Monday, December 28, 2009

27. சிலைகளை வணங்கும் பழக்கம் முதலில் எங்கே ஆரம்பித்தது? எப்போது?

[1] ஆதியாகமம் 31:30 லாபான் யாக்கோபிடம், "இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய்?" என்று கேட்டான். ஏனெனில் ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்திருந்தாள். இங்கேதான் சிலை அல்லது சொரூபத்தைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

[2] இனி இந்தப் பழக்கம் எங்கே ஆரம்பித்தது என்று தேடுவோம்:
சிலைகளை லாபான் வணங்கி வந்தான். இந்த லாபான், ரெபெக்காளின்
சகோதரன் . இவர்களுக்கு தகப்பன் பெத்துவேல். (ரெபெக்காள்: ஈசாக்கின் மனைவி/ யாக்கோபின் தாய்)

ஆதியாகமம் 22:20-23 இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்; அவர்கள்: ஊத்ஸ், பூஸ், கேமுவேல், கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.

ஆதியாகமம் 11:31
ல் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் குடும்பம் "ஊர்(ur)" என்கிற கல்தேயரின் தேசத்துப்பட்டணத்திலே குடியிருந்தது. இது மெசெப்பத்தோமியாவிலே இருந்தது என்று ஆதியாகமம் 24:10ல் வாசிக்கிறோம்.


மெசெப்பத்தோமியா யூப்ரிடிஸ்-Euphrates (ஐப்பிராத்து) மற்றும் டிக்ரிஸ்-Tigris (இதெக்கெல் ஆதி 2:15) என்ற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும். இது தற்போதைய ஈராக் பகுதியாகும்.

எனவே மெசெப்பத்தோமியாவில்-தான் இந்தப் பழக்கம் ஆரம்பமானது.

[3] சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே இடங்களை நிம்ரோத் என்பவன் அரசாண்டான். (ஆதி 10:10). நிம்ரோத் என்பவன் காம் என்பவனுக்கு பேரன். காம் என்பவன் நோவாவின் மகன். இந்த பாபேல் என்னும் இடத்தில்தான் ஜனங்கள் ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதுவும் மெசெப்பத்தோமியா பகுதியைச் சேர்ந்ததாகும். தொல்பொருள் ஆராய்ச்சியில் "ஊர்" என்ற பகுதியில் இருந்த சிக்குராத் (ziggurat) கோவில்களில் சின் அல்லது நன்னார் என்றழைக்கப்படும் தெய்வங்களை வணங்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு கோவில் சுவரில் நிலா மற்றும் சிலை வழிபாட்டைச் செதுக்கியிருப்பதைக் காணலாம். கி.மு. 3000-2500 என்று கணிக்கப்பட்டுள்ளது.


நிம்ரோத் ஆட்சியில் இந்த சிலைவழிபாடு ஆரம்பமானது.



Thursday, December 17, 2009

26. தேவனின் பிள்ளைகள் காதலிப்பது தவறா? அதுவும் உண்மையான அன்புதானே? உண்மையான காதல் என்ன தவறா?

அன்பை நான்கு 'பெரிய வகையாக'ப் பிரிக்கலாம்

[1] Agape = God's love - தேவனின் அன்பு
[2] Philia= brotherly love - சகோதரத்துவ அன்பு
[3] Eros = romantic love - காதல் என்னும் அன்பு
[4] Storge = parents love towards their children. -
குடும்பம்: பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு.

உண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான்
(Agape love). தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.

மனிதர்களின் அன்பு என்பது "காரணங்களை/நிபந்தனைகளை" அடிப்படையாகக் கொண்டு உள்ளது (conditional love). தேவனின் அன்பு நிபந்தனையற்றது (Unconditional love). நாம் கறுப்போ, வெள்ளையோ, குட்டையோ, மிக உயரமோ, ஏழையோ எப்படி இருப்பினும் அவர் நம்மை நேசிக்கிறார். நீங்கள் "ஏன் இவர் அந்த நபரைமட்டும் காதலிக்கின்றார்?" என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு பதிலாக சில காரணங்கள் இருக்கும் (தோற்றம், குணம், நிறம், பணம்... என ஏதோ). காதல் என்பது Eros என்னும் [3]ம் வகையைச் சேர்ந்தது. அதில் "கண்களின் இச்சை" (lust of the eye) உள்ளது. இச்சை தவறு என்று வேதம் சொல்லுகிறது, என்றால் காதலிப்பது?


பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தன் கண்ணுக்கு பிரியமான ராகேலைத் லாபானின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டான், ஆனால் அதில் சில சிக்கல்கள். சிம்சோனின் பெற்றோர் அவன் விருப்பத்தை எதிர்த்தனர். அவன் மனைவி வேறொருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். தேவன் மோசேயுடன் பேசும்போது கூட "ஒரு பெண் நியமிக்கப்பட்டால்.." என்று வாசிக்கிறோம்.


ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடியதை அறிவோம். யூதர்களின் முறையில் நிச்சயதார்த்தம் செய்தபின்தான் திருமணம் நடைபெற்றது.
ரூத் என்னும் சரித்திரமும் அப்படியே சொல்கின்றது. இயேசுவின் தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள் என்று அறிவோம். இயேசு அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து நமக்கு உதாரணமாக இருந்துள்ளார். கானாவூர் கலியாணத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். தமிழ் நாட்டில் இந்து, முஸ்லீம் என்னும் மதங்களிலும் கூட நிச்சயித்து திருமணம் செய்வது பொதுவான பழக்கம். வெளிநாடுகளில் தேவ பயமில்லை, எனவே நிச்சயம் செய்து திருமணங்கள் நடப்பது மிகவும் குறைவு.

நீங்கள் காதலிப்பதை தேவன் தடை செய்வதில்லை. ஆனால் அதற்குப்பின்வரும் விளைவுகளுக்கு அவர் பொறுப்பும் அல்ல. எனவே அவரிடம் போய் புகார் செய்யாதீர்கள்.

ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் "சேத்" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.

II கொரி 6:17,18
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.


காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்!
எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.


.

Wednesday, December 9, 2009

25. பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

கேள்வி: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள் (மாற்கு 16:17) இயேசு பிசாசை துரத்தவே அதிகாரம் கொடுத்தார். இப்படியிருக்க, பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

இரண்டு வசனங்களை முதலில் வாசிப்போம்.
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

லூக்கா 13:16
இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

மேலே இரண்டு விதமான கட்டுகளைக் காண்கிறோம்.
முதலாவது பிசாசு ஆயிரவருட ஆளுகைக்கு முன்பு கட்டப்படுகின்றான். "பிசாசைக் கட்டவேண்டும்", "பாதாளத்திற்கு அனுப்புதல்" என்னும் உபயோகம் இங்கிருந்து வந்தது.

இரண்டாவது 18 வருட கூனி பிசாசின் கட்டில் இருந்தாள், இயேசுவால் விடுவிக்கப்பட்டாள். நாமும் கூட பிசாசின் பாவக்கட்டில் இருந்தோம். தேவன் நம்மை இரட்சித்தார், இப்போது அந்தக் கட்டிலிருந்து விடுதலையாயிருக்கிறோம். எனவே இங்கே "கட்டு" என்பது அடிமையாயிருப்பது என்றும் பொருள்படும்.

மத்தேயு 12:29. அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். இங்கே ஒரு உதாரணம்/உவமை சொல்லப்படுகின்றது.
பிசாசின் வல்லமையை ஜெபத்தின் மூலம் கட்டமுடியும். அடுப்பை எரியவிடு என்றால் அடுப்பிலுள்ள விறகு என்பதுபோல், பிசாசைக் கட்டி என்றால் அவன் வல்லமையைக் கட்டி என்றுதான் நான் புரிந்துகொண்டுள்ளேன். வெளி 20:2 ல் கூறப்பட்டுள்ள சம்பவம் 1000 வருட ஆளுகைக்கு முன்பு உண்மையிலேயே கட்டப்படுதல்.

"சுட்டெரித்தல்": எலியா
தன்னை அழைக்க வந்தவர்களை வானத்திலிருந்து அக்கினி இறக்கி சுட்டெரித்தான். மேலும் ஒரு இடத்தில் சீஷர்கள் எலியா செய்ததுபோல் நாமும் அக்கினியால் இவர்களை சுட்டெரிப்போமா என்கின்றனர். எனவே இங்கிருந்து சுட்டெரித்தல் என்கிற உபயோகம் வந்திருக்கக்கூடும். ஆனால் பிசாசை அக்கினியால் நாம் சுட்டெரித்துவிட முடியாது, தேவன் அதற்கென்று ஒரு நாள் வைத்துள்ளார். யோபையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் தேவன் ஒரு வேலி அடைத்து பாதுகாத்தார் என்று வாசிக்கிறோம். அது ஒரு அக்கினிபோன்ற வேலி என்றும் சொல்லப்படுகின்றது. (Wall of fire). நம்மைச்சுற்றி [தேவனின்] அக்கினிமதில்கள் இருந்தால் பிசாசானவன் நம்மைத் தொடமுடியாது.

எனவே [வல்லமையைக்] "கட்டுதல்" என்பதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது, ஆனால் "அக்கினியால் எரித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல்" என்பவை சரியான உபயோகம் என்று சொல்லமுடியாது.

Monday, December 7, 2009

24. தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்றால் அவர் ஏன் நரகத்தை உண்டாக்கி மனிதர்களை அங்கே அனுப்பவேண்டும்?



இப்படியாக ஒரு கேள்வியினை உலகத்தார் எழுப்புகின்றார்கள்: "If God is love, How could a God of love send people to the lake of fire (or hell)
?". எப்படி அன்பானவர் நரகத்தை உண்டாக்கி மனிதனை அங்கே தள்ளமுடியும்?

'அன்பே கடவுள்' என்று அநேக இடங்களில் வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது எங்கிருந்து வந்தது என்றால்: I யோவான் 4:7,8லிருந்து
7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (God is Love)

இயேசு மத்தேயு 25:41ல் "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்." என்று கூறினார்.

"தேவன் பிசாசுக்காகவும், அவனுடைய [விழுந்துபோன] தூதர்களுக்காகவும் மட்டுமே அக்கினிக்கடலை உண்டாக்கினார்".

நீங்கள் பிசாசை பின்பற்றினால், அல்லது பிசாசின் கிரியைகளுக்கு உட்பட்டால், நீங்களே பிசாசின் பின்னாகச் செல்கின்றீர்கள், பிசாசின் பிள்ளைகளாகவும் அவனுடைய கூட்டத்தாராகவும் ஆகின்றீர்கள். எனவே தேவனல்ல, பிசாசே உங்களைத் தனக்கென்றும், தன்னுடைய கூட்டத்தாருக்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்கள்? குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள்.

எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

தேவன் மனிதனுக்காக நரகத்தை உண்டாக்கவில்லை. [மீண்டும் ஒருமுறை படியுங்கள்]. 


மனிதன் பாவத்திலிருந்து விடுபடும்படி தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இது தேவன் நம்மேல் வைத்த அன்பினால்தான். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவர் அன்பாகவே இருக்கிறார். "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புகூருங்கள்" என்று சொல்கின்றார். நம்மை நரகத்துக்கு அனுப்புவது அவரது சித்தமல்ல. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையவேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கின்றது.

.

Wednesday, December 2, 2009

23. தேவன் ஏன் பிசாசை [சாத்தானை] உண்டாக்கினார்?


எசேக்கியேல் 28:15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
எசேக்கியேல் 28:12 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

எசேக்கியேல் 28:16,17 உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்;

ஏசாயா 14:13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,ஏசாயா 14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.


தேவன் அவனை உண்டாக்கியபோது அவன் ஒரு பூரண அழகிய தேவதூதன். பாவத்தினால் விழுந்துபோனான்.

அவனை பிசாசாக தேவன் உண்டாக்கவில்லை.

.