Saturday, August 15, 2009

3. தற்கொலை செய்துகொள்பவர்கள் நித்திய ஜீவனை (பரலோகம்)அடைவார்களா? அல்லது நித்திய ஆக்கினை அடைவார்களா?

எனக்கு ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது:

ஏசாயா 44:20 வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; நம்மை தேவனுடைய சித்தம் செய்யவிடாமல் அழிவுக்கு கொண்டுசெல்லும் பிசாசின் தந்திரமே இது! கீழே உள்ள வசனங்களை வாசிப்போம்: 

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 

வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதுக்கே கணக்கு கொடுக்கவேண்டும் என்றால், தற்கொலைக்கு? 

 ரோமர் 1: 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 
32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள். 

 யூதாஸ் தற்கொலை செய்துகொண்டு (தூக்கு) செத்தான். அவனை கேட்டின் மகன் என்று வாசிக்கிறோம். கொலைபாதகன் நரகத்துக்கு ஏதுவாக இருக்கிறான். தற்கொலையும் ஒரு கொலை

மத்தேயு 5:22 தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான். கொலைகூட செய்யத்தேவையில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத செயலும் ஒரு தற்கொலைதான் என்று சிலர் கூறுகின்றனர்!! 
(யோவான் 3:18.அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.) நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க வாய்ப்பில்லை. ஒரு உண்மைச் சம்பவம் இங்கே செய்தியாக:

4 comments:

Love Jesus said...

Everyone in this world should know that GOD is there to take care of everything. We dont have any control on anything and we dont have any rights on anything in this world. HE is everything. Thank You Jesus. Please bless all of us.

Gopal said...

Jesus is the only way to go heaven we got saved by his holy blood ....... By the name of Jesus Christ I bless you all .....thanks

ruth said...

super

Joyal Sam said...

எசேக்கியேல் 18:32 மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.