Monday, August 10, 2009

2. என்ன அர்த்தம்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும் ... வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இதன் பொருள்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் விட அதிகமாய் என்னை நேசிக்காதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

"தேவன் அன்பாகவேயிருக்கிறார். புருஷர்களே உங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூருங்கள், மனைவிகளே உங்கள் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

யோவான் 15:9.
ல் பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
யோவான் 15:12
ல் நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது என்று இயேசு கூறியிருக்க மேலே கூறப்பட்ட வசனத்தை சிலர் தவறாக விளங்கிக்கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில்:
 [1] மத்தேயு 19:29 - forsake (விட்டுவிடுதல்)
[2] மாற்கு 10:19 - forsake (விட்டுவிடுதல்)
[3] மத்தேயு 10:37 - loving more than ( அதிகமாக நேசித்தல்)
[4] லூக்கா 14:26 - hate (வெறுத்துவிடுதல்)

இந்த வசனங்கள் அனைத்தும் வெறுப்பு (hatred) என்கிற அர்த்தத்தில் அல்ல, விட்டுவிடுதல், தேவனை இவை எல்லவற்றைக்காட்டிலும் அதிகமாக நேசித்தல் அல்லது இவைகளை ஒதுக்கி வைத்து விடுதல் என்றே அர்த்தமாகும்.

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கட்டளை.
I) மாற்கு 1:30ல் அங்கே சீமோனுடைய (பேதுருவின்) மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; பேதுருவுக்கு தன் வீட்டின் மேல் ஒரு சிந்தை இருந்ததாக நாம் இதன் மூலம் தெரிகிறது. இயேசுவோ இந்த பேதுருவைக்கொண்டு தன் சபையை கட்டி எழுப்ப சித்தம் கொண்டிருந்தார். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு பேதுரு பின்மாற்றம் அடைந்து மீண்டும் மீன் பிடிக்க சென்றார். அங்கே இயேசு தோன்றி யோனாவின் குமாரனாகிய சீமோனே "இவர்களிலும் அதிகமாய் நீ" என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என் ஆட்டுக்குட்டிகளை(சபையை/ஆத்துமாக்களை) மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21)

இங்கு "மனைவியையும் ....
சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும்" காட்டிலும் நீ என்னை நேசிக்கிறாயா? என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.


II) தேவன் ஆபிரகாமை "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்." ஏன்? அவன் தன் மகனை தேவனைக்காட்டிலும் அதிகமாக நேசித்தான். அவனைபலியிட கொண்டு சென்ற பின் தேவன் அவனை தடுத்து நிறுத்தி: "நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்." இங்கே நேசகுமாரன் என்று தேவன் கூறவில்லை!

மத்தேயு 19:27 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; என்றான்.

இதற்காக திருமணம் ஆகாதவர் திருமணம் செய்து பின்பு மனைவியை விட்டுவிட்டுவரவேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு காவல் நிலையத்தில் “குடைகளை வெளியே வைத்துவிட்டு உள்ளே வரவும்” என்று எழுதப்பட்டிருந்தது. ஒருவர் அதைப்படித்துவிட்டு கடைக்குப்போய் குடைவாங்கிவந்து வெளியே வைத்துவிட்டு உள்ளேபோவது போலாகிவிடும். கர்த்தர் அநேகம்தரம் திருமணமான தம்பதியினரை இருவரையும் முழுநேர ஊழியத்துக்கு அழைப்பார்.

திருமணம் ஆகாதவர்கள் குடும்பகாரியங்களைக்குறித்து கவலைப்படத்தேவையிருக்காது. தேவனுக்காக முழு நேரம் ஊழியம் செய்ய விரும்புவோர், எல்லாவற்றையும் விட்டு தேவனை பின்பற்றினால் அதுவே மேலான சேவையாகும். பரலோகத்தில் சிறப்பான பிரதிபலன் கிடைக்கும். மனைவியுடன் ஊழியம் செய்தால் தவறல்ல. குடும்பத்தை நடத்த தெரியாதவன் சபையை எப்படி நடத்துவான் என்று வசனம் உண்டே. எனவே தேவன் உங்களை எப்படி அழைத்தாரோ அப்படியே செய்யுங்கள். இவை எல்லாவற்றிலும் அன்பே பெரியது. (1 கொரி 13)




4 comments:

Anonymous said...

Praise The Lord.
Please advice what u conclude from here?
R u saying, marrying & doing ministry is right?

Tamil Bible said...

It is according to their "calling".

. An Apostle should forsake/leave everything.
. I see that there are lot of evangelists who are married, in this world.

If you are just teaching Sunday school or just playing some instrument at the church, you can be married for that kind of ministry.

எபேசியர் 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

A.Thiveyarajan said...

anybody live with gods word he is not died . this Jesus Words

Unknown said...

SUPER SIR




தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.