸ் என்றாலும் பத்து). கணிதத்தில் வரும் எண்களிலும் புள்ளி வரும் இடத்தை "தசம ஸ்தானம்" என்பர். தேவன் நமக்கு கொடுப்பதில் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு திரும்ப செலுத்தவேண்டும். புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தைக் குறித்து பற்றி பார்ப்போம்.

[A] தசமபாகம்:

 [1] லூக்கா 11:42ல் இயேசு சொல்லும்போது: "பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே".

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்பதில் தசமாகம் என்ற கட்டளையை விடாதிருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காணலாம். கட்டளை என்றால் கைக்கொள்ளவேண்டும் அல்லவா?


[2] இயேசு சொன்னார்: லூக்கா 18:10-12 "இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."

மேலே சொல்லப்பட்டதில் இவர்கள் ஜெபித்தது புதிய ஏற்பாட்டு காலத்தில்தான். அங்கே தசமபாகம் செலுத்தும் பழக்கம் இருந்தது என்பது மறுக்கப்படமுடியாதது.

[3] அப்போஸ்தலனாகிய பவுல் மெல்கிசெதேக் பற்றி எபிரெயர் 7ல் சொல்லும்போது. ஆபிரகாம் இவனுக்கு "எல்லாவற்றிலும்" தசமபாகம் செலுத்தினான் என்று சொல்லுகிறான். நாம் நன்கு அறிவோம் பவுல் புதிய ஏற்பாட்டுகாலத்தை (கிறிஸ்து பிறந்த பின்பு வரும் காலத்தைச்) சேர்ந்தவர். பவுலின் காலத்திலும் தசம
பாகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரிந்ததால் அதைக்குறித்து அவர் தைரியமாக எழுதுகிறார். இது பவுலுடைய காலத்தில் தசமபாகம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை உறுதிசெய்கிறது.


மல்கியா 3:8-10ல் "மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".

தேவனையே சோதித்துப் பாருங்கள் என்று இந்த ஒரே ஒரு விஷயத்தில்தான் பைபிளில் உள்ளது. எனவே தசமபாகம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் அப்படி நீங்கள் கொடுக்காவிட்டால், வீண்செலவுகள் மருத்துவர் செலவு, வாகனச் செலவு ... என்று வரும். ஏனெனில் நீங்கள் தேவனுடைய பணத்தை திருடிய குற்றவாளிகள் ஆகிறீர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட விளக்கம். மேலும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாமல் காணப்படும்.


[B] காணிக்கை
தசமபாகம் வேறு, காணிக்கை வேறு. தசமபாகம் மட்டுமன்றி, நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். ஏழைகளுக்கு உதவுவது என்பதும் இதை உள்ளடக்கும்.

பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். இது காணிக்கை பற்றிய வசனம்.

சிந்தனைக்கு:
1998 ம் வருடம் ஒரு போதகர் திடீரென்று என் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலையில் வந்தார். சற்றுநேரம் பேசிவிட்டு நான் அவரை வழியனுப்பிவைக்கும் போது என்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினேன். அச்சமயம் அவ்வளவுதான் என்னுடைய பணப்பையில்(Wallet) இருந்தது. அதை கொடுத்துவிட்டேன். என்னிடம் இருந்ததை கொடுத்துவிட்டதால் என்னிடம் அப்போது வேறு பணம் ஏதும் இல்லை. அவர் சென்றபின் சாப்பிட என்னசெய்வது...என்று யோசித்தேன். என்னிடத்தில் வாகனம் இல்லாத காலம் அது. வங்கிக்குப் போகவேண்டுமென்றால் சற்றே தூரம். சரி அருகிலுள்ள கடைக்கு சற்றே நடந்து போய்வரலாம் என்று சொல்லி "Lucky's" (தற்போது அதன் பெயர் Albertsons) என்ற ஒரு கடைக்கு உள்ளே சென்றேன். அங்கே மிகவும் வயதான ஒரு மூதாட்டி என்னிடம் வந்து, "Here.., this is for you" என்று சொல்லி கையில் ஏதோ கொடுத்துவிட்டு சென்றார்கள். கையை திறந்துபார்த்தேன் 20 டாலர். ஏறெடுத்து அவர்களைத் தேடியபோது அந்த மூதாட்டி எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மனதில் ஒருவித ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும், அதே சமயம் தேவன் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறாரே என்பது நெஞ்சைத் தொட்டதால் உள்ளே அழுகை கலந்த உணர்வும்.

"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்பதற்கு இது ஒரு சிறிய சாட்சி. நிச்சயமாக உங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Friday, October 1, 2010

56. ஆரியர்கள் யார்? பைபிளில் உண்டா?

யோபு 4:10-ல் சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம். (The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken) என்று வாசிக்கிறோம். சிங்கத்துக்கு எபிரேய மொழியில் பல வார்த்தைகள் உள்ளன. அதில் ஒரு வார்த்தை "ஆரிய" (ariy) என்பது ஆகும்.

of the lion, ארי 'ariy
of the fierce lion, שחל shachal
of the young lions, כפיר kĕphiyr

ஆரிய என்பதற்கு: மான்புமிகு, உயர்ந்த என்ற பதத்தில் ரிக் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரிய மொழி என்பது இந்திய-பெர்சிய (Indo-Iranian) மொழியாகும். இம்மொழியானது சமஸ்கிருதம் என்று பெரிதும் சொல்லப்படுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sanskrit). இதைப்பற்றி பெர்சிய நாட்டின் வரலாறு மற்றும் இலக்கியங்களில் விரிவாக படிக்கலாம். விவரங்களுக்கு பெர்சியாவின் நூல்களஞ்சியங்களுக்கு செல்லவும். ஆரிய என்பதே ஈரான்
என பின்பு திரிந்தது (ariya became iran) . பாரசீக மன்னன் "தரியு" தான் ஒரு ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். அகாஸ்வேரு என்னும் அரசனும் ஆரியன் ஆவான். பைபிளில் இந்த பாரசீகர்களைப் பற்றி தானியேல் புத்தகத்தில் வாசிக்கலாம். எனவே ஆரியர்கள் யார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சில பெர்சிய மன்னர்களைப் பற்றி வேதாகமத்தில்:
[1] நெபுக்காத் நேச்சார் (கி.மு 605– 562)
பைபிளில் II இராஜாக்கள் 24, 25 II நாளாகமம் 36 எஸ்றா 1-6, நெகேமியா 7, எரேமியா 21-52 மற்றும் தானியேல் முழுதும். இந்த பெர்சிய அரசனைப் பற்றி பைபிளில் அநேக இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் எப்படி இஸ்ரவேல் ஜனங்களை (யூதர்களை) அடிமையாக்கி பாபிலோனுக்கு கொண்டுசென்றான் என வாசிக்கிறோம். அவன் எப்படி ஒரு சிலை செய்து எல்லாரும் அதை வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான் என்றும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதை வணங்கமறுத்து நெருப்பில் போடப்பட்டும் சாகாமல் போனதால் அவன் இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் என்றும் வாசிக்கிறோம். மேலும் தானியேலை நெபுக்காத்நேச்சார் எப்படி உயர்வாக மதித்தான் என்றும் வாசிக்கிறோம்.

[2] கோரேஸ் [Cyrus] ( கி.மு. 559-530)
II நாளாகமம் 36 எஸ்றா 1-5, தானியேல் 10ல் படிக்கலாம்.

[3] தரியு I, II, III [Darius] (கி.மு.
336 to 330)
எஸ்றா 4-6, தானியேல் 5-11ல் படிக்கலாம்.தரியுவை மாமன்னர் அலெக்ஸான்டர் வென்றான் (கி.மு. 356–323 Alexander the great) .

 இந்தியாவைப்பற்றி "இந்து" தேசம் ( הֹדּוּ Hoduw -  என எபிரெய மொழியில்)  என்று பைபிளில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸிந்து தேசம் என்பது, இந்து தேசமானது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவானது பெர்சிய (பாரசீக) மன்னர்களின் ஆட்சியில் (Persia, Currently known as Iran) இருந்தது. இதை எஸ்தர் 1:1ல் (கி.மு. 486-465) இப்படியாக வாசிக்கிறோம்: "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது". The king of Persia Xerxes (Ahasuerus) ruled 127 Nations from India to Ethiopia"https://www.wordproject.org/bibles/audio/20_farsi/b17.htm    இங்கே ஒலிவடிவில் பெர்சிய பைபிளில் ஹிந்த் என்று சொல்லப்பட்டுள்ளது.  எனவே அப்போது இந்து என்பது மதமல்ல. பின்பு அது மதத்தின் பெயராக மாறியது.

அப்போதைய இந்தியா (என்பது பல நாடுகளை உள்ளடக்கியதாகும். அதில் பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், பர்மா, அந்தமான் தீவுகள் என்பவைகளும் அடங்கும் என்பதை பின்பு வந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆளுகையின் வரலாற்றில் படித்தால் தெளிவாக காணலாம். எனவேதான் "All India" என்ற பதத்தையும் இந்திய அரசியல் சாசனத்தில் (Indian constitution) காணமுடிகிறது. "All India Radio" என்ற உபயோகமும் இதற்கு ஒரு சான்று.

குறிப்பாக இந்த ஆரியர்கள் என்பவர்கள் சிலைகளை வணங்கும் பழக்கமும், சிலைகளை கோவில்களில் வைத்து (II இராஜாக்கள் 5:17,18) ஒரு திருவிழா என்று கொண்டாடிய பழக்கமும் உடையவர்கள் (
I இராஜாக்கள் 12:32). அக்கினியில் வார்த்து பூஜைசொல்லுதல், வேள்விகள் என்ற பழக்கங்களை உடையவர்கள். ( எரேமியா 7:18)

இஸ்ரவேலர்களின் வரலாற்றிலும் சில அரசர்கள் உண்மையான தேவனை விட்டுவிட்டு மற்றவர்களுடைய பழக்கத்தைப் பார்த்து பின்பற்றியதையும் பார்க்கிறோம்.
சில ஜனங்கள் (pagan worshipers) தங்களுடைய பிள்ளைகளையே பலி கொடுத்தார்கள் என்று எசேக்கியேலில் வாசிக்கிறோம். ஒரு ராஜா தன் மகனை தீமிதிக்கப்பண்ணினான் என்றும் வாசிக்கிறோம். இதனால் இவர்கள் அடிமைகளாவும் சுற்றியுள்ள ராஜாக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்க தேவன் அவர்களை விட்டுவிட்டார். இவை அனைத்தும் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நடந்தவை. (4000 ம் ஆண்டுகளுக்கு முன்பு).

இன்றும் மற்ற மதங்களில் காணப்படும் சில பழக்கத்தை பார்த்து தங்கள் மதத்தில் பின்பற்றும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். உதாரணமாக பாதயாத்திரை என்று தலையில் சுமை சுமந்துசெல்லும் பழக்கம் கேரளாவில் உருவானது. பின்பு இது தமிழக இந்துக்களிடையே தொற்றிக்கொண்டது.
தற்போது இதை ரோமன் கத்தோலிக்க கூட்டத்தார் பின்பற்றி, வேளாங்கன்னிக்கு நடந்து போகிறார்கள். இந்த விநோத நிகழ்வு என்னுடைய காலகட்டத்தில் புதிதாக உருவாகியதை கண்கூடாக கண்டேன். இதை ரோமன் கத்தோலிக்கர்களிடமே விசாரித்தபோது, "அவர்கள்தான் தங்கள் தெய்வங்களுக்கு இப்படி நடக்கமுடியுமா, நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று காட்டவே" என தெரியவந்தது; இது ஜனங்களின் மதியீனத்தை அல்லவா காட்டுகிறது! உலகின் வேறுபகுதியில் வசிக்கும் ரோமன்கத்தோலிக்கர்கள் யாரும் இப்படியாக பாதயாத்திரை செல்வதில்லை. இதைப்போலவே இஸ்ரவேலரும் இந்த ஆரியர்களுடைய பழக்கங்களான நரகலான விக்கிரகங்களுக்கு பலி, வேள்வி போன்றவைகளை செலுத்தி தேவனுடைய கோபத்திற்கு ஆளாகினர். பைபிளில் வாசிப்போம்:

எசேக்கியேல் 23:39 "அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்" என்று இங்கே நம்முடைய தேவன் சொல்கிறார்.
II இராஜாக்கள் 21:6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
ஓசியா 4:13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்;


ஆரியர்கள் வேறு, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு. இந்த ஆரியர்கள், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த சில முறைகளைத் திரித்து அந்நிய தெய்வங்களுக்கு பலியிடுதல் போன்ற பழக்கங்களையும்
விநோதமாக பூஜை செய்தவர்களும் ஆவர்.
ஆனால் சிலைகளை வணங்கக்கூடாது என்று நம்முடைய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்:
ஏசாயா 44:15-19. "மனுஷனுக்கு அவைகள்(மரங்கள்) அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை."

தாவீது சொல்லும்போது: சங்கீதம் 16:4 "அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." என்கிறார்.
அப்போது இந்தியாவில் வசித்தவர்கள் ரிக் என்னும் வேதத்தில் சொல்லியபடி "அக்கினி", "மழை", "காற்று", "சூரியன்" என இயற்கை வழிபாடுகளை உடையவர்களாகவே இருந்தனர். பலிகொடுப்பது போன்ற பழக்கங்கள் வர "யூதர்கள்" மற்றும் "ஆரியர்களின்" கலாச்சார பாதிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் முதன்முதலில் பாவம் செய்தவன் பலி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது பைபிளில்தான், அதுவும் தேவன் மோசேயிடம் சீனாய்மலையில் கொடுத்தார் என்று யாத்திராகமத்தில் படிக்கும்போது நாம் நன்கு அறிவோம். யூதர்கள் அந்த கட்டளை பெற்று 5770 வருடங்களாகின்றது. (யூதர்களின் வருடம் அவர்கள் எகிப்தைவிட்ட அன்று இரவுதான் ஆரம்பிக்கின்றது.)
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான தேவனின் திரித்துவம் (தேவன் ஒருவரே, ஆனால் மூன்று ஆளத்துவங்கள் என்ற Trinity: God the father, God the Son, God the Holy Spirit) என்பது, இந்துக்களிடையேயும் காணப்படுகிறது. "ஒரு கடவுள் - மும்மூர்த்திகள்" என்று பட விளக்கத்துடன் யாரோ ஒரு கதையில் இவர்களுக்கு சொன்னதுபோல் உள்ளது என்பது ஆச்சரியமளிக்கின்றது. 


இப்படியாக சிலர் சொல்கின்றனர்:
”திரிசூலத்தில்” -மூன்று கம்பிகள் ஒன்றாய் இணைகின்றன. தேவன் மூன்று ஆளத்துவங்கள், ஆனால் தேவன் ஒருவரே.
“விபூதி பூசுவதில்” - மூன்றுகோடுகளும் (தேவன் மூன்று ஆளத்துவங்கள்) ஒரு புள்ளியும் (ஆனால் தேவன் ஒருவரே). நாமம் போடுவதிலும் அதேதான். 


இது உண்மையா என்று நிரூபிப்பதைவிட, பைபிளில் சொல்லப்பட்டவைகளில் பல விஷயங்கள் சில மாற்றங்களுடன் இந்துசமயத்தில் பழக்கத்தில் காணப்படுகின்றன என்பதே மிகவும் உண்மை. இவை எல்லாம் யூதர்களிடம் தேவன் கொடுத்தவை. இந்துக்கள் பைபிளை ஒருதடவையாவது படிக்கவேண்டும். அப்போது ஆச்சரியமான காரியங்களைக் காண்பார்கள்.