Monday, May 10, 2010

38. பரலோகத்தில் நமக்கு சிறகுகள் இருக்குமா?




இயேசு சொன்னார் "மாற்கு 12:25 மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;"

இப்படிப்பட்ட வசனத்திலிருந்து நாமெல்லாரும் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல சிறகுகளோடு இருப்போம் என்று அநேகர் நமக்கு சொல்லியுள்ளார்கள். பறக்க சிறகு தேவை என நினைப்பதால், இப்படிப்பட்ட எண்ணம் எழலாம்.
ஆனால் விமானம் பறந்து செல்கின்றது, சிறகடிக்காமல்! நானும் விமானத்தில் பறந்து சென்றேன், பறவைபோல் சிறகடிக்காமல். தேவதூதர்களும் சிறகடிக்காமல் அப்படியே மேலே செல்கின்றனர் என்ற உண்மைச் சம்பவமும் உண்டு. எனவே பறக்க சிறகுகளை அடிக்கவேண்டும் என்று சொல்ல இயலாது.

முதலாவதாக மேலே ஒரு கேள்வி: ஒரு பெண் ஏழு சகோதரர்களுக்கு மனைவியாயிருந்தாள். உயிர்த்தெழுதலில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள்? என்று இயேசுவிடம் கேட்டார்கள். ஒரு மிகவும் நல்ல கேள்வி இங்கே கேட்கப்பட்டுள்ளது! இயேசு கணவன்-மனைவி என்னும் பந்தம் பரலோகத்தில் இல்லை என்று சொல்வதற்காக அவர்கள் தேவதூதர்களைப்போல கொள்வனையும் கொடுப்பனையும் (getting married) இல்லாமல் இருப்பார்கள் என்றார். இங்கே தேவதூதர்களின் ஒரு தன்மை (திருமணமின்றி இருப்பது) சொல்லப்பட்டுள்ளது. எனவே தேவதூதர்களின் மற்ற அம்சங்களை நமது இந்த கேள்விக்கு பதிலாக ஒப்பிடக்கூடாது.

இரண்டாவதாக இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவருக்கு சிறகுகள் இல்லை. அவர் பூட்டியிருந்த அறைக்குள் பிரவேசிக்கும் சரீரத்தைக்கொண்டிருந்தார்.
அவர் ஒலிவமலையிலிருந்து அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று அப்போஸ்தலருடைய நடபடிகளில் வாசிக்கிறோம்.
இன்னொரு வசனம் ஆதியாகமத்தில்: தேவன் மனிதனை தன்னுடைய சாயலின்படியே உண்டாக்கினார். அங்கே சிறகு இல்லை.
"அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்" என்றும் "பரலோகத்தில் நாம் அவரைபோல இருப்போம்" என்றும் வேதத்தில் சொல்லப்படுள்ளது. எனவே நமக்கு அநேகமாக சிறகுகள் இருக்காது என்று நான் நினைக்கின்றேன்.

(இருந்தாலும் சந்தோஷம்தான்
)

.

3 comments:

Unknown said...

இந்துவாக இருந்து கிரிஸ்துவராக மாரின பின்பு பொட்டு வைக்க கூடதா. கல்யானம் ஆனவர்கள் நெட்றியில் குங்குமம் வைக்க கூடதா. பூ வைப்பது சிகை அலன்ங்காரம் செய்வது தவறா?

Unknown said...

enaku sariyana payama iruku sir. sethathuku piragu enna nadakum nu . ninikum pothu my heart painfull ha iruku. enalla ahai ninikamalum iruka mudiya vellai reason enn manasu question ku answer thedothu . plz help me for my question

Tamil Bible said...

@Divya Thenna:
பொட்டுவைப்பது இந்துக்கள் தாங்கள் சிவனை சேர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காக வைக்கிறார்கள். நீங்கள் வைக்கவேண்டாம்.

@Dev Ananth:
உங்களுடைய பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிடுங்கள். அவரை உங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டு அவரைப்பின்பற்றுங்கள். ஒரு நல்ல சபைக்கு செல்லுங்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.