Sunday, November 7, 2010

61. உபாகமம் 18:15-ல் சொல்லப்பட்டவர் முகமதுதானே - இதை உங்களால் மறுக்கமுடியுமா?

Part I

இஸ்லாமிய சகோதரர் ஒருவர் இக்கேள்வியை (இன்னும் சில கேள்விகளும்) கேட்டார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல, இயேசு.

இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்களின் வேதமானது தவறு. அப்படியானால் இவர்கள் பைபிள் பக்கமே வரக்கூடாது. (உண்மையிலேயே அவர்களுடைய புத்தகம்தான் பைபிளில் இருந்து எடுத்து புரட்டப்பட்டதும், தவறான உபதேசங்களையுடையதுமாக இருக்கிறது. முகமது என்பவர் 500 வருடம் கழித்து வந்த ஒரு கள்ளப்போதகர். இதைப்பற்றி விளக்கமாக ஒரு தனி கட்டுரை எழுதலாம்.)

இவர்கள் முகமது தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று நிரூபிக்க அவரைப்பற்றிய முன்னறிவிப்பு எங்கேயாவது இருக்கவேண்டுமே என்பதால் இங்கே ஓடி வருகின்றனர். இதற்காக உபாகமம் 18:15 எடுத்து சொல்கின்றனர். இங்கே சொல்லப்பட்டவர் இயேசு, முகமது அல்ல.

உபாகமம் 18:15-22
. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.


 [A] என்னைப்போல: இது வெறும் மோசேயின் சரீரப்பிரகாரமான வாழ்வைப்பற்றிய ஒப்பிடுகை அல்ல. 
- மோசே தேவனை முகமுகமாக தரிசித்தவர். முகமது தேவனை தரிசிக்கவில்லை.
- மோசே இஸ்ரவேலன். முகமது இஸ்ரவேலன் அல்ல.
-  மோசே பல அற்புதங்களைச் செய்தவர். முகமது அற்புதம் ஒன்றும் செய்யவில்லை.
- மோசேயைப்போல சாந்தகுணமுள்ள மனுஷன் இல்லை என்று வாசிக்கிறோம்.
இயேசு மிகவும் சாந்தகுணமுள்ளவராயிருந்தார். அவர் “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” என்றார்.  ஆனால் முகமது பலரைக் கொன்றவர்.


[B] சகோதரர் யார்?
[B1] இங்கே உங்களுடைய சகோதரருக்குள்ளே என்றால் இஸ்ரவேல் ஜனங்களுடைய சகோதரருக்குள்ளே என்று பொருள். அதாவது இஸ்ரவேல் ஜனங்களின் 12 கோத்திரங்களுக்குள் ஆகும். இஸ்லாமியர்களோ இஸ்ரவேல் ஜனங்களுக்கு சகோதரன் இஸ்மவேல் என்பவனின் சந்ததி என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆபிரகாமுக்கு ஈசாக்கு, இஸ்மவேல் பிறந்தனர். அவர்கள் இருவரும் சகோதரர். ஈசாக்கு என்பவனுக்கு பிறந்தவர்கள் யாக்கோபு, ஏசா; இவர்கள் இரட்டையர்கள். தேவன் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். இன்று இஸ்ரவேல் தேசம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது யாக்கோபுக்கு தேவன் இட்ட பெயர்! யாக்கோபுக்கு பிறந்தவர்கள் 12 பேர்; இவர்கள் வம்சம்தான் இஸ்ரவேலர்.

யாக்கோபின் 12 குமாரரில் ஒருவனாகிய யோசேப்பு எகிப்திலே இருந்தபோது அவனுடைய பத்து சகோதரரும் வந்து அவனுடன் நாங்கள் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள் நாங்கள் எல்லாரும் 12 பேர் சகோதரர் (இஸ்ரவேலர்கள்) என்று சொல்கின்றனர்.

[B2] ஏசாவின் சந்ததியாரும் இஸ்ரவேலருக்குச் சகோதரர் என்று சொல்லப்பட்டுள்ளது:
எண் 20:17,18
17. நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் (சேயீர் தேசம்) கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.
18. அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

மேலே ஏதோம் என்பது யாக்கோபு (இஸ்ரவேல்) என்பவரின் சகோதரன் ஆவார். ஆதியாகமம் 25:30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

ஆதியாகமம் 36:8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.

[B3] யாத்திராகமம் 2:11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு...

மேலே மோசேயைப் பொருத்தமட்டில் சகோதரர் என்பவர்கள் எபிரெயர்கள் அதாவது இஸ்ரவேல் ஜனங்கள். இங்கேயே விவாதத்தை மூடிவிடலாம். (பல தலைமுறைகள் மேலே போகக்கூடாது; கொஞ்சம் நாள் கழித்து நோவாவின் பிள்ளைகளில் காமும், இஸ்மவேலும் சகோதரன் என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்.)

எனவே மோசே சொல்லும்போது: எபிரெயர்கள் (அதாவது இஸ்ரவேலர்கள்), ஏசாவின் சந்ததியார் ஆகியோரே சகோதரர் ஆவர். இஸ்மவேலின் சந்ததி அல்ல.

[C] "என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

எனவே இவர் இயேசுதான்.

[D] மோசே யாரைக்குறித்துச் சொன்னான்?

இயேசு சொன்னார்:
யோவான் 5:46 "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே."

இங்கேயே இந்த விவாதம் என்கிற சவப்பெட்டிக்கு ஆணியத்து புதைத்துவிடலாம். இயேசுவே தெளிவாக மோசே என்னைக்குறித்து சொன்னான் என்று சொல்கிறார். எனவே கண்டிப்பாக முகமது இல்லை.



மேலும் பேதுரு பேசும்போது:
அப் 3:22. மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

இங்கே பேதுரு இயேசுதான் மோசே முன்னறிவித்தவர் என்று தெளிவாக சொல்லுகிறான். எனவே விவாதம் என்று புதைக்பட்ட சவப்பெட்டியை கான்க்ரீட் போட்டு பூசிவிடலாம். இதற்குமேல் அவர்கள்  மனந்திரும்பி இயேசுவை வணங்காவிட்டால் நரகம்தான். ஏனெனில் மோட்சம்/பரலோகம் செல்ல இயேசு மட்டுமே வழி.


[E] சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும்"
தேவனுடைய நாமத்தைக் (name which is YHWH ) கொண்டு
முகமது பேசவில்லை. ஆனால் இயேசுவோ எப்போதும் பிதாவை குறிப்பிடுகிறார்.
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
(சுயமாக வந்த முகமதுவை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!)
யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.

எனவே இயேசுவைக்குறித்துதான் உபாகமம் 18:15ல் சொல்லப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------
Part II

"பாரான் வனாந்தரம்" - விளக்கம்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு 40 வருடம் வனாந்திர வழியாக கானான் தேசத்துக்கு போனார்கள். அப்படி போகும்போது அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, ஏத்தாமுக்கு வந்து பின்பு ஈரோத் பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். இங்கிருந்துதான் செங்கடலைக் கடந்தார்கள். இந்த இடத்தை இன்றும் Google-map ல் காணலாம். Nuweiba என்று தற்போது அதற்கு பெயர்.
பின்பு சூர் என்ற இடத்துக்கு வந்து, பின்பு மாராவுக்கு வந்தாகள் (இங்கே தண்ணீர் கசப்பாக இருந்தது, அதை மதுரமாக மாற்றினார் தேவன்), இங்கிருந்து ஏலீமுக்கு வந்தார்கள் அங்கே 70 பேரீச்சமரங்களும், 12 நீரூற்றுகள் (கேணிகள்) இருந்தன. இதையும் தற்போது Google-map ல் காணலாம். ஆச்சரியமாக இன்றும் அந்த 12 நீரூற்றுகளும் உள்ளன, ஆனால் பேரீச்சமரங்களோ மிக அதிகம். அங்கிருந்து சீன், தொப்கா, ஆலூஸ், ரெவிதீம், சீனாய் மலையடிவாரம், கிப்ரோத் அத்தாவா, பாரான் வனந்திரம், காதேஸ்... என போகின்றது இடங்களின் வரிசை.
பாரான் வனாந்திரத்தில் மோசே கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி 12 பேரை அனுப்பினான். அவர்களில் 10பேர் துர்செய்திசொன்னார்கள். இரவு முழுதும் ஜனங்கள் அழுதனர். ஆனால் காலேபும், யோசுவாவும் தைரியம்கொடுத்தனர்.
10. அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

இதுதான் பாரன் வனாந்தரத்திலிருந்து தேவன் பிரகாசமாக தோன்றினார் என்று அர்த்தம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
Part III

"சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால்,
சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால்,
பாரானில் தோன்றிய பிரகாசம் எது?"

இப்படி பைபிளை சரியாக படிக்காதவரின் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. இந்தக் கேள்வியும் தவறு, அதின் யூகமும்(assumption) தவறு.

தேவன் ஒளியாயிருக்கிறார். அவர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் எழுந்தருளும்போது தோன்றும் மகிமைதான் அப்படியாக கூறப்பட்டுள்ளது. பாரானில் தோன்றிய பிரகாசம் எது என்று Part II-ல் சொல்லப்பட்டுள்ளது.

"சீயேர்" என்று பைபிளில் எங்கும் இல்லை, அது "சேயீர்". சரியாக வேதத்தை படியுங்கள்.
சேயீர்:
உபாகமம் 1:2 சேயீர் மலைவழியாய் ஓரேபுக்கு...
எண் 20:6. அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
இது சேயீரில் தோன்றிய தேவனின் மகிமை.
சீனாய் மலையில் தோன்றிய பிரகாசமும் தேவனின் மகிமை.
---------------------------------------------------------------------------------------------
Part IV

"எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.(யோவான் 1:19,22) -- இதில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசி யார்? அவர் தான் முகமது"

எனக்கு சிரிப்புதான் வருகின்றது, நீங்கள் இப்படி புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்கக்கூடாது.

"நீங்கள் ஆசிரியரா?" என்று ஒரு பையன் கேட்டான்.
அதற்கு அவர் "அல்ல" என்றார்.
உடனே அந்தப் பையன் அப்படியானால் ஆசிரியர் என்பவர் முகமது என்றான்.
என்ன ஒரு முட்டாள்தனம்!

மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். (என்று யோவான் ஸ்நானகன் இயேசுவைப்பற்றி சொன்னார்)

யோவான் 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். (என்று இயேசுவைக் காட்டி யோவான் ஸ்நானகன் சொல்கிறான்.)

மத்தேயு 21:11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.


-------------------------------------------------------------------------------------------------

மேலே [D] என்ற வாதம் ஒன்றே மோசேயால் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்று மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது. இதற்குமேலும் அவர் முகமது என்று
எப்படித்தான் நம்புகிறார்களோ தெரியவில்லை.

முகமது பெற்ற கட்டளைகள் சத்தியத்துக்கு மாறாக இருக்கின்றன.

கலாத்தியர் 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

எனவே 500 வருடம் கழித்து பிசானவன் (ஒளியுள்ள தூதன் வடிவில் வந்து) பாதி உண்மையும் பாதி பொய்யும் பேசி முகமதுவை வஞ்சித்துள்ளான். இயேசுவின் போதனைகளை மாற்றி சொல்லும் அவர் மேலே சொன்ன வசனத்தின்படி சபிக்கப்பட்டவர்.

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

500 வருடம் கழித்து வந்த முகமது ஒரு கள்ளப்போதகர். பைபிளில் சொல்லப்பட்டுள்ள தேவன் வேறு. முகமது சொல்லும் தேவன் வேறு:

குறிப்பாக பைபிளில், தேவன் பிதா, மனிதர்கள் அவரின் பிள்ளைகள். தேவன் மனிதர்களை நேசிக்கிறார். 
ஆனால் குரானில், அல்லாஹ் எஜமான், மனிதர்கள் அவனின் அடிமைகள். அன்புக்கு அவனிடம் இடமில்லை.
முகமதுவை பின்பற்றினால் நரகத்துக்கு போவீர்கள். இயேசுவைப்பின்பற்றினால் பரலோகம்/மோட்சம் கிடைக்கும்.


சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
இயேசு சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"

காணொளிகள்: https://islam-qanda.blogspot.com/

16 comments:

Anonymous said...

wonderful forehead beating to the cults. pastor gideon abiramam

Nithiyaraj said...

Wonderful.. Explanations.....

This blog really edifies..

srinivas said...

relay amazing very good explacton thank you

Sathishkumar said...

Well said

Anonymous said...

nice

charlin said...

மிகவும் அருமை

Dinesh said...

Praise The Lord

Asir said...

superb explanation...Islamians got shame...

Unknown said...

2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

Anonymous said...

Chandran
The following verses again confirms Christ/Holy Spirit John:15:26-But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me: (KJV). Md Not testified Christ so he is not the prophet told in Bible.
John:16:7-8 Nevertheless I tell you the truth; It is expedient for you that I go away: for if I go not away, the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you. (KJV)
And when he is come, he will reprove the world of sin, and of righteousness, and of judgment:

Unknown said...

Realy Great sir, You made us clear about that,

Anonymous said...

Good explanation. May God open the eyes of the Muslims whose eyes were blinded by satan.(II Corinthian 4:4)

Anonymous said...

Your explanations are useful for christians having doubts as to whether Mohammed is God-sent. Christians should be aware of tactics of Satan.

kanimozhi said...

good explanation

Pastor Rubah said...

Excellent
Pastor Rubah

Unknown said...

அருமையான பதில்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.