Sunday, August 22, 2010

51. சங்கீதம் 93:1 பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?


கேள்வி
: சங்கீதம் 93:1, 96:10, 104:5 மற்றும் பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?



பதில்:

[1] பிரசங்கி 1:5 சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது. The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he arose.
இன்றும் எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் (அனைத்து வெளிநாடுகள் உட்பட), செய்தித்தாள்களும், வானிலை அறிக்கைகளும், இணைய தளங்களும் சூரியன் உதிக்கும் நேரம் (Sun-rise), சூரியன் மறையும் நேரம் (Sun-set)
என சொல்கின்றன. இவர்கள் அனைவருக்கும் சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்று நன்றாகவே தெரியுமே. பின்னை ஏன் இன்னும் அதை "Sun-set", "Sun-rise" என்று சொல்கின்றனர்?
ஏனெனில் இது ஒரு சார்பியல் வார்த்தையாகும்
(relative term, perspective) . நாம் செல்லும் இரயில் ஒரு நிலையத்தில் நிற்கும்போது, அருகிலுள்ள இரயில் நகர ஆரம்பிக்கும்போது நமது இரயில் செல்வது போல தோன்றுகின்றதல்லவா? இரு இரயில்கள் இருக்கும்வரைக்கும் அவைகள் நகரும் வரைக்கும் அப்படித்தான் தோன்றும். அதுபோலவே சூரியனும், பூமியும் உள்ளவரை சூரியன் உதிக்கிறது, மறைகிறது என்றும், விடியற் காலை நேரம், சாயங்காலம், அஸ்தமிக்கும் நேரம் என்று சொல்லப்படும்.

இதைப்போலவே பிரசங்கி 1:7ல் "எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்." நதி எப்படி திரும்பும்? அதனால் பார்க்கமுடியுமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. கடலில் நீர் ஆவியாகி மேகமாகவும், மேகம் மழையாகவும் பனிக்கட்டியாகவும், மழை/பனிக்கட்டி/ஊற்று நதியாகவும்" என்ற அடிப்படையை அறிந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்த நிகழ்வுகளுக்கான முடுக்கத்தை (trigger) தேவனே உண்டாக்குகிறார்.
எரேமியா 51:16; 10:13ல் "அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்."

எனவே நாளை காலை 5:54 மணிக்கு சூரியன் உதிக்கும் என்று சொன்னால் தவறல்ல. சரிதான்.
 

[2] சங்கீதம் 93:1, 96:10ல் ... "ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. சங்கீதம் 104:5 ... பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்". The world also is stablished, that it cannot be moved .... laid the foundations of the earth.

பூமியைத் தேவன் சிருஷ்டித்தபோது மனிதன் இல்லை! அப்போது தேவதூதர்கள் இருந்தனர் என்றும்
அவர்கள் பூமியானது சிருஷ்டிக்கப்படும்போது கெம்பீரித்தார்கள் என்று அறிகிறோம்.

யோபு 38:4-8ல்: நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் (foundation-அஸ்திபாரம்) எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

"அளவு குறித்தவர் யார்?" என்னும் இந்த வசனத்திற்கு பின்னே தேவனின் ஞானம் எவ்வளவு உள்ளது! அடேங்கப்பா!!


பூமியானது சூரியனிலிருந்து சுமார் 14.7 கோடி கி.மீ (9.1 கோடி மைல் - Information from NASA) தூரத்தில் உள்ளது. சூரியனின் விட்டம் (diameter) பூமியைவிட 100 மடங்கு பெரியது ஆகும். கோளத்தின் கன அளவு என்பது (Volume of a Sphere)
\!V = \frac{4}{3}\pi r^3
- (சூரியனின்ஆரம் = 100 r) அதாவது கனஅளவு 100 x 100 x 100 = சுமாராக 10 லட்சம் பூமிகளைக் கொள்ளும் அளவுடையது சூரியன் ஆகும்!! அப்படியானால் சூரியன் எவ்வளவு பெரியது? அதாவது ஒரு பேருந்தில் சுமாராக 198,000 டென்னிஸ் பந்துகள் நிரப்ப முடியும். 10 லட்சம் டென்னிஸ் பந்துகளை நிரப்ப 5 பேருந்துகள் தேவைப்படும். இதில் ஒரு பந்துதான் நமது பூமி. இதில் நீங்களும் நானும் எங்கே?  (Bus size: 8 x 6 x 20 ft -- volume:1658880 cubic inches , Tennis ball radius: 1.26 inches --- volume: 8.379 cubic inches)
 
- சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை சுமாராக 6000 *C (செல்சியஸ்).  நம்மால் வெயிற்காலத்தில் 38 *
C கூட தாங்கமுடியவில்லை.

- சூரியனிலிருந்து ஒளி புறப்பட்டு பூமிக்கு வர சுமார் 500 விநாடிகள் (அதாவது 8 நிமிடங்கள் 20 விநாடிகள்) ஆகும்.  ஒளியானது நமது பூமியை சுற்றிவர 0.134 வினாடிகளே ஆகும்.


- பூமியானது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றது. இதில் கோடையில் வெயில் அதிகமாவும், குளிர்காலத்தில் நடுங்கும் குளிராகவும் பூமியில் வெப்பநிலை உள்ளது. (http://www.physicalgeography.net/fundamentals/6h.html)
 

பூமியின் எடையும் சரியான விகிதத்தில் உள்ளதால் ஈர்ப்புசக்தி என்பது துள்ளியமாக சமன் செய்யப்பட்டுள்ளது. பூமியானது தான் சுற்றும் பாதையிலிருந்து (orbit) சற்றே விலகி வெளியே சுற்றினால் நாம் அனைவரும் குளிரில் உறைந்து இறந்துவிடுவோம். அதேபோல் சுற்றுபாதையிலிருந்து சற்றே உள்ளே போய் சுற்றினால் நாம் அனைவரும் சூரியனால் கருகி இறந்துவிடுவோம். நம் உடலானது வெப்பத்தை சில *C க்கு மேல்/கீழ் போனாலே தாங்கமுடிவதில்லை. குளிர்சாதனமோ, கம்பளமோ தேவைப்படுகிறது. அப்படியென்றால் பூமியானது அதன் சுற்றுப்பாதையில் எவ்வளவு நிலையாயிருக்கவேண்டும்!! இதைத்தான் சங்கீதத்தில் வாசிக்கிறோம். பூமியின் அஸ்திபாரத்தை தேவன் ஸ்தாபித்திருக்கிறார். அது அசையாது அதாவது பூமி அதிலிருந்து விலகிச் செல்லாது. வீட்டுக்கு அஸ்திபாரம் மண்ணுக்கு கீழேயாகும். ஆனால் விண்வெளியில் சுற்றும் பூமியின் அஸ்திபாரம் என்பது அதின் சுற்றுப்பாதையாகும் (orbit). அந்த அஸ்திபாரம் (ஆதாரம்) இன்றும் ஸ்திரமாயிருப்பதால்தான் நாம் இன்றும் உயிரோடு இருக்கிறோம்.

எனவே
சங்கீதம் 93:1ல் சொல்லப்பட்டவை சரிதான்.

சூரியனிலிருந்து இவ்வளவு தூரம் என்று அளவு குறித்தவர் யார் என்று தேவன் அப்போது யோபைக் கேட்டபோது நிச்சயமாக யோபுக்கு இவ்வளவு ஆழமான விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Sunday, August 15, 2010

50. யெப்தா தன் மகளை பொருத்தனையின்படியே சர்வாங்க தகன பலியிட்டானா?

பதில்:
இல்லை. சிலர் செலுத்தினான் என்று தவறாக சொல்கின்றனர்.

முன்னோட்டமாக: ஆபிரகாமைத் தேவன் பரீட்சித்தார் (trial). அவனிடம் ஈசாக்கை மோரியா மலையில் பலியிடு என்று சொல்லி அவன் கீழ்ப்படிகிறானா என ஒரு பரீட்சை வைக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆட்டை தேவன் புதரில் தயாராக வைத்திருகிறார். தேவன் ஆபிரகாமை தடுத்தி நிறுத்தினார் என்று வாசிக்கிறோம். இது நமக்கு
தேவன் யெப்தாவை அப்படி செய்ய அனுமதித்திருக்கமாட்டார் என்பதற்கு மிகவும் சிறந்த ஆதாரம்.

யெப்தாவின் மகள் சொன்னதை வாசிப்போம்:


நியாயாதிபதிகள் 11:37-40. "பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள். அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி, இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று."

இங்கே அவள் பலியிடப்பட்டாள் என்று எங்குமே சொல்லப்படவில்லை. யெப்தாவின் மகள் தன்னுடைய தோழிகளுடன் தன் கன்னிமைக்குறித்துதான் துக்கம்கொண்டாடினாள், தனக்கு வரப்போகும் மரணத்தை நினைத்து அல்ல என்பது அவள் அங்கே மரிக்கவில்லை என்று காட்டுகிறதல்லவா?

டேக்ஸ் என்னும் பைபிள் விளக்கவுரையில் (Dakes annotated bible) இப்படியாகச் சொல்கின்றது: "அவளுடைய வேண்டுதல் என்னவெனில் தனக்கு இரண்டுமாதம் கன்னிமை நிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகளுடன் துக்கம்கொண்டாடவேண்டும் என்பதாகும். ஏனெனில் அவள் யெப்தாவுக்கு ஒரே குமாரத்தி என்பதால் யெப்தாவின் வம்சம் அதன்பின்பு பூமியில் இருக்கப்போவதில்லை. இதினிமித்தம் தனக்கு வரப்போகும் கன்னிமைக்குறித்து துக்கம்கொண்டாடபோனாள்; தந்தைக்குப்பின்பு வம்சம் இல்லாமல் போவதால் அவளுடைய வாழ்வில் அது
ஒரு பெரிய தியாகம் (sacrifice), இஸ்ரவேலில் ஒரு பெரிய துக்கமான செய்தி (34ம் வசனம்)." மேலும் டேக்ஸ் கூறும்போது, "அவள் தன் வாழ்நாள்முழுதும் ஒரு ராஜகுமாரத்திபோன்ற வாழ்வை விட்டு ஆசரிப்புக்கூடாரத்தில் ஒரு வேலைக்காரிபோல இருக்கவேண்டும். மீதியானியருடன் யுத்தத்துக்குப் பின்பு கன்னியர்கள் தேவனுக்கென்று இப்படியாக முழுக்க அர்ப்பணித்துகொண்டனர். (எண் 31:35-40). இப்படி அர்ப்பணித்துக்கொண்டபின்பு கூடாரத்தைவிட்டு தங்களுடைய தோழிகளுடன் வெளியே போகமுடியாது. எனவே இதுவே தோழிகளுடன் இரண்டுமாதம் மலைகளில் போய் வந்ததன் காரணமாக இருந்திருக்கக்கூடும்"

NIV மொழிபெயர்ப்பில் "இரண்டுமாதம் தோழிகளுடன் .... எனக்கு தாருங்கள், ஏனெனில் நான் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லையே" என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுதும் கன்னியாக இருந்தாள் என்பதற்கு இன்னொரு சிறந்த ஆதாரம் 11:39ல் வாசிக்கிறோம். "
அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாமல் இருந்தாள்." இந்த இரண்டு தனித்தனி வாக்கியங்களில் அவள் புருஷனை அறியாமல் வாழ்ந்தாள் என்று சொல்லலாம்.

Living Bible-ல் "அவள் திரும்பி தன் தகப்பனிடம் வந்தாள், அவன் பொருத்தனியின் படியே அவளுக்குச் செய்தான். எனவே அவள் ஒருபோதும் திருமணம் செய்யாமல் இருந்தாள்." என கூறப்பட்டுள்ளது; அதாவது அவள் கர்த்தருடைய பங்கு என்று அர்ப்பணிக்கப்பட்டாள்.
அடுத்ததாக: "இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று".
எபிரெய பாஷையில் புலம்புவது (lament) என்னும் இடத்தில் "tanas" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது துதிப்பது அல்லது நன்றி செலுத்துவது என்று பொருள். எனவே அவள் செய்த தியாகத்தினிமித்தம் வருடந்தோறும் துதித்தார்கள் என்று பொருள். அவள் உயிரோடு இல்லாவிட்டால் King James மொழிபெயர்ப்பில் வருடந்தோறும் சென்று அவளுடன் பேசினார்கள் (Talk with) என்று எப்படி சொல்லப்படும்?

இஸ்ரவேல் ஜனங்கள் பின்மாற்றம் அடைந்து சிலர் தங்களுடைய பிள்ளைகளை தீயில் எரித்தபோது தேவன் எரேமியா 7:31ல் சொல்லுகிறார்: "இப்படி நான் கட்டளையிடவும் இல்லை, என் மனதில் தோன்றியதுமில்லை". மேலும் "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொல்லிய தேவன், ஆபிரகாமை தடுத்து நிறுத்திய தேவன் அப்படிச் செய்ய அனுமதிக்கமாட்டார்.

யெப்தா தேவனுக்கு விரோதமாக செய்திருந்தால் விசுவாச வீரர்களின் பட்டியலான எபிரெயர் 11ல் இடம் பெற்றிருக்கமாட்டார்.

யெப்தா தன் மகளை பலியாக செலுத்தவில்லை.

Tuesday, August 10, 2010

49. கிறிஸ்தவர்களை புதைக்காமல் எரிக்கலாமா?

ஒரு பரிசுத்தவான் இறந்தபின்பு அவருடைய சரீரத்தை புதைப்பதாலோ எரிப்பதாலோ அவருடைய ஆத்துமாவிற்கு கிடைக்கும் நித்திய ஆசீர்வாதங்களில் எந்த மாற்றமும் வராது. அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் பத்திரமாகத்தான் இருக்கின்றனர்.

நாம் எப்படி ஒரு வீட்டிலிருந்து வெளியே செல்கிறோமோ அப்படித்தான் நாம் இறப்பதும். வீடு என்பது நாம் இருக்கும் இடம். வெளியேபோனாலும் நாம் நாம்தான், வீடு நாமல்ல, அது நாம் இருந்ததற்கு அடையாளம் என்பது என்னுடைய விளக்கத்தின் ஒரு பகுதி.

சடலத்தை எரிப்பது என்பது இஸ்ரவேலர் அல்லாதவர்களின் துவக்கம். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது எல்லாம் ஒரு நியாயத்தீர்ப்பு மற்றும் சாபம் என்ற விதத்தில் ஆகும். தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன சவுலின் சடலத்தை பெலிஸ்தியர்கள் (Philistines) எரித்தார்கள். (1 சாமு 31:12). மோவாபிலே மனுஷனுடைய எலும்புகள் எரிக்கப்பட்டது மிகவும் கொடூரமான குற்றம் ஆகும். (ஆமோஸ் 2:1,2).

வேசிகள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று அறிவோம். (ஆதி 38:24, லேவி 21:9) ஆகான் என்பவன் சாபத்தீடானவைகளை எடுத்துக்கொண்டு போய் அவனும் இறுதியில் எரிக்கப்பட்டான். பொல்லாத ராணியாகிய யெசேபேல் கொல்லப்பட்டபோது, அவளைப் புதைக்க யாரும் இல்லை.

பழைய ஏற்பாட்டில் "நீ சமாதானத்தோடே உன் பிதாக்களின் கல்லறையில் சேர்க்கப்படுவாய்" என்று தேவன் சொன்னது ஒரு விசேஷமான ஆசீர்வாதமாக எண்ணப்பட்டது. (II நாளா 34:27,28).

I கொரி 15ம் அதிகாரத்தில் பவுல் ஏன் ஒரு கிறிஸ்தவன் அடக்கம்பண்ணப்படுகிறான் என்றும் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
புதிய ஏற்பாட்டிலும் இரத்தசாட்சியாய் மரித்த யோவான் ஸ்நானகன், ஸ்தேவான் என்பவர்கள் அடக்கம் பண்ணப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவானவர் வேதவாக்கியத்தின்படியே அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் மரணத்தில் அவருக்கு செய்யப்பட்டதைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. பைபிளில் வாசிக்கும்போது
சபிக்கப்பட்டவர்கள் எல்லாம் எரிக்கப்பட்டார்கள். எனவே எரிக்காமல் புதைக்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன்.

-----------------------------
சிந்தனைக்கு:

இந்த காலத்திலும் (கி.பி 1990-2010) மரித்து பின்பு உயிர்திரும்பி வந்தவர்கள் பொதுவாக சொல்லுவது என்னவெனில் எனக்கு திரும்பி இந்தபூமிக்கு வர இஷ்டமே இல்லை. இந்த சரீரத்தை விட்டு சென்றபின்பும் நான் நானாகத்தான் இருந்தேன் இந்த பூமியில் நடந்தவை ஞாபகங்கள் இருக்கின்றன. ஒளியை நோக்கி பிரயாணம் செய்தேன் அதில் தேவன் வாசம்பண்ணினார். பரலோகம் என்பது வருணிக்கமுடியாத அளவுக்கு அருமையாக உள்ளது. குருடனுக்கு சிவப்பு, நீலம்,பச்சை என்பதை எப்படி விளக்குவது கடினமோ அப்படித்தான் அங்கே பரலோகத்தில் பார்த்த உணர்ந்த அனுபவமும் விளக்குவது கடினம் என்று சொல்கின்றனர்.

கீழே ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானியாயிருந்தவர் (George Rodaniah) 1976-ல் வேண்டுமென்றே கார் மோதி கொல்லப்பட்டார். அவர் சரீரம் எரிக்கப்படவில்லை. மருத்துவமனையில் குளிர்-சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாள் கழித்து உயிர் வந்தது. பின்பு அமெரிக்கா சென்று
BayTown, Texas-ல் ஒரு போதகராக மாறிவிட்டார். அவருடைய சாட்சியை இங்கே படிக்கலாம் (George Rodania's Testimony). கடந்த அக்டோபர் 12, 2004ல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவருடைய சாட்சியை நான் எப்பொழுது படித்தாலும்/பார்த்தாலும், என் மனதில் ஓடும் எண்ணங்கள் பல. உங்களையும் சிந்திக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
டிஸ்கவரி சேனலில் (Discovery Channel) அந்த உண்மைச் சம்பவம் உங்களுக்கு இங்கே சான்றாக:




இன்றும் சில தேவனுடைய பிள்ளைகள் இறந்தபின்பு உயிரடைந்திருக்கின்றனர். YouTube-ல் தேடுங்கள் மரித்தபின்பு தேவனைச் சந்தித்த
மயிர்சிலுக்கும் சம்பவங்கள் காணலாம். அநேக வீடியோக்கள் இருப்பினும் இது டிஸ்கவரி சேனலில் வந்ததால் இங்கே ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் மரித்தபின் உயிரடைந்தவர்கள் வந்து சொன்னாலும் இயேசு சொன்னதுபோல் சந்தேகப்படும் சந்தேகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மனிதன் மரித்தபின்பு ஒன்றுமில்லாமல் போகிறான் என்று சொல்பவர்கள் இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது சற்றே சிந்திக்கட்டும். இன்று மரித்தால் எங்கு போவாய்? பரலோகத்திற்கா, நரகத்திற்கா? தெரியவில்லையெனில் இயேசுவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். ஏனெனில் அவரே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுள்ள தேவன். இயேசு: என்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு இந்த உலகிற்கு வந்து மனுஷருடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கையையும் நிச்சயத்தையும் அவர் தருவார்.

Monday, August 2, 2010

48. டார்வினின் பரிணாமக் கொள்கை, பைபிள் பற்றி?

சார்ல்ஸ் டார்வின் 1809-1882 வரை வாழ்ந்தவர். டார்வின் சொன்ன கோட்பாடுகள் சுமார் 200 வருடங்களுக்கு முன் வந்தவை. இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் நெருங்கிய சொந்தத்தில் தன்னுடைய Cousin-யை திருமணம் செய்திருந்தார். இவருடைய 10 குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து நடப்பதற்கு முன்பே இறந்தன. இவர் தன்னுடைய பத்து வயது மகள் இறந்தபின்பு அன்றுமுதல் இறைவன் மீது நம்பிக்கையில்லாமல் ஆலயங்களுக்கு போவதை அத்துடன் நிறுத்திவிட்டார். ( யோபு எங்கே! இவர் எங்கே? ). “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” - இவ்வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. எனவே மறைந்துவிட்ட உயிரினங்களின் எலும்புகளையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும்கொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். இவ்வாய்வின் விளைவாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை”முடிவுக்கு அவர் வர நேர்ந்தது. இவருடைய பரிணாம கோட்பாடுகள் (Theory of Evolution) இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இவர் ஒரு மரம்போல பல கிளைகளுடன் வரைபடம் வரைந்து இதிலிருந்து இது வந்தது என சொல்லியிருக்கிறார். இவ்விரண்டு உயிரினத்திற்கும் இடையிலே ஒரு உயிரினமும் காணப்படும் என்று சொல்லியிருக்கிறார். இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பவை "Missing Links-தொலைந்த/விடுபட்ட இணைப்புகள்" என பட்டியல் பெரிதாகிக்கொண்டேதான் போகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று வர கோடி வருடங்கள் ஆயின என்று சொல்கின்றன இவரது கோட்பாடுகள்.

உண்மையிலே எனது ஆராய்ச்சியின்படி உயிரினங்களின் வகைகள் குறைந்துகொண்டுதான் வருகின்றன. எனவேதான் இல்லாதவைகளின் எலும்புகளையெல்லாம் கண்டுபிடிக்கின்றனர். வெறும் சில எலும்பை வைத்தே உயிரினம் இப்படி இருந்தது என்று சொல்வது தவறு. உண்மையில் டார்விணின் வரைபடம்-மரம் கீழிருந்து மேலே போகவில்லை. மேலிருந்து கீழே வருகிறது என்றுதான் அகழ்வாராய்விலிருந்து முடிவுக்கு வரத்தோன்றும். ஏனெனில் பல ஜீவராசிகள் இன்று இல்லையே.

இவரது கொள்கையைப் பின்பற்றியவர்கள் இதற்கு பின் இதில் இரண்டு பிரிவுகளைக் கொண்டுவந்தார்கள். ஒன்று Micro-evolution, மற்றொன்று Macro-evolution. ஒரு கூட்டத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கு கால அளவில் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு வளர்ச்சியில் குட்டை அல்லது நிறம் மாற்றம் வருவது மைக்ரோ பரிணாமம். உணவு பழக்கத்தை வைத்து மனித இனம் குட்டையாகவும், வளர்ச்சியாகவும் ஆகமுடியும் என்று பலரும் அறிந்த உண்மையை இதற்கு சான்றாக கொண்டுவருகின்றனர். மேலும் ரோஜா பூவில் மாற்றங்களைக் கொண்டுவந்து பல புதிய ரோஜாவாக கொண்டுவருவதும் இந்த மைக்ரோ பரிணாமத்தில் அடங்கும்.
மூதாதையரைத் தேடும் படலம், உதாரணமாக குரங்கிலிருந்து மனிதனைக் கொண்டுவர முயற்சிப்பது மேக்ரோ பரிணாமம்.
(Microevolution is used to refer to changes in the gene pool of a population over time which result in relatively small changes to the organisms in the population — changes which would not result in the newer organisms being considered as different species. Examples of such microevolutionary changes would include a change in a species’ coloring or size.
Macroevolution, in contrast, is used to refer to changes in organisms which are significant enough that, over time, the newer organisms would be considered an entirely new species. In other words, the new organisms would be unable to mate with their ancestors, assuming we were able to bring them together).

Genome is the entirety of an organism's hereditary information. It is encoded either in DNA or, for many types of virus, in RNA.தற்போது விஞ்ஞானம் மனிதன் குரங்குகளிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் மனிதனுக்கும் குரங்குக்கும் (Chimps) பொதுவாக 48.6% மரபு மூலக்கூறுகள் (genome) இருப்பினும் 4.8% குரோமோசோம்களே பொதுவாக உள்ளன; ரேடியோலாரியனில் குரோமோசோம் எண்ணிக்கை 800, மனிதனுக்கு 46, ஆனால் குரங்குக்கு 48 என்பதால் கணக்கு இடிக்கிறது. (http://en.wikipedia.org/wiki/Radiolarian, http://www.apologeticspress.org/articles/2070) . எனவே விஞ்ஞானத்தின் வளர்ச்சி உலகில் பல கோட்பாடுகளை தவிடுபொடியாக்கிக் கொண்டுதான் வருகின்றன. சமீபத்தில் இவர்கள் தங்களது கோட்பாட்டில் ஒரு மாற்று கருத்தை தெரிவித்தனர். குரங்கும், மனிதனும் ஒரு மரத்தின் இருகிளைகள் போல என்றும், இவ்விரண்டிற்கும் பொதுவான மூதாதையர் இருக்கவேண்டும் என்றனர். எனவே அந்த மூதாதையரைத் தேடினர். தற்போது லெமோர் (Lemur) என்ற ஒரு மிருகத்துக்கு தாவி "விடுபட்ட இணைப்பினை" கண்டுபிடித்தோம் என்று சொல்கின்றனர், ஆனால் அதிலும் சிக்கல்கள்.யாரேனும் விஞ்ஞானம் தவறு என்று கூறுவது கண்மூடித்தனமாகும். விஞ்ஞானமும் அதின் கண்டுபிடிப்புகளும் முக்கியம். ஏனெனில் இவைகள் உண்மையை (truth) வெளியே கொண்டுவரும். மனிதன் இறந்தபின் அவன் ஆத்துமா செல்லும் அந்த பாதையை (Another Dimension) விஞ்ஞானம் கண்டுபிடிக்குமா?

பரிணாமக் கொள்கையும்
பைபிளில் சொல்லப்பட்டவையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஒரு காலத்தில் பைபிளில் உலகம் உருண்டை என்று சொல்லப்பட்டதை கேலி செய்து கொண்டிருந்தனர். விஞ்ஞானமானது உலகம் உருண்டை என கண்டுபிடித்தபின்பு ... அவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை."தேவன் இல்லையென்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்கிறான்" என்றும், "துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே" என்றும் பைபிளில் வாசிக்கிறோம். ஒரு கார் செய்வதில் எத்தனை ஞானம் தேவைப்படுகின்றது, அதில் எத்தனை பாகங்கள் உள்ளன! இந்தக்காரை ஒருவரும் உண்டாக்கவில்லை, சும்மா முளைத்து வந்தது என்று சொன்னால் காரை உண்டாக்கிய நிறுவனம் அவனைப் பார்த்து என்ன சொல்லும்?

ஒரு எறும்பு நாம் உறுவாக்கியுள்ள கம்யூட்டரை புரிந்துகொள்ளுமா? அதிலுள்ள mother board, number of layers in the PCB, components such as resistors, capacitors, LEDs, transformers, hard drive, USB, the monitor screen, the colors, contrast, CD/DVD drives, mouse, keyboards, wireless modems, speakers, the CPU and its thousands of registers that compute at binary level inside, and how it was fabricated to operate, the clock crystals......and overall the complicated software or the operating system, the BIOS, and the RAM and the drivers that runs on it...என நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படியானால் மனிதர்களாகிய நாம் எவ்வளவு விசேஷித்தவர்கள்!
For I am fearfully and wonderfully made: marvellous are thy works; என்று பைபிளில் வாசிக்கிறோம்.
பரிணாம கொள்கைவாதிகளிடம் நாம் காணும் இவைகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு, இது அதிலிருந்து வந்தது என்பர்....சரி அது எங்கிருந்து வந்தது? ..... அது எங்கிருந்து வந்தது என்ற தொடர் கேள்விக்கு இதுவரை "பதில் தெரியவில்லை" என்று தான் சொல்கின்றனர். இவர்கள்: தேவனை உண்டாக்கியது யார் என்று சிறுபிள்ளைபோல் கேள்வி கேட்கின்றனர். (http://tamilbibleqanda.blogspot.com/2009/11/17-what-is-name-of-god.html).




ISBN-10: 0374288798
ISBN-13: 978-0374288792

"டார்வின் தவறாக பெற்றவைகள் (அறிந்தது) என்ன?" இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதிய ஜெர்ரி ஃபோடோர் என்பவர் ஒரு "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையைச் சேர்ந்தவர். இவர் ரட்ஜெர்ஸ் பற்கலைக்கழகத்திலிருந்து தத்துவம் மற்றும் எண்ணங்களின் நிகழ்வு அறிவியல் (cognitive science) பேராசிரியரும், மாசிமோ பியாடெல்லி-பால்மாரினி என்பவர் அரிசோனா பற்கலைக் கழகத்திலிருந்து வந்த ஒரு எண்ணங்களின் நிகழ்வு என்னும் பேராசிரியருமாவார். எனவே இப்படியாக இவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உள்ளன. (http://www.salon.com/books/feature/2010/02/22/what_darwin_got_wrong_jerry_fodor)


ஒரு பெயர்பெற்ற பரிணாமக்கொள்கைவாதி(ரிச்சர்ட் டாக்கின்ஸ்)யிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் (வீடியோவில்):



உலகின் உற்பத்தி நிறுவனங்கள், விவசாயங்கள் இன்றும்:
நெல்லை விதைத்து நெல்லை அறுக்கின்றனர். ஆடுகளிலிருந்து ஆடுகளும், மீன்களிலிருந்து மீன்களும், பறவைகளிலிருந்து பறவைகளும், மனிதர்களிலிருந்து மனிதர்களுமே என தெளிவாய் உணர்த்துகின்றன. காலப்போக்கில் எல்லாம் மாறிமாறிவந்தால் உலகில் ஒரு இடத்திலிருந்தாவது நொடிப்பொழுதில் செய்தி வந்திருக்குமே இந்த நவீன உலகத்தில்!
மாற்றத்துக்குஒரு கோடி வருடங்கள் ஆகும் என்றால்... கோடான கோடி உயிரினங்கள் வாழும் இந்த பூமியில் நேற்றோடு ஒரு உயிரினத்துக்கு ஒருகோடி வருடம் முடிந்திருக்க வாய்ப்பு உண்டு; எனவே அங்கே அந்த மாற்றத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டுமே என்ற வாதமும் வலுக்கிறது. தற்போதைய பரிணாமக் கொள்கையின் தந்தையான ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்பவரிடம் ஒரு பேட்டியில் பரிணாமக்கொள்கைக்கு ஆதாரங்களை கேட்டார்கள். அவரோ "We are working on it" என்றே பதிலளித்தார்.


[Updated Feb, 2018] - மனித செல்லின் சிக்கலை அறிந்த இவர், இன்று இவரே ஒருவேளை வேறுகிரகத்திலிருந்து யாராயினும் வந்து நம்மை உண்டாக்கியிருக்கக்கூடும் என்று சொல்கிறார்.




இந்த விஞ்ஞான உலகில் நம்மால் ஆய்வகத்தில் எத்தனை இரசாயனங்களைக் கலந்தாலும் ஒரு உயிரினம் கூட செய்ய முடிவதில்லையே.
ஏற்கனவே உள்ள உயிரினத்தை எடுத்து அதோடு இரசாயங்களை கலக்கிறார்கள். இந்த பூனையில் இத்தனை சதவீதம் இரசாயனம் உள்ளது, இரும்பு, பொட்டாசியம், உப்பு, அமிலம் எல்லாம் உள்ளது என்று சொல்லத்தெரிகிறதே, இந்த அமிலங்களையும் இரசாயனங்களையும் போட்டு ஏன் ஓர் உயிரினம் கூட உருவாக்க முடியவில்லை? போன்ற கேள்விகளுக்கு மௌனமே பதில். அப்படியே பல விஞ்ஞானிகள் சேர்ந்து உருவாக்கினாலும், அது சிருஷ்டிப்பைத்தான் நிரூபிக்கும்; பரிணாமத்தை அல்ல. மேலும் சிருஷ்டிக்க மேலான அறிவு (Intelligence) தேவைப்படுகிறது என்பதையும் காட்டும்.
ஒரு பரிணாமக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவராயிருந்த ஒருவர் பற்றிய வீடியோ:





கடவுளை நம்பாத மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்களின் உள்ளுக்குள்ளே "ஒருவேளை தேவன் என்று ஒருவர் இருந்தால்..." என்ற பயமும் உண்டு. இந்த பூமியில் நான் கண்ட 100 மனிதரும் இறந்துவிட்டார்களே! எனவே எனக்கும் இறப்பு என்பது உறுதி. இறந்த பின் என்ன நடக்கும் என கொஞ்சம் யோசித்தார்களே என்றால், அதற்கு விடை பைபிளில் தெள்ளத்தெளிவாக உள்ளது. வேறு எங்கும் இல்லை.

நம்முடைய தேவன் நானே இவைகளை சிருஷ்டித்தேன் என தெளிவாக சொல்கிறார். மேலும் நான் ஒருவர்தான் தேவன் (God), வேறு தேவன் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். வேறு எந்த மதமும் இவ்வளவு தெளிவாகச் சொல்லவில்லை.

நானே தேவன், என்னைத்தவிர வேறு தேவன் இல்லை (I AM GOD, there is no one besides me):
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 44:8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.

ஏசாயா 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
ஏசாயா 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

நானே சிருஷ்டித்தேன் (I created):
ஏசாயா 42:5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
ஏசாயா 45:12 நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
ஏசாயா 40:28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.
ஏசாயா 45:18 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்;

யோவான் 1:3 சகலமும் அவர்[இயேசு] மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
ரோமர் 1:20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

எனவே நம்முடைய தேவனே இவைகளை உண்டாக்கினபடியால், "டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு". தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் டார்வினின் கொள்கையினை நம்பினால் / பின்பற்றினால் உங்கள் வாழ்வில் நீங்கள் தேவனையும் அவர் கரத்தின் கிரியைகளையும் மறுதலித்தது போலாகிவிடும்.

இக்கட்டுரை விவாதத்திற்கு அல்ல, தகவலுக்காக.