Wednesday, April 21, 2010

37. அப்போஸ்தலனாகிய யோவான் இன்னும் உயிரோடிருக்கிறாரா இல்லையா?

கேள்வி:
மத் 16:28. இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 21:22,23 அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.

எனவே யோவான் இன்னும் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?


பதில்:
மேலே உள்ள படமானது துருக்கியில் எபேசுவிலே உள்ள யோவானின் கல்லறை என்று சொல்லப்படுகின்றது. ரோமர்கள் யோவானை கொதிக்கும் எண்ணெய்சட்டியில் போட்டபோது அவருக்கு ஒன்றும் ஆகாமல் போனதால், அவரை கிரேக்க நாட்டிற்கு சொந்தமான பத்மோஸ் என்னும் தீவுக்கு நாடுகடத்தினார்கள்.

பத்மு தீவில்தான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை யோவான் எழுதியாக நம்பப்படுகின்றது. இந்த கொதிக்கும் எண்ணெய் சட்டி சம்பவம் அன்று ரோமாபுரி காலசீயம் (Colosseum) அரங்கம் முழுதும் கிறிஸ்தவர்கள் நிரம்பியிருந்தார்கள். அந்த அற்புதமான சம்பவத்தை அவர்கள் பார்த்தனர்; அவர்கள் அதற்கு சாட்சிகளாயிருந்தனர். இப்படியாக தெர்துல்லூ என்பவன் எழுதியிருக்கிறான். ரோமர்களின் இராயனாகிய தொமித்தன் என்பவன் காலத்தில் முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அப்போதுதான் அந்த சம்பவமும் நடந்தது.

யோவானுக்கு வயதாகும்போது சிமிர்னா சபையில் பாலிகார்ப் என்னும் போதகருக்கு பயிற்சியூட்டினார். இது முக்கியமாகும் ஏனெனில் பாலிகார்ப் என்பவர் இந்த செய்தியை தனக்கு பின்வந்த தலைமுறையினருக்கு கொண்டுபோயிருக்கிறார். பாலிகார்ப் என்பவர் ஐரேனேயுஸ் என்பவனுக்கு யோவானைப்பற்றிய தன்னுடைய அனுபவங்களைச் சொல்லிவிட்டு சென்றார்.

யோவான் இறந்தபோது அவருக்கு வயது சுமாராக 94 என்று சொல்லப்படுகின்றது.

[1] மாற்கு 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 9:27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இவையனைத்திலும் 'தேவனுடைய ராஜ்யம் பலத்துடன் வருவதைக் காணும் நாள்' என்று சொல்லப்படுவது "பெந்தெகொஸ்தே தினமன்று பரிசுத்த ஆவி வந்திறங்கியதைக் காணும் நாள்" என்று சில வேதபண்டிதர்கள் கூறுகின்றனர். அன்றுதான் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல என்று வாசிக்கிறோம் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. அப்படியே நானும் நம்புகின்றேன்.


[2] யோவான் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கு என்ன என்றார். யோவான் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று ஏழாம்நாள் ஓய்வுக்காரர்கள் நம்புகின்றார்கள். யோவான் 21:22,23 வாசிப்பவர்களும் யோவான் உயிரோடிருக்கவேண்டும், ஆனால் உயிருடன் இருந்தால் நமக்கு தெரிந்திருக்குமே என்றும் யோசிக்கிறார்கள். முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில் "யோவான் மரிக்கமாட்டான்" என்று இயேசு சொல்லவில்லை. இயேசு உவமையாக பேசியபோதெல்லாம் அநேகருக்குப் புரியவில்லை, சிலர் அவர் சொன்னதை தவறாகவும் புரிந்துகொண்டார்கள். இங்கேயும் இயேசு ஒரு புதிர்போன்று பேசியிருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். மனுஷனுடைய நாட்கள் [சராசரியாக] நூற்றிறுபது வருஷம் என்று தேவன் சொன்ன பின்பும் யோவான் 2000 வருடம் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.

இயேசு தான் சொன்னபடியே யோ
வானுக்காக வந்தார் என்பது என்னுடைய விளக்கம்.
- யோவான் அவருக்கு அன்பான சீஷன்.
- அந்நாட்களில் அவருடைய சீஷர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள்.
- யோவானையும் கொல்லும்படி பார்த்து பின்பு முடியாததால் அவர் பத்முதீவுக்கு நாடுகடத்தப்படுகிறார்.
- அங்கே அவர் பட்ட கஷ்டங்கள் என்னவோ தெரியவில்லை. பாவம் யோவான்!
- இந்த சமயத்தில்தான் இயேசு வருகிறார். அவருடைய ரூபம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. இதை யோவான் கண்டு அழுகிறார் என்று வெளி 1, 5 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

எனவே நான் வருமளவும் இவனிருக்க சித்தமானால் என்பது இங்கேதான் நிறைவடைகிறது.

யோவானுக்காக மாத்திரமல்ல இன்றும் அநேகருக்கு இயேசு தரிசனமாகிறார். அப்போஸ்தலனாகிய பவுலும் "அகால பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்" என்கிறார். என்னுடைய தந்தையும் இயேசுவை நேருக்குநேர் சந்தித்தார், இயேசுவுடன் பேசினார்; பின்பு இந்து மார்க்கத்தை விட்டு இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தார். எனவே இயேசு அங்கே வந்தார் என்று சொல்வதும் சரிதான்.

நாம் இயேசு சொன்னதில் "நான் வருமளவும்" என்பதை இரண்டாம் வருகை என்று புரிந்துகொண்டால் யோவானின் புதிர் புதிராகவே இருக்கும்.
யோவான் ஒருவர்தான் இரத்தசாட்சியாக மரிக்காமல் பூரண வயதில் மரித்தார்.

.

Tuesday, April 20, 2010

36. தேவனுடைய சித்தத்தை அறிவது எப்படி?

தேவனுடைய சித்தத்தை அறியமுடிமா? ஆம். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 1:10ல் தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார் என்று சொல்கிறார். மேலும் எபிரெயர் 13:21ல் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக என்று எழுதுகின்றார்.

அவருடைய சித்தத்தை அறிவது
எப்படி?
ரோமர் 12:1, 2 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (
Do not conform any longer to the pattern of this world, but be transformed by the renewing of your mind. Then you will be able to test and approve what God's will is - his good, pleasing and perfect will.)

[1] இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரிக்கக்கூடாது. உதாரணமாக விலாங்குமீன் நீரிலுள்ள மீன்களிடம் தன் வாலைக்காட்டி தான் ஒரு மீன் என்றும், பாம்பிடம் தன் தலையைக்காட்டி தான் ஒரு பாம்பு என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. இந்தக் கதை உண்மையோ இல்லையோ, நாம் ஞாயிற்றுக்கிழமையன்று தேவனுடைய பிள்ளைபோலவும், மற்றநாட்களில் உலகமனுஷர்கள் போலவும் வாழக்கூடாது என்பதை இந்தக் கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன். அது என்ன உலக வேஷம்? உதாரணமாக நீங்கள் சினிமா பாடல்களில் விருப்பமுள்ளவர்களாயின் அது இந்த உலகத்தின் வேஷம் அல்லது பிசாசின் திசைதிருப்பும் தந்திரங்களில் ஒன்று. எனவேதான் நாம் வேறுபாட்டின் ஜீவியம் (Life of Separation) செய்பவராக காணப்படவேண்டும். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை; நான் இந்த உலகத்தான் அல்லாதது போல நீங்களும் இந்த உலகத்தாரல்ல என்று இயேசு சொன்னார். எனவே நாம் இந்த உலகத்தில் அன்புகூரக்கூடாது.

தேவனுடைய சித்தம் அறிந்துகொள்ள வேறுபாட்டின் ஜீவியம் அவசியமாகும். தேவன் பழைய ஏற்பாட்டில் விரிகுளம்புள்ளதும் அசைபோடுவதுமாகிய மிருகத்தைப் புசிக்கலாம் என்றார். இங்கே விரிகுளம்புள்ளது என்றால் "வேறுபாட்டின் ஜீவியம்" என்று ஆவிக்குரிய அர்த்தமாகவும், அசைபோடுவது என்றால் "தேவனுடைய வசனத்தை தியானிப்பது" என்று அர்த்தமாகவும் சொல்லலாம். (சங்கீதம் 1:1,2 இரவும் பகலும் அவருடைய வேதத்தின்மேல் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்.)

[2]
Be transformed by the renewing of your mind உங்களுடைய மனதை புதிதாக்கி மறுரூபமாகுங்கள். இங்கே நம்முடைய சுபாவங்கள்/குணங்கள் தேவனுக்கு உகந்தவைகளாக மாற்றப்படவேண்டும்.


[3] நம்முடைய சரீரத்தினை பரிசுத்தமாக பாவத்தினின்று விலக்கி காத்துக்கொள்ளவேண்டும்.
I தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து என்று வாசிக்கிறோம். சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

[4] ஜெபிக்கவேண்டும். இயேசுவே பிதாவை நோக்கி ஜெபித்தார். நாமும் தினமும் குறைந்தது இரண்டு வேளையாவது ஜெபிக்கவேண்டும். தானியேல் ஒருநாளைக்கு மூன்றுமுறை ஜெபித்தான். ஜெபத்தின்மூலம் தேவனிடத்திலிருந்து பதில்களைப் பெற்றான். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று வாசிக்கிறோம்.
கொலோசெயர் 4:12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான் என்று வாசிக்கிறோம். ஒரு ஏழைவிதவை மற்றும் அநீதியான நியாதிபதி என்னும் உவமையிலிருந்து இயேசு எப்படி சோர்ந்து போகாமல் ஜெபிப்பது என்று கூறுகிறார். இயேசுவும் பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கடவது என்று ஜெபிக்கிறார். எனவே ஜெபம் செய்வது மிகவும் அவசியம்.

[5] [முறுமுறுக்காமல்
] எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெச 5:18)

[6] I பேதுரு 2:15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நன்மை செய்யுங்கள், தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்.

[7]
பிரசங்கி 12:13ல்
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
ஜெபித்து தேவனிடத்தில் கேட்டால் உங்களைக்குறித்த தம்முடைய சித்தத்தை உங்களுக்கு வசனத்தின்மூலமாகவோ, சொப்பனத்திலோ, தீர்க்கதரிசனத்தின் மூலமாகவோ, வேறு ஏதோ ஒருவரைக்கொண்டு ஆலோசனைக் கொடுத்தோ அல்லது வெறொரு வழியிலோ வெளிப்படுத்துவார். நீங்கள் யாரிடமும் போய் கேட்காமலே இவைகள் உங்களுக்கு நேரிடவேண்டும். ஆனால் அவருடைய சித்தம் நாம் செய்யாமல் நம்முடைய சுய சித்தத்தின்படி செய்யவும் நம்மால் முடியும். தேவன் அதை தடைசெய்வதும் இல்லை. தேவனுடைய சித்தமெல்லாம் வேதவசனத்துடன் ஒத்துப்போகும் என்பதை மறக்கக்கூடாது.

எல்லா காரியத்தையும் ஜெபம்பண்ணி செய்யுங்கள்.

- தாவீது தேவனிடத்தில் விசாரிக்கும்போது தேவன் அவனுக்கு ஏபோத்தின் மூலமாக பதில் அளிக்கிறார்.
- சாமுவேலுடன் பேசினார். ஆனால் ஏலி தன்னுடைய பிள்ளைகள்குறித்த காரியத்தில் தேவனுக்கு பிரியமாய் நடக்காமல் போனதால் அவனுடன் பேசவில்லை.
- சவுல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவனுடன் பேசவில்லை.
- சிம்சோன் பொருத்தனையை உடைத்தபின்பும் கடைசியாக தேவனிடம் வேண்டி கேட்டதை பெற்றுக்கொள்ளுகிறான்.
- கிதியோன் போருக்கு செல்லும் முன்பு அடையாளம் கேட்டு பெற்றுக்கொள்கிறான்.
- ஏசாயா, எரேமியா, யோனா என்று எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பேன் என்று வாசிக்கிறோமே!

.

Sunday, April 11, 2010

35. அந்நிய பாஷை பேசலாமா ? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது?

கேள்வி: அந்நிய பாஷை பேசலாமா ? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது ? பேசினால் அதன் பொருள் சொல்ல வேண்டுமா ? 1 கொரிந்தியர் 14:6 விளக்கவும் ?

பதில்:
அந்நிய பாஷை பேசவேண்டும். "புதிய ஏற்பாட்டில்" பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கு அடையாளமாக இப்படியே அநேக இடங்களில் வாசிக்கிறோம். நீங்கள் உன்ன
த்தின் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள் என்று இயேசு சொல்லிவிட்டுச் சென்றபின்பு, அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் இப்படியாக வாசிக்கிறோம்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

பேதுரு கொர்நேலியு சம்பவம்:
அப்போஸ்தலர் 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.

பவுல்:
அப்போஸ்தலர் 19:6 பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்

சில சபைகளில் அந்நியபாஷைகளில் பேசும் அனுபவம் இல்லை. அவர்கள் நீங்கள் எப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களோ அப்பொழுதே பரிசுத்தாவியினை பெற்றுவிட்டீர்கள் என்று சொல்லுகின்றார்கள். இது தவறாகும்.

ஜெபிக்க ஆரம்பித்தால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நியபாஷைகளில் பேசவேண்டும். அப்படி அந்த அனுபவம் இல்லையெனில் ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள். அநேகர் தேவனின் வல்லமையினால் தொடப்படும்போது தங்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் போக நேரிடும். நான் முதன் முதலில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற நாள் மே மாதம் முதல் தேதியாகும். இந்தியாவில் அன்று நடந்த ஜெபக்கூட்டத்துக்கு உபவாசத்துடன் சென்றிருந்தேன். முழங்காலில் நின்று பாடல்களை உற்சாகமாக கைகளைத்தட்டி பாடிக்கொண்டிருக்கும்போது அந்த உன்னதமான ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் துள்ளி நிரப்பட்டவனாக வேறெங்கோ சென்றுவிட்டேன். கண் திறந்தபோது நான் இருந்த இடம் ஒரு 15 அடி தள்ளி இருக்கும். நாவு வேறு ஏதோ பாஷையில் பேசியது. இதுவே பரிசுத்த ஆவி பெற்ற ஒருவருக்கு அடையாளமாகும்.

என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம்:
2000ம் வருடம் சில நாட்களாக ஒரு மனதில் ஒரு சந்தேகம். தேவன் என்னை கண்டுகொள்வது இல்லையே, அப்படியானால் நான் ஒருவேளை தேவனுடைய பிள்ளை இல்லையோ என்று ஒரு எண்ணம் என்னை வாட்டியது. அடுத்த நாள் (அமெரிக்காவில்)
நான் வழக்கமாக வேலைக்குச் செல்ல ஜெபித்துவிட்டு என்னுடைய காரில் சென்றேன். பொதுவாக தெற்கு கலிஃபோர்னியாவில் ரோட்டின் ஓரத்தில் ஜனங்களை அதிகமாக காணமுடியாது (எல்லாரும் காரில் செல்வதால்). ஆனால் அன்று மேகமூட்டமாக இருந்தது. ரோட்டின் ஓரத்தில் ஒருவர் நன்கு உடையணிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ உதவி தேவைப்படுமோ என்று எனக்கு தோன்றியது. அவரும் தனக்கு முன் செல்லும் வாகனங்களை ஏதோ எதிர்பார்ப்புடன் நோக்கினார். நான் உடனே காரை நிறுத்தி அதை பின்னே-செல்லும்படி(Reverse) செய்து அவரிடம் நிறுத்தி "Do you need any help?" (ஏதேனும் உதவி தேவையா?) என்று கேட்டேன். அவர் ஆம் வீட்டுக்கு போகவேண்டும். பேருந்து இனி வர மணிநேரம் ஆகும் என்றார். உடனே நான் வாருங்கள் நான் கொண்டுபோய்விடுகிறேன் என்றேன். நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தான் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் செய்பவர் என்று சொல்லிவிட்டு, என்னுடைய காரில் இருந்த "God cares for you" (தேவன் உங்களைக் குறித்து அக்கறை உள்ளவராயிருக்கிறார்) என்று பெரிதாக ஒட்டப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து, நீங்கள் தேவனுடைய பிள்ளையா என்றார். நான் ஆம் என்றேன். உடனேயே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, உடனே தன்னுடைய இரு கரங்களை உயர்த்தி தேவனை துதிக்க ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய பாஷைகளில் பேசினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. மேலும் அவர்: தேவனுடைய பிள்ளை ஒருவரை கொண்டுவந்து எனக்கு உதவிசெய்யும் ஆண்டவரே என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்ததாக கூறினார். தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் கூறினார். ரஷ்யாவிலே வீட்டிலே நானும் என் மனைவியும் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்நிய பாஷையுடன் பெற்றோம் என்றார். ரஷ்யாவில் யாரும் இவருக்கு போய் ஜெபிக்கவில்லை தேவனே இவரை பரிசுத்த ஆவியால் நிரப்பியிருக்கிறாரே என்று எண்ணி ஆச்சரியமடைந்தேன். நானும் நாங்கள் எப்படி இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தோம் என்று எங்களுடைய சாட்சியையும் சொன்னேன்... நான் அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்து பைபிளை  திறந்து இவைகளை நினைத்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய விழிகளில் சில கண்ணீர் துளிகள்; காரணம் தற்செயலாக வேதத்திலிருந்து தேவன் ஒரு வசனத்தைக் கொடுத்தார் "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்". (ரோமர் 8:14) இதுவும் தேவன் பேசும் வழிகளில் ஒன்று.

இங்கே முதலாவதாக என்னுடைய சந்தேகத்தை நீக்கும்படி, நான் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன் என்று காட்டும்படி ஒரு தேவனுடைய பிள்ளைக்கு நான் உதவியிருக்கிறேன். இரண்டாவதாக ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷைகளில் பேசுகிறார். பரிசுத்த ஆவியை அவர் பெற்றிருந்தார் என்பதற்கு அவர் அன்று அந்நியபாஷையில் பேசியதே எனக்கு அடையாளமாகும் என்று நான் ஒரு உண்மை சம்பவத்தை
இன்று முன்வைக்க முடிகிறது.

ஏசாயா 28:11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். என்று வாசிக்கிறோம். இதுவே பரிசுத்த ஆவியின் பொழிந்தருளுதலின் முன்னுரைப்பு அல்லது தீர்க்கதரிசனம் ஆகும். மேலும் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசி சொன்னபடி இன்றும் நடை பெறுகின்றது. சீனாவில் அநேகர் பரிசுத்த ஆவியில் நிரம்பி அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.

அடுத்ததாக அந்நியபாஷையில் பேசினால் அதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமா? அநேகமாக நீங்கள் பேசும் அந்தபாஷைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (அதான் அந்நியபாஷை ஆயிற்றே). அருகில் இருக்கும் ஒருவருக்கு அதின் அர்த்தம் தெரிந்தால் அவர் சொல்லலாம். வியாக்கியானம் (interpretation) என்னும் வரம் இருப்பவர்களுக்கு அதின் அர்த்தம் தெரிய வாய்ப்புகளுண்டு. 1 கொரி 14:6 ல் நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் மற்றவர்களுக்கு பிரயோஜனம் இல்லை என்று பவுல் சொன்னதின் அர்த்தம் நீங்கள் பேசுவது புரியாது எனவே அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லை, உங்களுக்கோ பிரயோஜனம்தான்; உங்களுடைய உள்ளான மனுஷன் பெலப்படவும் தேவனுடைய ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படவும் (Sanctification through the Spirit) அவசியம்தான்.

எனவே அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதுவே முதன்முதல் பரிசுத்தாவி பெற்ற அனைவருக்கும் உண்டான அனுபவம் என்று வேதத்தில் மேலே வாசித்ததுபோல், இன்றும் நீங்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும்.
 

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க ஆவியினால் பிறக்கவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும். கர்த்தருடைய வருகையில் போகவும் பரிசுத்த ஆவியில்ன் அபிஷேகம் பெற வேண்டும் . ஏனெனில் "நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்" (எபேசியர் 4:30 )என்று வாசிக்கிறோமே. மேலும் "கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்..." என்றும் வாசிப்பதால், நம்முடைய சரீரம் கண்ணிமைக்கும் பொழுதில் மறுரூபமடைய பரிசுத்த ஆவி அவசியம்.

-------
Part II (updated 28 Apr 2010)
I கொரி 12:30 ல் "எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? " என்று வாசிக்கிறோம். மேலே சொல்லப்பட்டது ஆவியின் வரங்கள் (Charisma) ஒன்பதில் ஒன்றாகிய பற்பலபாஷைகளை பேசுவதைக்குறித்து (diverse of tongues) சொல்லப்பட்டுள்ளது. 1 கொரி 12 முழுவதிலும் Charisma என்னும் கிரேக்க வார்த்தையும், பரிசுத்த ஆவியின் வரம் என்று அப் 2:38ல் dorea என்னும் கிரேக்க வார்த்தையும் பவுல் பயன்படுத்தியுள்ளார். எனவே எல்லாருக்கும் ஒன்பது வரங்களும் உண்டா? ஆவியானவர் தமக்கு இஷ்டமானபடியே அளந்து கொடுக்கிறார் என்று சொல்கிறார். எனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் வரங்களில் ஒன்றாகிய diverse of tongues என்பதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.பரிசுத்த ஆவியின் வரத்தைப் (dorea) பெறும்போது அதற்கு அடையாளமாக அந்நிய பாஷைகளில் நீங்கள் பேசுவீர்கள். ஆனால் அந்த ஆவியிலே நீங்கள் நிரப்பபடும்போது ஆவியானவர் உங்களுக்கு ஆவியின் வரங்கள் (charisma) ஒன்பது என்பதில் ஒன்றாகிய பற்பல பாஷைகளில் பேசும் வரத்தை உங்களுக்கு தரமுடியும். இதையும் அந்நியபாஷையையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.பவுல் பரிசுத்த ஆவியில் நிறையும்போது அந்நியபாஷையில் பேசினாரா என்று கேட்கும்போது, ஆனால் "உங்கள் எல்லாரைக் காட்டிலும் அதிமாக அந்நியபாஷை பேசுகிறேன் என்கிறார்" (1 கொரி 14:18)

தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்தாவி என்று நாம் வாசிப்பதால் அனைவரும் தேவனிடம் கேட்டு அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்பதில் "நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" என்றும் வாசிக்கிறோம்.

1. முதல்படியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது ஏதோ ஒரு வல்லமை [மின்சாரம்போன்றோ அல்லது தங்கள் மயிர்சிலுக்கும் ஒரு அனுபவம் போன்றோ] தங்களை தொடுவதை உணருகின்றார்கள்.
2. அடுத்த நிலையாக அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.

ஒருவர் தன்னுடைய வாழ்வில் பரிசுத்தாவியினால் நிரம்பி அந்நியபாஷை பேசும் அனுபவம் இல்லாதவராயின் அவர் பரிசுத்தாவியினை பெற்றிருக்க வாய்ப்பில்லை. இப்படி அந்நியபாஷைபேசும் அனுபவமில்லாதவர்கள் இக்கருத்துக்கு மறுப்புதெரிவிக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல ஆவிக்குரிய சபைக்கு சென்றால் அங்கே நான் சொல்லும் அனுபவங்களை காணவும் உணரவும் பெறவும் முடியும்.

ஒரு ஆராய்ச்சி இங்கே செய்தியாக :
.

Thursday, April 1, 2010

34. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால் மருத்துவர் தேவையில்லை. இது பற்றி உங்கள் கருத்து?

கேள்வி: உடலில் பிரச்னை என்றால் மருத்துவரை பார்கிறோம். இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால் மருத்துவர் தேவையில்லை. இது பற்றி உங்கள் கருத்து?



பதில்:
இது மிகவும் விவாதிக்கப்படும் தலைப்பு.
இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிப்போர் அநேகம். ஆதரிப்போர் அதைவிட குறைவு. எனவே வாசகர்களாகிய உங்கள் கருத்தினை இந்த கட்டுரைக்கு பதிலாக தெரிவிக்கவேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம். என்னுடைய பதில்: ஆம் தேவையில்லை.
கீழே இருபுறமும் ஒரு பார்வை.

[A] மருத்துவரிடம் போகத் தேவையில்லை என்று:
[1] I பேதுரு 2:24 அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
[2] மத்தேயு 8:17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.
[3] மத்தேயு 4:23 இயேசு ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.[4] சங்கீதம் 91:3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
[5] சங்கீதம் 103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி
[6] யாத் 15:26 நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.

விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்று வாசிக்கிறோம். தேவன் என்னை எப்போது சுகமாக்கப்போகிறார் என்றுஅநேகர் சொல்லுகின்றனர். இப்படி சொல்பவர்களுக்கு விசுவாசம் குறைவு என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாகவே மனிதர்களாகிய நமக்கு காத்திருக்கும் அனுபவம் பிடிப்பதில்லை. ஆனால் கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் கழுகுகளைப்போல புதுபெலனை அடைவார்கள் என்று வாசிக்கிறோம்.

மருந்துக்கு குணமாக்கும் தன்மையுண்டு, உண்மைதான்; கூடவே பக்கவிளைவுகளும் (side effects) உண்டு. ஆனால், தேவன் குணமாக்கும்போது சரீரம் மட்டும் குணமடைவது இல்லை. ஆத்துமாவுக்கு ஒரு இளைப்பாறுதல், ஆவியில் ஒரு விடுதலை என்று ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறார். இது மறுக்கப்படமுடியாத உண்மை.

ஆசா என்னும் ராஜா முதிர்வயதில் கால்களில் வியாதிகண்டு இருந்த போது அவன் தேவனைத்தேடாமல், வைத்தியர்களைத் தேடினான் என்று II நாளா 16:12ல் சொல்லப்பட்டுள்ளது.

நமக்கு நோய் அல்லது வியாதி வந்தால் தேவனிடம்
"உலகத்தில் துன்மார்க்கன் நல்லா இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் வந்தது?" என்று கேட்பது தவறு. காரணம்: முதலாவதாக நாம் நல்லவர்கள் என்கின்ற யூகம், இரண்டாவதாக தேவன்மேல் ஒரு வெறுப்பு என்று இருப்பதுபோல் ஆகிறது. "இதற்கு நான் என்னசெய்யவேண்டும்? ஏன் வந்தது?" என்று கேட்கவேண்டும். ஏனெனில் வாதை உன் கூடாரத்தை அணுகாது; உன் நோய்களையெல்லாம் குணமாக்கி...; பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்; எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உங்களுக்கு வரப்பண்ணேன் என்றெல்லாம் வாக்குத்தத்தங்கள் இருக்கும்போது எப்படி இந்த நோய் வந்தது என்று காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். சில சமயங்களில் பாவம்/கீழ்ப்படியாமை/குறைவுகள் ... என்று காரணங்கள் இருக்கலாம். சிலரை இயேசு குணமாக்கும் முன்பு "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று சொல்லி பின்பு குணமாக்கினார். எனவே பாவம் இருப்பின் நாம் குணமடைவது சாத்தியமல்ல.

இயேசு தன்னிடம் வந்தவர்களிடம் சொன்னார்: "உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக் கடவது". இந்த வாக்கியம் மிகவும் விலையேறப்பெற்றது!!

பன்னிரண்டு வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீ தன்னுடைய ஆஸ்தியை வைத்தியர்களிடம் செலவழித்தாள். இயேசு அவளை "நீ ஏன் மருத்துவரிடம் போனாய்?" என்று கேட்கவில்லை. அவள் இயேசுவை கேள்விப்படும் முன்பு மருத்துவர்களிடம் போனாள்; கேள்விப்பட்டபின்போ எப்படியாகிலும் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தினையாவது தொட்டு சுகமாவேன் என்று ஒரு விசுவாசம்!

ஏசாயா என்பவன் எசேக்கியா குணமடைய பிளைவையின் மேல் தேவன் சொன்னதுபோல் ஒரு அத்திப்பழ அடையைப் போடுகின்றான். இது மருத்துவத்துக்கு ஒத்துப்போகாத காரியம். ராஜபிளவைக்கு இந்த அத்திப்பழ அடையைப் போட்டால் சீக்கிரமாகவே அவர்கள் இறந்து விடுவார்கள். வேணும்னா போய் போட்டுப்பாருங்க. அதுல Sugar (சக்கரை) அதிகம். (http://www.nutritiondata.com/facts/fruits-and-fruit-juices/1889/2
) இங்கே தேவன் இப்படி சொன்னதற்கான காரியம் மருந்து போடுங்கள் என்று கற்றுக்கொடுப்பதற்காக இல்லை, தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நிரூபிக்கத்தான்.இயேசு குருடனுக்கு சேறுபூசி சுகமாக்கினாரே! அந்த சேற்றில் பிறவிக்குருடனை குணமாக்கும் மருந்து இருந்தது!! என்று சிலர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள். இல்லை, அதில் மருந்து இல்லை. போய் சேறுபூசி பாருங்கள், உள்ளதும் போய்விடும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நிரூபிக்கத்தான் இயேசு பலவிதமாக குணமாக்கினார். ஒருவார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் சுகமாவான் என்று நூற்றுக்கதிபதி சொன்னானே. அங்கே எந்த சேறு பூசப்பட்டது? விசுவாசமே.

மருந்து/மாத்திரை சாப்பிட்டு தேவன் என்னை குணமாக்கினார் என்று சொன்னால் அது பொய்யாகும். தேவன் குணமாக்கிய போதெல்லாம் அனைவரும் உடனே குணமானார்கள். எனவே காயத்தில் மருந்து போட்டேன்... ஒருவாரத்தில் தேவன் குணமாக்கினார் என்று சொல்வது தேவனுடைய நாமத்தை வீணில் வழங்குவது போலாகும். அது தெய்வீக சுகமும் ஆகாது.

சில வசனங்கள்:

யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

உபாகமம் 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.

II நாளாகமம் 16:12 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

மத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

யாக்கோபு 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

ஏசாயா 33:24 வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.


சொந்த அனுபவம்:
என்ன இது தெய்வீக சுகம் என்று எல்லாம் சொல்கிறார்களே, எனக்கு ஞாபகத்தில் இருக்குமளவுக்கு ஏதுமில்லையே என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை பாரமான பளுவை வீட்டில் நகர்த்தும்போது இடுப்பில்/முதுகு வலி  வந்தது. அது மூன்று மாதக்கணக்காகியும் போகவில்லை. மருத்துவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்கவும் இயலவில்லை. வலியும் குறைந்தபாடில்லை. நான் ஒரு ஜெப ஆராதனைக்குபோனபோது எப்படியாகிலும் தேவன் என்னை சுகமாக்கவேண்டும் என்று ஒரு பாராமான இருதயத்துடன் சென்றேன். நான்காம் நாள் கூட்டத்தில் போதகர் ஒருவர் எல்லார் மேலும் கைவைத்து ஜெபித்துக்கொண்டே சென்றார். நானும் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன். என்னை பின்புறமாக நின்று தொட்டு  ஜெபித்தார், பின்பு சென்றுவிட்டார். அந்த நிமிடமே தேவன் என்னை சுகமாக்கினார். வலி பறந்து போனது. என்னை தேவன் சுகமாக்கியது அந்தபோதகருக்குத் தெரியாது, ஏனெனில் அந்த கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கு அதிகமானோர் ஜெபத்திற்காக  மேடைக்கு முன்னே  இருந்தனர்.

[B] மருத்துவர்களை ஆதரித்து:
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே இருந்தபோது பிள்ளைபெறும்போது ஆண்பிள்ளைகளை கொன்று போடவேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது எகிப்திய மருத்துவச்சிகள்தான் அவர்களுக்கு பிரசவம் செய்தனர். எனவே பிள்ளை பேறுக்காக மருத்துவமனைக்கு போவது தவறல்ல.
ஒருவர் அடிபட்டுக்கிடந்தால் நாம் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி கொடுக்கவேண்டும் என்று நாம் இயேசு சொன்ன லேவியன், ஆசாரியன், நல்ல சமாரியன் என்னும் கதையிலிருந்து (லூக்கா 10) புரிந்துகொள்ளலாம்.இயேசு சொன்னார்: "பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்". இங்கே இயேசு சொன்ன முக்கியமான விஷயம் நீதிமான்களுக்கு அல்ல பாவிகளுக்காவே மரிக்க வந்தேன் என்று சொல்கிறார், அதற்காக ஒரு இயல்பு காரியத்தை ஒப்பிடுகிறார்.

மருத்துவரிடம் சென்றால் பாவமா? என்றால் பாவமில்லை என்று சொல்வதைவிட விசுவாசக்குறைவு என்று பதிலாக சொல்லலாம். மேலும் தேவன் உன்னை எப்படிப்பட்ட ஜீவியம் செய்யும்படி அழைத்தார் என்பதைப் பொறுத்ததும் ஆகும். மேலான ஜீவியம் செய்வோர் பரலோகத்தில் பெறும் பிரதிபலன் அதிகமாக இருக்கும்.

முடிவாக:
சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும் தேவன்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்". இதை பொதுவாக எல்லா காரியங்களுக்கும் சொல்லலாம்.
எரேமியா 17: 5 "மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து ... கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்". இந்த வசனம் மருத்துவர்களிடம் போவது குறித்து அல்ல,
ஒரு காரியத்துக்காக கர்த்தரைவிட மனிதன் மேல் நம்பிக்கைவைத்து அவரை விட்டு விலகுபவர்களைக் குறித்தாகும்.எனவே "உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக் கடவது!" என்பதே இந்த கேள்விக்கு பதிலாகும்

இந்த புத்தகத்தை வாசியுங்கள்:
 "REMARKABLE INCIDENTS And MODERN MIRACLES Through PRAYER And FAITH By G. C. Bevington"



சிந்தனைக்கு:
.