Thursday, July 22, 2010

46. பைபிளில் பொட்டு வைப்பது, தாலி பற்றி சொல்லப்பட்டுள்ளதா? அதற்கு அர்த்தம் உண்டா, பொட்டு வைக்கலாமா?




பைபிளில் பொட்டுவைக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படவில்லை. தாலியும் இல்லை. ஆனால் நிச்சயம் செய்தபின்பு திருமணம் செய்ததாக வாசிக்கிறோம். நிச்சயம் செய்பவர் தன் காலிலுள்ள ஒரு செறுப்பைக் கழற்றி கொடுத்ததாக "ரூத்" 4ம் அதிகாரத்தில் படிக்கிறோம். இந்த நிச்சயம் செய்யும் பழக்கம் யூதர்களிடமிருந்துதான் இந்தியாவுக்கு வந்தது.

அக்காலத்தில் தமிழர்களின் கலாச்சாரத்தில் தாலி கட்டும் பழக்கமில்லை. ஆம் இது உண்மை. பின்புதான் மஞ்சள் கயிறு அடையாளமாக வந்தது. வெளிநாட்டவர் நம் நாட்டில் புகுந்து அராஜகம் செய்ய ஆரம்பித்தபோது, தமிழ்ப்பெண்கள் தாங்களுக்கென ஒரு வேலி என்று தங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்திய அடையாளம் மஞ்சள் கயிறு. (அப்போது மஞ்சளும் கயிறும் சுலபமாக கிடைத்ததால். வேறு மாநிலங்களில் கறுப்பு-பாசி என்று...). திருமணமாகதவர்களிலும் சிலர் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு தாங்களே தங்கள் கழுத்துகளில் மஞ்சள் கயிறுகளைக் கட்டினர் என்றும் சொல்லப்படுகின்றது.  எனவே வேற்றான் ஒருவன், ஒரு பெண்ணைக்கண்டு அவள் திருமணம் ஆனவளா இல்லையா என அடையாளம் கண்டுகொள்ளவே தாலி வந்தது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. பின்பு அதுவே நாளடைவில் பழக்கத்தில் வந்தது. தாலிக்கும் எந்த மதத்துக்கும் சம்பந்தமில்லை. எப்போது திருமணத்தன்று ஒரு அர்ச்சகர் (புரோகிதர்) மற்றும் தெய்வங்கள் வர ஆரம்பித்ததோ அன்றுமுதல் அது அந்த மதத்துடன் கலக்க ஆரம்பித்தது. ஆண்களும் தாலி கட்டவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கும் திருமணமாயிற்று என்று சொல்லமுடியும் என்று ஒரு கூட்டம் பெண்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதுவும் சரிதானே?

தமிழ்நாட்டில் அதற்கு முன்பு ஒரு வீரசாகசம் செய்து பெண்ணை மணக்கும் பழக்கம்தான் இருந்தது. இப்பழக்கம் இருந்ததற்கு அடையாளமாக சில இடங்களில் காளையை அடக்குவது என்ற நிகழ்ச்சியைக் காணலாம். இன்றும் சில இடங்களில் பொங்கல் பண்டிகையில் காளை மாடுகளை அவிழ்த்து தெருவில் ஓடவிட்டு இளைஞர்கள் பாய்ந்து பிடிப்பதும் காயமடைவதும் காணமுடிகிறது.
இந்துக்கள் பொட்டுவைக்க காரணம் உண்டு. அதற்கு புராணக்கதைகள் உண்டு. இணையதளத்தில் எடுத்தபகுதி (சாய்ந்த எழுத்துக்களில்): "பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவன் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை) தரவேண்டும் என சிவன் கேட்கிறான். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவனின் நெற்றியில் வைக்கிறாள். அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது. ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. தமிழர் பயன்படுத்தும் தாலியானது இரண்டு புலிப்பற்களை பொன் தகட்டால் கோர்த்தது போலிருக்கும். பண்டைநாளில் மணமகன் தானே கொன்ற புலியிடமிருந்து எடுத்துவந்த பற்களிரண்டைப் பொன் தகட்டில் கோர்த்துத் திருமண நாளிலே அதை மணமகள் கழுத்தில் கட்டும் வழக்கம் தமிழரிடையில் - குறிப்பாக, குறிஞ்சிநில மக்களிடையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது."

இப்போது அநேகர் அழகுக்காக பொட்டுவைக்கின்றனர். பூவும் தலைமுடி நாறாமல் மணம் வீசத்தான். ஆனால் இப்போது அவர்களே மல்லிகைவைத்தால் பேய் பிடிக்கும் என்று நம்புகிற அளவுக்கு போய்விட்டனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பதில்லை. பைபிளில் பொட்டு மற்றும் நெற்றியில் திலகமிடுதல் என்று ஏதும் இல்லை. எசேக்கியேல் 9ம் அதிகாரத்தில் கர்த்தர் "நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்". இங்கே அவர்கள் நெற்றியில் அடையாளமிடு என்று சொல்லப்பட்டுள்ளது, அது அவர்களை வேறுபிரித்துக்காட்டத்தான். இனி வரவிருக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையிலும் "நெற்றியிலோ" அல்லது "கையிலோ" அவன் ஒரு அடையாளத்தை (முத்திரையை) தரிக்கும்படி கட்டளையிடுவான் என்று வெளிப்படுத்தலில் வாசிக்கிறோம். இது ஒரு மீச்சிறிய-சாதனமாக(micro-chip) இருக்கலாம் என்று அநேகர் சொல்கின்றனர்.
ஒரு தீவிலோ ஒரு நாட்டிலோ அவர்கள் திருமணமானவர்கள் என்பதற்கு பொட்டுவைப்பதுதான் அடையாளம், வேறு அடையாளமே இல்லை என்று இருப்பின் பொட்டுவைக்கலாம். ஏனென்றால் ஒருவர் திருமணமானவர் என எப்படி சொல்வது? அப்படின்னா அங்கே திருமணமான ஆண்களும் பொட்டுவைக்கவேண்டுமல்லவா?

இன்றும் 2010-ல் ஹவாய் (Hawaii) தீவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும், அவர்கள் வலது காதில் பூ வைத்திருந்தால்  திருமணம் ஆகவில்லை, இடதுகாதில் பூ வைத்திருந்தால் திருமணம் ஆணவர் என்று அர்த்தம்
.

பொட்டு வைப்பது பொதுவாக இந்துக்களின் பழக்கவழக்கம் என்ற கருத்து நிலவுவதால், கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்காமல் இருப்பதன் மூலம் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்கின்றனர்.


பூஜையிலிருந்து வரும் குங்குமம், விபூதியும் வேண்டாம். அவைகளினால் விக்கிரக ஆராதனையில் பங்குபெற்றதாகிவிடும். அறிவியல் பார்வையிலும் பொட்டுவைக்க வேண்டாம் என கூறுகின்றனர், ஏனெனில் அதிலுள்ள வேதிப்பொருட்கள் (chemicals) சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்கின்றனர்.

பைபிளில் கண்களுக்கு மையிடுதல் பற்றி மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. 

 [1] II இராஜாக்கள் 9:30ல் யேசபேல் என்பவள் (வேதத்தில் கூறப்பட்டுள்ள மிகவும் மோசமான மனைவிகளில் முதல்வரிசையில் ஒருத்தி) தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்தாள்; ஆனால் அன்றே அவள் செத்தாள் என்று அதே அதிகாரத்தில் வாசிக்கிறோம். 
[2] எரேமியா 4:30ல் பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள். 
[3] எசேக்கியேல் 23:40லும் வாசிக்கிறோம். 

இங்கே மையிடும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு தீமையாகவே முடிகிறது. நன்மை என்று சொல்லப்படவில்லை. 
ஒருவர்: பொட்டுவைக்க, கண்களிலிட, ஏன்... செய்வினை, பில்லிசூனியம் செய்யவும்கூட "மை" பயன்படுத்துகிறார்கள். எனவே பாதுகாப்பா இருக்கனும்னு நான் அந்த-மை பக்கம் போறதே இல்லீங்க என்கிறார்.
 

பொட்டு ஒரு அடையாளத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது, இப்போது அது தேவையில்லை. கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பது இல்லை. பைபிளில் அந்தப் பழக்கம் இல்லை. எனவே பொட்டுவைக்கவேண்டாம்.

நல்லவேளை.... ஒட்டகச் சிவிங்கியும் (
பொட்டக சிவிங்கி !), சிறுத்தையும் இவ்வளவு பொட்டு வைத்திருக்கே அதுமட்டும் சரியான்னு விவாதிக்காம போனாங்களே!

13 comments:

Colvin said...

மிக அருமையான விளக்கம். இலங்கையில் சிங்களப் பெண்கள் பொட்டிடுவதில்லை. தமிழ்ப் பெண்கள் மாத்திரமே பொட்டு வைக்கிறார்கள். சாதாரணமாக பொட்டிடாத பெண்கள் சிங்களப் பெண்களாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். கத்தோலிக்க தமிழ் பெண்களை பொறுத்தவரை அவர்கள் பொட்டிடும் பழக்கத்தினை கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ தமிழ் பெண்கள் பொதுவாக பொட்டு வைப்பதில்லை.

இங்கு இன அடையாளத்தை காட்டும் குறியீடாகவே பொட்டு உள்ளது.

simeon said...

yes its really correct, and happy to read and understand this type of questions.

Unknown said...

very correct answer... really feel it..

Anonymous said...

Past days i have searching the definition for it , now i got it thank u so much.by starlina,tuticorin

Anonymous said...

the Answer was Really Good and Real and acceptable but if given by more bible verse it would have very great. Thanks

Anonymous said...

Thank you for the detailed Comment....

Anonymous said...

yes its really correct, and happy to read and understand this type of questions.


Mrs.Christy

Anonymous said...

Good Answer for belivers

kalpana said...

this is very correct. only jesus is our beauity. so please dont put extra make up in your own. thank you

jerry said...

பொட்டு இடுதல் என்பது வெரும் சடங்கு என நினைக்க முடியாது அதில் இத்தனை அர்த்தம் இருக்கு ஆனால் இது எல்லாம் வெரும் உலகதிர்கு நம்மை அடையலம் காட்டதான் என்பது இதன் மூலம் உருதியாக தெரிகிரது.

Unknown said...

Sudhan here. i am agree with u and i wanna know boys can wear earings or not...awaiting for yr reply. thank u.

Unknown said...

well said brother and i wanna know boys can wear earings or not. awaiting for yr reply. thank u

Tamil Bible said...

No. Boys should not wear earings. Should not have tatoo.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.