[Part I]
இயேசுதான் மேசியா என்று எப்படி சொல்வது?
யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனிடம்: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
லூக்கா 22:67 நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள் [என்றார்].
யோவான் 10:24-26 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
யோவான் 4:25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்
இங்கே இயேசு நானே மேசியா என்று சொன்னார்! இந்த வசனங்கள் மூலம் நாம் இயேசுவே மேசியா என நிரூபிக்கலாம்.
[Part II]
ஏன் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை?
யூதர்களில் இரு கூட்டத்தார் இருந்தனர். ஒரு கூட்டத்தார் அவரைப் பின்பற்றினர்; மற்ற கூட்டத்தாரோ அவரைப் பின்பற்றவில்லை. இயேசு செய்த அநேக அற்புதங்களினிமித்தம் அவரை ராஜாவாக்கிவிட எண்ணினார்கள். யோவான் 6:15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
இந்தியா இங்கிலாந்தின் ஆட்சியிலிருந்து விடுதலைபெற எப்படி மகாத்மா காந்தி காரணமாயிருந்தாரோ, அதுபோல யூதர்கள் மேசியாவானவர் ரோமர்களின் ஆட்சியிலிருந்து தங்களை விடுதலைபண்ணுவார் என்று நம்பியிருந்தார்கள். இயேசு அப்படி செய்யவில்லை. எனவே அவரை மேசியா என ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதுவே முக்கிய காரணமாகும்.
அப்போஸ்தலர் 1:6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். இங்கேயும் அவர்களுடைய ஏக்கம் தெரிகிறது.
யோவான் 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
2 comments:
when they will believe
//when they will believe//
இப்போதும்கூட ஏராளமான யூதர்கள் இரட்சிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் சகோதரரே. நாங்கள் அவரகளுக்காக ஊக்கமாக ஜெபிப்போம்.
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.