Wednesday, July 28, 2010

47. விண்வெளி கற்கள் (Asteroids) பற்றி பைபிளில் உண்டா?

பைபிளில் "வெளிப்படுத்தல்" என்ற புத்தகத்தில் இனி நடக்கவிருக்கும் அநேக காரியங்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. விண்வெளியிலிருந்து வரும் ஆபத்துகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. கீழே வாசிப்போம்:

வெளி 8:8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று

- இங்கே விண்வெளி மலை ஒன்று கடலில் விழுவதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

வெளி 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

- இங்கே ஒரு Meteor-shower போன்ற ஒரு நிகழ்வு. மரத்தின் காய்கள் உதிருவதுபோல என்பதால் அது எரி/வால் நட்சத்திரத்திலிருந்து எப்படி பொறிகற்கள் விழுமோ அது போன்ற ஒரு சம்பவமாயிருக்கலாம், எரிகற்கள் அல்லது நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதறலாயிருக்கலாம்.

வெளி 8:10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

- இங்கே விண்வெளியிலிருந்து வந்து பூமியில் விழுந்து 33% சேதமடையும் என்று பெரிய அளவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வருங்கால நிகழ்ச்சிகளை பயமுறுத்தும் வகையில் விஞ்ஞானமும் சில உண்மைகளை கண்டுபிடித்து சொல்கின்றது. ஆனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இவ்வளவு பெரிய சேதம் வரும் என்பதை
இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை.

இன்று (28 ஜூலை 2010) வந்த செய்தி:
மாபெரும் விண்வெளி-கல் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. இது
இன்னும் 172 வருடத்தில் பூமியில் மோதும் சாத்தியம் உள்ளது என்று நாசா சொன்னது. (http://www.csmonitor.com/Science/Cool-Astronomy/2010/0728/Huge-asteroid-on-possible-collision-course-with-Earth-172-years-from-now)

இந்த விண்வெளி-கல் அல்லது விண்வெளி-மலை என்பது பூமியில் மோத சாத்தியங்கள் 1/1000 அதாவது ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு. மோதும் வருடம் கி.பி. 2182. இந்த விண்வெளிகல்லுக்கு 1999-RQ36 என்ற பெயர் சூடப்பட்டுள்ளது. இது பெரிய வெண்வெளி மலையாகும். நமக்கு இன்னும் 172 வருடங்கள் இருக்கின்றன. இதற்குள் ஏதேனும் செய்யவேண்டும் என்கின்றனர்.

பயப்படத்தேவையில்லை என்றும், தேதி தெரிந்தாலும் அதற்கு இன்னும் 172 வருடங்களுக்குள்ளாக அல்ல என்கின்றனர். இதன் நீளம் 560 மீட்டர் அதாவது அரைக்கிலோமீட்டருக்கும் சற்றே அதிகம். எனவே இது விளையாட்டாக கிடப்பில் வைக்கும் விஷயமில்லை.

இப்படிப்பட்ட ஒரு ஏவுகணை பூமியை தாக்கினால் அங்கே பல மைல்கள் அளவுக்கு பள்ளத்தாக்கு உண்டாகும். ஒரு நகரத்தையே அழித்து, அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான மைல்களுக்கு பாதிப்பு இருக்கும்.

ஒரு [நல்ல] செய்தி என்னவெனில் இது கி.பி. 2182ல் தான் இது நடக்கவுள்ளது. இதற்குள் நாம் சில உபாயதந்திரங்களை (strategy) கண்டுபிடிக்கவேண்டும். இந்த விண்வெளி கல்லானது 1999ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை "ஒரு ஆபத்தையுண்டாக்கும் விண்வெளிக் கல்" என "அப்பொல்லோ வகை" யில் பிரித்தனர். ஏனெனில் இதன் சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் அப்போல்லோ போல வருவதாக இருக்கிறதே என அப்போது நினைத்ததால்.

ஸ்பெயினிலும், இத்தாலியிலும், கலிஃபோரினியாவிலுள்ள ஆய்வகங்களிலும் கணினியைப் பயன்படுத்தி ஒரு மாடல் தயார்செய்து அதின் பாதையை துல்லியமாக முன்னறிவிக்கின்றனர். இவர்களது வெளியீடுகள் அறிவியல் பத்திரிக்கையான இக்காரஸ்( Icarus)ல் வந்துள்ளன.

இதின் சுற்றுப்பாதையை கிட்டத்தட்ட நன்றாகவே அறிந்திருக்கிறோம். 290 முறை கண்களால் காட்சியும், 13 முறை ரேடார் கொண்டு அளவிட்டும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சூரியனைச் சுற்ற 14 மாதங்கள் எடுக்கின்றது. இருப்பினும் சூரியனிலிருந்து வெளிவரும் வெளிச்சத்தின் விசை இதுபோன்ற விண்வெளிகற்களின் சுற்றுப்பாதையின்மீது சிறிது அநிச்சயங்களை (uncertainty) உண்டாக்குகின்றன.

வேல்லடோலிட் பல்கலைகழகத்திலிருந்து மரியா யூகேனியா சான்சாதுரியோ (
Maria Eugenia Sansaturio) என்பவர்: "இந்த 1999-RQ36 தாக்கத்துக்கான மொத்த நிகழ்தகவு(probability) 0.00092 அதாவது சுமாராக ஆயிரத்தில் ஒரு பங்கு என்கிறார். ஆனால் இதில் 2182ல் இது நடைபெற நிகழ்தகவு 0.00054 அதாவது மொத்த நிகழ்தகவில் பாதிக்கு மேல் என்பது ஆச்சாரியமாகும்.

இதற்கு முன்பே விஞ்ஞானிகள் OSIRIS-REx என்ற விண்வெளிகலத்தை அனுப்பி பரிசோதனைக்காக சில துண்டுகளை சேகரிக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தனர். நாசாவைச் சேர்ந்த பில் கட்லிப் என்பவர், "இந்த விண்வெளிக்கற்கள் என்பவை நமது சூரியக்குடும்பம் பிறக்கும் முன்பே இருந்த காலக் குப்பிகள். அப்படிப்பட்ட ஒரு தூய கற்துண்டின் விலையை சாதாரணமாக மதிப்பிடமுடியாது" என்றார்.

இதற்கு முன்னே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லியிருந்த இன்னொரு 300 மீட்டர் நீளமுள்ள அபோஃபிஸ் (Apophis)விண்வெளிக்கல் என்பது இன்னும் 30 வருடத்தில் பூமியை நோக்கி வரும் என்ற பழைய செய்தியில், தற்போது அதினால் உண்டாகும் அபாயத்தைக் குறைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை 13ம் தேதி ஏப்ரல் மாதம் 2029ம் வருடம் அது நம்முடைய தொலைக்காட்சி செயற்கைகோள்கள் பறக்கும் உயரத்தைவிட அருகில் அதாவது பூமியிலிருந்து 18300 மைல் தொலைவில் நம்மை நோக்கிவந்து இடிக்காமல் குறிதவறும், அதன்பின்பு 7 வருடங்கள் கழித்து 2036ம் வருடம் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு குறிதவறுமா இல்லையா என்பதையும் விஞ்ஞானிகள் கணித்துக்கொண்டு இருக்கின்றனர். எனவெ வெள்ளி 13, ஏப்ரல் 2029 அன்று மோதலில் நிகழ்தகவு 1/45000 எனபதிலிருந்து 1/250000 என குறைத்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாமோ, தேவனுக்கு பயந்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்வோமாக.

சங்கீதம் 33:9 "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" என்பதை மனதில் கொள்வோம்
-

1 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.