கேள்வி: வட்டி வாங்கலாமா? பழைய ஏற்பாட்டில் வட்டி வாங்கவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதே..
பதில்: வட்டி வாங்கலாம்!
ஆனால் யாரிடம் வாங்கலாம், யாரிடம் வாங்கக்கூடாது என்பதில்தான் விவரங்கள் உள்ளது.
யாரிடம் வாங்கக்கூடாது?
[1] உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். (யாத் 22:25)
==> இங்கே "என் ஜனங்களில் ஒருவனுக்கு" என்றார். இப்போது தேவனுடைய ஜனமாகிய உங்கள் சபையில் ஒருவருக்கு என்றும், தேவனுடைய பிள்ளை ஒருவருக்கு என்றும் பொருள்படும்.
[2] கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. (உபா 23:19 )
==> உன் சகோதரன் அல்லது சொந்தக்காரர்களிடம் வட்டி வாங்காதே.
நெகேமியா என்பவர் இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வசனத்தை மீறி தன் சதோதரரிடம் வட்டி வாங்கியதால் பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து, நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றான்.
[நூற்றுக்கு 1 தான் வட்டியாக ( 1% )அப்போது இருந்தது என்பதை கவனியுங்கள்.]
நீ அவன் (சகோதரன்) கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. (லேவி 25:36,37)
யாரிடம் வட்டி வாங்கலாம்?
உபாகமம் 23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
மேலும் இயேசு ஒரு உவமையில் சொல்லும்போது: " அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, ..." என்று வாசிக்கிறோம்.
எதிலும் வட்டி வாங்கக்கூடாது என்று விவாதித்தால் வங்கியில் உங்கள் சேமிப்பில் அவர்கள் கொடுக்கும் வட்டியையும் நீங்கள் வாங்கக்கூடாது!
எனவே வங்கி(Bank)-ல் சேமிப்பில் போட்டு வட்டி வாங்கலாம். தவறல்ல.
அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். அநியாய வட்டி வாங்கக்கூடாது.
மேலும் ஏழைகள், சிறுமைப்பட்டவர்களிடம் வட்டி வாங்காதீர்கள்.
7 comments:
கரெக்ட்டா சொல்லிட்டீங்க நன்றி, கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது!!!!
இது முழக்க என்னுடைய கருத்து மட்டுமே . தவறு எனில் மன்னிக்கவும். பழைய ஏற்பாடில் அந்நியன் என குறிப்பிடுவதை புதிய ஏற்பாடில் சகோதரன் என்றே பார்க்கிறோம். எனவே சகோதரனிடம் வட்டி வாங்க கூடாது என்பது தெரிந்தவரையும், தெரியதவரையும், தேவனை அறிந்தவரையும், தேவனை அறியாதவரையும் குறிப்பிடுகிறது. மேலும் பரமண்டல ஜெபத்தில் நாம் ஜெபிக்கும் போது பரமண்டலங்களில்லுள்ள எங்கள் பிதாவே என்று தானே ஜெபிக்கிறோம் . எனவே எங்கள் பிதாவே என்னும் போது நாம் அனைவரம் சகோதரர் தானே ...
நான் ஒரு வேதாகம கல்லூரி மாணவன் ஆகையால் இந்த ஆலோசனை எனக்கு மிகவும் பயனுல்லதாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மேலே சகோதரர் Prithivi rajan சொன்ன கருத்தும் என்னுடைய கருத்தாகும்- G.Senthil Kumar
வேத வசனப்படி சகோதரர் சொன்னது சரியே. ஆனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் தேவனுடய பிள்ளைகளாகிய நமக்கு இன்றைய உலக சூழலில் சரிபட்டுவராது. ஏனெனில் அவர்கள் எப்படி வசூலிக்கிறார்கள் என்று நமக்கு நன்றாக தெரியும். நாம் அப்படி செய்ய முடியாது, செய்யவும் கூடாது.
சகோ. சிவகுமார்
If you did take interest,In any form(bank,neighbors,Friends,relative's)It would confirm that you have no love for your neighbors .That would make you unbeliever in God's new commandment,that jesus gave.Doesn't New testament says that you should not take interest. Even bank is giving us interest by taking interest from others.Corinthians says we should be knowledgable of taking money from others.
வட்டி வாஙுவதும் தவரு வட்டிக்கு கொடுப்பதும் தவரு என்ரு வைத்துக் கொன்டால் நன்ராக இருக்கும்
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.