Wednesday, September 30, 2009

6. மோசே ஏன் கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை? அப்படியானால் என் ஜெபத்துக்கு பதில் வருமா?

அநேகர் தவறாக சொல்லும் கருத்து: "மோசே கன்மலையிடம் பேசாமல் அடித்தான் (அந்த கன்மலை கிறிஸ்து), எனவேதான் பிரவேசிக்க முடியாமல் போயிற்று".
அப்படியல்ல, நம்முடைய பாவங்களினால் நாம் கர்த்தரை சிலுவையில் அறைந்தோம், அவரோ நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து நம்மை இரட்சித்தார்!

எண் 12:7 ல் "என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்." என்று மிரியாமும், ஆரோனும் (கூடப்பிறந்த சகோதரியும், சகோதரனும்) முறுமுறுக்கும்போது கர்த்தர் சொன்னார். ஆனால் எட்டு அதிகாரங்கள் கழித்து ...கர்த்தர் கூறும் காரணம்:எண் 20:12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

இரண்டு காரணங்கள்:
[1]
[மோசே, ஆரோன்] நீங்கள் என்னை விசுவாசியாமற் போனீர்கள். 
[2] இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணவில்லை.
 

இவ்வளவு பெரிய இஸ்ரவேல் சபைக்கு முன்மாதிரியாக, நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய மோசே செய்த தவறை 5000 வருடங்கள் கழித்து உலகம் முழுதும் நாம் பார்க்கிறோமே. மோசேயின் அவிசுவாசமும், முன்மாதிரியாக இல்லாமல் இருந்ததும் (அதாவது கர்த்தரை பரிசுத்தம் பண்ணவில்லை என்பதும்) காரணங்களாகும்.

சொந்த அனுபவத்தில் ஒரு காரியம் சொல்கிறேன். ஒரு நாள் ஒரு சபையின் போதகர் தமது சபையின் ஜனங்களை மற்றவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல சனிக்கிழமையன்று ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்தார். அவரோ அன்று வராமல் வீட்டில் இன்னொருவருடன் காரை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். ஜனங்கள் ஏன் போதகர் வரவில்லை என்று காரணம் தெரியாமல் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். பின் அவரவர் ஒரு திசைக்கு சென்று ஊழியம் செய்தார்கள். அடுத்த நாள் (ஞாயிறு) போதகர் காரை ஓட்டி வரும்போது பாதி வழியில் எஞ்சினில் நெருப்பு பிடித்து முழு காரும் எரிந்து போனது. முன்தினம் அவர் வராமல் போனதால் அவர்
கர்த்தரை பரிசுத்தம்பண்ணவில்லை, உண்மையாயிருக்கவில்லை. அநேகருக்கு அவர் மாதிரியாயிருக்கவில்லை. எனவே தான் தனிமனிதனின் தவறுக்கும், மகா ஜனங்களுக்கு தலைவன் செய்யும் தவறுக்கும் தேவன் இவ்வுலகில் கொடுக்கும் பதில் வேறாயிருக்கிறது. மோசே அப்படியே இரண்டாந்தரம் தண்ணீர் விஷயத்தில் ஜனங்களுக்கு மாதிரியாய் இருக்கவில்லை. மோசே "ஆறு லட்சம் புருஷர்" (பெண்கள், பிள்ளைகள் தவிர) பேருக்கு தலைவனாயிருக்கும் போது அதை எத்தனை பேர் சுட்டிக்காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

காரியம் இப்படி என்றால், என் ஜெபத்தை எப்படி ஆண்டவர் கேட்பார் என்றெல்லாம் சிந்திக்கக்கூடாது. பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். என்கிற வேத வசனங்களை மனதில் வைத்துக்கொள்வோம். கர்த்தர் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவர் என்பதை விசுவாசியுங்கள்.
எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்:ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
The golden verse: விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். எனவே நாம் கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருப்போம்.எண் 23: 19 அவர் சொல்லியும் செய்யாமலிருப்பாரா என்னும் வார்த்தை நமது இதயத்தில் ஒலிக்கட்டும்.

இயேசுவுடன் மறுரூபமலையில் யார் தோற்றமளித்தனர்? மோசே, எலியாவும். அப்படி என்றால் மோசே எவ்வளவு தயவு பெற்றவன்!


 

2 comments:

Anonymous said...

அருமையான பதில்.

BhavaniSindhu said...

nalla vilakkam nandri brother

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.